ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காற்றுமாசு உயர்வடைந்திருந்த நிலையில், அது தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்ததாவது: நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் வளித்தரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் மாதம் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காற்றுமாசு நிலை (சுட்டெண்) அதிகளவில் ஏற்பட்டிருந்த நிலையில், டிசெம்பர் மாதம் 2ஆம் திகதிமுதல் நிலைமை மெல்லமெல்ல இயல்புக்குத் திரும்புகின்றது. காற்றின் வடிவம் மாறி வீசுகின்றபோது (மாறுபட்ட சுழற்சி நிலை) அயல் நாடுகளில் இருந்து மாசுத் துணிக்கைகள் அதிகளவில் எடுத்து வரப்பட…
-
- 0 replies
- 164 views
-
-
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்கி விடுங்கள் என நெடுந்தீவு இளம்பிறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் சமாச பிரதிநிதியுமான சத்தியாம்பிள்ளை தோமாஸ் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (3) யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு கடற்பரப்பில் பல வருட காலமாக இந்தியா அத்து மீறிய இழுவை படகுகளினால் எமது மீனவர்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கடந்த 29 ஆம் திகதியும் இந்தியா அத்துமீறிய இழுவைப் படகுகள…
-
- 0 replies
- 119 views
-
-
04 OCT, 2024 | 06:31 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்களைத் தற்காலிகமாக முடக்குமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 05 ஆயுள் காப்புறுதித் திட்டங்களை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை தற்காலிகமாக முடக்குமாறு கொழும்பு மேல் …
-
- 2 replies
- 366 views
- 1 follower
-
-
மாத்தறை சிறைச்சாலை சம்பவம்; மேலும் ஒரு கைதி உயிரிழப்பு! மாத்றை சிறைச்சாலையில் மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். அதன்படி, இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (01) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 கைதிகள் காயமடைந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒரு கைதி உயிரிழந்தார். கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஜி மற்றும் எஃப் விடுதிகளின் மீது அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்று விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த கைதிகள் 25, 27, 32, 3…
-
- 2 replies
- 381 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திஸாநாயக்க, இலங்கையில் இந்தியா மற்றும் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் சவாலை எதிர்கொள்கிறார் கட்டுரை தகவல் எழுதியவர்,அன்பரசன் எத்திராஜன் பதவி,தெற்காசிய பிராந்திய ஆசிரியர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய இடதுசாரி அதிபரும் அவரது கட்சியும் பெற்ற பிரமிக்க வைக்கும் தேர்தல் வெற்றி அந்நாட்டு அரசியல் சூழலை மாற்றியுள்ளன. ஆனால், இலங்கையில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில் அந்நாட்டின் புதிய தலைவர்கள், தங்கள் பிரசார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் கடினமான சூழல் நிலவுகிறது. செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் குறிப்…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
03 JAN, 2025 | 11:01 AM சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் தொடர்பில் மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பல்வேறு பொருட்கள் அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்களில் உள்ள இணைப்புகளுக்குள் நுழைவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறான போலி விளம்பரங்களில் உள்ள இணைப்புகளுக்குள் நுழைவது மிகவும் ஆபத்தானது எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/202853
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
இந்தியா சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்! திருகோணமலை முத்து நகர் விவசாயக் காணிகளை இந்திய சோலார் திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது குறித்த முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக தாம் இரு போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாய காணிகளும் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் குறித்த காணிகளை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணி என வர்த்தமாணியின் அடிப்படையில் கையகப்படுத்திய அரச இயந்திரம் தற்போது அதனை இந்தியா சோலார் திட்டத்திற்கு வளங்க திட்டமிட்டிருப்பதாக அறியக்கிடைத்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 211 views
-
-
அநுராதபுரம்(anuradhapura) கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் நடத்த உத்தேசிக்கப்பட்ட கணித பாட முகாமை நடத்தாமல் போலியானஆவணங்களை சமர்ப்பித்து 600,000 ரூபாவிற்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்திய அனுராதபுரம் பிராந்திய பெண் கல்வி பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகர ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளார். இதனடிப்படையில், அனுராதபுரம் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகரவினால் NCP/CS/ED/15/111/2/40 என்ற கடிதத்துடன் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை16.07.2024.அன்று தாக்கல் செய்ய…
-
- 1 reply
- 237 views
- 1 follower
-
-
அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணைகள் மற்றும் 2024 க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வித் தவணைகள் ஒழுங்காக நடத்தப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நடத்தக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதே சமயம், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2025 ஆம் ஆண்டு அக்டோபர்/நவம்பர் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலை கல்வ…
-
- 0 replies
- 353 views
-
-
78,375 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஸார்ப் நிறுவனத்தினால் எழுபத்தெட்டாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து (78375) அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்களின் மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், உட்கட்டுமான நடவடிக்கைகள் என்பவற்றை துரிதப்படுத்தும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்களால் சர்வதேச நாடுகளின் நிதியுதவியுடன் உள்ளூர் பணியாளர்களை கொண்டு வெடி பொருட்களை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் க…
-
- 0 replies
- 206 views
-
-
திருகோணமலையில் இலங்கை அரச படையினரால் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 19 வருடங்கள் கடந்துள்ளபோதும் இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
- 7 replies
- 649 views
-
-
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, போலியான முறையில் ஆவணங்களை தயாரித்து, மோட்டார் திணைக்களத்தின் ஊடாக போலி இலக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்திய வாகனங்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன. பின்வத்த பொலிஸ் பிரிவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலுக்கு அமைய வலான மோசடி தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்த அதிகாரிகள் குழு 2024 டிசெம்பர் 31ஆம் திகதியன்று இராணுவம் பயன்படுத்தும் வாகனத்தை போன்ற Mitsubishi வாகனத்தை தமது பொறுப்பின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம், Land Rover ஜீப் வாகனங்கள் இரண்டு, ரத்மலானை பிரதேசத்தில் வைத்து 2025.01.01 அன்று பொலிஸா…
-
- 0 replies
- 160 views
-
-
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி விதிமுறைகள் 2025 ஆம் ஆண்டிலும் கட்டம் கட்டமாக தொடரும் என்று கல்வி அமைச்சு (education ministry)வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் கல்வி விதிமுறைகள் கட்டம் கட்டமாக நடத்தப்படும். சாதாரணதர, உயர்தர பரீட்சை 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எனினும், 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர்/நவம்பர் 2025 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2025 பாடசாலை ந…
-
- 0 replies
- 355 views
-
-
தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு 01 Jan, 2025 | 04:05 PM (எம்.நியூட்டன்) “பொதுத் தேர்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவா் சி.வி.கே.சிவஞானம், “இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து பொருத்தமானவா்களை நாம் வேட்பாளா்களாகத் தெரிவு செய்வோம்” என்றும் தெரிவித்தாா். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளா்களை சந்தித்த போதே…
-
-
- 8 replies
- 527 views
-
-
Published By: DIGITAL DESK 7 01 JAN, 2025 | 04:29 PM தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (01) காலை மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் இல்லாத தனியாருக்கு சொந்தமான காணிகளையும், பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது “புதைபொருள் திணைக்களமே குச்சவெளி சந்தைக்கட்டட காணியை புதைக்காதே”, “தொல்பொருள் திணைக்களமே குச்சவெளி நெற்களஞ்சிய கட்டடத்திற்கு …
-
- 2 replies
- 230 views
- 1 follower
-
-
01 JAN, 2025 | 04:22 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக இன்று புதன்கிழமை காலை (01) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/202711
-
-
- 4 replies
- 368 views
- 1 follower
-
-
01 JAN, 2025 | 04:40 PM எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். “கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது: பொது மக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மாத்திரமே '' கிளீன் ஶ்ரீலங்கா '' வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். …
-
-
- 7 replies
- 556 views
- 1 follower
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பு! உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு இந்த திருத்தங்கள் வழங்குகின்றதுடன் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் முக்கிய நோக்கத்துடன் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த…
-
-
- 3 replies
- 373 views
-
-
தற்போது அரிசி விலைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு, எதிர்காலத்தில் உணவு பொதிகளின் விலைகளின் அதிகரிப்பை தூண்டும் என அநுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று அநுராதபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார கூறியதாவது, "அரிசி நெருக்கடி காரணமாக, பல உணவகங்கள் மூடப்படுவதுடன், உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார். இந்த நிலையில், அரசாங்கம் இறக்குமதி செய்த 5,200 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி மற்றும் 580 மெற்றிக் தொன் கொண்ட இரண்டாவது தொகுதி நேற்று நாட்டை வந்தடைந்துள்ளன. கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், அரச வர்த்தக சட்ட ரீதியான கூட…
-
- 0 replies
- 433 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வெளிநாட்டுவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட 725 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25 மில்லியன் ரூபாக்களாக பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்பங்கள் கோரல்களும் இல்லாமல் வேலைத்திட்டங்கள் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தர். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (30) வரலாற்றில் முதன்முறையாக முழுநாள் கூட்டம…
-
- 0 replies
- 209 views
-
-
கிளிநொச்சி புளியம்பொக்கணையில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு! adminJanuary 2, 2025 கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. A 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை, புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (02.01.25) காலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டதக்கது. https://globaltamilnews.net/2025/209873/
-
- 0 replies
- 240 views
-
-
இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவிற்கு புதிய தலைவர்! தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வு! adminJanuary 2, 2025 மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவிடமிருந்து (ஓய்வு) நேற்று புதன்கிழமை (01) பெற்றுக்கொண்டார். அதனையடுத்து, மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) நேற்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வு! தேசிய புலனாய்வுப் பிரிவின் (CNI) பிரதானியான மே…
-
- 0 replies
- 239 views
-
-
புத்தாண்டில் அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம்! பல்வேறு மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் செல்வாக்கு மிக்க மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்படுவார்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பகமான அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகமான மவ்பிம இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட சக்திவாய்ந்த அரசியல்வாதி, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சுற்றுலா வாரியத்திற்குள் …
-
-
- 6 replies
- 500 views
-
-
யாரும் ஒரு காலமும் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் தரமாட்டோம் என எப்போதும் தெரிவிக்கவில்லை எனவும் யாழ் மக்கள் அந்தளவிற்கு முட்டாள் இல்லை எனவும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (26) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் யாழிற்கான கிளிநொச்சி இரணைமடுக்குளம் நீர் விநியோகத்திட்டம் குறித்து யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடிநீருக்கான இரணைமடுக்குளம் வேலைத்திட்டமானது கடந்த கால அரசாங்களில் இருந்து தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாதமை தொடர்பில் சுட்டிக்காட்டியே அர்ச்சுனா தனது கேள்விகளை முன்வைத…
-
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-
-
இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படல் வேண்டும் ; செல்வம் 01 Jan, 2025 | 03:29 PM நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அனுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (01) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள், எம் நா…
-
- 2 replies
- 308 views
-