Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்ல அஞ்சும் முஸ்லிம்கள் கண்டியில் வன்முறைகளை ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்கு தாம் அச்சத்துடன் இருப்பதாக, முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். அல்-ஜசீரா செய்தி நிறுவனத்திடம் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட முஸ்லிம்கள் பலரும், ஊரடங்குச் சட்டம், அவசரகாலச்சட்டம் என்பன பிறப்பிக்கப்பட்ட போதிலும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர். “நான் அச்சத்துடன் வாழ்கிறேன்.இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. எமது வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும், எமக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக வெளியே நிற்கிறார்கள். நாங்கள் மட்டும் வீ…

  2. 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளன – சுகாதார அமைச்சு நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருந்துகள் தேவையற்றதாகி விட்டதால், குழந்தைகளின் சுவாச நோய்களுக்காக வாங்கப்பட்ட சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பக்வெல தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கை கழுவுதல் மற்றும் முகக்கவசங்கள் பாவிக்கும் பழக்கம் ஏற்பட்டதென்றும் அதன் காரணமாக அனைத்து சுவாச நோய்களும் குறைந்துவிட்டன என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/…

  3. மன்னார் பேசாலையில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீது இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேசாலை - தலைமன்னார் வீதியில் இலங்கை மீன்பிடிக்கூட்டுத்தாபனத்தி

    • 0 replies
    • 949 views
  4. மட்டக்களப்பில் யானைகளினால் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்! மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில் இன்று ( வியாழக்கிழமை) புகுந்த யானைகளினால் ஆலயத்தின் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் பயன்தரு மரங்களும் அழிக்கப்படடுள்ள. 35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில் உள்ள சிறி நாராயணன் ஆலயத்திற்குள் புகுந்த யானைகளே இந்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆலய திருப்பணிவேலைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தின் கதவு மற்றும் தென்னை மரங்கள் மின் இனைப்பு பெட்டி ஆகியவற்றினை முற்றாக உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதேபோன்று காட்டுயானையினால் இ…

  5. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்கிற அமைப்பின் ஊடாக பணம் கறந்தனர் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்தபோது ரொபேட் ஓ பிளேக்கால் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு எழுத்துமூலம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அறிவிக்கப்பட்டு இருந்தது. விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டு இருக்கும் ஏனைய நாடுகள் பற்றிய அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணம் ஒன்றில் இருந்து இது தெரிய வந்து உள்ளது. யூனிசெப், யூ.என்.எச்.சி.ஆர், உலக உணவு திட்டம் போன்ற சர்வதேச ஸ்தாபனங்களின் பிரதிநிகளுடன் இத்தூதரகத்தினர் நடத்திய பேச்சுக்களின்போது வன்னியில் நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சில சந்தர்ப்பங்களில் …

  6. திருகோணமலை செல்வநகர் இராணுவ முகாம் மீது மோட்டார், ஷெல்தாக்குதல் திருகோணமலை செல்வநகர் இராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகளின் மோட்டர் மற்றும் ஷெல் தாகுதல்கள் இன்று காலை முதல் தொடர்வதாக, தேசியபாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலின் போது முன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன்; 8 பேர் காயயமடைந்தனர். அதேவேளை நேற்றைய தினம் ஸ்ரீலாங்கா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட சம்பூர்ஸ் பகுதியில் தமது அதிகாரத்தை மேலும் உறுதி செய்யும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் விடுதலைப்புலிகளால் சம்பூரில் எதுவித தாக்குதல்களும் மேற் கொள்ளப்படவில்லை என தேசிய பாதுகாப்பு ஊடகமத்திய நிலையம் மேலும் தெரிவித்தது. சுட்டது லங்காசிறியிலிருந்த…

  7. விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவது என்றால் விடுதலைப் புலிகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்த முடியாது என்றும் இலங்கை அரசுடன் கலந்தாலோசிக்காமல் பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  8. இலங்கையில் அணு ஆலைகளை அமைக்க ரஷ்யா, இந்தியா உதவி Wednesday, December 29, 2010, 2:23 இலங்கையில் அணு ஆலைகளை அமைக்க ரஷ்யாவும் இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளில் சிறியளவிலான அணு ஆலைகளை நிறுவுவதற்கு இந்தி யாவும், ரஷ்யாவும் கூட்டாக இணைந்து உதவிகளை வழங்க உள்ளன என இந்திய ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள்ளன.சீன ஆதிக்கத்தை கட்டுப் படுத்தும் நோக்கில் இலங்கை யில் அணு ஆலைகளை அமைப் பதற்கு இந்தியாவும் சீனாவும் முனைப்பு காட்டி வருகின்றனஎனத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யப் பிரதமர் டிமெட்ரி மெட்டிடேவ் அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தெற்காச…

  9. இந்திய வெளிவிவகாரச் செயலர் விரைவில் கொழும்பு பயணம் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த எஸ்.ஜெய்சங்கர், ஓய்வுபெற்றதை அடுத்து, அண்மையில் புதிய வெளிவிவகாரச் செயலராக விஜய் கோகலே நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், விஜய் கோகலே சிறிலங்காவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை விரைவில் மேற்கொள்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் பங்களாதேசுக்கும் அவர் விரைவில் பயணம் ஒன்றை மேற்கொள்வார் எனவும் புதுடெல்லி தகவல்கள் கூறுகின்றன. http://www.puthinappalakai.net/2018/03/31/news/30116

  10. பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கம்? 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (SOEs) தனியார்மயமாக்குவதற்கான முக்கிய திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளார். இது முதன்மையாக சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வரவு செலவுத் திட்டமென தெரிவிக்கப்படுகிறது. தனியார் துறையின் பங்களிப்புடன் அபிவிருத்…

  11. அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குடிமகன்களிடம் கட்டணம் அறவீடு! அரசு அதிரடி முடிவு செவ்வாய், 04 ஜனவரி 2011 12:30 மதுபாவனையினால் நோயுறும் அல்லது விபத்துக்குள்ளாகி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரிடம் கட்டணங்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த விபரங்கள் அடங்கிய சுற்று நிரூபம் இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு மதுபாவனையினால் நோயுறும் அல்லது விபத்துக்குள்ளாகுவோருக்காக சிகிச்சை அளிப்பதில் அரசாங்கம் பாரிய நிதியினை செலவிட்டு வருவதாகவும் அரச…

  12. தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் ஈருருளிப்பயணம் இன்று இரண்டாவது நாளாக 120 KM தூரத்தை தாண்டி Wellin எனும் நகரத்தை சென்றடைந்தனர் . செல்லும் வழிகளில் இடையிடையே வேற்றின மக்களுக்கான தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். அத்தோடு இன்றைய நாளில் ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளுபவர்களுடன் தாயகத்தில் இருந்து ஒரு சகோதரன் தொலைபேசியில் இவர்களின் மாந்தநேய பணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் , தாங்கள் புலம்பெயர் மக்களை நம்பி இருக்கின்றனர் என்பதை தெரிவித்துள்ளார் . அந்தவகையில் ஈருருளிப்பயணத்தை மேற்கொள்பவர்கள் தமது பயணம் நிச்சயம் தமிழீழத்துக்கான பயணமாக அமையும் என்பதை உறுதியோடு தெரிவித்துள்ளனர் .நாளைய பயணம் லக்சம்புர்க் நாட்டை நோக்கி …

  13. தமிழ்க் கட்சிகள் வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் இணைய வேண்டும் – மஹிந்த தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதோடு, வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் உரையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அன்றும் சரி, இன்றும் சரி தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெர…

  14. ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர் – இதயச்சந்திரன் ஜனவரி 4 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சீனாவின் உதவிப் பிரதமர் லீ கெகுவாங் (Li keqiang) மேற்கொள்ளும் ஐரோப்பியப் பயணம், புதிய சகாப்தமொன்றினை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 35 வருட சீன ஐரோப்பிய இராஜதந்திர உறவுகள், காத்திரமான கூட்டு, முழுமையான கூட்டு, முழுமையான மூலோபாய இருதரப்புக் கூட்டு என்கிற வகையில் விரிந்து செல்வதைக் காணலாம். இரு தரப்பு பொறிமுறைகளை கையாள்வதன் ஊடாக, பல பரிமாண வேலைத் திட்டங்களை வகுத்து நுண் பொருளாதார கொள்கைகளை உருவாக்கி அதன் சவால்களை எதிர்கொண்டு, உலகப் பொருளாதார உயர்விற்கு உதவலாமென இவர்கள் கூறுகின்றார்கள். ஐரோப்பாவின் பல நாடுகளில் குறிப்பாக யூரோ நாணயம் …

  15. சிறிலங்கா அரசாங்கம் இரகசியமான ஒரு இராணுவ செயற்திட்டத்துடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பாலசிங்கம் கூறியுள்ளதாவது: வடக்கு கிழக்கின் நிலைமை மிகவும் மன வேதனையளிக்கக் கூடியதாக இருக்கிறது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக பேச்சுக்களுக்கு ஒப்புக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கம் இரகசியமான இராணுவ செயற்திட்டத்துடன் இயங்கி வருகிறது. மகிந்தவின் இந்த போரும் சமாதானமும் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த சந்தேகம் உண்டு. இருதரப்பினரையும் பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்காக நோர்வே தீவிரமான முன்னெடுப்புக்களை மேற்கொண்ட போதும் ஜெனீவாப…

  16. தேர்தலைக் கண்டு நடுங்கும் அரசாங்கம்! - சிங்களத்தில்- உபுல் ஜோசப் பெர்னாண்டோ - தமிழில் TN 15 ஜனவரி 2011 நாம் தேர்தல்களுக்குப் பயம் இல்லை. தேர்தல் நடத்தினால் ஜே.வி.பியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நடுங்குகின்றன. இது மகிந்தவும், அவரது அரசாங்கமும் எப்போதும் கூறும் திருவாசகம். அப்படியானால், ஏன் மாநகர சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளதால் போட்டிகள் நடைபெறும் நகரங்களின் தேர்தலை ஒத்திவைப்பதாக அரசாங்கம் ஆரம்பத்தில் கூறியது. அப்படியானால் போட்டிகள் நடத்தப்படும் கொழும்பு மாநகர சபை, பல்லேகல பிரதேச சபை, சூரியவௌ நகரசபை ஆகியவற்றின் தேர்தல்களை மாத்திரமே ஒத்திவைத்திருக்க வேண்டும். அப்படியானால் ஏன் 18 மாநகர சபைகளின் தேர்தல் ஒத்திவைக்கப…

  17. யாழில். சம்பாதிக்கும் படையினரும் துணைஇராணுவக் குழுக்களும். - பண்டார வன்னியன் Thursday, 26 October 2006 யாழ். நகரிலுள்ள வணிக நிலையங்களை சிறிலங்காப் படையினரும் துணைஇராணுவக்குழுக்களும் உடைத்து பொருட்களை எடுத்துச் சென்று தமது கடைகள் மூலம் விற்பனைசெய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். யாழ் நகரிலுள்ள பிரதான எட்டுக் கடைகள் இவ்வாறு சிறிலங்காப் படையினராலும் துணைஇராணுவக் குழுக்களாலும் உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு கொள்ளையிட்ட பொருட்களை அவர்களால் நடத்தப்படும் கடைகள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்வதாக தெரியவருகின்றது. http://sankathi.org/news/index.php?option=...id=988&Itemid=1

    • 0 replies
    • 1k views
  18. சீன ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னதாக இலங்கை துறைமுகத்துக்கு அந்நாட்டின் அதிநவீன நீர்மூழ்கியும், போர்க்கப்பல்களும் வந்துள்ள விடயம் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், அமெரிக்காவில் இந்தியப் பிரதமர் மோடி மஹிந்தவிடம் இந்த நடவடிக்கை குறித்து தனது ஆட்சேபத்தைத் தெரிவிப்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது:- ஐ.நா. கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இந்திய பிரதமருடன் பேச்சு நடத்துவது உறுதியாகிவிட்டது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து புதுடில்லி உறுதி செய்துவிட்டதாகவும் அவை தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பின்போது அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறை…

  19. சம்பந்தன், மாவை கொழும்பில் கௌரவிப்பு! [Friday 2014-09-26 10:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டக் கிளையினரால், கௌரவிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவரும், சட்டத்துறை செயளாளருமான கே.வி தவராசாவின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ .சுமந்திரன், ஈ. சுரவணபவான் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.இமாம், மற்றும் பலரும் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNew…

  20. பருத்­தித்­து­றை­யில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு!! பருத்­தித்­து­றை­யில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு!! பருத்­தித்­துறை, கற்­கோ­வ­ளத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடந்த வாள்­வெட்­டில் 6 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். பருத்­தித்­து­றைப் பகு­தி­யில் கடந்த ஒரு மாதத்­தில் மூன்று வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. இது தொடர் பில் பொலி­ஸார் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வே­யில்லை என்று மக்­கள்…

  21. ஒரு மின் அலகிற்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்க உத்தேசம் By VISHNU 27 DEC, 2022 | 09:18 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை 60 முதல் 65 சதவீதம் வரை திருத்தம் செய்யவும், ஒரு மின் அலகுக்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார். மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை மின்சார சபையின் பரிந்துரைக்கு அமைய கடந்த ஆகஸ்ட் மாதம் மின்கட்டணத்தை அ…

  22. யாழ்.மாவட்டத்தில் டிசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும், 247 முறையற்ற கர்ப்பங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று யாழ்.மாவட்டத்தில் இளவயதினரைப் பாதித்துள்ள விடயங்கள் தொடர்பாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான புள்ளி விவரங்களை அவர் எமது செய்தியாளரிடம் வழங்கியிருக்கின்றார். நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து எமது செய்தியாளருக்குத் தெரிவித்த புள்ளி விவரங்களின் படி பின்வரும் இள வயதினர் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது : இள வயதில்முறையற்ற விதத்தில் கர்ப்பம் தரித்தவர்களாக 247 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்…

  23. நெல்லியடி கூட்டு பாலியல் வன்புணர்வு : 09 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் நெல்லியடியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளி பகுதியில் பெண்ணொருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பி சென்ற நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் தப்பி சென்றவருக்கு எ…

  24. குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர் ஐயா.சச்சிதானந்தம் மறைவு! யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் ஐயா. சச்சிதானந்தம் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். இவர் ஈழநாடு, யாழ்.தினக்குரல், தினகரன், வாரணம் இணைய வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்ற ஊடகங்களில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இவர் பணியாற்றியவர்.யாழ்ப்பாணத்தில் நிலவிய நெருக்கடியான காலப்பகுதியிலும் ஊடக சுததந்திரம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சமயத்திலும் தான் சாரந்த ஊடகங்களில் துணிச்சலுடன் செய்திகளை வெளிகொண்டு வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamilleader.com/?p=42570

  25. ஆண்டுக்கு இரண்டு முறை இடம்பெறும் ஐ.நா. கூட்டத்தொடரினால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை – திருமா ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார். 13ஆவது திருத்ததின் படி, முழுமயான அதிகார பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த தமிழகத் தலைவர்கள் மூலமாக மாநில, மத்திய அரசாங்கங்களை கோரும் விசேட மாநாடொன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் பின்னர் சென்னை பத்திரிகையாளர் மன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.