ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
பூநகரியில் ஒருநாள் நிகழ்வுக்காக தொன்மையான கோட்டையை உடைத்த இரானுவத்தினர்: குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி:- கிளிநொச்சி பூநகரியில் தங்களுடைய கலாசார நிகழ்வு ஒன்றுக்காக அங்குள்ள தொன்மை மிக்க கோட்டையின் பகுதிகளை இரானுவத்தினர் உடைத்துள்ளனர். சனிக்கிழமை மாலை ஜந்து முப்பது மணியளவில் கோட்டையின் சில பகுதிகளை உடைத்து தங்களது நிகழ்வு ஏற்பாடுட்டு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பூநகரி வாடியடிச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கோட்டையின் சில பகுதிகளே இரானுவத்தினரால் உடைக்கப்பட்டுள்ளது. பழமை மிக்க செங்கல் சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள …
-
- 0 replies
- 425 views
-
-
எங்களுடைய பலம் ஒற்றுமையிலேயே உள்ளது - சம்பந்தன்:- "செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் தமிழ் பேசும் மக்கள் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளன. தமிழ் மக்களுக்கானவை என்று மட்டும், எந்தஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான் அதிகாரப் பகிர்வின் முழுமையைப் பெறமுடியும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணை திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொரடந்து உரையாற்றுகையில், "நாங்கள் தற்பொழுது புதிய அரசியல் சாசனத்த…
-
- 0 replies
- 399 views
-
-
தாயகமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவற்கான பல்வேறு திட்டங்களில் புலம்பெயர்ந்து வாழும் ஒஸ்ரேலிய தமிழ்மக்கள் முன்வந்துள்ளமை மகிழ்ச்சயளிப்பதாக வடமாகாண விவசாயதுறை அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். அண்மையில் ஒஸ்ரேலியாவுக்கு வருகைதந்திருந்த ஐங்கரநேசன் அவர்கள் துளியம் இணையத்திற்கு நேர்காணலை வழங்கியிருந்தார். இந்த நேர்காணலிலேயே மேற்படி கருத்தை பதிவு செய்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வடமாகாண சபையின் அதிகாரங்கள் என்பது அதிகாரங்கள் அற்ற கோதாக உள்ளது. இதனாலேயே விடுதலைப்புலிகளும் முன்னர் இத்தகைய அதிகார பரவலாக்க முறையை எதிர்த்திருந்தார்கள். ஆனாலும் 2009 இற்குப்பின்னரான காலப்பகுதியில் வடக்கு என்றும் கிழக்கும் என்றும் மாகாணங்கள் பிரிக்கப்பட்டு க…
-
- 3 replies
- 619 views
-
-
தமிழகத்தின் மண்டபத்தில் இலங்கை அகதிப் பெண்ணை பொலிஸார் நால்வர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த 19 வயது பெண்னை நால்வர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்று வரும் அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பரமேஸ்வரி வழக்குப் பதிந்து தப்பி ஓடிய நால்வரையும் தேடி வருவதாக, இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. http://onlineuthayan.com/news/12575
-
- 7 replies
- 886 views
-
-
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணை, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனினால், இன்று சனிக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பண்ணையைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநசன், சி.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட…
-
- 0 replies
- 713 views
-
-
"கடந்த ஆட்சியில் இருந்தவர் (மஹிந்த ராஜபக்ஷ) போல் குடும்ப ஆட்சி நடத்தி நான் கேவலப்பட மாட்டேன். மாற்றத்தை விரும்பி மக்கள் எனக்கு வழங்கிய அதிகாரத்தை நாட்டின் நன்மைக்காகவே பயன்படுத்துவேன். இதில் நான் உறுதியாகவே உள்ளேன்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். "ஜனநாயக ரீதியிலான சுதந்திர நாடொன்றில் மக்களால் தலைமைத்துவத்திற்கும் கட்சிக்கும் வழங்கப்படும் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இதில் தனக்குள்ள அந்தஸ்து யாது என்பது பற்றி சகல அரசியல்வாதிகளும் அவதானமாக செயற்படவேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மக்கள் வழங்கும் அதிகாரத்தை தனது குடும்பத்தைப் பலப்படுத்துவதற்கு அல்லது அரசியல் அதிகாரத்தை அதிகரிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியு…
-
- 0 replies
- 393 views
-
-
கடன் சுமையில் இருந்து தப்பிக்கவே, சீனாவின் கோரிக்கைகளுக்கு.... இலங்கை இணங்கியது! இலங்கை கடன் சுமையில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, சீனாவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட போட் சிட்டி திட்டமும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இவையாவும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் இலங்கையின் கடன்படுகை, கடன் மீளச்செலுத்தல் பிரச்சினைகளில் இருந்து மீளவே இலங்கை, சீனாவுடன் உடன்படிக்கைகளுக்கு சென்றுள்ளதாக வொய்ஸ் ஒப் அமெரிக்கா, ஆய்வாளர்களை சுட்டிக்காட்ட…
-
- 0 replies
- 471 views
-
-
சித்திரவதை முகாம்: அரசாங்கத்தின் மறுப்பு அறிக்கை ஜெனீவாவுக்கு [ Saturday,9 April 2016, 02:48:19 ] திருகோணமலை சித்திரவதை முகாம் மற்றும் பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சிறப்பு குழுவினரால் வெளியிடப்பட்ட அதிருப்பதிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு தயாரித்து வருகின்றது. பரணகம ஆணைக்குழுவுடன் இணைந்து இந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சு தயாரித்து வருவதாகவும், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அடுத்த அமர்வில் அதனை சமர்பிக்கவிருப்பதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்காவிற்கு அண்மையில் விஜயம் செய்த ஐ.நா சிறப்பு குழுவினர் திருகோணமலைக்கு விஜயம் செய்து அங்கு உள்ளதாக கூறப்படும…
-
- 0 replies
- 572 views
-
-
2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைளால் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் தற்போது மீண்டும் குடியேறிவருகின்றனர். இந்த விடயத்தில் புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் வாக்குறுதிகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பல வருடகால இடம்பெயர்வுக்குப் பின்னர் உரிமையாளர்களினால் சில காணிகளுக்கு மட்டும் திரும்ப முடிந்துள்ளது. மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி வருகின்றது. இடம்பெயர்வு தொடர்பில் தொடரும் போராட்டங்கள், சொந்த இடங்களுக்கு திரும்ப…
-
- 1 reply
- 604 views
-
-
புத்திஜீவிகள் வலியுறுத்தல்- இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களின் உதவியுடன் சம்பூரில் நிர்மாணிக்கப்படவிருக்கும் அனல் மின் நிலையம் அப்பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் பிரச்சினையாக அமையப்போவதில்லை. இதனால் எமது முழு நாட்டினரும் எதிர்கால சந்ததியினரும் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ளப்போகின்றனர் என எச்சரிக்கை விடுத்த புத்திஜீவிகள் இது குறித்து தேசிய ரீதியில் தெளிவூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வும் தெரிவித்தனர். அத்துடன் இவ்விவகாரத்தை தமிழ் தேசி யக் கூட்டமைப்பு பிராந்திய அரசியல் நலனுக்காக பார்க்காது அங்குள்ள மக்கள் மற் றும் அவர்களின் நலன் குறி…
-
- 1 reply
- 590 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களை தனி ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற வட மாகாண சபையின் தீர்வுத்திட்டத்தை முஸ்லிம் உலமா கட்சி முற்றாக மறுத்திருப்பதுடன் இதனை எதிர்க்கும் தீர்மானத்தை முஸ்லிம் ஒருவரை கொண்ட கிழக்கு மாகாண சபை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது, வடக்கு கிழக்கை இணைத்து விட்டு அதற்குள் முஸ்லிம்களுக்கென தன்னாட்சி பிராந்திய சபை வழங்கப்பட வேண்டும் என வட மாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதானது கொடிய விசத்துடன் சீனி மிட்டாய் கலக்கப்பட்டது போன்ற வக்கிரத்தனமான செயலாகும். முஸ்லிம்கள் தமிழ் பேசுவோராக இருந்தாலும் அவர்கள…
-
- 2 replies
- 795 views
-
-
மீண்டும் வெற்றிலையில் சங்கமிக்கிறது ஈபிடிபி? இனிவரும் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுவது குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஈபிடிபி கட்சியும் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றன. சிறிலங்கா அதிபரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில், கட்சியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர, நட்புக் கட்சிகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்திருக்கிறார். வரும் தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடுவது குறித்தே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி குழுவுடன், பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் நாள் நாடாளு…
-
- 0 replies
- 615 views
-
-
துறைமுக நகர திட்டத்தை விரைவுபடுத்த சீனா- சிறிலங்கா இணக்கம் – இழப்பீடு குறித்து சீனா மௌனம் முடங்கியுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் சீனாவும் சிறிலங்காவும், உறுதியுடன் இருப்பதாக, சீனாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் நேற்று சீன – சிறிலங்கா பிரதமர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சியாவோ கியான், ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது கருத்து வெளியிட்ட அவர், இந்தத் திட்டப் பணிகளை விரைவாகவும், விரிவாகவும் முன்னெடுப்பதற்கு இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர். திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக, சிறிலங்கா தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்…
-
- 0 replies
- 370 views
-
-
மட்டக்களப்பில் 13 வயது சிறுமியையும் 19 வயது யுவதியையும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என இரு முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் வக்கிர சம்பவம் மட்டக்களப்பு கிரான் தெற்கு வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியையும் யுவதியையும் கடத்திச சென்ற முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மறுநாள் கடத்திய இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்துப் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. - http://malarum.com/article/tam/2016/04/06/14245/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%A…
-
- 22 replies
- 1.8k views
-
-
2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி அல்லது பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எதிர்பார்ப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பல்வேறு காய்நகர்த்தலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இலங்கை அரசியல் களத்தில் இடம்பெறும் மோதலில் தலையிடாமல் அமைதியாக இருக்குமாறு கோத்தபாயவுக்கு, அவரது அரசியல் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் நிலவும் நெருக்கடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஏதாவது ஒரு வழிமுறையில் தீர்த்து வைக்கப்படும். எதிர்வரும் தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் தகுதியான வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நியமிப்பதற்கு வாய்புள்ளதாக அரசியல் ஆலோசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கமைய கோத…
-
- 1 reply
- 592 views
-
-
அஸ்கிரிய மஹா நாயக்கர் தேரராக பதுளை முதியங்கன ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண. வரக்காகொட ஞானரத்தன தேரர், தெரிவு செய்யப்பட்டுள்ளார். அஸ்கிரிய மஹாநாயக்கரை தெரிவு செய்வது தொடர்பான மஹா சங்கத்தினரின் கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. இதன்போதே, புதிய மஹா நாயக்கர் தெரிவு செய்யப்பட்டார். தேர்தல் நடத்தப்படாமலேயே இந்த தெரிவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதி வண. கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி மஹாநாயக்க தேரர், காலமானதைத் தொடந்து நிலவிய, அஸ்கிரிய மஹாநாயக்கர் பதவி வெற்றிடமாகவே காணப்பட்டது. இந்நிலையிலேயே, வரக்காகொட ஞானரத்தன தேரர், அஸ்கிரிய மஹா நாயக்கராக இன்று தெரிவு செய்யப்பட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=155022&categ…
-
- 8 replies
- 1k views
-
-
யாழ் – கொழும்பு சொகுசு பஸ்ஸில் முதிரைக் குற்றிகள்: பொலிசார் அதிர்ச்சி (Photos) சொகுசு பஸ்ஸில் முதிரை மரக் குற்றிகள் கடத்தப்பட்ட சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தின் சிறாட்டிக்குளம் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்ஸில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக் குற்றிகள் கடத்தி வரப்பட்ட போது பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது. நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சாரதி கைதாகியதுடன், வாகன உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் அவ்…
-
- 4 replies
- 781 views
-
-
கூட்டு எதிரணியைச் சேர்ந்த இருவர், அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து, கூட்டு எதிரணி உருகிக்கொண்டிருக்கின்றது' என்று பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கூட்டு எதிரணியைச் சேர்ந்த இன்னும் சிலர், அரசாங்கத்துடன் விரைவில் இணைந்துகொள்வர். அதற்கான பேச்சுவார்த்தை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். சிறிகொத்தாவில், நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'நாட்டின் பொருளாதாரம் உயர்வடைந்து வரும் நிலையில், உழைக்கும் மக்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு மேலும் பல வரப்பிரசாதங்களை கொ…
-
- 0 replies
- 562 views
-
-
வடமாகாண சபையின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டமுன்வரைபை ஏற்றுக்கொள்வார்களா என வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் நேற்றையதினம் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாண சபையின் 49ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டடத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண சபையால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு தொடர்பான விவாதம் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பாக 18 பேர் கூடி நீண்ட நாட்களாக ஆராய்ந்து தீர்வுத்திட்ட முன்வரைபை தயாரித்துள்…
-
- 0 replies
- 315 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 10 படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இவ்வாறு படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தைச் சேர்ந்த 7 பேரும், கடற்படையினரைச் சேர்ந்த 3 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மேலதிகமாக 4 இராணுவ அதிகாரிகளும் 4 காவல்துறையினரும் வேறும் சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகாத நிலையில் குறித்த நபர்களின் பெயர் விபரங்களை அவையில் சமர்ப்பிப்பது பொருத்தமற்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleV…
-
- 0 replies
- 294 views
-
-
விக்கிரமபாகு கருணரட்ண - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயர் பனாமாபேப்பரில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என தான் கருதுவதாக நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணரட்ண தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்காக முன்னைய அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டு நிதிகளில் மோசடி இடம்பெற்றது. இந்த கறுப்புபணத்தை மகிந்தராஜபக்ச மொசாக் பொன்செகாவிலேயே முதலீடு செய்திருப்பார் என நான் நிச்சயமாக நம்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130914/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 415 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் சிங்கள மக்கள் வாழும் ஏனைய மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனம் செய்யப்படவேண்டும். முஸ்லிம் மக்களுக்கும், தெற்கில் மலையக மக்களுக்கும் தன்னாட்சிப் பிராந்தியம் உருவாக்கப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு முன்மொழிவுகளுக்குரிய முன்னுரையின் போதே முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். வடமாகாண சபையின் 49 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவைக் கட்டடத்தில் நேற்றைய தினம் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள…
-
- 0 replies
- 224 views
-
-
களனி புகையிரதப் பாலத்தை வாகனமொன்று சேதப்படுத்தி உள்ளதன் காரணமாக வடக்கு கிழக்கு மற்றும் புத்தளத்திற்கான புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வாகனம் பாலத்தின் உயரத்தை கருத்தில் கொள்ளாமல் பாலத்தின்கீழாக செல்ல முயன்றதன் காரணமாக பாலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, இந்த விபத்து காரணமாக தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன எனவும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130923/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 195 views
-
-
உலகையே உலுக்கி வரும் பனாமா பேப்பர்ஸ் மூலம் செல்வந்தப் புள்ளிகளின் இரகசிய பணம் பதுக்கல் விடயம் வெளிவந்து சர்வதேச மட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருந்தும் 46 பேர் இந்த பணப் பதுக்கல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இவர்களில் இலங்கையின் பெரும் வர்த்தகர்களான போரா சமூக முஸ்லிம்கள் 13 பேர் மற்றும் ஐந்து தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். சிங்களவர்கள் 25 பேரில் லக்பிம பத்திரிகை மற்றும் சுமதி குரூப் நிறுவனங்களின் தலைவரும், அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவருமான ஜகத் சுமதிபாலவும் உள்ளடங்கியுள்ளார். அத்துடன் உரிமையாளர்களின் பெயர் வெளியிடப்படாத மூன்று நிறுவனங்களும் இதில் உள்ளடக்கப்பட…
-
- 2 replies
- 648 views
-
-
ஈழத் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஒடுக்கி அடக்கும் அபாய வலயங்களையே சிங்களப் பேரினவாதிகள் பின்னுகின்றனர். இதனைத்தான் அண்மையில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் தொடர்பான விடயங்கள் உணர்த்துகின்றன. வடகிழக்குத் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான ஒரு நிலையை தெற்கில் காண்பித்து அதன் ஊடாக அரசியல் ஆதாயங்களை பெற பேரினவாத சக்திகள் முயல்வது புதிய அணுகுமுறையல்ல. இராணுவமுகாங்களை அகற்றவும், சோதனைச்சாவடிகளை அகற்றவும் தடைவிதிக்கக்கோரும் பேரினவாத சக்திகள், எதிர்பார்த்ததைப்போலவே மன்னார் தள்ளாடியில் சோதனைச்சாவாடி ஒன்றும் திறக்கப்பட்டிருக்கிறது. இவை எதற்கான? யாருக்கான சோதனைச்சாவடி? தமிழ் மக்கள் ஆயுதம் எடுத்து வருவதை தடுத்தற்கான சோதனைச்சாவடிகள் அல்ல. தமிழ் மக்களின் கைகளில் …
-
- 0 replies
- 322 views
-