Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போலியான சுங்க அதிகாரிகள் நால்வர் கைது உதவி சுங்கப் பணிப்பாளர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொண்டு, வெளிநாட்டு மதுபானங்களை (விஸ்கி) குறைந்த விலையில் பெற்றுத்தருவதாகக் கூறி, பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நால்வரை கைதுசெய்துள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு அறிவித்துள்ளது. இராகமை, வத்தளை மற்றும் ஜா-எல ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட இந்த நால்வரும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்தே, 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். உதவி சுங்கப் பணிப்பாளர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொள்ளும் இவர்கள், அலைபேசி இலக்கங்களை சேகரித்து, அதனூடாக தொடர்புகளை ஏற்படுத்தி, குறைந்த விலையில் வெளிநாட்டு மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி, அவர…

  2. விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றம் -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை (1) காலை குறித்த நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டைச் சந்தியில் அமைக்கப்பட்ட 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தை கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக விசேட அதிரடிப்படையினர் (எஸ்.ரி.எப்) பாரிய முகாமாகப் பயன்படுத்தி வந்தனர். விசேட அதிரடிப்படையினரின் மாவட்ட தலைமை அலுவலகமாகவும் குறித்த பயிற்சி நிலையம் செயற்பட்டு வந்தது. கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்…

  3.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக செயற்பாடுகள் மீள ஆரம்பம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள், இன்று புதன்கிழமை (02) முதல் ஆரம்பமாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம், 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை மாணவர்கள் பகிஸ்கரித்தனர். இந்நிலையில், ம…

  4. சம்பந்தனை சந்தித்தது ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். நாடாளுமன்றத்திலுள்ள எதிர்கட்சித் தலைவரது அலுவலகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முதலாம் இணைப்பு ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பினரின் பிரதிநிதிகளை சந்தித்கவுள்ளனர். நாடாளுமன்றத்திலுள்ள எதிர்கட்…

    • 8 replies
    • 713 views
  5. முன்னாள் இராணுவத்தினரை வெளியேற உத்தரவு! [Tuesday 2016-11-01 18:00] ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசேட தேவையுடைய முன்னாள் இராணுவ வீரர்களை, அங்கிருந்து விலகி செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளது. தமக்கான ஓய்வூதியத்தை வழங்குமாறு கோரி நேற்று புறக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று ஜனாதிபதி செயலகம் முன் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்களை ஜனாதிபதி செயலக பகுதியில் இருந்து விலகி செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=168824&ca…

    • 0 replies
    • 454 views
  6. யுத்தம் முடிந்த நிலையில்பயங்கரவாதம் என அரசு கூறக்கூடாது-மாவை நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், மீண்டும் பயங்கரவாதம் என்ற சொல்லை உச்சரிக்காமல் இருப்பது நல்லது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இந்தக் கோரிக்கையை விடுத்த மாவை யுத்தத்தில் தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் என்றும், தோல்வியடைந்தவர்கள் என்றும் அரச தரப்பினர் உச்சரிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கிலுள்…

  7. இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் வீழ்ச்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நாடுகளின் வரிசையிலிருந்து இலங்கை பின்னடைந்துள்ளது. முதல் தடவையாக இவ்வாறான ஓர் சாதக மாற்றம் அண்மைய இலங்கையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டு நாடுகளுக்கு சுட்டெண்கள் வழங்கப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டு காலப் பகுதியில் ஊடகவியலாளர்கள் கொலை செய்ய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தீர்க்கப்படாத நான்கு வழக்குகள் காணப்படுவதாக தெரிவிக்கப…

  8. நல்லாட்சியிலும் சித்திரவதைச் சம்பவங்கள்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி நடத்தும் காலப் பகுதியிலும் இலங்கையில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் 208 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிற்கு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள 17 பக்க அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச …

  9. குமாரபுரம் படுகொலை வழக்கு தீர்ப்பு எதிராக மேன்முறையீடு திருகோணமலை - குமாரபுரம் பகுதியில் 24 பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்ப வம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இராணுவத்தினர் அறுவர் விடு தலை செய்யப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அறுவரை விடுவித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இந்தநிலையில் இதற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்தத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என, கூறப்பட்ட…

  10. கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது வடக்கு மாகாண சபையின் 2016 மரநடுகை நிகழ்வு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வடக்கு மாகாண சபையின் விவசாய, நீா்ப்பாசன, கால்நடை, சுற்றுச் சூழல் அமைச்சினால் வருடந்தோறும் நடத்தி வருகின்ற மரநடுகை செயறிட்டம் 2016 இற்கானது கிளிநொச்சியில் இன்று 01-11-2016 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சொந்த மண் சொந்த மரங்கள் எனும் கருப்பொருளில் உள்ளுர் மரங்கள் உயிர்ச் சூழலின் உயிா்நாடி எனும் வகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் என்ற வாசகத்துடன் இவ் வருடத்திற்கான மர நடுகை மாதம் கார்த்திகை 01 தொடக்கம் 30 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சா் விக்கினேஸ்வரன் முதன்மை அதிதீயாக கலந்துகொண்டு மரம் ஒன்…

  11. இணைப்பு3 – யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி -பிரதமரை சந்தித்துள்ளனர்- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடக அறிக்கை இணைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். மாணவர்கள்; கொல்லப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி முழுமையான விளக்கம் தர வேண்டும் எனவும் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினரில் உண்மையான குற்றவாளியைக் இனங்கண்டு; அவருக்கெதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதுடன் கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட…

  12. யாழ்.நல்லூர் பகுதியில் வாள்களுடன் நடமாடும் இளைஞர்களால் அச்சம் யாழ். நல்லூரில் சமீபநாட்களாக வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் இரவுவேளைகளில் நடமாடி திரிவதை அவதானிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள நிலையில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடி வருகின்றனர். இவர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றமையால் அத்தியாவசிய தேவைக்காக கூட தமது பிள்ளைகளை வெளியில் அனுமதி ப்பதில்லை என அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்தார். பெருமளவில் இராணுவம், பொலிஸார்,விசேடஅதிரடிப்படையினர்,பொலிஸ் புலனாய…

    • 5 replies
    • 605 views
  13. வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் சேகரிக்கும் நிகழ்வு ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி வகைப்படுத்தப்பட்ட குப்பைகளை மட்டும் சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன தலைமையில் இன்று (01) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்ல த்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் விரைவில் உக்கிப்போகும் மற்றும் உக்கிப்போகாதவை என வகை ப்படு த்தப்பட்ட குப்பைத் தொட்டிகள் ஜனாதிபதியினால் நகரசபைகளுக்கு வழங்கி வைக்கப்ப ட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி எமது நாட்டில் திண்மக் கழிவு பிரச்சினை விமர்சனத்தி ற்குள்ளான ஒரு பிரச்சி…

  14. நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் விசாரணை, முறைப்பாடு : நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் பூஜித இலங்கையின் சகல பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் விசாரணைசெய்வதற்கும் முறைப்பாட்டினை பதிவுசெய்வதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் இன்று தேசியவாதம் இல்லை. தீவிரவாதம் இல்லை. பிரிவினைவாதம் இல்லை. வடக்கு கிழக்கு மக்கள் உட்பட ஏனைய மாகாண மக்களும் இதைத்தான் விரும்பினார்கள். …

  15. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடிவு.! விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. விடுதலைப்புலிகள் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்கவும், அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பயங்கரவாதிகள் என்ற முத்திரையை விலக்கிக் கொள்ளவும், முதல் தடவையாக ஐரோப்பிய யூனியன் முன் வந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய நீதிமன்றத்தின் மூலம் நீதிபதிகளில் ஒருவர் இது தொடர்பான அறிக்கை ஒன்றை ஐரோப்பிய யூனியனுக்கு சமர்பித்தார். இதனை அடுத்து தடை நீக்கம் தொடர்பாக இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா.? என்றும் அப்படி இருப்பின் அதனை எழுத்து மூலம்…

  16. கிளிநொச்சியில் மழை வீழ்ச்சி – விவசாயிகள் மகிழ்ச்சியில்!! குளோபல் தமிழ் செய்தியாளர் கிளிநொச்சியில் நீண்ட கோடையின் பின்னர் நேற்று மழை கொட்டித் தீர்த்தது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் பெய்த மழையை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனையடுத்து இதுவரையில் விதைப்பில் ஈடுபடாத விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வரட்சி நிலவியது. மக்கள் குடிநீருக்குப் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டனர். அத்துடன் மேய்ச்சல் தரைகள் வரட்சியில் கருக கால்நடைகளும் உணவின்றி அல்லாடத் தொடங்கின. …

  17.  80 கிலோ கஞ்சாவுடன் 4 மீனவர்கள் கைது செல்வநாயகம் கபிலன் நெடுந்தீவு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 இலங்கை மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை (31) மாலை கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்களிடமிருந்து 80 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டடுள்ளதாகவும் காரைநகர் மற்றும் வேலணை பகுதியைச் சேர்ந்வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு வடக்கில் 8 கடல் மைல் தூரத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில், நெடுந்தீவு கரையை நோக்கி வந்துக்கொண்டிருந்த டிங்கி படகை, கடற்படையினர் சோதனையிட்ட போத…

  18. தமிழ் இணைய தளமொன்று முடக்கப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு தமிழ் இணைய தளமொன்று முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு இவ்வாறு இணைய தளங்களை முடக்கியுள்ளது. ஊடக அமைச்சில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவ்வாறு இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது. வடக்கின் நீதிமன்ற தீர்ப்புக்கள் தொடர்பில் பிழையான தகவல்களை இணையத்தில் பிரசூரித்ததாக இந்த இணைய தளம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையிலும் நீதிமன்றிற்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் இந்த இணைய தளம் செய்தி வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சும் ஊட…

  19. தென்னிலங்கையிலானால் நிலைமை மோசமாகியிருக்கும் : யாழ்.மக்களுக்கு நன்றி கூறினார் ஜனாதிபதி யாழ்.­பல்­க­லைக்­க­ழக மாண­வர்களின் படு­கொலை சம்­ப­வத்­தின்­போது அமை­தி­காத்­த­மைக்கு யாழ்.மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்றேன். தென்­னி­லங்­கையில் இத்­த­கைய சம்­பவம் நடை­பெற்­றி­ருந்தால் இதை­விட மோச­மான அமை­தி­யற்ற தன்மை ஏற்­பட்­டி­ருக்கும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தெரி­வித்தார். மாண­வர்­களின் மனங்­களில் ஏற்­பட்ட வேத­னை­களை நாமும் அறிவோம். இதனால் சில ஆர்ப்­பாட்­டங் கள், போராட்­டங்கள் இடம்­பெற்­றன. அப்­ப­டி­யான ஆர்ப்­பாட்­டங்­களும் போராட்­டங்­களும் நியா­ய­மா­னவைதான் என்­பதை ஏற்றுக்கொள்­கின்றேன். மேலும் கையெ­ழுத் …

  20. ஆவா குழுவை கட்டுப்படுத்துவதென்ற செய்தியை மறுக்கிறது இராணுவம் வடக்கில் ஆவா குழுவின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு அரசாங்கத்தின் உத்தரவுக்காக இராணுவம் காத்திருப்பதாக, வெளியான செய்திகளை இராணுவத் தலைமையகம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆவா குழுவின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு அரசாங்கம் உத்தரவிட்டால், அதனை இலகுவாக மேற்கொள்ள முடியும். அரசாங்கத்தின் உத்தரவுக்காக இராணுவம் காத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் கூறியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்தக் கருத்தை தாம் வெளியிடவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். வடக்கில்…

  21. கோரிக்கைக்கு சாதகமான பதிலை ஜனாதிபதி தராவிடின் போராட்டம் தொடரும்-யாழ் பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவிப்பு யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரி பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரத்தினம் தலைமையில் மாணவர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது. இன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அரசரத்தினம் மற்றும் அந்தப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரஜீபன் ஆகியோரது தலைமையில் 16 ப…

  22. பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது மருதனார்மடம் பஸ் தரிப்பிடக் கட்டடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய குற்றச்சாட்டில், ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்து, விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமெரா பதிவின் அடிப்படையில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சுவரொட்டியை ஒட்டியது ஒப்புக்கொண்ட அந்தப் பெண், அதனை நியாயப்படுத்தும் வகையிலும் கருத்துக்களையும் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்…

  23. தமிழருடன் முஸ்லிம்கள் இணைந்து வாழ முடியாவிடின் கிழக்கு பறிபோவது திண்ணம்-சம்பந்தன் எச்சரிக்கை தமிழ் மக்களுடன் இணைந்து வாழ முஸ்லிம் மக்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள சம்பந்தன் இது நிறைவேறாவிட்டால், கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களிடமிருந்து பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது போய்விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே தமிழ் பேசும் மக்களின் ஏராளமான காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடி யேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் திருகோணமலைத் துறைமுகத்தை மைய ப்படுத்தி அரசாங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பாரிய அபிவிருத்திக்காக பல்லா யிரக்கணக்கான சிங்கள மக்கள் திருகோணமலையில் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர்…

    • 11 replies
    • 666 views
  24. சம்­பந்தன் கூட்டமைப்பின் தலைவ­ராக இருக்­கும்­போதே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கி­விட வேண்டும் இணைவு குறித்து மாகா­ணங்­களே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்­கிறார் ஜயம்­பதி (நமது நிருபர்) சிறு­பான்மைச் சமூ­கங்­களின் நலன்­க­ளையும் உள்­வாங்கி நவீன அர­சியல் யாப்பொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம் என பாரா­ளு­மன்ற உறுப்­ பினர் கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார். தமிழ்க் கூட்­ட­மைப்பில் ஆர். சம்­பந்தன் போன்ற ஒருவர் தலை­வ­ராக இருக்கும்போது இதனை நிறை­வேற்ற முடி­யாமல் போனால் இனி ஒரு அர­சியல் யாப்­பினை எங்­களால் தயா­ரிக்க முடியுமா என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தாகும் என்றும் அவர் குறிப்­பி…

  25. ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் கையளிப்பு.! கீரிமலை பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களுக்காக முப்படைகளின் பங்களிப்புடன் இந்த 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது. இதேவேளை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தெல்லிப்பழை பிரதேசத்திற்கு உட்பட்ட 454 ஏக்கர் காணி மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. பலாலி இராணுவ முகாமினால் பாதுகாப்பு காரணங்களுக்காக அபகரிக்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.