ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மகிந்த உங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் இடையில் நடந்த முறைசாரா கலந்துரையாடலின் போதே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேள்வி எழுப்பியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக உள்ள- அதிகாரங்களை மத்திய அரசும், மாகாண அரசும் பகிர்ந்து கொள்ளும் வகையிலான, இணைந்த பொதுப் பட்டியலை (Concurrent List) நீக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் கோரியிருந்தார். அப்போதே …
-
- 0 replies
- 246 views
-
-
அமெரிக்காவின் 460 மில்லியன் டொலர் நிதியுதவி சிறிலங்காவுக்கு கிட்டுமா? சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களினால், அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் திட்ட உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு அடுத்த மாதம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மிலேனியம் சவால் அமைப்பு, மூலமாக சிறிலங்காவுக்கு 460 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது. சிறிலங்காவின் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக, வீதி வலையமைப்புகளை தரமுயர்த்துவதற்கும், கொழும்பு பெருநகர பேருந்து முறையை ஒழுங்கமைப்பதற்கும் இந்த நிதி செலவிடப்படவிருந்தது. இதற்கமைய 300 கி.மீ நீளமான நகர மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளை புனரமைப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இளைஞன் மாயம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பாலிநகரை சேர்ந்த குகதாசன் உமேஷ் (வயது 21) எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் கடந்த 31ஆம் திகதி காலை முல்லைத்தீவிலிருந்து யாழிலுள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவு சகோதரியிடம் தான் கொழும்பு செல்வதாக கூறி இரவு 7 மணியளவில் சகோதரியின் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் மறுநாள் 1ஆம் திகதி தாயார் தொலைபேசி ஊடாக அழைப்பினை ஏற்படுத்த முயன்ற போது அவரது தொலைபேசி செயல…
-
- 0 replies
- 926 views
-
-
கூட்டமைப்பின் முடிவால் மைத்திரி அதிர்ச்சி – பேச்சுவார்த்தைக்கு அழைப்பு? எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 7ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் பிரதமர் யார் என்ற குழப்பம் எழுந்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவருக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று(சனிக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஸ பதற்றமடை…
-
- 0 replies
- 334 views
-
-
தயார் நிலையில் அரச அச்சகம் – முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்! முக்கிய வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதற்காக அரச அச்சகம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் தலைமை அதிகாரியான கங்க லியனகே இதனைத் தெரிவித்துள்ளார். எந்த நேரத்திலும், முக்கியமான வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட வேண்டியிருக்கும் எனவும், இதன்காரணமாக அரச அச்சக பணியாளர்களை தயாராக வைத்திருக்குமாறு ஜனாதிபதி செயலகமும், சபாநாயகர் செயலகமும் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், நேற்று மாலை வரை, எந்த வர்த்தமானி அறிவிப்பும் அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்…
-
- 0 replies
- 311 views
-
-
மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு த.தே.கூ எதிர்ப்பு Editorial / 2018 நவம்பர் 03 சனிக்கிழமை, பி.ப. 01:26 Comments - 0 அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. "நடுநிலை"வகிப்பதென்பது, அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் எனவும், த.தே.கூ தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நேற்று (02) பிற்பகல் நடைபெற்றது. இது தொடர்பில் கூட்டமைப்பு வ…
-
- 4 replies
- 990 views
-
-
மஹிந்தவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள் என்னை வலியுறுத்தினர்: மனோ கணேசன். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள், என்னை வலியுறுத்தினார்களென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக மஹிந்த தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சிறுபான்மையினர் வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளையும் அவர் சிதைத்து விட்டார். மேலும் மைத்திரியின் திடீர் அரசியல் நகர்வுகளை நாம் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில…
-
- 3 replies
- 693 views
-
-
மாவீரர்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம் – சிறிதரன் மாவீரர்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழர்கள் இந்த மண்ணிலே ஓர் இலட்சியம் நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் வேங்கைகளை விதை ஆக்கியவர்கள் நாங்கள். இலங்கையில் இருக்கின்ற எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ரணில் விக்கிரமசி…
-
- 2 replies
- 1k views
-
-
மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், தானே இப்போதும் பிரதமராக இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று மாலை சிறிலங்கா பிரதமராக மகிந்த ராஜபக்சவை, அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ள நிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டின் பிரதமராக தான் இன்னமும் பதவியில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் விரைவில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பேன் என்றும், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/10/26/news/33695
-
- 78 replies
- 7.6k views
-
-
கட்சி தாவினால் பணமும் அமைச்சு பதவியும் – ஆதாரத்தை வெளியிட்டது ஐ.தே.க மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியும் 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதுதொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, யோசித்த ராஜபக்சவின் பிரதிநிதி உள்ளிட்ட பலர் தன்னை தொடர்புக்கொண்டு பேரம் பேசியதாகவும் தெரிவித்த அவர், அது தொடர்பான தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளையும் வெளியிட்டுள்ளார். h…
-
- 0 replies
- 98 views
-
-
ஐதேமு அரசாங்கம் மீண்டும் வருமானால், தமுகூ, ஸ்ரீமுகா, அஇமகா ஆகிய சிறுபான்மை கட்சிகளே காரணம் திங்கட்கிழமை சவாலில் வெற்றி பெற்று, மீண்டும் ரணில் அரசாங்கம் உருவாகுமனால், அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளே பிரதான காரணம். நாங்கள் தடம் மாறி இருந்தோமானால், இந்நேரம் நிலைமை தலைகீழாக மாறி இருக்கும். எங்கள் சிறுபான்மை கட்சிகளில் உள்ள எம்பீக்களை விலை கொடுத்து, பதவி கொடுத்து வாங்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தாலும் அவற்றை நாம் பொறுமையுடன் சமாளித்தோம். மிகப்பெரும் பேரங்களை பெரிய மனிதர்களே நேரடியாக பேசினார்கள். எனினும் நாம் விலை போகவில்லை என தமிழ் முற்போக்கு க…
-
- 0 replies
- 997 views
-
-
By கலைமாறன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலி லேபல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரம் குடிதண்ணீர்ப் போத்தல்களை யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டு அள்ளிச் சென்று நீதிமன்றில் முற்படுத்தினர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய விநியோக வர்த்தக நிலையத்மின் மீது நேற்றுக்காலை சுகாதார உத்தியோகத்தர்கள் அதிரடிச் சோதனை நடத்தினர். இதன்போது குடிதண்ணீர்ப் போத்தலில் நிறுவன பதிவு இலக்கம் இன்றித் தயார் செய்யப்பட்ட நிலையில் ஓர் இலக்கமும் அதன்மேலே மற்றுமோர் போலி இலக்கமும் ஒட்டப்பட்டிருந்தமையும், மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிப் பதிவு இலக்கம் என்று தனியான ஓர் சிறிய ஸ்ரிக்கர் அச்சிடப்பட்டே ஓட்டியுள்ளதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர் மன்றி…
-
- 0 replies
- 386 views
-
-
சிவசக்தி ஆனந்தன் மஹிந்த முகாமில் இல்லை! November 3, 2018 சிவசக்தி ஆனந்தன் மஹிந்த முகாமில் என வெளியான செய்திகளை, அவர் மறுத்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று அமைச்சு பதவியேற்கலாமென அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேச்சடிபட்டது. தமிழ்பக்கமும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தது. எனினும், சிவசக்தி ஆனந்தன் அந்த செய்தியை மறுத்திருந்தார். சிவசக்தி ஆனந்தனின் வாக்கு ஐ.தே.கவிற்கே என சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.pagetamil.com/22083/
-
- 0 replies
- 416 views
-
-
சுகாதார சீர்கேட்டுடன், இயங்கிய ஏழு உணவகங்களுக்கு சீல். யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- மாநகரசபை சுகாதர பரிசோதகர்களால், சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலுள்ள உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது ஏழு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதனை கண்டறிந்து, அதற்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் சுகாதர பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கினை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தியபோது, உரிமையாளர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உணவ…
-
- 3 replies
- 773 views
-
-
கழிவுகள் நிறையும் இடமாக கிளிநொச்சிகுளம் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளம் நகரின் கழிவுகள் கொட்டுகின்ற இடமாக காணப்படுகிறது என பலதரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது. நகரின் மத்தியில் அமைந்துள்ள மருதமரங்களால் சூழப்பட்ட அழகிய இயற்கை சூழலில் காணப்படுகின்ற குளமானது நகரின் கழிவுகளும் சேர்ந்து அழுக்கான நிலையில் காணப்படுகிறது. நகரின் பல இடங்களிலும் இருந்து கொண்டு செல்கின்ற பிளாஸ்ரிக் கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுப் பொருட்களும் குளத்தின் நீரேந்து பகுதிகளில் கொட்டப்பட்டு வருவதோடு, குளத்திற்கு நீர் வருகின்ற வாய்கால்களிலும் பொது மக்களால் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தக் கழிவுகள் மழைக் காலங்களில் நீரில் அடித்துசெல்லப்பட்டு குளத்திற்குள் கொண்டு சேர்…
-
- 4 replies
- 885 views
-
-
இரத்தக்களறி ஏற்படும் அபாயம் - ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் ஏஎவ்பிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் இரத்தக்களறியொன்றை தவிர்ப்பதற்கான காலம் குறைவடைந்து வருகின்றது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அதேவேளை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றம் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நம்பிக்கை இழந்த சிலர் இரத்தக்களறியை ஏற்படுத்தக்கூடும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் ஆதரவாளர்களிற்கு வன்முறையில் ஈடுபடவேண்டாம் என வேண்டுகோள் விடுப்போ…
-
- 1 reply
- 362 views
-
-
“ஏழு அல்ல பதினாறே”; கெஹலிய ரம்புக்வெல பாராளுமன்றமானது எதிர்வரும் 7 ஆம் திகதி கூட்டப்படவிருந்த நிலையில் அதுபோலியான பிரசாரம் என அரசாங்க ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய நிலைக்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதியே பராளுமன்ற கூட்டத்தொடரானது கூட்டப்படுமென அரசாங்க ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/43817
-
- 2 replies
- 547 views
-
-
சிவசக்தி ஆனந்தனிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய செல்வம் அடைக்கலநாதன் தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிற்கு எதிராக மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு 150 கோடி செல்வம் அடைக்கலநாதன் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக கூறும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு சிவசக்தி ஆனந்தன், நான் 150 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அது இந்தியாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். இது சம்பந்தமாக அவருக்கு எதிராக நான…
-
- 0 replies
- 235 views
-
-
நாடாளுமன்றம் சுற்றி வளைக்கப்படும் – ஐ.தே.க எச்சரிக்கை! எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படாவிட்டால் மக்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தை கைப்பற்றும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எந்தவொரு உறுப்பினரும் இதுவரை அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளவில்லை. வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதில் சதித்திட்டம் இருப்பதாகவே எமக்கு தோ…
-
- 0 replies
- 387 views
-
-
தாம் விரும்புபவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – முன்னாள் சபாநாயகர் அரசியலமைப்பின் பிரகாரம் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றது என முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே தற்போது மஹிந்த ராஜபக்ஸவே இந்நாட்டின் பிரதமராவார். ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறி யாராலும் செயற்பட முடியாது. சபாநாயகருக்கும் அந்த அதிகாரம் கிடையாது என்பதும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டி…
-
- 1 reply
- 444 views
-
-
தமிழ் மக்கள் சார்பில் எமது தீர்மானங்கள் அமையும்-மாவை சேனாதிராஜா கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக மஹிந்தராஜபக்ஷவை நியமித்தார். ஆனால் அது அரசியலமைப்பின் பிரகாரம் பிழையானது என்று தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்காத சந்தர்ப்பத்தில் இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை சரியா என்ற கேள்வி எழுகின்றது.ஆனால் நாம் நல்லாட்சி அரசாங்கத்தினால் ஜனாதிபதியினால் ஏமாற்றப்பட்டுள்ளோம்.நாடாளுமன்றத்தில் என்ன தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பில் இதுவரை நாம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் சார்பில் எமது தீர்மானங்கள் அமையும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப…
-
- 0 replies
- 316 views
-
-
இலங்கை அரசியலில் அடுத்த பரபரப்பு -சபை முதல்வராக தினேஸ் குணவர்தன : ஜனாதிபதி தீர்மானம் சபை முதல்வராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல சற்றுமுன்னர் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் இடையிலான கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/43814 நாடாளுமன்ற சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க மஹிந்த தரப்பு தீர்மானம் நாடாளுமன்ற சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு அரசியற் கட்சிகள் தீர்மானித்துள்ள…
-
- 0 replies
- 309 views
-
-
சட்ட மா அதிபர் திணைக்களம் STF கட்டுப்பாட்டில்… November 3, 2018 புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு விசேட காவல்துறை அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு சட்ட மா அதிபர், காவல்துறை மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்மைய இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் தளபதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் எம்.லதீப் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமரின் ஊழியர்கள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதனாலேயே இவ்வாறு சட்ட மா அதிபர் திணைக…
-
- 0 replies
- 241 views
-
-
வவுனியாவில் ஊடகவியலாளர் கைது November 3, 2018 வவுனியாவை தளமாகக்கொண்டு இயங்கும் பிராந்திய பத்திரிகை ஒன்றில் பிரதான செய்தியாளராக பணிபுரியும் ஒருவர் நேற்று மாலை வவுனியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை குறிப்பிட்ட ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு காவல்நிலையத்துக்கு வருமாறு அழைத்த வவுனியா காவல்துறையினர் அங்கு சென்ற அவரை கைது செய்து வாக்குமூலத்தை பதிவுசெய்துவிட்டு தடுத்து வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்ற வவுனியா ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள் , சக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் அழைப்பின்பேரில் சென்றிருந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் உள்ளிட்டவர்களையும் தடுத்து வைக்…
-
- 0 replies
- 469 views
-
-
மஹிந்த பக்கம் தாவி அமைச்சரானவரின் இல்லத்தில் ஐதேக எம்.பிக்கள்:வெளியாகிய சிசிரிவி படங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றியதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பக்கம் தாவி கபினட் அமைச்சராக பதவியேற் வசந்த சேனநாயக்கவின் கொழும்பு இல்லத்தில் பேசிக்கொண்டிருக்கும் சிசிரிவி படங்கள் வெளியாகியுள்ளன. நேற்றுக்காலை நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் இடம்பெற்ற சந்திப்பில் பங்கேற்ற 118 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவர்களும் அடங்குவர். இவர்கள் என்ன பேசினார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் நேற்றுக்காலை 11.30, 11.4…
-
- 0 replies
- 252 views
-