Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் நடாத்திய மருத்துவ முகாமில், புனர்வாழ்வு பெற்று விடுதலையான சில முன்னாள் புலி உறுப்பினர்களின் இரத்த மாதிரிகளை விமானப்படை மருத்துவர்கள் சேகரித்துள்ளதாக தமக்கு தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி சன்ன ஜெயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார். எந்தவொரு இலங்கைக் குடிமக்களிடமிருந்தும் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக சேமிக்கும்போது சிறிலங்காவின் உரிய அதிகாரிகளிடம் நெறிமுறை அனுமதி பெறப்படவேண்டுமென்றும், அவ்வாறு அனுமதி பெறப்பட்டதா? எனவும் தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. சிகிச்சைக்கு அப்பாற்பட்ட தேவைக்காக தனிமனிதரிடமிருந்து இரத்த மாதிரிகளைப் பெறும்போது அத…

    • 0 replies
    • 366 views
  2. புராதன இலங்கைக்கும், சர்வதேசத்துக்குமான தொடர்புகள் குறித்த ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 6000 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச சமூகத்தினருடன் இலங்கையர்கள் தொடர்பினை வைத்திருந்தமைக்கான ஆதாரங்கள் பலாங்கொடையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களனி பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் முன்னெடுக்கப்படும் அகழ்வுப்பணிகளில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட முத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய கண்டிபிடிப்பு இலங்கை மனிதகுல வரலாற்றில் முக்கிய மைல்கல் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அகழ்வின் போது சேதமடைந்த கல் ஆயுதங்கள் சிலவும் கண்டி…

  3. பம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 29 வயதான வர்த்தகர் ஒருவரையே காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகரின் குடும்ப உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர். மொஹமட் சகீம் சுலைமான் என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். நேற்றிரவு வீட்டுக்கு அருகாமையில் வைத்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுலைமானின் கைக்கடிகாரம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135139/language/ta-IN/article.aspx

  4. கிளிநொச்சி பூநகரி மன்னார் பிரதான வீதியில் இன்று திங்கள் கிழமை இடம்பெற்ற மினிவான் விபத்தில் ஒருவர் இறந்துள்ளதோடு, 26 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மடுவிலிருந்து மன்னார் வீதியின் ஊடாக யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது பூநகரி மண்டக்கல்லாறுக்கு அண்மித்த பகுதியில் முற்பகல் பதினொரு மணியளவில் மினிவான் தலைகீழாய் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. சாரதியின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களை உடனயாக கிளிநொச்சி அவசர கால அம்புலன்ஸ் சேவை மூலம் பூநகரி வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ் போதான வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர். குறித்த மினிவான் தலை…

  5. யுத்தத்தில் தனது குடும்பத்தை தொலைத்த ஏழைத்தாய் ஒருவருக்கு கிரிக்கெட் சுற்றுப்போட்டி முலம் பெற்ற பணத்தை அமைச்சர் மனோ கணேசன் வழங்கிவைத்தார் ஜனநாயக இளைஞர் இணையத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 17-8-2016 அன்று நனஇடம்பெற்ற மனோ வெற்றி கிண்ணத்திற்கான மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி முகத்துவாரம் முத்துவேல் மைதானத்தில் நடைபெற்றது. இக் கிரிகெட் சுற்று போட்டியின் மூலம் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை தனது கணவன் உட்பட 2 மகன்மார்களையும் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டு இதுவரையும் எவ்விதத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில் தனது அன்றாட வாழ்வாதாரத்தைகூட ஈடுசெய்ய முடியாமல் இருந்த தெய்வானை என்ற தாய் ஒருவருக்கு வழங்கப்பட்டது. நேரடி வழிகாட்டலில் …

  6. சர்வதேசத்துடனும், ஐநாவுடனும் மோதியதாலேயே முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தன்னுடைய பதவியை இழக்கவேண்டிய நிலை உருவானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்திற்கு அடிபணியமாட்டோமெனவும், ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலிருந்து நாட்டை விடுவிப்போம் எனவும் சூழுரைத்து வருகின்றது. அண்மையில் தேசிய அரசாங்கத்தின் ஓராண்டுப் பூர்த்தி விழா மாத்தறையில் நடைபெற்றது. இதன்போது சிறீலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு சூழுரைத்தார். இதற்குப் பதிலடியாகவே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், சிறீலங்கா அரசாங்கத்துடன் தான் வார்த்தைகளால் மோதவில்லையெனத் தெரிவித்ததுடன், ஐ.நாவுடன் மோதாமல் ஐ.நா மனித உரிமை பேர…

    • 4 replies
    • 544 views
  7. வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளை நிறுவுதல் தொடர்பில் வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருக்கும் கருத்து பௌத்த மேலாதிக்க சிந்தனையின் மோசமான வெளிப்பாடு' என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. எனினும், தமிழ்மக்கள் தங்கள் அபிலாஷைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என பரிசீலிப்பது தவிர்க்க முடியாது ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பெருமளவான பங்களிப்பை செய்துள்ளன. …

    • 5 replies
    • 595 views
  8. விகாரை கட்டுவதுதான் அரசின் பணியா? தமிழ் இனப்பண்பாட்டழிப்பை மேற்கொள்வதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் அரசு! கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரையை அகற்றுமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் வடகிழக்கில் குறித்த நடவடிக்கைக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் நடைபெறவுள்ளன. தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்கும் இத்தகைய செயல்களை தமிழ் மக்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். இன மத ரீதியான ஒடுக்கமுறை சார்ந்த இந்த அணுகுமுறைகளை தமிழ் மக்கள் கடுமையாக வெறுக்கின்றார்கள். ஆனால் சில சிங்களத் தலைவர்களின் கருத்துக்கள் அவர்களின் இன மேலாதிக்கப் போக்கையும் தமிழ் மண்ணில் மேற்கொள்ளப்படும் இ…

    • 5 replies
    • 679 views
  9. யாழ்ப்பாணப் பண்ணைப் பாலத்திலிருந்து தீவுக்கான இருபது கிலோமீற்றர் வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டுமாறு தீவக மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த வீதியில் இரு மருங்கிலும் மரங்கள் இல்லாத நிலையில் வீதி காணப்படுவதாகவும் மருதமரம், புளியமரக் கன்றுகளை நாட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கிராம மட்டத்திலும் பிரதேச செயலக மட்டத்திலும் இம்மர நடுகை கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இதுவரை அவை நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்படுகின்றது. தீவகத்தில் அதன் சூழலுக்கேற்ற விதத்தில் மரக்கன்றுகள் எதிர்காலத்தில் கூடுதலாக நடுகை செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/180055

  10. பயணித்துக் கொண்டிருக்கும் போது ரயிலுக்கு கல் எறிபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வ தற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வேண்டி ஒரு தொகைத் துப்பாக்கிகள் ரயில்வே பாதுகாப்புப் பிரிவுக்கு பெற்றுக் கொண்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு இராணுவத்தின் அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கியினால் சுமார் 15 மீற்றர் தூரத்தில் உள்ள ஒருவருக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும். வெலிசர கடற்படை முகாமிலிருந்து 25 துப்பாக்கிகள் இவ்வாறு பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் குறுந்தூர இலக்கு கொண்ட துப்பாக்கிகளையே பயன்படுத்துகின்றனர். இவ்வகையான துப்பாக்கிகள் 192 தற்பொழுது திணைக்களத்தில் உள்ளன. புதி…

    • 6 replies
    • 813 views
  11. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பது தொடர்பாக பரி சோதனை நடத்துவதற்காக, யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய கலாநிதி சிவன் சுதன் தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது. சர்ச்சைக்குரிய விஷ ஊசி விவகாரம் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், முத லமை ச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கவுமே இக் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.வடக்கு ஆளு நர்ரெஜினோல்ட் குரேயின் ஒப்புதல் பெறப்பட்டதன் பின்னர் குறித்த குழு தனது செயற்பாடுகளை ஆரம்பி க்கும். குறித்த குழுவின் கண்காணிப்பின் கீழ் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தனித்தனியாக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மர…

    • 3 replies
    • 513 views
  12. இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட வடக்கு முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அங்கீகாரத்துக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின், முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் மீது கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி சபையில் விவாதம் நடைபெற்றது. இதன் பின்னர் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலேயே ஆளுநரின் அங்கீகாரத்துக்கு அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னைய ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறிக்கு 2014ஆம் ஆண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் அங்கீகாரம் வழங்கவில்லை. தொடர்ந்து வந்த ஆளுநர் பளிகக்காரவும் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. இந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய முதலமைச்சர் …

  13. வடக்கு மாகாணத்தின் தேவைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின்பேரில் அவரது ஆலோசகர்களில் ஒருவரான பாஸ்கரலிங்கம் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், இந்த கலந்துரையாடலின் போது வடக்கின் தேவைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் தான் பங்குபற்றவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilw…

  14. யானைகள் இடம்பெயரும் கடவைப் பாதைகளில் புகையிரதப்பாதைகள் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகளில் புகையிரதங்கள் வேகத்தைத் தணிக்க வேண்டும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு (16.08.2016) தலைமன்னார் - மதவாச்சி புகையிரதப் பாதையில் மெனிக்ஃபார்ம் அருகே புகையிரதம் மோதியதில் நான்கு யானைகள் உயிரிழந்தன. சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புகையிரதத் திணைக்கள அதிகாரிகள், வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் இவ்விபத்துப்பற்றிக் கேட்டறிந்துகொண்டார். இதன்பின்னர் அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்குறிப்பிட்டவாறு கேட்டுக் கொண்டுள்ளார். …

  15. சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை. அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு நாட்டை பாதுகாப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு முன்னர் இலங்கை எவ்வாறு இருந்தது என்பதை தற்போது எம்மை தேசத்துரோகிகள் என கூறுபவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். அனைத்து சர்வதேச நாடுகளினாலும் இலங்கையை தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. பொருளாதாரம் படுபாதாளத்தில் இருந்தது. நாட்டின் எதிர் காலம் தொடர்பில் உறுதியற்ற நிலைப்பாடே காணப்…

  16. முஸ்லிம் பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா மற்றும் நிஜாப் உடைகளை அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவரே இந்த யோசனையை முன்வைத்திருக்கிறார். சிறிலங்காவின் புலனாய்வுச் சேவை ஒன்றின் உயர் அதிகாரியின் ஆலோசனையின் பேரிலேயே பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி இந்த யோசனையை முன்வைத்திருக்கிறார். இந்த அதிகாரி முன்னைய அரசாங்கத்திலும் உயர் பதவியை வகித்தவராவார். புர்கா போன்ற முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகளை அணிந்து கொண்டு, சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதை தடுக்கவே இந்த உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த அதிகாரி கோரியுள்ளார். …

  17. மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.புஸ்பகுமாரின் (இனியபாரதி) முன்னாள் வாகனச் சாரதி உட்பட மூன்று ஆதரவாளர்கள் இன்று அதிகாலை அம்பாறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கைதுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=163910&category=TamilNews&language=tamil

  18. வடக்கு கடற்பரப்பில் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படுமென கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர உறுதியளித்தார். வடக்கிற்கு இரு நாள் விஜயம் மேற்க்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இன்று காலை 10.30 மணியளவில் குடாநாட்டு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் யாழ் செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சருடனான இந்த சந்திப்பில் குடாநாட்டு மீனவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துக்கூறினர். குறிப்பாக, குடாநாட்டுக் கடலில் மேற்;கொள்ளப்படும் இழுவைப்படகுத் தொழில் முற்றுமுழுதாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறினார் ஏனெனில், உள்ளுர் இழுவைப்படகுகளை வைத்தே இந்த…

  19. வீ ஆர் சிறிலங்கன், இது எங்களுடைய நாடு என வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிறு கிழமை 21-08-2016 கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் கட்றறொழில் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் நான் இங்கு முதலமைச்சரின் பிரதிநிதியாக வந்திருக்கின்றேன் அவருக்கு சுகயீனம் காரணமாக கொழும்பு சென்றிருக்கின்றார் எனவே எனக்கு கடிதம் மூலம் தன்னுடைய பிரதிநிதியாக சென்று கலந்துகொண்டு கருத்துரை தெரிவிக்குமாறு தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் கலந்து கொண்டிருக்கின்றேன். எனத்தெரிவித்த அவர் இது எங்களுடைய நாடு என்ற உணர்வு அனைவருக்கும் இருக்க வேண்…

  20. கூம்பூட் தமிழ் கலவன் பாடசாலை.. 40 வருடங்களுக்கு முன் நான் தவழ்ந்த வீட்டையும் பாடசாலையையும் மீண்டும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என நான் நினைத்தும் பார்க்கவில்லை. 1ஆம் வகுப்பில் இருந்து 4ஆம் வகுப்புவரை படித்த பாடசாலையின் பெயர் தலவாக்கல சின்னமல்லியப்பூ பகுதியின் கூம்பூட் எஸ்ரேற் பாடசாலை. இந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர். ஒருவர் என் அருகில் இருக்கும் என் அம்மா பரமேஸ்வரி நடராஜா. மற்றயவர் எங்கள் உறவினர் பூங்கொடி கணேசபிள்ளை. இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட விடுதிதான் எமது வீடு. இங்கு அம்மா 15 வருடங்கள் கற்பித்தவர். கூம்பூட் தமிழ் கலவன் பாடசாலை முன்பாக.. அப்பா கா.செ நடராஜா நுவரெலியா, நானுஓயா, அக்கரப்பத்தனை, லிந்துளை, பதுளை பண்டாரவளை என பல ப…

  21. தான் மதுபானம் அருந்தவில்லை என்பதை நிரூபிக்க தவறிய விமானியை ஸ்ரீ லங்கன் விமான சேவை இடைநிறுத்தியுள்ளது. பணியாட்தொகுதியினர் தாமதமானதால், பிராங்பேர்டிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கான ஸ்ரீ லங்கன் விமானத்தின் பயணம் சுமார் 15 மணிநேரம் தாமதமாகியிருந்தது. இந்த விமானம், வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டிருக்க வேண்டும். எனினும், நேற்று காலை வரையிலும் அந்த விமானம் பிராங்பேர்ட் விமான நிலையத்திலேயே தரித்து நின்றது. பணியாட்தொகுதியினர் மதுபோதையில் இருந்ததாக அறியமுடிகின்றது. இதேவேளை, பிராங்பேர்ட் விமான நிலையம் இரவு வேளைகளில் மூடப்பட்டிருக்கும் என்பதனால், அந்த விமான நிலையம், நேற்று திறக்கப்பட்டதன் பின்னரே கொழும்பை நோக்கி அந்த விமானம் புறப்பட்டது. இதேவேளை, ஸ்ரீலங்க…

  22. காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலை ஒன்றை சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினால் அமைக்கப்படவுள்ளது. சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் நாளை இந்த தொழிற்சாலைக் கட்டுமானப் பணி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அனைத்துலக கடற்பரப்பில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான 55 அடி நீளமுள்ள படகுகளைத் தயாரிக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, காரை நகரில் புதிய படகு கட்டுமான தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. சிறிலங்காவின் மீன் உற்பத்தியில் வடக்கு மாகாணம் முதன்மையான பங்கை வகித்து வரும் நிலையில், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் ம…

  23. வெனிசுவேலாவின் கராகஸ் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாடு, அடுத்த மாதம் 17, 18ஆம் நாள்களில், கராகஸ் நகரில் நடைபெறவுள்ளது. அணிசேரா நாடுகளின் அமைப்பின் ஆரம்பகால உறுப்பு நாடுகளில் ஒன்றான சிறிலங்காவின் சார்பில் இந்த மாநாட்டில், அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழு பங்கேற்கும் என்றே முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கமாட்டார் என்றும் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா குழுவுக்கு அமைச்சர் மகிந…

  24. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சில குற்றச்சாட்டுகள் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக இருப்பதால், நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால், ஐ.நாவின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுக்கக் கூடும் என்று காணாமற்போனோர் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைக்காக அமைக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கை சில நாட்களுக்கு முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட…

  25. யாழில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள வாள் வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு தமிழ் பேசும் பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்குவேலியில் ரவுடிக் கும்பல் ஒன்றின் வாள் வெட்டினால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். குடும்பஸ்தர் தனது வீட்டுக்கு முன்னால் நின்றபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய இளைஞர் குழு இவரை சரமாரியாக வாளால் வெட்டியது. தலை, கழுத்து, கை, கால் போன்ற பல இடங்களிலும் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான அவரை உறவினர்கள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.