Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விபத்தை ஏற்­ப­டுத்­திய இரா­ணுவ கப் ரக வாகா­னம் பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தற்கு முன்­னர் அவ­சர அவ­ச­ர­மாக வீதி­யில் வைத்து இலக்­கத்­த­கடு மாற்­றப்­பட்­டது. இதனை அங்­கி­ருந்த பல­ரும் அவ­தா­னித்­த­னர். இரா­ணு­வத்­தி­ன­ரின் இந்­தச் செயற்­பாடு பலத்த சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணம் பலாலி வீதி­யில் புன்­னா­லைக்­கட்­டு­வன் பகு­தி­யில் 11ஆம் மைல் கல்­லுக்­குக்கு அண்­மை­யில் நேற்­றுக் காலை 8.15 மணி­ய­ள­வில் விபத்து ஒன்று இடம்­பெற்­றது. இரா­ணுவ கப் ரக வாக­னம் வீதி­யால் பய­ணித்த மோட்­டார் சைக்­கிளை மோதி­ய­தால் அதில் பய­ணித்த இளை­ஞ­ரின் கால் முறிந்­தது. விபத்தை அடுத்து அந்­தப் பகு­திக்…

    • 0 replies
    • 359 views
  2. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் குறித்த இடைக்­கால அறிக்­கையை உட­ன­டி­யாக இறுதி செய்து அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைப்­பது என்று வழி­காட்­டல் குழு முடிவு செய்­துள்­ளது. அதற்­காக நாளை ஆரம்­ப­மா­கும் வழி­ந­டத்­தல் குழு­வின் அடுத்த கூட்டத்தை மூன்று தினங்­க­ளாக நீடிப்­ப­தற்­கும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக இரு தினங்­க­ளுக்கு மட்­டுமே கூட்­டத்தை நடத்­தத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது இடைக்­கால அறிக்­கையை இறுதி செய்­யும் பணியை விரை­வு­ப­டுத்­து­வ­தற்­காக மேலும் ஒரு நாள் கூடிப்­பே­சு­வ­தற்கு முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.நாளை, நாளை மறு­தி­னம் மற்­றும் வியா­ழக்­கி­ழமை ஆகிய மூன்று தினங்­க­ளும் கூட்­டம் நடை­பெ­ற­வுள்…

    • 0 replies
    • 254 views
  3. மோட்­டார் சைக்­கி­ளில் வந்த 4 பேர் வீதி­யோ­ரத்­தில் கதைத்­துக் கொண்­டி­ருந்த 2 இளை­ஞர்­கள் மீது வாள்­க­ளால் சர­மா­ரி­யாக வெட்­டி­விட்டு அங்கு நின்ற முச்­சக்­க­ர­வண்­டி­யை­யும் சேதப்­ப­டுத்­தித் தப்­பிச் சென்­ற­னர். மட்­டு­வில் வடக்கு முத்­து­மாரி அம்­பாள் ஆல­யத்தை அண்­டிய பகு­தி­யில் நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ள­வில் இந்­தச் சம்பவம் இடம்­பெற்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது. அந்தப் ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் காய­ம­டைந்­த­வர்­களை வாக­னத்­தில் ஏற்றி சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்ப்­பித்­த­னர். அவர்­கள் இரு­வ­ரும் மேல­திக சிகிச்­சைக் காக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­னர். மட்­டு­வில் முத்­து­மா­ரி­யம்­மன் கோவி­ல­டி­யைச் ச…

    • 0 replies
    • 299 views
  4.  ஜனாதிபதி, பிரதமர் பத்திரகாளி கோவிலில் வழிபட்டனர் வடமலை ராஜ்குமார் திருகோணமலையில் இடம்பெறும் யொவுன்புர நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வழிபட்டனர். அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் இருந்தார். - See more at: http://www.tamilmirror.lk/194129/ஜன-த-பத-ப-ரதமர-பத-த-ரக-ள-க-வ-ல-ல-வழ-பட-டனர-#sthash.IYT25sT7.dpuf

  5. வடமாகாண முதலமைச்சரால் இன்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன. வடமாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்புகொண்டார்கள். மேலும் வேலையற்ற பட்டதாரிகளும் சந்தித்துப் பேசினார்கள். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் இவற்றை முன்வைக்கின்றேன். காணமற் போனவர்கள் காணமற் போனவர்களின் தொடர்ச்சியான போராட்டம் கிளிநொச்சியில் 49 நாட்களும், வவுனியா 38 நாட்களும் முல்லைத்தீவு 26 நாட்களும்…

  6. ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய மீனவர்கள் 6 பேர் கைது.! பருத்திதுறை அண்மித்த கடற்பரப்பில் வைத்து, 16 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான 13.5 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன், இந்திய மீனவர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பியல் டீ சில்வா தெரிவித்தார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18597

  7. அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியை தந்தாலும் சொந்த காணிக்குள் காலடி வைக்கும் வரை போராட்டம் தொடரும்! 33 நாட்களாக சொந்த நிலத்தை மீட்க போராடிவரும் கேப்பாபுலவு மக்கள் தெரிவிப்பு! கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் வீடுவாசல்களையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று 33வது நாளாக தொடர்கின்றது. கடந்த முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எங்களது காணிக்குள் நாங்கள் அடியெடுத்து வைக்கும் வரை எமது போராட்டம் தொடர…

  8. நெடுந்தீவு சிறுமியின் வழக்கு நாளை முதல் யாழ்.மேல் நீதிமன்றில் தொடர் விசாரணை – மரபணு பரிசோதனை குற்றவாளி கண்டறியப்படவுள்ளார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு சிறுமி ஜேசுதாஸ் லக்சினியை படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணையானது நாளை திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சிப் பதிவிற்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி கடையொன்றுக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிரான வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம…

  9. மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது மாணவனை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் - யாழ்பாணத்திலுள்ள பிரபல கல்லுரியின் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். க.பொ.த (சா/த) தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரே குறித்த ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். மாணவன் வீட்டுப் பாடம் செய்யவில்லை என்ற குற்றத்திற்காய் ஆசிரியர் மாணவனை தாக்கியுள்ளதாக, மாணவனின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் குறித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.onlineuthayan.com/news…

  10. வில்பத்து விவகாரத்திற்கு இருவாரத்தில் தீர்வின்றேல் பரந்துபட்ட போராட்டம் எம். நேச­மணி , எம்.சி.நஜி­முதீன் *முஸ்லிம் சிவில் அமைப்புகள் எச்சரிக்கை *சுயாதீனக் குழு அமைக்க கோரிக்கை வில்­பத்து விவ­காரம் தொடர்பில் அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு பாதிப்­பில்­லாத தீர்வை அர­சாங்கம் இரு­வார காலப்­ப­கு­தியில் முன்­வைக்க வேண்டும். அவ்­வாறு செய்யத் தவ­று­மி­டத்து நாடு தழு­விய ரீதியில் பரந்­து­பட்ட போராட்­டங்­கள் நடத்­தப்­படும் என முஸ்லிம் சிவில் அமைப்­புகள் தெரி­வித்­துள்­ளன. குறித்த வர்த்­த­மானி தொடர்பில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­ப தியின் செய­லா­ள­ருக்கும் முஸ்லிம் சிவில் அமைப்­பு­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது எவ­…

    • 1 reply
    • 363 views
  11. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் குறித்து எச்சரிக்கையாகவே இருக்கிறோம் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு எம்.நேச­மணி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமை ப்பு இலங்­கையில் ஊடு­ரு­வாத வகை யில் பாது­காப்பு தரப்பு மிகவும் அவ­தா­ன­மா­கவே உள்­ளது. உலகின் பல்­வேறு நாடு­களில் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களை நடத்­தி­வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறு பல்­வேறு நாடுகள் அறி­வு­றுத்­தி­யுள்­ளன என்று பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்தார். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமை ப்பு இலங்கை போன்ற நாடு­க­ளுக்குள் ஊடு­ருவ வாய்ப்­புக்கள் உள்­ள­தாக அமெ­ரிக்க பாது­காப்­புத்­த­ரப்பு வெளி…

  12. சுதந்திரம் எம் பிறப்புரிமை! அதனை யார் தட்டிப் பறித்தாலும் அதனை மீட்டெடுக்கப் போராட தயங்கலாகாது. நாடுகளின் அங்கீகாரம்தான் எம் விடுதலையை உறுதி செய்யும். உலக ஒழுங்கில் நாடாக நாம் இணைய வேண்டின் ஒரு நாட்டிற்கான தகுதி உடையவர்களாக ஏனைய நாடுகள் எம்மை அங்கீகரிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட எம் மக்களுக்கு விடுதலை வேண்டும் என்ற தாகம் முற்றிலும் நியாயமானதே. ஆனால் நாடுகளை எம் பக்கம் திரும்புவதற்கான வேலை பிரம்மாண்டமானது. எமக்குள் மட்டும் சர்ச்சை செய்து கொள்வதும், தமிழ் மக்களிற்குள்ளேயே தம் கருத்துடன் ஒத்து வராதவர்கள் அல்லது தமக்கு கீழ் வராதவர்களை எதிரியாகவும்இ துரோகியாகவும் சித்திரிப்பவர்கள் நாடுகளின் ஆதரவைத் தமிழ் மக்கள்பால் திருப்புவது மிகக் குறைவு…

    • 0 replies
    • 391 views
  13. புதிய அரசியலமைப்பு: அரசாங்கத்திற்குள் முரண்பாடு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு மீண்டும் ஆபத்து லியோ நிரோஷ தர்ஷன் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நியா­ய­மான அர­சியல் தீர்வு கிட்டும் என்ற தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்பு பெரும் ஏமாற்­ற­மா­கவே போய்க் கொண்­டி­ருப்­ப­தாக அர­சியல் அவ­தா­னிகள் கூறு­கின்­றனர் ஏனெனில் புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் அர­சாங்­கத்­திற்குள் நெருக்­க­டி­யான நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாகத் தெரியவரு­கின்­றது . புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என தெரி­வித்­துள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அர­சி­ய­ல­மைப்பை திருத்­து­வ­தற்கு மாத்­தி­ரமே தேவைப்­படின் ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. …

  14. ஜெனீவாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை ஜெனீவாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில், ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட தனியார்துறை ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் இவ்வாறு ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செலசினே என்ற நிறுவனம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. http://globaltamilnews.net/archives/22953

  15. போர்க்குற்றவாளிக்கு முக்கிய இராணுவப் பதவி - நீதியை எதிர்பார்க்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! [Sunday 2017-04-02 09:00] போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள இராணுவத் தளபதிகளில் ஒருவரை இராணுவ நிருவாகத்தின் உயர் நிலைப் பதவிக்கு நியமித்துள்ளதன் மூலம் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையிடம் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளையும் உதாசீனம் செய்துள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று குற்றம்சாட்டியுள்ளது. போரில் ஈடுபட்ட எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இடமளிக்கமாட்டேன் என குருநாகலி…

    • 0 replies
    • 227 views
  16. போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு இலங்கைக்கு அனுபவமில்லை! - லால் விஜேநாயக்க [Saturday 2017-04-01 14:00] போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்துமளவிற்கு, இலங்கைக்கு போதிய அனுபவம் இல்லை என மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். “இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம். வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக உள்ள நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்திற்கு…

    • 0 replies
    • 186 views
  17. பாதிக்­கப்­பட்ட மக்­களை புறக்­க­ணித்து அபி­வி­ருத்­தியை மேற்­கொள்ள வேண்டாம் இலங்­கைக்கு ஐ.நா. பிர­தி­நிதி அறி­வு­றுத்தல் (எம்.எம்.மின்ஹாஜ்) பாதிக்­கப்­பட்ட மக்­களை புறக்­க­ணித்து அபி­வி­ருத்­தியை மேற்­கொள்ள வேண்டாம் என ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நி­தி­யும் ஐ.நா அபி­வி­ருத்தி நிகழ்ச்­சித்­திட்­டத்தின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான உனா மெக்­கோலி கோரிக்கை விடுத்தார். பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை பேண்­தகு இலங்கை அபி­வி­ருத்தி நிகழ்ச்சி திட்­டத்­திற்­கான கண்­காட்­சியின் ஆரம்ப நிகழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். …

    • 1 reply
    • 393 views
  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் தமிழரசு கட்சி தலைவருமான மாவை சேனாதிராசா அவர்களால் வலிகாமத்தில் அமைக்கப்பட்டுவரும் வீடு தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வீடு தொடர்பான செய்தியை கடந்தவருடம் வெளியிட்டிருந்தோம் தற்போது அண்மையில் அமைக்கப்பட்டுவரும் வீடு தொடர்பான விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மிகவும் ஆடம்பரமானமுறையில் அமைக்கப்பட்டுவரும் வீட்டின் மதில்கூட கருங்கற்களைகொண்டு கட்டப்பட்டுவருவதும் வாயிலிலிருந்து கார்செய்வதற்கான விசேட பாதை அமைப்புக்களும் அமைக்கப்பட்டுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை அண்மையில் சம்பந்தன் ஐயா ஒரு அறையில் வசித்துவருவதாக த.தே.கூட்டமைப்பின்…

  19. முலங்காவில் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் கைது கிளிநொச்சி முலங்காவில் பகுதியில் 8.275 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கேரள கஞ்சா குறித்த விசாரணைகளை முலங்காவில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/18594

  20. வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு துரிதமான தீர்வுகள் : ஜனாதிபதி வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். முறையான மதிப்பீடுகளோ அல்லது திட்டமிடலோ இன்றி முறையற்ற விதத்தில் கடந்த காலத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தமையினால் தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையான திட்டத்துடன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். திருகோணமலை மெக்ஹெய்சர் விளையாட்டரங்கில் நடைபெறும் 'தேசிய யொவுன் …

  21. கொழும்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை போன்ற இடங்களில் அமைந்துள்ள துறைமுகம் ஒன்றை இந்தியா பொறுப்பேற்று அபிவிருத்தி செய்யலாம் என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச்சேவையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஹம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்திப் பணிகள் ஊடாக இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றிவிட்டது என்று இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. இலங்கையில் உள்ள ஏனைய துறைமுகங்களின் அபிவிருத்திகளுக்கும் நாங்கள் வெளிநாட்டு ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வகையில் கொழும்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை போன்ற…

  22. வில்பத்து பிரகடனத்தினை வைத்து ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக செயற்படும் கும்பல் வர்த்தமானிக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பில்லை என்கிறார் அமைச்சர் தயாசிறி (எம்.எம்.மின்ஹாஜ்) வில்­பத்­துவில் முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எந்­த­வொரு தீர்­மா­னத்­தையும் ஜனா­தி­பதி எடுக்­க­வில்லை. ஆகையால் ஜனா­தி­ப­தியின் வர்த்­த­மா­னியை மீளப்­பெறமாட்டோம். எனினும் வில்­பத்து பிர­க­ட­னத்­தினை வைத்து ஜனா­தி­பதிக்கு எதி­ராக செயற்­படும் அர­சியல் கும்­ப­லொன்று உள்­ளது. இதன் பின்­ன­ணியில் முஸ்லிம் இன­வாத கும்­பலும் தொடர்­பு­பட்­டுள்­ளது. இந்தக் கும்பலில் உள்ளவர்கள் யார் என்­பது எனக்கு ‍தெரியும். இந்த மறைந்து தாக்­கும் கும்பல் விரைவில் வெளி­வரும். மு…

    • 2 replies
    • 347 views
  23. எழிலன் தொடர்பான வழக்கில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு நீதவான் மறுப்பு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் சம்சுதீன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதப் பிரிவு தலைவரான சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் காணாமல் போனமை குறித்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எழிலன் உள்ளிட்ட 12 பேர் 58ம் படைப் பிரிவிடம் சரணடைந்திருந்தனர் எனவும் அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்து வட மாகாணசபையின் உறுப்பினரும் எழிலனின் மனைவியுமான ஆனந்தி சசிதரன், நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள…

  24. கடந்த மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக நாடு முழுவதிலும் 53 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில். டெங்கு காய்ச்சல் காரணமாக களுத்துறை பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இளைஞர், உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் 26,000 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் 5838 பேரும், கம்பஹாவில் 2965 பேரும், திருகோணமலையில் 1745 பேரும், யாழ்ப்பாணத்…

    • 0 replies
    • 293 views
  25. கர்ப்பிணிப் பெண் மீது பொலிஸார் தாக்குதல் வீட்டுக் கதவினை உடைத்துத் திறந்து மதுபோதையில் வந்த பொலிஸாரே தன் மீது தாக்குதல் நடத்தியதாக காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 9 மணியளவில் நாகர்கோவில் கிழக்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த பொலிஸார் நடத்திய தாக்குதலில் புவிந்திரன் சுயித்தா (வயது 20) என்ற கர்ப்பிணிப் பெண் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 9 மணியளவில் வீட்டுக்கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அப்போது வீட்டில் கணவர் இல்லை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.