ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
அரசியல் கைதிகளின் உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவாக தெரிவித்து முல்லைத்தீவில் கண்டனப் பேரணி October 5, 2018 அரசியல் கைதிகளின் உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களது விடுதலையை வலியுறுத்தியும் இன்று (5) மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் பிரதிநிதிகளும் பொது அமைப்புக்களும் இணைந்து பேரணியில் ஈடுபட்டுள்ளதுடன் மாவட்ட செயலகத்தில் மகஜர் ஒன்றையும் கையனித்துள்ளனர். அரசியல் கைதிகாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் மிக நீண்டகாலமாக வழக்குகள் தொடரப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளளர். புலதடவைகள் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசி…
-
- 0 replies
- 347 views
-
-
நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை October 5, 2018 நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றதெனவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். மேலும் கைதிகள் தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகவியலாளர்களிள் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் போராட்டம் மேற்கொள்வது குறித்து சிலர் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த அவர் இந்த…
-
- 0 replies
- 733 views
-
-
உரித்துக்கும் சலுகைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக சமரசிங்கவும் இராஜிதவும் இருக்க முடியாது… October 5, 2018 முதலமைச்சர் வாகன அனுமதி பத்திரம் சம்பந்தமான பத்திரிகைச் செய்தி முதலமைச்சருக்குரிய இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பாக தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் செய்திகளை முழுமையற்றதாகவும் தமக்கு ஏற்ற விதத்திலும் தவறான வழியில் பிரசுரித்து பொதுமக்களுக்கு பல உண்மைக்குப் புறம்பான செய்திகளை வழங்கியிருப்பது வருத்தத்திற்குரியது. இந்நிலையில் இதன் உண்மை நிலையை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு சூழ்நிலையில் இந்த அறிக்கையை பத்திரிகைகள் பிரசுரிப்பதற்காக அனுப்பி வைக்கின்றேன். இரண்டரை வருடங்கள் பூர்த்தி செய்த வடமாகாணசபையின் உறுப…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெடுக்குநாறிமலைக்கு வந்த கூட்டுஎதிரணியுடன் பிரதேச மக்கள் முறுகல்! இனவாதச் செயற்பாடுகளை தூண்டும் முயற்சியா? October 3, 2018 தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் ,தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோர் இன்றைய தினம் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். அத்துடன் கூட்டு எதிரணியோடு சென்றிருந்த தொல்லியல் திணைக்களத்தைச்சேர்ந்த இருவர் முற்றுமுழுதாக சிங்களத்தில் வரலாற்றுக்களை திரிவுபடுத்தி பல பொய்யான தகவல்களை அவர்களுக்கு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் கூட்டு எதிரணியினருக்கும் ஆலயத்தை சூழ்ந்த மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டத…
-
- 4 replies
- 472 views
-
-
ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் October 4, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை சபா மண்டபத்தில் ,அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது. உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த விடயம் தொடர்பாக பிரேரணையொன்றை முன்மொழிந்தார். குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களான திருகோணமலை திருகோணேஸ்வரம், மன்னார் திருக்கேதீஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வ…
-
- 16 replies
- 4.4k views
-
-
பருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பருத்தித்துறை வேலாயுதம் மாவித்தியாலயத்துக்கு ,அருகாமையில் உள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ். பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலய மாணவர்கள் ஆசிரியர்கள் தமது பாடசாலை முன்பாக பதாதைகளை ஏந்தி தமது எதிர்ப்பினையும் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பருத்தித்துறை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியும், முச்சக்கர வண்டி சாரதிகளும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது குறித்…
-
- 0 replies
- 334 views
-
-
இராணுவத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட இராணுவத்தினர் விசேட மதவழிபாடு யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைக் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலங்கை இராணுவத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட இராணுவத்தினர் விசேட மதவழிபாடுகளில் இன்று ஈடுபட்டுள்ளனர்.இதன் முதல் கட்டமாக இன்று காலை, யாழ்ப்பாணம், நாகவிகாரைக்குச் சென்ற மாவட்ட இராணுவத் தளபதி தலைமையிலான இராணுவத்தினர் அங்கு பெளத்த மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.இதேவேளை இராணுவத் தளபதி தலைமையிலான இராணுவத்தினர் விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டபோது, இராணுவ படைப் பிரிவுகளின் கொடிகளையும் வைத்து வழிபட்டமையும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து யாழ்ப்பாணம், ஐந்து சந்தி பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். பின்ன…
-
- 0 replies
- 275 views
-
-
யாழ்ப்பாணத்தில் செயற்படும் தற்போது ஆவா குழு பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. ஆவா குழுவை விட்டு சென்றவர்களால் அந்த குழு உடைந்துவிடும் என்பதை மையப்படுத்தி, அதிலிருந்து விலகியவர்கள் தற்போது இலக்கு வைக்கப்படுகின்றார்கள் என சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஆவா குழு தொடர்பில் காவற்துறையினராகிய தாம் சட்ட ரீதியாக செயற்பட்டுள்ளதாகவும், செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், தமக்கு உள்ள சட்ட ரீதியிலான எல்லைகளுக்கு அப்பால் சென்று ஆவா குழு விடயத்தில் செயற்பட தயாரில்லை எனவும், சிலர் தாம் அந்த எல்லையை மீறி செயற்படும் வரை பார்த்துக்க…
-
- 1 reply
- 752 views
-
-
கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும்! October 3, 2018 1 Min Read திருமலை ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள்… கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள். நியூசிலாந்துக்குச் சென்றுள்ள திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகாரை குளோபல் தமிழ் செய்திகளின் பத்தியாளர் வரதராஜன் மரியம்பிள்ளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட திருகோணமலையின் மூத்த ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய ” இராவணதேசம்” நூல் வெளியீட்டு நிகழ்விலே திருமலையின் புதிய ஆயர் பேசிய விடயங்களை தனது கலந்துரைய…
-
- 19 replies
- 1.4k views
-
-
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனு இன்றையதினம் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கியிருந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, தாக்கல் செய்திருந்த மேன் முறையீட்டு மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக தெரிவித் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.c…
-
- 3 replies
- 574 views
-
-
ct 03, 2018 யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பௌத்தமயமாக்குதற்கு வழிவகுக்கும் விகாரை கட்டுமானம் ஆரம்பம்! யாழ் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் சிறிலங்கா அரசநிதியில் ஒரு கோடிக்கு ரூபாவிற்கு மேற்பட்ட பண ஒதுக்கிட்டில் பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா அவர்களின் நேரடி கண்காணிப்பிலும் அவரது ஆதரவிலும் சிங்கள இனத்தவரான சாலிய சம்பத் என்ற பொறியியல் பீட விரிவுரையாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் இவ் விகாரை கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளார். பௌத்தமயமாக்குதற்கு வழிவகுக்கும் விதமாக ஒரு பவுத்த பிக்குவை பல்கலைக்கழகத்திலேயே தங்கியிருந்து இவ் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா அனுமதித்துள்ளனர். ய…
-
- 3 replies
- 895 views
-
-
இலங்கை தனது விசா நடைமுறையை மேலும் தளர்த்துகிறது இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் பொருட்டு விசா நடைமுறைகளை மேலும் தளர்த்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது. இதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணைய விசா நடைமுறையில் ஆதரவு பெறும் (sponsorship) நிபந்தனையை தளர்த்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள இணைய நடைமுறையில் இலங்கை செல்லும் திகதியில் இருந்து 30 நாட்களுக்கு விசா வழங்கப்படுகிறது. ஆனால் இதனை 6 மாதங்களுக்கு நீடிக்க முடியும். சீனா, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்களுக்கான விசா நடைமுறைகளை தளர்த்துவதிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. http://www.samakalam.co…
-
- 0 replies
- 479 views
-
-
புலிகளின் தளபதிகளுக்கு நினைவுத் தூபி அமைக்க தடை! தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபியை அமைப்பதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியில் குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபியை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனை எதிர்த்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதன்போது புலிகளுக்கு தூபி அமைக்கப்படுவதாக நீதிமன்றின் கவனத்திற்கு பொலிஸாரும் கொண்டு சென்றனர். இதற்கமைய இந்நிகழ்வை நிறுத்தி நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டதுடன் அடிக்கல் நாட்ட முடியாது …
-
- 0 replies
- 390 views
-
-
அரசியல் தலையீடுகளின்றி, வடக்கின் ஆளணி வெற்றிடங்களை பூர்த்தியாக்க வேண்டும்…. October 4, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு மாகாணத்தில் மத்திய மற்றும் மாகாண அரச திணைக்களங்களில் காணப்படும் ஆளணி வெற்றிடங்களுக்கு அரசியல் தலையீடுகளற்ற வகையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தகுதியானவர்களையே உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் போது சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஆர்.ஜெயகேசரம் கொண்டு வந்த குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பி…
-
- 0 replies
- 221 views
-
-
தமிழ் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: றொபேட் கில்ரன். தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை யார் முன்னெடுக்கின்றார்களோ, அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமென, அமெரிக்க நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் றொபேட் கில்ரன் வலியுறுத்தியதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட,கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் றொபேட் கில்ரன், வடமாகாண முதலமைச்சரை யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக நீடித்துள்ளது. சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு க…
-
- 0 replies
- 233 views
-
-
வடக்கு – கிழக்கு மக்களின் சட்டபூர்வ உரித்துடைய காணிகளை டிசம்பருக்கு முன் விடுவிக்க வேண்டும்… October 4, 2018 வடக்கு, கிழக்கு மக்களின் சட்டபூர்வ உரித்துடைய காணிகள் அம்மக்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து இவ்வருட டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அக்காணிகளை விடுவிப்பதை நிறைவுசெய்யுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி மூன்றாவது தடவையாக நேற்று (03.10.18) பிற்பகல் ஒன்று கூடியது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையை விடுத்தார். மு…
-
- 2 replies
- 477 views
-
-
யாழ்ப்பாணத்தின் தற்கால அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல் October 4, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் யாழ்மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தின் தற்கால அரசியல் நிலைமை மற்றும் மீள்குடியேற்ற பிரதேசங்கள் தொடர்பாகவும் யாழ்மாவட்ட சர்வமதப் பேரவையின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்கின்ற கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சமாதானப் பேரவையின் செயற்பாட்டிற்கு நிதியுதவி செய்கின்ற ஜேர்மன் நாட்டின் மிசேறியோர் அமைப்பு பிரதிநிதிகள் வடக்கு மாகாண மகளி…
-
- 0 replies
- 296 views
-
-
மனோ கணேசனிடம் பாடம் படித்த சுமந்திரன் வடகிழக்கு செயலணி கூட்டம் இன்று நடைபெற்றபோது அமைச்சர் மனோ கணேசனை விமர்சனம் செய்ய முற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மனோ கணேசனிடம் நன்றாக படம் கற்றுக்கொண்ட சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கூட்டமைப்பு எம்பி சுமந்திரனுக்கு என்மீது என்ன கோபமோ, ஏன் கோபமோ எனக்கு தெரியவில்லை. சற்று முன் நடைபெற்று முடிந்த வடகிழக்கு செயலணி கூட்டத்தில் மீண்டும், மீண்டும் என்னை விமர்சனம் செய்ய அவர் முயன்றார். இந்தமாதிரி என்னிடம் நடந்துக் கொள்ள வேண்டாம் என்பதை இன்று அவருக்கு ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர், எம்பிக்கள், அரச அதி…
-
- 1 reply
- 736 views
-
-
வடக்கு மஹாவலி திட்டம் – உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (03) மாலை,பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற வடக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்திலேயே மேற்படி உத்தரவை ஜனாதிபதி விடுத்துள்ளார். கடந்தமுறை நடைபெற்ற செயலணிக் கூட்டத்தில் மஹாவலி தொடர்பில் எதுவித மாற்றுக் குடியேற்றங்களும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஓகஸ்டில் வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதிகள் மற்றும் குடியேற்றம் சம்பந்தமான ஆதாரங்களைச் சமர்ப்பித்த சுமந்திரன், இவற்றை …
-
- 1 reply
- 549 views
-
-
யாழில் 300 குளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன October 3, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக யாழ்.மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும் என சிரேஷ்ட பொறியலாளர் மா.இராமதாஸன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நானும் எனது நண்பர்களும் இணைந்து யாழ்.மாவட்டத்தில் இருக்கும் 8 குளங்களை புனரமைப்பு செய்துள்ளோம். கடந்த வருடம் 3 குளங்களையும், இந்த வருடம் 5 குளங்கள…
-
- 4 replies
- 1.3k views
-
-
மகசின் சிறையில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் நேற்றுக்காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தம்மைப் புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுவிக்க வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும், அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் கடந்த மாதம் 14ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள மேலும் நான்கு அரசியல் கைதிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். …
-
- 0 replies
- 261 views
-
-
வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று!! பதிவேற்றிய காலம்: Oct 4, 2018 வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடைபெறவுள்ளது. தீர்மான வரைவுகள், கேள்விகள், குறைநிரப்பு பாதீடு என்பன இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறும் அமர்வு சம்பிரதாயபூர்வ அமர்வாகவே நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. இன்றைய அமர்விலேயே, தீர்மான வரைவுகள், வாய்மூல வினாக்கள் என்பன எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. மேலும் குறைநிரப்பு பாதீடும் இன்றைய அமர்வில் சமர்பிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையில், விவாதங்கள்,…
-
- 0 replies
- 339 views
-
-
கடலட்டை பிடிப்போரை- 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு பணிப்பு!! பதிவேற்றிய காலம்: Oct 4, 2018 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் பருத்தித்துறை நீதிமன்றப் பகுதிக்குள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு பிரதேச செயலர் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார். வடமராட்சி கிழக்கில் தங்கி நின்று கடலட்டை தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அரச நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்து வாடி அமைத்து தங்கியிருந்தனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற எல்லைக்குள் வாடி அமைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடலட்டை பிடிப்போரை வெளியேறுமாறு…
-
- 0 replies
- 235 views
-
-
இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு October 4, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவர்களிற்குச் சொந்தமான 4 நாட்டுப்படகுகளை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர். குறித்த இரண்டு நாட்டுப்படகுகளின் உரிமையாளர்கள் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது படகின்…
-
- 0 replies
- 184 views
-
-
யாழில் குற்றசெயல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்காத காவல்துறையினருக்கு இடமாற்றம் October 4, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ். காவல் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய 17 காவல்துறையினருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபரின் உத்தரவின் பேரிலையே இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.நகர் பகுதியில் உள்ள கடையொன்றில் கடந்த 24ஆம் திகதி 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன. அது குறித்து மறுநாள் கடை உரிமையாளரால் யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு செய…
-
- 0 replies
- 152 views
-