ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
புதிய அரசாங்கத்தின் மக்களுக்கான விசேட திட்டங்கள் ! கடந்த 3 வருட காலப்பகுதியில் வர்த்தக வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 50 மில்லியன் ரூபா வரையிலான கடன் தொகைக்கு வட்டி மற்றும் தண்டப்பணம் முற்றாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த தொகையை அரசாங்கம் செலுத்தவுள்ளது. கடந்த 3 வருட காலப்பகுதியில் குறைந்த வளர்ச்சி வீதம் மற்றும் வாழ்க்கைச்செலவின் மூலம் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சிகண்டிருந்தது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , நிதி மற்றும் பொருளாதார அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் கவனம் செலுத்தியுள்ளனர். இந்த நிலை அதிகரித்தமை நாட்டில் நிலவிய நிலைமைக்கு பொருத்தமற்ற , தேசிய தொழிற்துறையினர் மற்றும் கைத்தொழில்துறைக்கு பெரும் பாதிக்கும் வகையிலா…
-
- 0 replies
- 416 views
-
-
ஐ.தே.மு அரசாங்கம் மீண்டும் வருமானால் சிறுபான்மை கட்சிகளே காரணம் -மனோ கணேசன் திங்கட்கிழமை சவாலில் வெற்றி பெற்று, மீண்டும் ரணில் அரசாங்கம் உருவாகுமனால், அதற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளே பிரதான காரணம். நாங்கள் தடம் மாறி இருந்தோமானால், இந்நேரம் நிலைமை தலைகீழாக மாறி இருக்கும். எங்கள் சிறுபான்மை கட்சிகளில் உள்ள எம்.பீக்களை விலை கொடுத்து, பதவி கொடுத்து வாங்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தாலும் அவற்றை நாம் பொறுமையுடன் சமாளித்தோம். மிகப்பெரும் பேரங்களை பெரிய மனிதர்களே நேரடியாக பேசினார்கள். எனினும் நாம் விலை போகவில்லை என தமிழ் முற்போக்கு க…
-
- 0 replies
- 363 views
-
-
November 1, 2018 1 Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து செயற்பட முயற்சிக்குமாறு பாரதீய ஜனதா கட்சியின் முக்கியஸ்த்தரும், அரசியல் சர்ச்சைகளை உருவாக்குபவருமான சுப்ரமணிய சுவாமி தனது ருவிட்டர் பக்கத்தில் பெத…
-
- 1 reply
- 656 views
-
-
மகிந்தவை புதிய பிரதமராக சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை – பெரும்பான்மையை நிரூபிப்போம் : November 1, 2018 மகிந்த ராஜபக்ஸவை புதிய பிரதமராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய எச் சந்தர்பத்திலும் கூறவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகர் அலுவலகத்தினால் ராஜபக்ஸவிற்கு பிரதமர் தலைவர் நியமனம் வழங்குவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுவதற்கான முடிவை ஐக்கிய தேசிய கட்சி வரவேற்றுள்ளதாக தெரிவித்த அஜித் பீ.பெரேரா அன்றைய தினம் தமது பெரும்பான்மையை நிரூபிப்பது உறுதி எனவும் தெரிவித்தார். …
-
- 1 reply
- 564 views
-
-
November 1, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை காவற்துறையினரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர் என யாழ். நீதிவான் நீதிமன்றில் சந்தேக…
-
- 0 replies
- 236 views
-
-
சமஷ்டியை ஒருபோதும் வழங்கமாட்டேன் – ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்! தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். குறித்த சந்திப்பின் போதே அவர் சமஷ்டி என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளதாகவும், தான் இருக்கும் வரை அந்த கனவு நிறைவேறாது என்றும் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில், ” நான் இருக்கும் வரை வடக்கு, கிழக்கு இணைப்பும் சமஷ்டியும் சாத்தியமில்லை. அதை அடைய வேண்டு…
-
- 15 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவது கடினம் – சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் நாடாளுமன்றத்தை ஆரம்பிப்பதற்கான தயார்படுத்தல்கள் அதிகம் இருப்பதால், அதனை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மேற்கொள்வது சாத்தியமில்லை என்றும் அதற்கான நேரம் போதுமானதாக இல்லை எனவும் கூறினார். எனவே திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதாக தெரிவிப்பது தவறானவை என்றும் பிரேமஜயந்த தெரிவித்தார்.…
-
- 0 replies
- 418 views
-
-
மைத்திரி கொலை சதி – நாமல் குமாரவை பொன்சேகா அச்சுறுத்தினாரா? November 1, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில் தகவல்களை வெளியிட்ட ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தனக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள நாமல் குமார ஜனாதிபதி கொலை சதி பின்னணி தொடர்பில் தான் தெரிவித்த கருத்திற்கு பின்னர் சரத் பொன்சேகா நடந்துகொண்ட விதம் கவலைக்குரியதாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாப…
-
- 0 replies
- 425 views
-
-
ஜனநாயகத்திற்காக மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் JVPயின் மக்கள் கூட்டம்… November 1, 2018 “ஜனநாயகத்திற்காக உண்மையான மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பை அண்மித்த நுகேகொடவில் மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் கூட்டம் ஒன்று இடம்பெறுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய பிரதமர் பதவிக்கான நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வலியுறுத்தியும் இம்மக்கள் கூட்டம் இடம்பெற்று வருகிறது. இதில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள், சிவில் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2018/10…
-
- 0 replies
- 343 views
-
-
படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் நினைவேந்தல் November 1, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008.11.01 ஆம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட மாணவர் ஒன்றிய தலைவரின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தினை யாழ்.பல்கலை வளாகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாணவர்கள் அனுஸ்டித்தார்கள் http://globaltamilnews.net/2018/101588/
-
- 0 replies
- 403 views
-
-
மட்டக்களப்பில் மாணவியின் சடலம் கண்டெடுப்பு! மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து மாணவி ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்லடி, உப்போடை பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவியொருவரது சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குடாவில் உள்ள வீடொன்றில் இருந்து பாடசாலைக்கு சென்றுவந்த மாணவியை நேற்று காலை முதல் காணாத நிலையில் நேற்று மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு…
-
- 19 replies
- 1.7k views
-
-
நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்போம்: ஐ.தே.க. உறுதி நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுவதற்கான முடிவை வரவேற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி, அன்றைய தினம் தமது பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் உறுதியளித்துள்ளது. நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பை தொடர்ந்து, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா இதனை தெரிவித்துள்ளார். தாம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரியிருந்த போதிலும், தற்போது திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான தீர்மானம் வெளியாகியுள்ளது. இத்தீர்மானம் வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்டார். மேலும், ஐ.தே.க.-வில் 124 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்ற நிலையில், எதிர்வரும் திங்கட்கி…
-
- 1 reply
- 539 views
-
-
இந்திய முன்னாள் வெளியுறவு செயலாளர்களுடன் சம்பந்தன் பேச்சு இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர்களான லலித் மண்சிங் மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இலங்கையில் ஜனநாயக கோட்பாடுகள், அரசியலமைப்பு விதிகளுக்கு மதிப்பளிக்கப்படும் என நம்புவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அம…
-
- 1 reply
- 1k views
-
-
பாராளுமன்றத்தில் பிரதமர் ஆசனம் மகிந்தவுக்கு Nov 01, 20180 பாராளுமன்றத்தில் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படும் போது பிரதமர் ஆசனத்தை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பிரதமருக்குறிய சிறப்புரிமைகளை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/பாராளுமன்றத்தில்-பிரதமர/
-
- 0 replies
- 323 views
-
-
80 நாட்களைக்கடந்த பொத்துவில் தமிழர்களின் போராட்டம்! நாம் வாழ்ந்த காணியையே கேட்கிறோம் ! அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் அறுபதாம் கட்டை எனுமிடத்தில் கனகர்கிராம தமிழ்மக்களின் காணிமீட்புப்போராட்டம் தொடங்கி 80தினங்களைக்கடந்துள்ளது.இன்றுடன் 80வது தினத்தில் அங்கு விஜயம் மேற்கொண்டு சமகாலநிலைவரம் தொடர்பில் கண்ணோட்டம் செலுத்தினேன். நேற்றிரவு அந்தப்பகுதியில் கனமழை பொழிந்திருக்கிறது.ஆனால் அந்த கனமழைக்குமத்தியிலும் குளிர்கூதலுக்கும் மத்தியிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்வது அவர்களது வைராக்கியத்தை கட்டியம்கூறி நிற்கிறது.அரசஅதிபரின் உத்தரவின் பேரில் அவர்களிடம் பல தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.அந்த ஆவணங்கள் யாவும் கடந்த 16ஆம் திகதி பொத்து…
-
- 0 replies
- 265 views
-
-
5ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது! November 1, 2018 நாடாளுமன்றத்தை ஐந்தாம் திகதி மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதனை இன்று காலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார். 16ம் திகதிவரையில் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றை முன்கூட்டியே கூட்ட வேண்டும் என நேற்றையதினம் ஜனாதிபதியை சந்தித்த போது சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன்படி சபை அமர்வு எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அழுத்தம் வலுத்ததால் நாடாளும…
-
- 0 replies
- 439 views
-
-
வடக்கில் ஒரு மாதத்தில் 4 ஆயிரத்து 722 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன November 1, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் மூன்று மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலத்தில் 4 ஆயிரத்து 722 வெடிபொருட்கள் தமது நிறவனத்தால் அகற்றப்பட்டு உள்ளதாக ஹலோரெஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 16 வருட காலமாக வெடி பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்ற குறித்த நிறுவனம் தற்போது வடக்கில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இருந்து ஒரு மாதத்தில் ஆயிரத்து 498 மிதிவெடிகள், ஒரு வாகன எதிர்ப்பு மிதிவெடி , 209 வெடிக்காத வெடி பொருட்கள் , 14 ஆபத்து குறைந்த வெடி பொருட்கள் , மூவாயிரம் …
-
- 0 replies
- 179 views
-
-
ஆளுநர் மாற்றம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது October 31, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் அவ்வாறான மாற்றங்கள் தொடர்பில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். வடக்கு ஆளுநராக ரெஜினோல்ட் கூரே உள்ள நிலையில் தற்போதைய ஆளுநர் மாற்றப்பட்டு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. சிரேஸ்ர ஊடகவியியலாளர் என். வித்தியாதரன் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ் சுண்டிக்குழியில் உள்ள ஆளுநரின் செயலகத்தில் இன்றைய…
-
- 0 replies
- 274 views
-
-
இரா.சம்பந்தன் எங்களுடைய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பார் October 31, 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தங்களுடைய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பாரெனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 54 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டுமென தாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த போதும் நல்லாட்சி அரசாங்கம், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்…
-
- 11 replies
- 1.2k views
-
-
October 30, 2018 1 Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn புதிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இல…
-
- 5 replies
- 943 views
-
-
சிறிலங்காவுக்கான அமெரிக்கா மற்றும் ஐ.நாவின் தூதுவர்கள் சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான பதில் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஹில்டனும் ஐ.நா தூதரக உயர் அதிகாரி ஒருவரும் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்க அதிகாரிகள், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கவலை தெரிவித்தனர் என்றும், விரைவாக பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர் என்றும் சபாநாயகரின் செயலகம் தெரிவித்துள்ளது, ஐ.நா உயர் அதிகாரியும் அதே உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து ந…
-
- 2 replies
- 725 views
-
-
தமிழ் மக்கள் குரலாக செயற்பட கூட்டமைப்பு தவறியுள்ளது: அருட்தந்தை செபமாலை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கருதப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல தடவைகள் தமிழ் மக்களின் குரலாக செயற்பட தவறியுள்ளதாக, அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை காரணமாக எந்த கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பநிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களால் …
-
- 1 reply
- 521 views
-
-
மீண்டும் ஒருமுறை எனக்கு வாய்ப்பு - டக்ளஸ் தேவானந்தா முறைகேடுகள் இன்றி மக்களின் எரியும் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு நாம் செயலாற்ற வேண்டும் எனத் தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்காக உத்தியோகத்தர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பையும் வழிகாட்டலையும் உதவிகளையும் வழங்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (31) தனது அமைச்சில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து உரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த அர…
-
- 3 replies
- 820 views
-
-
மட்டக்களப்பு மாநகரசபைக்கு மூவாயிரம் புத்தகங்களை சிங்கப்பூர் அரசாங்கம் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவந்த தேசிய வாசிப்பு மாத நிகழ்வின் இறுதி நிகழ்வாக கல்லடி பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சி இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய புள்ளிவிபரங்களின்படி நூலகத்திற்கு வந்து நூலகத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. வயதானவர்கள் பத்திரிகை வாசிப்பதற்காக வருகின்றனர். பாடசாலை மாணவர்கள் வருவது குறை…
-
- 0 replies
- 340 views
-
-
கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள் தமிழர் நலன்களை அழிக்கும்: கஜேந்திரகுமார் நாட்டின் பிரதமரை தெரிவு செய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் முன்வைத்துள்ள இரு நிபந்தனைகளும் தமிழ் மக்களின் நலன்களை அழிக்கும் நிபந்தனைகள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவினால் ஏமாற்றப்பட்ட பின்…
-
- 5 replies
- 800 views
-