ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
கொழும்பு துறைமுக திட்டத்திற்கான அமெரிக்க நிறுவன உதவியை நிராகரித்த அதானி போர்ட்ஸ்! இலங்கை துறைமுகத் திட்டத்திற்கு நிதியளிக்க தனது சொந்த வளங்களைப் பயன்படுத்துவதாகவும், அமெரிக்க நிதியுதவியைப் பெறப் போவதில்லை என்றும் அதானி துறைமுகம் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ) நிறுவனம் செவ்வாயன்று (10) அறிவித்துள்ளது. அதேநேரம், இலங்கையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் (CWIT) திட்டம் சிறப்பாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என்றும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம் என்று அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டமானது நிறுவனத்தின் உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப…
-
- 1 reply
- 191 views
- 1 follower
-
-
மூடப்படும் ஆயிரக்கணக்கான மதுபான சாலைகள் பல மதுபான ஆலைகள் மற்றும் மதுபானக் கடைகள் வரி செலுத்தாததால், 2025ம் ஆண்டுக்கான மதுவரி உரிமம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடளாவிய ரீதியில் சுமார் நான்காயிரத்து 500 மதுபான நிறுவனங்கள் மற்றும் மதுபானசாலைகள் உள்ளதாகவும் தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களை சுமார் 200 பேருக்கு பெற்றுக்கொள்வதற்கான வரி அனுமதி அறிக்கைகளை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் இருந்து மதுவரி திணைக்களம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட முறையில் வரி செலுத்தியவர்களின் அனுமதி அறிக்கைகளை உள்நாட்டு இறைவரி திணைக்களம் மதுவரி திணைக்களத்திற்கு வழங்கும் என மதுபான அனுமதிப்பத்திரம…
-
- 2 replies
- 506 views
-
-
அதிகரிக்கும் கேக்கின் விலை! எதிர்வரும் பண்டிகை காலத்தில் கேக் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார். கேக் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மற்றும் வரி அதிகமாக இருப்பதால் கேக் தயாரிப்பில் அதிக செலவு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படிகேக் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான நல்லெண்ணெய் கோதுமை மா முட்டை உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்பட்டால் கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்த நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு புதிய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரிடம் தமது சங்கம் சந்தர்ப…
-
- 2 replies
- 509 views
-
-
ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7 பில்லியன் ரூபா வரிப்பணத்தை வசூலிக்க நடவடிக்கை - அரசாங்கம் (எம்.மனோசித்ரா) மக்களின் வரிப்பணத்தில் ஓய்வு காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கியமை தொடர்பில் நையாண்டிக் கருத்தினை வெளியிடுவது பொறுத்தமற்றது. அவரது சகாக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களால் நடத்திச் செல்லப்பட்ட மதுபானசாலைகளால் வழங்கப்படவுள்ள 7 பில்லியன் ரூபா வரிப்பணத்தை வசூலிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர…
-
- 0 replies
- 203 views
-
-
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அமெரிக்கா பயணத்தடை விதிப்பு! ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரசேகர மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. இவர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு இவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உதயங்க வீரதுங்க இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது ஊழல் நடவடிக்கையைத் திட்டமிட்டு முன்ன…
-
- 0 replies
- 232 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்! மட்டக்களப்பில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானதுஇ காந்திபூங்காவில் இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தந்தை செல்வா பூங்கா வீதி சுற்றுவட்டத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நா.உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன்இ முன்னாள் நா. உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் ஒன்று கூடியுள்ளனர். பின்னர் ஒன்று கூடியவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்வர்களின்…
-
- 0 replies
- 174 views
-
-
அரச பங்களா தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் பங்களா வீடுகள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை பாவிப்பதற்காக பொருத்தமான முறைமையை அறிமுகம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொது நிர்வாகஇ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் 50 அரச சுற்றுலா மாளிகை மனைகள் கொழும்பு 7 மற்றும் கொழும்பு 5 ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள்இ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு மேற்குறித்த மாளிகை மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 411 views
-
-
மீண்டும் ஒன்றிணையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இனம்சார்ந்த விடுதலையினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வகையில் நாம் தமிழ்தேசிய கூட்டமைப்பாக ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் இன்றையதினம் (10) கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. வவுனியாவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்…
-
- 0 replies
- 374 views
-
-
யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காரணவாய் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி ஒன்றில் இருந்தே சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் வெற்றுக் காணியிலிருந்து எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு | Virakesari.lk
-
- 1 reply
- 230 views
-
-
வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை! வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, தற்போது 62 வயதாகும் வைத்தியர் ஒருவரின் ஓய்வு வயது மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்படும். https://athavannews.com/2024/1411606
-
- 1 reply
- 449 views
- 1 follower
-
-
10 DEC, 2024 | 04:12 PM இலங்கையின் எரிசக்தி துறையின் அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளமை மிகுந்த நம்பிக்கையளிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியை நேற்று திங்கட்கிழமை (9) கொழும்பு 7 இல் அமைந்துள்ள எரிசக்தி அமைச்சில் சந்தித்த போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் சிறப்பு நண்பன் என்ற வகையில் அமெரிக்காவின் நட்புறவ…
-
- 1 reply
- 418 views
- 1 follower
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சுயநினைவிழத்த நிலையில் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் அபாயகரமான கட்டத்திலேயே உள்ளதாக கூறப்படுகின்றது. நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பின்னராக கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்! நடந்தது என்ன? - ஜே.வி.பி நியூஸ்
-
-
- 17 replies
- 907 views
- 1 follower
-
-
முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தெரிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கு இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம். எமது பாராளுமன்றக்குழுவில்…
-
- 0 replies
- 191 views
-
-
"மீனவ சமூத்தின் உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் கண்ணியமான வாழ்விற்கு எம்மை அர்ப்பணிப்போம், உணவு இறையாண்மையை உறுதிசெய்வோம்" என்னும் தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பித்த இந்த நடைபவனியானது, முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பிரதேசசபை கலாச்சார மண்டபம் வரை இடம்பெற்றது. குறித்த நடைபவனியில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்திய இழுவைமடி ஆக்கிரமிப்பை நிறுத்துதல், மீனவசட்டத்தை உடன் அமுல்படுத்துதல், சட்டவீரோத மீன்பிடிச் செயற்பாடுகளை முற்றாக தடைசெய்தல், கனிய மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தல், சூழலுக்கு ப…
-
- 0 replies
- 442 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான வழிமுறையை முன்மொழிவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொதுநிர்வாக மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஆகியோர் முன்வைத்த ஒருங்கிணைந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி அரச நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் கீழ் கொழும்பு 07 மற்றும் 05 பகுதிகளில் காணப்படும் 50 அரச பங்களாக்கல் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தினால் நிர்வாகிக்கப்படும் கொழும்பு,கண்டி, நுவரெலியா, மஹி…
-
- 0 replies
- 125 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி சேர் வரியை (வற் வரி) உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கம், இலங்கை நூல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சங்கம், அகில இலங்கை நூல் விற்பனையாளர்கள் சங்கம், இலங்கை எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய நான்கு சங்கங்களும் அரசாங்கத்தை கூட்டாக வலியுறுத்துகிறது. இவ்விடயம் குறித்து தாம் தற்போது புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கத்திற்கு பிரேரணையொன்றை முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட இந்த சங்கங்கள், சார்க் வலய நாடுகளில் இலங்கையில் மாத்திரமே புத்தகத் துறைக்கு 18 வற் வ…
-
- 0 replies
- 140 views
-
-
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம் 10 Dec, 2024 | 12:51 PM சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதியையோ, எமது உரிமை…
-
- 1 reply
- 544 views
- 1 follower
-
-
10 DEC, 2024 | 03:11 PM நுகேகொடை பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொடை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்ப…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
7:30 நிமிடத்தில்
-
-
- 21 replies
- 1.5k views
-
-
நீதி கோரி தீச்சட்டி ஏந்தி போராடிய காணாமல் போனோரின் உறவினர்கள்! December 10, 2024 சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். வவுனியா கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி பழைய பேருந்து நிலையப்பகுதியில் முடிவடைந்தது. https://eelanadu.lk/நீதி-கோரி-தீச்சட்டியை-ஏந/
-
- 1 reply
- 249 views
-
-
யாழ் -மட்டக்களப்பு சிறையில் மனைவிக்கு நடந்த கொடுமை கணவனின் பரபரப்பு புகார்! Vhg டிசம்பர் 09, 2024 யாழ்ப்பாண சிறையில் தனது மனைவி உதயகலாவுக்கு கொடுமைகள் நடப்பதாக தயாபராஜ் என்பவர் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தயாபராஜ் உதயகலா தம்பதியினர் யுத்தம் முடிந்த பின்னர் பல்வேறு நிதிக்குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருந்தனர். பின்னர் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் தப்பிச் சென்றனர். அங்கு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்த பின்னர், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சமயத்தில், மீண்டும் சட்டவிரோத இலங்கைக்குள் நுழைந்திருந்தனர். பின்னர் சர்வமக்கள் கட்சியென்ற பெயரில் உதயகலா ஒரு அமைப்பை ஆரம்பித்திருந்தார். ம…
-
- 1 reply
- 321 views
-
-
நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது! -ஜனாதிபதி அநுர.- எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற “2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில்” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர…
-
- 0 replies
- 139 views
-
-
கைதான குற்றப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றில் ஆஜர்! குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றவியல் விசாரணைப் முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பொலிஸ் களப்படை தலைமையகத்தில் வைத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கைது செய்யப்பட்ட நெவில் சில்வா இன்று (10) இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். https://athavannews.com/2024/1411590
-
- 0 replies
- 171 views
-
-
ரஸ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு அமெரிக்கா பயணத்தடை! ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவிற்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது . குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது. ஊழலிற்கு எதிரான சர்வதேச தினம் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு உலகில் ஊழல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று…
-
- 0 replies
- 152 views
-
-
வாகன இறக்குமதி: தவறான விளம்பரங்களுக்கு எதிராக அரசாங்கம் எச்சரிக்கை! இலங்கைக்கு எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் விரைவில் கிடைக்கும் என விளம்பரங்களை வெளியிடும் முகவர் நிலையங்களுக்கு அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார். அதன்படி, அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், கடந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எமது பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கலந்து கொண்டு வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவித்தார். அத…
-
- 0 replies
- 108 views
-