Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சாதாரண பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர்கல்வியை தொடரலாம்! 24-05-2016 03:34:00 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை முடக்கிவிடக் கூடாது. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பின்னரும் அனைத்து மாணவ மாணவியரும் பாடசாலையில் தொடர்ந்தும் கல்வி கற்க கூடிய வகையில் சட்டம் இயற…

  2. வடமாகாண சபையை விமர்சிக்கவில்லை -சொர்ணகுமார் சொரூபன் வடமாகாண சபை தொடர்பாக விமர்சனங்களை தான் முன்வைக்கவில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரிடம் நேரில் கூறிய வடமாகண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கொழும்பில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் சந்திப்பின் ஒலிப்பதிவையும் முதலமைச்சரிடம் வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சிடம் இருந்து மீளப்பெறப்பட்ட 3 அமைச்சு துறைகளை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சர் உத்துயோகபூர்வமாக திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஆளுநர், ஒலிப்பதிவு அடங்கிய இறுவட்டை(சீடி) முதலமைச்சரிடம் கொடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் வடமாகாண சபை தொடர்பான க…

  3. வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட யோசனை இதோ! (முழுமையாக) வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட யோசனை, மக்களுக்கும் சென்றடையும் வகையில், இன்று ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அதில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கும் வகையிலான தீர்வுத்திட்ட யோசனையொன்று, கடந்த ஏப்ரல் மாதம் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த தீர்வுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில், இன்று, வட மாகாண சபையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது, வட மாகாண சபையால் தயாரிக்கப…

  4. மே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம். Candle Light Vigil Remembering Tamil Genocide - May 29, 2016 Evening 4 PM. @ Tamilar Kadal(Marina), Near Kannagi Statue, Chennai. அன்பான தமிழர்களே, 2009 இல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை இனவெறி அரசு ஈழத்தில் 1,46,679 தமிழர்களைக் கொன்று குவித்து ஒரு மிகப் பெரிய இன அழிப்பை செய்து முடித்தது. மே17,18 ஆகிய நாட்களில் மட்டும் ஏறக்குறைய நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கண்ணுக்கெட்டும் தூரத்தில் நாம் 7 கோடி தமிழர்கள் இருந்தும் நம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்டனர். தமிழகம் விழித்தெழும் எப்படியும் தங்கள் விடுதலைப் ப…

  5. வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்கள் யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு இட்டுள்ளார். யாழில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரு சந்தேக நபர்கள் கந்தரோடை பகுதியில் வைத்து சுன்னாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் நீண்ட கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டு இருந்தது. குறித்த இருவரும் யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் ஆவார்கள். அவர்கள் இருவரையும் இன்றைய தினம் த…

  6. மிருகபலிக்கான தடை நீடிக்கும் -ஐ.நேசமணி மிருகபலிக்கு தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், நேற்று செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலியை தடுத்து நிறுத்துமாறு கோரி, இலங்கை சைவ மகா சபை, யாழ். மேல் நீதிமன்றத்தில் இவ்வருட ஆரம்பத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், ஆலயங்களில் மிருகபலி நடத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கடந்த ஏப்ரல் 1ஆம் திகத…

  7. அரநாயக்கவில் அனர்த்தம்: 15 பேர் காயம் அரநாயக்கவில், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மற்றுமொரு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அரநாயக்க - மாவனெல்ல பிரதான வீதியில் பொல் அம்பேகொட பிரதேசத்தில், தனியார் பஸ்கள் இரண்டு, ஒன்றோடு ஒன்று மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், இரண்டு பஸ்களின் சாரதிகள் உட்பட பயணிகள் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திப்பிட்டிய அரநாயக்க மாவட்ட வைத்தியசாலை மற்றும் மாவனெல்ல ஆதர வைத்தியசாலை ஆகிய இரு வைத்தியசாலைகளிலும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக, எலஹபிடிய சாமசர மலையில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட…

  8. நினைவு நிகழ்வுகளுக்கு அப்பால் புலம்பெயர் நாடுகளில் அவ்வப்போது போராட்டங்களும் நடத்தப்படுவதுண்டு. அவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் நேற்று ஞாயிற்றன்று (22.05.2016) நாடு கடந்த தமிழீழத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக தொடர்ச்சியான திட்டங்கள் எதுவுமின்றி இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், புலம்பெயர் மக்கள் அழிக்கப்படும் தேசிய இனத்தின் ஒரு பகுதி என்பதை நினைவுபடுத்தும் குறியீடுகளாக இவற்றைக் கருதலாம். பணம் புரளும் நினைவஞ்சலிகளுக்கு சமூகமளிக்கும் தலைவர்கள், பிரபலங்கள், ‘தேசிய வியாபாரிகள்’ இவ்வாறான போராட்டங்களின் பக்கம் தலைகாட்டுவதில்லை. போராட்டங்களை ஒழுங்கமைக்கும் தலைவர்களில் பலரை அங்கு காணக்கிடைப்பதில்லை. இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் அகதிகளைத் திருப்பி அனுப…

  9. யாழில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பின் அறிவியுங்கள்! பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்காதீர்கள், அவ்வாறு பிச்சை எடுப்பவர்களைக் கண்டால், யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு அறிவியுங்கள் என யாழ். விழிப்புலனற்றோர் சங்க தலைவர். எஸ்.அற்புதராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவு நிகழ்வில் இன்று திங்கட்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விழிப்புலனற்றோரால் முடியாதது என ஒன்றும் இல்லை. விழிப்புலனற்றோர் கல்வியில் சிறந்து விளங்கி வருகின்றார்கள், அனைத்து துறைகளிலும் மிளிர்கின்றார்கள், கடந்த காலத்தில் பல சவால்களை கடந்து வந்தாலும், விழிப்புலனற்றவர்கள் பல்வேறு இலக்குகள…

    • 1 reply
    • 487 views
  10. வைத்தியர் வரதராஜாவிற்கு அமெரிக்கா புகலிடம் வழங்கியதாக உபாலி குழுமம் கூறுகிறது யுத்தத்தின் போது முல்லைத்தீவில் கடமையாற்றிய வைத்தியர் வரதராஜாவிற்கு அமெரிக்க அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது. வைத்தியர் வரதராஜாவிற்கு அமெரிக்க அரசாங்கம் அரசியல் புகலிடம் வங்கியுள்ளதாக உபாலி குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைப் படையினருக்கு எதிராக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு சாட்சியங்கள் வழங்கியதனால் இவ்வாறு புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. வன்னி யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கு வாக்கு மூலம் அளித்த வைத்தியர் வரதராஜா, காயமடைந்த பொதுமக்களை புலிகள் சுட்டுக்கொலை செய்தனர் என கூறியிருந்தார். எனினும், பின்ன…

  11. பசிலின் செயலாளர் கைது முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளர் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கம்பஹா ஒருதொட்ட காணிக்கு, அரசாங்கத்தின் நிதியை முறைக்கேடான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர், விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே அவர், கைதுசெய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/172946/%E0%AE%AA%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.TJX…

  12. தமிழ் சான்றோர் பேரவை நிறுவனரும்,நந்தன் பத்திரிகையின் ஆசிரியருமான நா.அருணாசலம் வயது 76. சென்னையில் நேற்று மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார்...நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள திருக்கண்ணபுரம் கிராமத்தில் பிறந்த இவர் பல வருடங்கள் வருவாய்துறையில் பணியாற்றினார்..1986 ல் அடையாறு மாணவர் நகலகத்தை தொடங்கி நடத்திவருகிறார்.. தமிழ் மீதும்,தந்தை பெரியாரின் மீதும் பற்று கொண்டவர்.. அத்துடன் நந்தன் வழி என்கிற பத்திரிகையையும் நடத்திவந்தார்.. 1995 ல் பெரியார் ##தமிழிசை மன்றத்தை தொடங்கி தமிழிசை சாதனையாளர்களை வருடந்தோரும் கவுரவித்துவந்தவர்..##தமிழ் சான்றோர் பேரவை தொடங்கி நடத்தினார் . அதன்சார்பாக 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத த்தில் தமிழ்வழிக்கல்வியை வலியுருத்தி 102 தமிழ் அறிஞர்களி…

  13.  சக்கரக்கதிரைகளிலேயே தங்கத்தை கடத்த முயற்சி 10.5 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை நாட்டுக்குள் கடத்திவர முற்பட்ட பெண்கள் மூவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சுங்கப் பிரிவு அதிகாரிகள், நேற்றுத் திங்கட்கிழமை (23) அதிகாலை கைது செய்துள்ளனர். இவ்வாறு கடத்திவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 60 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து இலங்கை வந்த விமானமொன்றிலேயே, மேற்படி மூன்று பெண்களும் வருகை தந்துள்ளனர். கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த மூவரும் 40-50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று அறியமுடிகின்றது. அதிலொருவர், வெளிநாட்டுக்கு முதன்முறையாக சென்று திரும்…

  14. நடைமுறை சிக்கல்களே அமைச்சுகளை பொறுப்பேற்க காரணம் -சொர்ணகுமார் சொரூபன் வடமாகாண முதலமைச்சர் நிதியம் அமைப்பது தொடர்பான விடயம் சாத்தியமாகும் வகையில் உள்ள நிலையில் அதற்கு சமூக சேவை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு ஆகிய துறைகள் முக்கியமானவை என்பதால் அத்துறைகளை தான் மீண்டும் பொறுப்பேற்றதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் வசமிருந்த 3 துறைகளை திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் முதலமைச்சர் இதனைக் கூறினார். வடமாகாண சபை ஆரம்பிக்கப்படும் போது முதலமைச்சரின் கீழ் இருந்த சமூக சேவை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் பு…

  15. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லை­யினால் பாதிக்கப்­பட்ட மக்­களின் தொகை 2 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 768ஆக குறை­வ­டைந்­துள்­ளது. அத்துடன் 41ஆயி­ரத்து 460 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 85 ஆயி­ரத்து 933 பேர்கள் இன்னும் தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் நாட­ளா­விய ரீதியில் அனர்த்­தங்­களில் சிக்கி உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 93ஆக அதி­க­ரித்­துள்­ள­து என்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. கடந்த ஒரு­வார கால­மாக நாட்டில் நில­விய சீரற்ற கால­நி­லையின் கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு பாதிப்­புகள் ஏற்­பட்­டி­ருந்­தன. இந்த நிலை­மைகள் தொடர்பில் தக­வல்கள் வெள…

  16. மண்சரிவு பாதிப்பு பகுதி : அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் நாட்டின் மண் சரிவுக்குள்ளான பகுதிகள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்புக்கு பொருத்தமற்றது என அரசாங்கம் குறிப்பிட்ட இடங்களில் குடியிருக்க எவருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாதெனவும், கொழும்பில் தாழ் நிலங்களில் மண் நிரப்பி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி உத்தரவு வழங்கியுள்ளார். இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட அவசர அனர்த்த ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடி…

  17. தாஜுதீன் கொல்லப்பட்ட அன்று, அநுர சேனநாயக்க சிவில் உடையில் இருந்தார் பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன், 2012ஆம் ஆண்டு கொலைசெய்யப்பட்டமை தொடர்பிலான சாட்சியை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, குற்றப்புலனாய்வு …

  18. இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட இழப்பு 21 ஆயிரத்து 600 கோடி [ Tuesday,24 May 2016, 03:34:35 ] ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட இழப்பு 21 ஆயிரத்து 600 கோடி ரூபாவென அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த பேரழிவில் சிக்கி இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளதோடு, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும் இதுவரை மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, 2004ஆம் ஆண்டு சுனாமிப பேரலையால் ஏற்பட்ட சொத்தழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு இதுவெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச பங்களிப்புடன் இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட…

  19. வடக்கில் வன்முறைகள்மூலம் மக்களின் வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா? யாழ் ஆயர் ஆதங்கம்! வடக்கில் அண்மைக் காலத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் இவை வடக்கு மக்களின் வாழ்வியலை அழிக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறதா என்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் அதி.வணக்கத்திற்குரிய கலாநிதி யஸ்ரின் ஞானப் பிரகாசம் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக்காலமாக கொலை, கொள்ளை, வாள்வெட்டு, குழுச் சண்டை, போதைப் பொருள் பாவனை, கலாசார சீரழிவு போன்ற விடயங்கள் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் விதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்த அனைவரும்ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்க…

  20. மேலும் 3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்? வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் இன்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும் தொழிற்துறையும் மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு போன்ற சில அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருக்கின்றன. இந்தநிலையில், மேலும் முன்று அமைச்சுக்களை அவர் இன்று பொறுப்பேற்றுள்ளார். குறித்த பதவி கையளிப்பு இன்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்றது. வட மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், நன்னடத்தையும் சிறுவர் பாராமரிப்புச் சேவைகளும், சமூக சேவை…

  21. முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் கைது குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலைத் தொடர்பிலேயே அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்ததாக அறியமுடிகின்றது. அவரை, கொழும்பு, கோட்டை நீதவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/172864/%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B8-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%…

  22. கூட்டு எதிர்க்கட்சியினரின் தாளத்துக்கு ஆடத் தான் தயாரில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ நான் நீண்டகாலமாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து நாடாளுமன்றத்தில் பணியாற்றியவன். எனக்கு அரசாங்கத் தரப்பில் இணைந்து செயலாற்றிய அனுபவம் கிடையாது. அந்த வகையில் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நான்தான். தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதனால் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கத் தேவையில்லை. அரசாங்கத்தின் நல்ல செயற்திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். அதேநேரம்…

    • 3 replies
    • 570 views
  23. இமய மலை ஏறிய இலங்கையின் முதலாவது வீரர் இமய மலையில் ஏறிய முதலாவது இலங்கையராக ஜெயன்தி குரு உதும்பல சாதனை படைத்துள்ளார். இன்று காலை இமய மலையின் உச்சிக்கு அவர் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=79983

  24.  ரயில் மோதி வயோதிபர் பலி -செல்வநாயகம் கபிலன் சுன்னாகம் பகுதியிலுள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் இன்று திங்கட்கிழமை (23) ரயில் மோதி 70 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். ரயில் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த நிலையில், மேற்படி வயோதிபர், கடவையின் கீழாக குனிந்து ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. உயிரிழந்தவர், இன்னமும் அடையாளங் காணப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர். - See more at: http://www.tamil…

    • 1 reply
    • 334 views
  25.  ராஜபக்ஷ அறக்கட்டளை: இருவர் கைது முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என்று கூறப்படும், கம்பஹா ஒருதொட்ட காணி தொடர்பில், வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த ராஜபக்ஷ அறக்கட்டளையின் உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/172859/%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B7-%E0%A…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.