Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி கி.தவசீலன்Jun 18, 2018 | 11:50 by in செய்திகள் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 161 ரூபாவாக இன்று சிறிலங்கா மத்திய வங்கியால் வரையறுக்கப்பட்டிருந்தது. சிறிலங்காவின் வரலாற்றில் அமெரிக்க டொலர் 161 ரூபாவுக்கு விற்கப்பட்டது இதுவேமுதல் முறையாகும். கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு, 153 ரூபாவாக காணப்பட்டது. ஆறு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 8 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. http://www.puthinappalakai.net/2…

  2. ஏறாவூர்பற்றில் நுண்கடனுக்கு தடை: ஏகமனதாக தீர்மானம்! June 18, 2018 வட்டி விகிதம் குறித்து நிதி நிறுவனங்கள் ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்கும் வரை ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் நுண்கடன் வழங்க முடியாது என்ற தீர்மானத்தை ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நுண்கடன் தொடர்பான விசேட கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏறாவூர்பற்று பிரதேச பகுதியில் நுண்கடன் நிதி வழங்குவது தொடர்பாக இன்று அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தை பகிஸ்கரித்த நான்கு நிறுவனங்களுக்கு பிரதேசத்தில் கடன் வழங்க அனுமதி மறுப்பு. …

  3. ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் வெற்றிலையுடனும், கோரிக்கை கடிதத்துடனும் நீண்டநேரம் காத்திருந்தும் ஜனாதிபதி சந்திக்காத நிலையில் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பரிதாபம் இன்று இடம்பெற்றுள்ளது. சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி நிகழ்வு இன்று(18) கிளிநொச்சிமத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம் ஆயுள் தண்டனை கைதியான ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிக்க நீண்ட நேரம் காத்திருந்த போதும் ஜனாதிபதி அச்சிறுவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். இதனை அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்து ஜனாதிபதி சந்தி்க்க சென்ற சிறுவர்களை திர…

  4. எம்மால் தெரிவிக்கப்பட்ட பல விடயங்கள் ஏற்கனவே தடைப்பட்டு நிற்கின்றன. நாங்கள் அவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தும் நீங்கள் அவற்றை உதாசீனம் செய்வது வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. எனினும் எங்கள் பிரச்சனைகளை நாட்டின் தலைவர் என்ற முறையில் உங்களுக்குக் கூறி வைப்பது எமது கடமை. என வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன் இன்று ஜனாதிபதி முன் தெரிவித்துள்ளார் சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி நிகழ்வு இன்று(18) ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சிமத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார் . …

    • 1 reply
    • 406 views
  5. அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் தூண்டுதலில் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/16/முஸ்லிம்கள்-மீது-தாக்குதல்-அக்கரைப்பற்றில்-பதற்றம்.html

  6. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த போகும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அந்த கட்சிக்குள் நெருக்கடியான நிலைமை உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த கட்சி துண்டு துண்டாக சிதறும் நிலைமையை காண முடியும் எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோட்டே தொகுதி அமைப்பினர் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ராஜபக்ச அரசாங்கம் ஒன்றை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என சிலர் பேசுவதாகவும் அப்படியான ஆட்சி மீண்டும் ஏற்பட்டால், இலங்கை்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற…

  7. மல்லாகம் இளைஞர் சுட்டு படுகொலை – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது June 18, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் Roshan-Fernando யாழ்.மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அது தொடர்பி மேலும் தெரிவிக்கையில் , மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விஷேட காவல்துறைக் குழு அமைக்கபட்டு உள்ளது. அக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். விசாரணைகளின் முடிவிலேயே சம்பவம் தொடர்பில் கூற முடியும். விசாரண…

  8. கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட இருவரினது விளக்கமறியல் வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான 41 வயதுடைய நாடராஜா பிரதீபன் கடந்த 6ஆம் திகதி பாடசாலைக்கு அண்மையாக வைத்து தாக்கப்பட்டார். இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர் கொண்ட குழு ஒன்றே அவர் மீது தாக்குதலை மேற்ககொண்டது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வ…

  9. TNAயின் MP ஒருவரை UNPயில் இணைத்துக்கொள்ள பேச்சுவாரத்தை என்கிறது கொழும்பு ஊடகம்… June 18, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்வது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக வடமாகாண அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான இவர், சட்ட வல்லுநர் எனவும் கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து அதன் சட்டப் பிரிவுக்கு பொறுப்பாக செயற்படுமாறு இவருக்கு அழைப்பு கிடைத்துள்ளதாகவும் அடுத்த தேர்தலின் பின்னர் தேசிய பட்டியல் மூலம் நாடாளும…

    • 2 replies
    • 1.1k views
  10. புதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன் சிறப்புச் செய்தியாளர்Jun 18, 2018 | 2:33 by in செய்திகள் புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்த திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “எனக்கு அடுத்த முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்று சிலர் கூறுகிறார்கள். தம்முடன் இருக்குமாறு பெருமளவு மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். முதலாவதாக, கட்சி எனக்கு போட்டியிட இடமளிக்கும் வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால், நான் இன்னொரு கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டியிருக்கும். இல்லையேல், தனிக் கட்ச…

  11. எமக்கு வாய்ப்பு தாருங்கள் - வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓட வைப்போம் மாகாண சபை தேர்தலின் போது, வாய்ப்புக் கொடுத்தால், வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓடும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசியல் நிலவரங்கள் தொடர்பான ஊடகவியலாளர்கள் மாநாடு இன்று (16) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் மக்களின் பின்னடைவிற்கு அரசாங்கம் காரணம் அல்ல, தமிழ் தலைமைகள் தான் அழிவிற்கும் பின்னடைவிற்கும் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். 30 வருடத்தில் மக்கள் எதுவும் பெறவில்லை, அந்த பின்னடைவிற்கு தமிழ் தலைமைகள் தான் காரணம். மாகாண சபையினை தும்புத்தடியாலும் தொடம…

    • 14 replies
    • 1.5k views
  12. மானிப்பாய் அந்தோனியார் சொரூபம் வீழ்ந்து உடைந்தது – கதறி அழுத பக்தர்கள்! June 18, 2018 மானிப்­பாய் அந்­தோ­னி­யார் ஆலய தேர்ப் பவ­னி­யின் போது என்­பன நேற்­றுத் திடீ­ரென்று வீழ்ந்து உடைந்­துள்­ளது. இந்­தச் சம்­ப­வத்­தால் பக்­தர்­கள் கதறி அழு­த­னர். இந்­தச் சம்­ப­வத்­தால் அவர்­க­ளி­டம் மனக்­கி­லே­ச­மும் ஏற்­பட்­டது. மானிப்­பாய் அந்­தோ­னி­யார் ஆல­யத் தேர்ப் பவனி நேற்று இடம்­பெற்­றது. தேரில் அந்­தோ­னி­யார் மற்­றும் குழந்தை யேசு­வின் சொரூ­பம் என்­பன எடுத்­து­வ­ரப்­பட்­டன. தேர்ப் பவ­னி­யின் இறு­திக் கட்­டத்­தில், ஆல­யத்­தின் பிர­தான வாயில் ஊடா­கத் தேர் உள்­நு­ழை­யும்­போதே அந்­தோ­னி­யார் மற்­றும் குழந்தை யேசு­வின் சொரூ­பங்­கள் வீழ்ந்து உடைந்­துள்­ள…

    • 2 replies
    • 1.1k views
  13. சுதாகரனின் பிள்ளைகளுக்கு கருணை காட்டவும் Editorial / 2018 ஜூன் 18 திங்கட்கிழமை, மு.ப. 04:19 Comments - 0 -சுப்பிரமணியம் பாஸ்கரன் தாயை இழந்து, தந்தையின் அரவணைப்புக்காக ஏங்கித் தவிக்கும் ஆயுள் தண்டனைக் கைதியான ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளுக்கும், இன்று (18) தீர்வு கிடைக்க வேண்டுமென்றும் அப்பிள்ளைகளின் கண்ணீரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துடைக்க வேண்டுமென்றும், பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. சுகவீனம் காரணமாக, ஆனந்த சுதாகரனின் மனைவி, அண்மையில் உயரிழந்தார். இந்நிலையில், அவரது இரண்டு பிள்ளைகளும் பெற்றோரின் அரவணைப்பின்றி, உறவினர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். தாயை இழந்த இரு பிள்ளைகளுக்கும், தந்தையின் அரவணைப்பு கிடைக்கவேண்டி, ஆயுள்தண…

  14. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்ததாக மூன்று இளைஞர்கள் கைது June 18, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பம் விளைவித்த குற்றசாட்டில் மூன்று இளைஞர்கள் தெல்லிப்பளை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். மல்லாகம் பகுதியில் நேற்றிரவு காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். குறித்த இளைஞனின் சடலம் தெல்லிப்பளை வைத்திய சாலையில் உடல் கூற்று பரிசோதனைக்காக வைக்கபட்டு உள்ளது. அந்நிலையில் நேற்றிரவு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு சென்ற இளைஞர்கள் அங்கு குழப்பத்தில் ஈடுபட்டார்கள் என வைத்திய சாலை நிர்வாகத்தினால் தெல்லிப்பளை காவல்துறையினருக்கு முறைப்பாடு வழங்…

  15. அடாத்தாக பிடிக்கப்பட்ட புலிகளின் மூத்த தளபதியின் வீடு: வாங்கிக் கொடுத்துவிட்டு வாய்மூடியிருக்கும் சாட்சி பசுபதிப்பிள்ளை! June 17, 2018 விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராக இருந்த தினேஷ் மாஸ்டரின் கிளிநொச்சி வீட்டை, நபர் ஒருவர் அத்துமீறி அடாத்தாக பிடித்து வைத்துள்ளார். அந்த வீட்டில் வாழ்ந்து வந்த தினேஷ் மாஸ்டரின் வயோதிப மாமியாரை குறித்த நபர் வீட்டிலிருந்து விரட்டியுள்ளார். இந்த வீட்டை தினேஷ் மாஸ்டரிற்காக அப்போது இந்த கொடுக்கல் வாங்கலை கவனித்தவர் தற்போதைய வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை. இப்போது அது குறித்து அவர் வாய் திறக்காமலிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகள்- அரசு சமாதான உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சி கணேசபுரத்தில், புக…

  16. காணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது ! June 17, 2018 விசாரணையின்றி காத்திருக்கச் சொல்வது நியாயமற்றது! இலங்கை யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேர் பற்றிய பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது. இப் பட்டியலில் குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் இலங்கை அரசு, விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அவர்களைக் கண்டுபிடித்தல் மற்றும் பாதுகாத்தலை ஐநா வலியுறுத்துவதாக காணாமலாக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் தலைவர் சுயெலா ஜனினா கூறியுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொரு நொடியும் கலக்கத்தில் இருப்பதாகவும் அவர்களது நிலமையை கரு…

  17. நீதிபதி மா.இளஞ்செழியன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டது! June 17, 2018 திருகோணமலை மாவட்ட மேல் நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிக்குரிய ஒழுக்ககோவைகளை கவனத்தில் கொள்ளாமல் நடந்தது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டு, குற்றப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கம் இளஞ்செழியனிடம் கோரப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிபதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே இளஞ்செழியன் மீது, இந்த துறை ரீதியிலான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான முன் அனுமதி பெறாமல், அவர் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு உ…

    • 1 reply
    • 907 views
  18. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதி விவசாய அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பிரான அங்கஜன் இராமநாதனுக்கு யாழில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. பிரதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதற் தடைவயாக யாழ் கோவில் வீதியிலுள்ள அவருடைய அலுவலகத்திற்கு இன்று சனிக்கிழமை காலை வருகை தந்திருந்தார். இதன் போது அங்கு திரண்டிருந்த கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் மலர்மாலைகள் அணிவித்தும் பொன்னாடைகளை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கஜன் இராமநாதன் ஆதரவாளர்கள் தொண்டர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். …

    • 1 reply
    • 578 views
  19. மட்டக்களப்பில் நிரந்தரமாக மூடப்பட்ட பாடசாலை – அதிருப்தியில் மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவு,கரடிவெட்டியாறு விஜிதா வித்தியாலயத்தினை மீண்டும் திறக்குமாறு பிரதேச மக்கள்,மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் கரடிவெட்டியாற்றில் கடந்த 25வருடங்களாக இயங்கிவந்த பாடசாலை ஆசிரியர் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்த பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் இங்கு கல்வி கற்ற மாணவர்கள் உன்னிச்சை பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பாடசாலையில் அதிபர் ஒருவரும் ஆசிரியர் ஒரு…

  20. முல்லைத்தீவில் Resort இல் தமிழரசுக்கட்சி தலைவர்கள்; இந்த வருடத்திற்குள் தீர்வாம்: சிவமோகனிற்கு கட்சி அங்கத்துவம்! June 16, 2018 கூட்டம் நடைபெற்ற Ocean Park Resort தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு, மத்தியகுழு கூட்டம் நேற்றும், இன்றும் முல்லைத்தீவில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்திலேயே உள்ள அதிசொகுசு விடுதியான Ocean Park Resort இல் இந்த கூட்டங்கள் நடைபெற்றன. இரண்டு நாள் கூட்டங்களின் முடிவில் தமிழரசுக்கட்சி தொடர்பான பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் உள்ளூராட்சிசபை தேர்தலில் போட்டியிட்டு, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்த 9 உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அவர்களிடம் விளக்கம் கோரி கடி…

  21. அமெரிக்கக் குடிமகன் என்ற காரணத்தால் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் எந்தச் சட்ட சிக்கலும் இல்லை. எனக்கு எந்தத் தடையும் இல்லை. அமெரிக்கா அவ்வாறான கருத்துக்களைக் கூறியதாக உறுதியான தகவல்களும் இல்லை. இவ்வாறு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் அவரைச் சந்தித்த பிரமுகர்களுடனான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தாவது http://newuthayan.com/story/15/தேர்தலில்-களமிறங்குவதை-தீர்மானிப்பது-மகிந்தவே-அமெரிக்கா-அல்ல-கோத்தபாய.html

    • 2 replies
    • 939 views
  22. தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணித்த எனது மகனை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் அவனின் ஆத்மா சாந்தியடைய விடுஙக்ள் என இளைஞனின் பெற்றேர்கள் உருக்கமாக கோரியுள்ளனர். “எமது குடும்ப வறுமை காரணமாக எனது பிள்ளை பாடசாலை விடுமுறையில் நண்பர்களுடன் இணைந்து கொழும்புக்கு வேலைக்கு சென்றிருகின்றார். இதன் போது அங்கு ஏற்பட்ட விபத்தில் அவர் மரணமடைந்து விட்டார். இதனை எமது பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிரதேச சபை உறுப்பினர் தன்னுடைய அரசியலாக்க முற்பட்டார் நாம் அதற்கு இடம்கொடுக்கவில்லை இந்த நிலையில் அவர் முகநூல்கள் மூலம் எங்களை பற்றியும் எங்களுக்கு உதவி செய்வதற்காக நாங்கள் அழைத்துச் சென்ற போதகர் பற்றியும் அவதூறு செய்து வருகின்றார். தயவு செய்து எமது மகனின் மர…

    • 1 reply
    • 885 views
  23. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஆயுத இயக்கம் என்ற வகைக்குள் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் நிறுவனமான CIA தனது 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ‘வேர்ல்ட் ஃபக்ட் புக்’ (World Factbook) என்ற தலைப்பிலான தமது தகவல் வெளியிட்டு ஊடகங்களில் தரவேற்றம் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன், வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளில் இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா. ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம்- வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்பா ஆகிய ஆயுத அமைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இந்துத்துவா அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ர…

    • 1 reply
    • 768 views
  24. கல்வி கற்க செல்லும் சிறுமியருக்கு பாலியல் தொல்லை – வட்டுக்கோட்டையில் ஆசிரியர் கைது.. June 13, 2018 தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்தமை மற்றும் சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான அவரை, பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. “வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியரிடம் கல்வி கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என சங்கானை பிரதேச சிறுவர் அலுவலகருக்கு…

  25. தமிழர் தாயக பிரதேசங்களில் அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்- வடமாகாண சபை தீவிர ஆலோசனை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஈழத் தமிழர்களிடையே பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மைத்திரிபால சிறிசேனவும் ரணிலும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, அபிவிருத்தி என்ற பெயரில் கூட்டங்களை நடத்துவதாகவும், ஆனால் வடமாகாண சபையுடன் கலந்துரையாடுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட யாரும் தமிழ் இனவாதத்தை பேசுவதில்லை என்றும் ஈழத் தமிழர்களின் சுயநி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.