Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒரே பார்வையில் MY3 MR அரசாங்க தரப்பின் குமுறல்கள் “சபாநாயாகர் கரு ஜயசூரிய முட்டாள் தனமான செயலை செய்துள்ளார்.” சபாநாயாகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றில் முட்டாள் தனமான செயலை செய்துள்ளார் என புதிய அரசாங்கத்தின் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “உங்களுக்கு பிரேரனையை நிறைவேற்ற முடியாது, பாராளுமன்றை அவமதித்துள்ளீர்கள் நிலையியற் கட்டளைகள் பின்பற்றபட வேண்டும். வாக்கெடுப்பிற்கு அழைப்பதாக இருந்தால் அது இலத்திரனியல் வாக்கெடுப்பாக அமைய வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஒரு சாராரை மாத்திரம் வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் அழைக்க முடியாது. …

  2. November 14, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாமல் பதவி விலகும் தற்காலிக பிரதமராக மகிந்த ராஜபக்ஸ அரசியல் வரலாற்றில் இடம்பெறுவார்.. அரசியல் வரலாற்றில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் பாராளுமன்றத்திற்கும்> அலரி மாளிகைக்…

  3. November 14, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஸ சபையை விட்டு வெளியேறினார். பாராளுமன்றம் இன்று கூடிய நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. சபைக்கூடும் முன்பே சபைக்குள் வந்து அமர்ந்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சபை நடவடிக்கைகளை சிரித்தவாறே அவதானித்துக்கொண்டிருந்தார். இடை இடையே ஐக்கிய தேசியக் கட்சியை பார்த்து கைகளையும் காட்டிக்கொண்டிருந்தார். இதன் பின்னர் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும்வாதப்…

  4. வடிவேல், வசந்த மீண்டும் ஐ.தே. கவுக்கு தாவினர் Editorial / 2018 நவம்பர் 14 புதன்கிழமை, மு.ப. 11:17 அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள, வசந்த சேனாநாயக்க அறிவித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளதுடன், வடிவேல் சுரேஸும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார். வனஜீவராசிகள் மற்றும் சுற்றுலா அமைச்சராக புதிய அமைச்சரவையில் பதியேற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தமது அமைச்சுப் பதவியிலிலிருந்து விலகுவதாகவும், இதுதொடர்பில் , இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/வடிவேல்-வசந்த-மீண்டும…

  5. மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்கவும் - ரிஷாட் கோரிக்கை நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் மாநாட்டில் இன்று கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த இரண்டு வாரங்களாக இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் கொந்தளிப்புக்கள், குளறுபடிகள் நீங்கி, மீண்டும் இந்த நாட்டில் அமைதியானதும், சமாதானதுமான சூழல் ஏற்படுவதற்கு ஜனாதிபதி வழிவகுக்க வேண்டும். சுதந்திரத்துக்…

  6. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டவை. சட்டத்துறையினை சார்ந்தவர் என்ற வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்? பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமாணி அறிவிப்பினை வெளியிட்டிருப்பது வெளிப்படையாகவே நாட்டின் அரசியல் அமைப்பிற்கு முரணான நடவடிக்கையாகும். பாராளுமன்ற கலைப்பானது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். ஜனாதிபதியின் சட்டத்தரப்புகள் பாராளுமன்றத்தை கூட்டுவது, கலைப்பது மற்றும் ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை கூறும் உறுப்புரை 33 இரண்டு சியை க…

    • 6 replies
    • 3k views
  7. அமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை! நாட்டில் நிலவும் அமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்புப் பேரவை நேற்று(செவ்வாய்கிழமை) இரவு கூடியது. நாட்டின் பாதுகாப்புநிலை தொடர்பில் இதன்போது முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போதே நாட்டில் நிலவும் அமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, சட்டம் மற…

    • 1 reply
    • 508 views
  8. சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக, பொதுஜன முன்னணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளதை அடுத்தே மகிந்த ராஜபக்ச இந்த முடிவுக்கு வந்திருப்பாதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது நடந்து கொண்டிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மகிந்த ராஜபக்ச தனது கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பதவியை விட்டு விலக வேண்டும் என்று மங்கள சமரவீர கோரியிருந்தார். அதேவேளை, நாளை நாடாளுமன்றம் கூடும் …

    • 4 replies
    • 952 views
  9. சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிக்கிறது ஜப்பான் ஜப்பானின் நீண்டகால நட்பு நாடான சிறிலங்காவில், நாடாளுமன்றக் கலைப்பு உள்ளிட்ட அண்மைய அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. சட்ட நெறிமுறைகளின் ஊடாக சிறிலங்காவில் உறுதித்தன்மை தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படும் என்று, ஜப்பான் நம்புகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2018/11/14/news/34417

  10. சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது தற்போது முக்கியம் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தமை குறித்து அவர் தனது கீச்சகப்பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “தான் புதிய பிரதமராக முன்மொழிந்த – போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமாக குற்றம்சாட்டப்படும், முன்னாள் அதிபரை முன் கொண்டு வருவதற்காக, நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் சிறிசேனவின், முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. சிறிலங்காவில் …

  11. தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்திருப்பதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்புக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது. அத்துடன், பொதுத் தேர்தலுக்கான செயற்பாடுகளையும், உடனடியாக இடைநிறுத்துமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உச்சநீதிமன்றம், இடைக்கால தடைஉத்தரவைப் பிறப்பித்திருந்தது, இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு…

  12. நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது நாடாளுமன்றம் வந்து, செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். கடந்த மாதம் 26ஆம் நாள், சிறிலங்கா அதிபரால் பதவிகவிழ்க்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் அலரி மாளிகையை விட்டு வெளியேறவில்லை. இன்று காலை மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக 122 உறுப்பினர்கள் வாக்களித்திருப்பதாகவும் அவர் தெரிவித்த…

  13. பாராளுமன்றில் பெரும்பான்மையை இழந்தது மஹிந்த அரசு - சபாநாயகர் அதிரடி அறிவிப்பு ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார். பராளுமன்றத்தில் சற்று முன்னர் நிலவிய அமைதியின்மை காரணமாக பாராளுமன்றத்தின் அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சப…

  14. நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியின்மை நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தினைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க, நாடாளுமன்ற அமர்வை மீளக்கூட்டுவதற்கான வர்த்தமானி ஆவணத்தை வாசித்தார். தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் முன்வைத்த நிலையியல் கட்டளைகளை ரத்து செய்யும் யோசனை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இதன்காரணமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் யோசனையினை சப…

  15. பெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018 பாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினர். இதனையடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அரசாங்கம் இல்லை என்று அறிவித்த சபாநாயகர் பாராளுமன்றத்தை நாளை காலை 10.00 மணி வரை ஒத்தி வைத்தார். http://globaltamilnews.net/2018/103231/

  16. பாராளுமன்று இன்று கூடவுள்ள நிலையில் மகிந்த – ரணில் வருகை – மைத்திரி வரவில்லை November 14, 2018 இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்த நிலையில் சபை நடவடிக்கைகளுக்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாராளுமன்ற அமர்வுகளை அவதானிக்க வெளிநாட்டு இராஜதந்திரிகள் கூடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி அகிய கட்சிகளுக்கு ஆகிய கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

  17. 3பேர் கொண்ட நீதியரசர் குழாமை 9 பேர் ஆக உயர்த்த வேண்டும் என்கிறார் நிமால்… November 14, 2018 பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவினால் பிரதமர் பதவிக்கோ அல்லது அமைச்சரவைக்கோ எந்தவித பாதிப்புமில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று (14.11.18) இரவு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றினார். பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தட…

  18. ராஜபக்சேவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி.. பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை! கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார். இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் கரு.ஜெயசூர்யா தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இலங்கையில் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இலங்கையின் பிரதமர் என்பதற்கான அரசியல் போட்டி உச்சமடைந்து இருக்கிறது.சில வாரம் முன் இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி…

  19. நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமை நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்கள் முதல் வெற்றியை பெற்றுள்ளனர். நாங்கள் முன்னோக்கிச் சென்று எங்கள் மக்களின் இறையாண்மையை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டும்” என கூறியுள்ளார். இதேவேள…

  20. சிறிலங்கா உச்ச நீதிமன்றினால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக வழங்கிய இடைக்கால தடை உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக மைத்ரி – மஹிந்த அணியினர் அறிவித்துள்ளனர். சிறிலங்கா அரச தலைவரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தின் வர்த்தக வாணிப்பத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இந்தத் தகவலைத் தெரிவித்தார். இந்தத் தகவலை மைத்ரி – மஹிந்த அணியினரின் சார்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்காக முன்னிலையாகிய சடடத்தரணி பிறேம்நாத் சீ தொலவத்தவும் உறுதிப்படுத்தினார். https://w…

  21. கிழக்கில் தமிழர் பகுதிகளில், அபிவிருத்திப் பணிகள், பின்னடைவுகளைக் கண்டுள்ளன. அங்குள்ள ஏனைய இனங்கள், தம்மிடம் உள்ள அமைச்சுப் பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் சார்ந்த சமூகங்களுக்குப் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செய்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில், “ஒட்டுமொத்த கிழக்குத் தமிழ் மக்களது நலன் கருதியே, அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டதே அன்றி, எனது குடும்பத்துக்காக அல்ல” என, தனது கட்சித் தாவல் குறித்துப் பல விளக்கங்களை, பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக்கொள்ள வியாழேந்திரன் அளித்துள்ளார். வியாழேந்திரன் குறிப்பிட்டது போல, கிழக்கில், தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. அவரது வாதம், முற்றிலும் நியாயமானவை; நிராகரிக்க முடியாதவை. அபிவிருத்திப் பணிகள் முக்…

  22. நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்! நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும் விமல் வீரவன்ச கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன் நாளை பிரதமரையும், அமைச்சர்களையும் சபாநாயகர் நியமிப்பார் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் அதற்கு அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்று விமல் வீரவன்ச கூறினார். அத்துடன், உச்சநீதிமன்றத்தின் முழு நீதியரசர்களையும் உள்ளடக்கிய அமர்…

  23. அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். பாதுகாப்பை பலப்படுத்துமாறும் அமைதியான சூழ்நிலையை பேணுமாறும் முப்படையினருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/44431

  24. நீதிமன்றத்தினால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எனினும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள தினேஸ் குணவர்த்தன நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் எனினும் இதுவொரு இறுதிதீர்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றம் தேர்தலிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது அதனை இரத்துச்செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார் இதேவேளை செய்தியாளர் மாநாட்டில் …

  25. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நாடாளுமன்றம் நாளை கூட்டப்படும் என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, நாளை 14ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கூட்டும் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிட்டிருந்தார். அதற்குப் பின்னரே, நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழ் அறிவிப்பு அவரால் வெளியிடப்பட்டது. இந்த அரசிதழ் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால், முன்னைய அரசிதழ் அறிவிப்புக்கு அமைய நாடாளுமன்றம் நாளை கூட்டப்பட வேண்டும். நாளை திட்டமிட்டபடி நாடாளுமன்றம் கூடும் என்று தேக வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.