ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142772 topics in this forum
-
Published By: VISHNU 30 JAN, 2025 | 07:33 PM (செ.சுபதர்ஷனி) நாடளாவிய ரீதியில் துரித சேவையை வழங்கி வரும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக 150 புதிய அம்பியூலன்ஸ்களை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை மையத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை தற்போது அரசா…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 2024 போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது நேர்முகப் பரீட்சையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கே ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள மொழிமூலம் 34 பேரும் தமிழ் மொழிமூலம் 61பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் 94 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மொழிமூலம் 19 பேரும் தமிழ் மொழிமூலம் 42 பேருக்குமாக மொத்தம் 250 பேருக்கான ஆசிரியர…
-
- 0 replies
- 364 views
-
-
200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி! மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேங்காய்ப் பால், தேற்காய் பால்மா மற்றும் உறைந்த தேங்காய் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தை விரைவில் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக…
-
- 0 replies
- 221 views
-
-
யாழ் பொலிஸாரால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது யாழ் நீதவான் நீதிமன்றம்! யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை ஜனாதிபதி மேற்கொள்ளும் போது முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்ளை தடுத்து நிறுத்துமாறு கோரி நீதிமன்றத்தில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை யாழ். நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு இடையூறு இல்லாமல், அரசியலமைப்புக்குட்பட்ட வகையில் கவனயீர்ப்பை முன்னெப்பதற்கான உரிமை, சகலருக்கும் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்யதுடன் பொலிஸாரின் மனுவையும் தள்ளுபடி செய்தது. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது…
-
- 0 replies
- 170 views
-
-
பீற்றர் இளஞ்செழியன் விசாரணைக்கு அழைப்பு சண்முகம் தவசீலன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவையாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் பீற்றர் இளஞ்செழியனின் இல்லத்துக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவு அதிகாரிகள் அழைப்பு கடிதத்தை வழங்கி சென்றுள்ளனர் குறித்த கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக 2025.02.01 ஆம் திகதி காலை 10 மணிக்கு அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அ…
-
- 0 replies
- 168 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகல்! BatticaloaJanuary 30, 2025 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் இளம் பொருளாளர் ஆகியோர் பதவியில் இருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 24, 25ஆம் திகதிகள் ஜனவரி மாதம் மாணவர்கள் மீதான பழிவாங்குதல்கள் மற்றும் கற்றல் உரிமைகளிற்காக உண்ணாவிரதப் போராட்டம் மாணவர்களினால் சனநாயக வழியில் நடைபெற்றது. எனினும் அந்த போராட்டத்தினை திசைதிருப்பும் வகையிலும், திரிபுபடுத்தும் வகையிலும் அதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் Drugs பாவனையில் ஈடுபட்டு வருகின்றார்கள் எனும் பொய்யான …
-
- 0 replies
- 133 views
-
-
30 JAN, 2025 | 10:03 AM (இராஜதுரை ஹஷான்) மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். துறைமுகத்தில் இருந்த சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விடுவிடுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்…
-
- 1 reply
- 157 views
- 1 follower
-
-
யாழ்.போதனாவின் மகப்பேற்று விடுதி புதிய கட்டடத்தில்! adminJanuary 30, 2025 யாழ் போதனா வைத்தியசாலை – மகப்பேற்று விடுதி (இலக்கம் 18) புதிய இடத்தில் செயல்படுகிறது என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை 18ம் இலக்க மகப்பேற்று விடுதி வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலக கட்டடத்துக்கு அண்மையில் செயல்பட்டுவந்தது. கடந்த திங்கட்கிழமை முதல், மருத்துவக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் தளத்தில் செயல்படுகிறது. எனவே மகப்பேற்று விடுதிகளில் தங்கி இருக்கும் கர்ப்பிணி தாய்மார்களை பார்வையிட வருவோர் நுழைவாயில் 6 மூலம் வருகை தரலாம் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. https://globaltamilnews.net/2025/210511/
-
- 0 replies
- 137 views
-
-
பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட குற்றத்தில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது! adminJanuary 30, 2025 யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று , கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் , மிக இரகசியமாக மேல் மாடியில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை வைத்து நபர் ஒருவர் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து யாழ் , மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை (29.01.25) குறித்த வீட்டினை சுற்றி வளைத்து மேல் வீட்டில் விபச்சார நடவடி…
-
- 0 replies
- 257 views
-
-
இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து! adminJanuary 30, 2025 அதிகளவான நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில், சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில், விவசாய உற்பத்தித் துறைகளில் இணைந்து செயற்படுவதற்கு நியூசிலாந்து ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிற் பைன் குறிப்பிட்டுள்ளார். வடக்குக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் டேவிற் பைன் தலைமையிலான உயர்ஸ்தானிகராலய குழு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைம…
-
- 0 replies
- 92 views
-
-
29 Jan, 2025 | 05:26 PM மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ நிகழ்வின்போதே இந்த நபர் காணாமல்போயுள்ளார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார். மது போதையில் அப்பகுதிக்குச் சென்ற இந்த நபர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி கரைக்கு கொண்டுசென்றதன் பின்னர், மீண்டும் அவர் குளத்தில் பாய்ந்துள்ளார். பல மணிநேரம் கடந்தும் அவர் மேலே வராத காரணத்தால், அங…
-
- 1 reply
- 213 views
- 1 follower
-
-
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் முறைப்பாடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்கனவே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகத்திடம் அல்லது அந்த திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது முறைப்பாடுகளை 071 40 33 300 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 64 views
- 1 follower
-
-
Published By: VISHNU 30 JAN, 2025 | 10:16 AM ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் மதிப்புக்களை இரு நாடுகளும் பகிர்ந்துக் கொண்டுள்ளன. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு என்பவற்றை ஊக்குவிக்கும் திறந்த அரசுப் பங்குடமை போன்ற திட்டங்கள் மூலம் ஆழமான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற ச…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறந்த பின்னர் அவரின் உடல் பதப்படுத்தப்பட்ட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச, 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டுவந்த ஒரு கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என அஜித் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். பதப்படுத்துவதற்கான தேவை எனவே, எதிர்கால சந்ததியினர் மகிந்தவின் உடலை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அவர், இறந்த ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்னாமின் புரட்சிப் போராளி ஹோ சின் மின்ஹ் ஆகியோரின் பதப்படுத்த உடல்களை உதாரணமாக தெரிவித்துள்ளார். மகிந்தவின் உடல் பதப்படுத…
-
-
- 8 replies
- 17.8k views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். . "விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம்" என்று எம்.பி. ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார். Tamilmirror Online || ”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்”
-
-
- 10 replies
- 809 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி ரகுராம் நாளை மீண்டும் பதவியேற்பு January 29, 2025 5:36 pm யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் மீண்டும் நாளை பதவியேற்கவுள்ளதாக பல்கலைக்கழக பேரவையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் விசேட பொதுக்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்ற நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட சில மாணவர்கள் மீதான தடையை நீக்குவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர், பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தனது பதவியிலிருந்து விலகுவதாகப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்துக் கலந்த…
-
- 1 reply
- 247 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது January 29, 2025 4:15 pm நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது. https://oruvan.com/member-of-parliament-ramanathan-archuna-was-arrested-a-short-while-ago/
-
-
- 12 replies
- 944 views
- 1 follower
-
-
கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று (28) நடைபெற்றது. கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டடத்தினை SY NIRO COOL CAFE நிறுவனம் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த பகுதிகளை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முகமாக கிளிநொச்சி குளத்தினுள் விசைப்படகு (super boat), துடுப்பு படகு (padpaddele boat) ஆகிய பொழுதுபோக்கு படகுச் சேவைகளை நடாத்துவதற்கும் அதனை அண்டிய பகுதியினை கவர்ச்சிகரமாக மாற்றியமைப்பதற்கும் அனுமதி தருமாறு கோரியுள்ளனர். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில், இந்த கலந்துரையாடல் கிளிநொ…
-
- 1 reply
- 370 views
-
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்! adminJanuary 28, 2025 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://globaltamilnews.net/2025/210421/
-
-
- 33 replies
- 1.6k views
- 3 followers
-
-
29 Jan, 2025 | 08:26 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் தற்பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு புலனாய்வு அறிக்கை அவசியமாகும். அந்த வகையில் யோஷித ராஜபக்ஷவிடமிருந்து 4 துப்பாக்கிகள் ஏற்கனவே மீளப் பெறப்பட்டுள்ளதோடு, எஞ்சியுள்ள இரு துப்பாக்கிளையும் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட து…
-
- 1 reply
- 257 views
-
-
29 JAN, 2025 | 04:06 PM (நமது நிருபர்) கடந்த காலங்களில் அரசியல் தரப்பினால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடுகள் எழுந்தன, எனினும் அரசியல் தரப்பிடம் எவ்வித மறைமுக நோக்கங்களும் இல்லை என்பதை நாம் தற்போது நிரூபித்துள்ளோம். அரச பொறிமுறை எங்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் அரசு பொறிமுறையின் மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும். மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடென்ற வகையில் முன்னேற முடியாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல் நடைபெற்ற 2025 பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இத…
-
-
- 2 replies
- 217 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்! வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து யாழ். நகர்ப்பகுதிக்குள் பேரணி இடம்ப…
-
-
- 27 replies
- 1.7k views
-
-
Published By: Vishnu 29 Jan, 2025 | 09:08 PM கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 9 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கிளிநொச்சி, கண்ணகிபுரம் பகுதியிலுள்ள வீதியில் இருந்த குளவிக்கூடு கலைந்தமையால், வீதியால் சென்ற பாடசாலை மாணவர்கள் 9 பேரும், வீதியால் பயணித்தவர்கள் மேலும் 6 பேரும் கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணகிநகர் அம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உட்பட 15 பே…
-
- 0 replies
- 95 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. R Tamilmirror Online || அடுத்த கைது நாமல்?
-
- 2 replies
- 431 views
-
-
யாழ். செல்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது யாழ். மாவட்டச் செயலகத்தில் விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அங்கத்தவர்களுடனான சந்திப்பொன்றிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன. இதனை விடவும், தென்மராட்சியில் ஆலய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனினும் இதற்கான உறுதிப்படுத்தல்கள் இன்னமும் செய்யப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந…
-
- 3 replies
- 251 views
-