Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிக் குடும்பம் எனக்கு ஒரு காலும் இல்லை கையும் இல்லை அரசு முதல் அரசியல் வாதிகள் வரை எங்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது விட்டாலும் பரவாயில்லை ஒரு கால் மற்றும் கை இல்லாத நான் சிரமம் இன்றி மலசலம் கழிப்பதற்கு ஒரு மலசலக் கூடத்தையாவது அமைத்துதாருங்கள் என்று பலரிடம் கேட்டப்போதும் எவரும் எம்மை கண்டுகொள்ளாமை மிகுந்த மனவருத்தம் தருகிறது. சாதாரன மலசல கூடம் ஒன்றில் ஒரு பக்கத்தில் சீமெந்து கல் ஒன்றை வைத்து பயன்படுத்துகிறேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் நிலைமையும் இப்படிதான் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்ட நிலையில் விரக்தியில்…

    • 17 replies
    • 1.4k views
  2. வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீள்குடியேற்றம் கோரி போராட்டம் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு பல வருடங்களாக முகாம்களில் வசித்து வரும் மக்கள் தங்களை தமது சொந்தக் காணிகளில் குடியேறுவதற்கு அனுமதிக்குமாறு கோரி வெள்ளியன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பலாலி விமான தள அபிவிருத்திக்காக தங்கள் நிலம் பயன்படுத்தப்படலாம் என்பது தங்களுக்கு அச்சமூட்டியிருப்பதாக மக்கள் தெரிவித்தனர். சுன்னாகம் கண்ணகி முகாம் பகுதியில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வடமாகாண சபையினர் உள்ளிட்ட பலரிடமும் தமது கோரிக்கையைத் தெரிவித்த போதிலும் எந்தப் பலன…

  3. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளை கண்டித்து சர்வதேச மகளிர் தினமான மார்ச் 08ஆம் திகதி தொடக்கம் இருண்ட நாளாக பிரகடனப்படுத்துவதாக ஒன்றிணைந்த பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அன்றைய தினம் வீடுகள், வர்த்தக நிலையங்களில் கறுப்பு கொடிகள் ஏற்றுமாறும் கறுப்பு பட்டிகளை கறுப்பு உடைகளை அணியுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு, வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு, பெண்கள் செயற்பாட்டுக்கான வலையமைப்பு என்பன இணைந்து இந்த வேண்டுகொளை விடுத்துள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெண்கள் தினமான மார்ச் 08இல்…

  4. நாயாறு, கொக்குத்தொடுவாய் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களுடன் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடற்றொழிளார்களால் முன் வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற அவர்கள், தென்னிலங்கையில் இருந்து வருகை தந்து சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுடன் கலந்துரையாடி, எமது மண்ணில் நீங்கள் தொழில் செய்ய முடியாது உடனடியாக வெளியேறுமாறு கூறியுள்ளனர். இது சம்பந்தமாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி சுதாகரனுடன் நேரில் சென்று கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ…

  5. வரலாற்றில் முதல் முறையாக எவரெஸ்ட் உச்சிக்கு ஏறும் இலங்கையர்கள்! இலங்­கையில் முதன் முத­லாக மலை­யேறும் வீரர்­க­ளான ஜயந்தி குரு மற்றும் ஜோன் பீரிஸ் ஆகியோர் எவரெஸ்ட் சிக­ரத்தின் உச்­சிக்கு ஏறும் பய­ணத்தை ஆரம்­பிக்­க­வுள்­ளனர். இது­வ­ரையில் எவரெஸ்ட் மலை உச்­சிக்கு இலங்­கை­யர்­க­ள் எவரும் ஏறி­ய­தில்லை. இந்­நி­லையில் இலங்கை வர­லாற்றில் புதிய பெயரைப் பதி­வ­தற்­கான இந்த சாதனை முயற்­சியில் கள­மி­றங்­கி­யுள்­ளனர் இவர்கள். 8488 மீற்றர் உய­ர­மான எவரெஸ்ட் மலையின் உச்­சிக்கு ஏறும் பய­ணத்தை எதிர்­வரும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்­பிப்­ப­தற்கு அவர்கள் திட்­ட­மிட்டுள்­ளனர். எவரெஸ்ட் மலைச் சிக­ர­…

  6. அரசியலுக்கு என்னை அழைத்து என் அமைதியை கெடுத்தவர் மனோகணேசன்! நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து கொண்டு இருந்த என்னை அரசியலுக்கு அழைத்து என் அமைதியை கெடுத்தவர் அமைச்சர் மனோகணேசன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி பழைய மாணவர்களால் அமைக்கப்படவுள்ள மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1875களில் தென்னிந்திய திருச்சபையினால் சாவகச்சேர…

  7. ரூ.21லட்சம் செலவில் நிர்மாணிக்கப்படும் மாதிரி வீட்டை பார்வையிட்டார் சுவாமிநாதன்! வடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாத 65 ஆயிரம் பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் கோப்பாய், செல்வபுரத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வீட்டை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். ஒவ்வொரு வீடும் தலா 21லட்சம் ரூபாய் செலவில் இந்த வீடுகள் அமைக்கப்படுகின்றது. இவ்வாறான தொகையில் யாழ்ப்பாணத்தில் வீடு அமைக்கும் முறையில் 3 வீடுகள் அமைக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். கழற்றி பூட்டக்கூடிய இம்மாதிரியான வீடுகள் யாழ்ப்பாணத்துக…

  8. பிராந்திய விமான நிலையமாகவே பலாலி மாறும்! யாழில் சுவாமிநாதன் தெரிவிப்பு! பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நடத்த தீர்மானித்துள்ளோம். இதனை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை” என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாத 65 ஆயிரம் பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் கோப்பாய், செல்வபுரத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வீட்டை இன்று பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அ…

  9. வித்தியாவின் படுகொலைக்கு ஒருதலைக் காதல் காரணம்! புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான குற்றப்புலனாய்வு பொலிஸாரின் விசாரணை அறிக்கைகள், இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவை எதுவும் இன்று சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் கடந்த எட்டு மாத காலமாக நடைபெற்று வருகின்றது. அந்த வழக்கு தொடர்பான சான்றுப் பொருட்களின் அறிக்கைகள், டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கைகள் என 12 அறிக்கைகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிக்கை…

  10. சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையருக்கு சிறைத்தண்டனை சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையருக்கு இந்தோனேசியாவில் ஐந்தரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதன் தினேஸ்குமார் எனப்படும் குகன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பி வைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குறிப்பாக சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கிய அவுஸ்திரேலிய அதிகாரிகள், குறி;த்த புகலிடக் கோரிக்கையாளர்களை மீள அழைத்துச் செல்லுமாறு கோரியிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. புகலிடக் கோரிக்கையாளர்களை சட்டவிரோதமாக…

  11. உலகிலேயே மோசமான கடவுச்சீட்டுக்களின் வரிசையில் சிறிலங்காவின் கடவுச்சீட்டு! [Friday 2016-03-04 07:00] உலகில் மோசமான கடவுச்சீட்டுக்களை உடைய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளது. வீசா இன்றி 39 நாடுகளுக்கு மட்டுமே இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி செல்ல முடியும். லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனமொன்று உலக நாடுகளின் கடவுச்சீட்டு தரம் பற்றி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2006ம் ஆண்டு முதல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. கடவுச்சீட்டை பயன்படுத்தும் பிரஜைகளுக்கான வசதிகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உலகில் மோசமான கடவுச்சீட்டுக்களை உடைய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளது. வீசா இன்றி 39 நாடுகளுக்கு மட்டுமே இலங்கை கடவுச்சீட்ட…

    • 1 reply
    • 428 views
  12. மஹிந்தவின் பலவீனம் கே.சஞ்சயன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தாம் ஒருபோதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என்று, சில நாட்களுக்கு முன்னர் தலதா மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து, தம்மை வழிநடத்துவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர்களுக்கும், அவரை வைத்து அரசியல் இலாபம் தேடும் தரப்பினருக்கும் அவரது இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில், மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்…

  13. ஐ.நா.தீர்மானத்திற்காக அழுத்தம் கொடுப்போம்! பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்த வேண்டும்! ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வகையான அழுத்தங்களையும் இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பிலான செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தமை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என எழுப்பப்பட்ட …

    • 1 reply
    • 388 views
  14. சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை தொடர்பில் இந்தியர்கள் அறுவர் கைது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்காக இலங்கைக்கு வந்து கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்தியர்கள் அறுவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை நகரிலுள்ள 7 மாடிக் குடியிருப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இவர்கள் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காகவே இலங்கைக்கு வந்திருப்பது இன்னும் உறுதி செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டார். மேலும் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் அறுவரது வயிற்றுப் பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படு…

  15. வெளிநாட்டு அழுத்தங்களில் இருந்து நல்லிணக்கம் உருவாக முடியாது! மக்களிடம் இருந்தே நல்லிணக்கம் உருவாக வேண்டும்! இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்க தென்பகுதியில் உள்ள மக்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் எல்ஹாட்ஜ் அஸ் சை, நேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது கருத்து வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டு அழுத்தங்களில் இருந்து நல்லிணக்கம் உருவாக முடியாது. மக்களிடம் இருந்தே நல்லிணக…

    • 1 reply
    • 344 views
  16. மீண்டு...(ம்) வருமா? "பிரபாகரன் யுகம்' மே மாதம் 19ஆம் திகதியுடன் விடுதலைப் புலிகளுடனான இன அழிப்புப் போரை, தனது படையணி மூலமும் அயல் நாடுகளின் உதவி கொண்டும் மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டு வந்த பிற்பாடு, இந்த நாடு படும்பாடு இப்போது சொல்லுந்தரமன்று. அதிலும், யாழ். குடாநாடு படும் உபத்திரவங்கள் வார்த்தைகளால் எடுத்தியம்பவும், வரிகளாய் எழுதிக் கொள்ளவும் முடியாதவை. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து அந்தப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியதாகக் கூறும் இனவாதி மகிந்த ராஜபக்ச, தனது அரசாட்சிக் காலத்தில் தானே விதைத்த வினையைத் தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார். அதே சமகாலத்தில், யாழ். குடாநாடு தன்நிலை…

  17. புங்குடுதீவு மாணவி கொலை: மேலுமொரு சந்தேகநபர் நேற்றுக் கைது - எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் நேற்று வியாழக்கிழமை (03) மேலுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை பொலிஸார் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது, மேலும் ஒருவரைக் கைதுசெய்யவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை வழக்கில் ஏற்கெனவே 10 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டனர். கொலை வழக்கின் சான்றுப் பொருட்கள் அறிக்கைகளையும் விசாரணை அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பி…

  18. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்:அறிக்கையின் பிரகாரமே நடவடிக்கை -எஸ்.றொசேரியன் லெம்பேட் அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபரின் அறிக்கையினை தாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், குறித்த அறிக்கையின் பிரகாரமே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும், மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அவரை, அவரது அமைச்சில் வைத்து புதன்கிழமை மாலை, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவாரத்தையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக, செல்வம் அடக்கலநாதன் எம்…

  19. உலங்கு வானூர்தி தளத்துடனான அவசர சிகிச்சை பிரிவுக் கட்டடம்! யாழ்.போதனாவில் பணிகள் ஆரம்பம்! யாழ். போதனா வைத்தியசாலையானது பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் குறிப்பாக தாதியர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. வைத்தியசாலையின் சேவையை மேம்படுத்தி அதன் தரத்தை உயர்த்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த ஆண்டு வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வழங்கும் 6 மாடிக் கட்டடத் தொகுதி அமைக்கும் வேலைகள் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் தளத்தில் உலங்குவானுார்தி இறங்கும் தளம் அமைக்கப்பட உள்ளது. இதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் 5 மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியின் வேலைகளையும்…

  20. மஹிந்தவின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் : வெளிநாட்டு உதவியை நாடும் ஸ்ரீலங்கா [ Friday,4 March 2016, 03:18:46 ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்காவின் உதவியை ஸ்ரீலங்கா அரசாங்கம் நாடியுள்ளது. அந்தவகையில் மஹிந்த ராஜபக்ஸவின் வங்கி கணக்குகள் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது. அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை…

  21. பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை எதிர்க்கவில்லை – என்கிறார் விக்னேஸ்வரன் MAR 03, 2016 பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்துக்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதற்கு முழுமையாக இணங்குவதாகவும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அண்மையில் சிறிலங்கா பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் பின்னர், கருத்து வெளியிட்டிருந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, வடக்கு மாகாண முதலமைச்சர் எதிர்ப்பை வெளியிட்டாலும், பலாலி விமான நிலைய விரிவாக்க…

  22. சம்பூர் அனல் மின் நிலைய காணிகளிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக நடவடிக்கை இலங்கையின் திருகோணமலை மாவட்டம் சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு என ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள காணிகளிலிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்துள்ள குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள காணிகளிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட காணிகளிலிருந்து வெளியேறும்படி, மூதூர் பிரதேச சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதேச செயலாளரால் இவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அங்கிருந்த மூன்று குடும்பங்கள் வெளியே…

  23. தமிழ்க் கைதிகள்: தொடரும் உண்ணாவிரதம், '8-ம் திகதி விவாதம்' 'அரசியல் கைதிகளின்' விடுதலையை வலியுறுத்தி நீண்டகாலமாக போராட்டங்கள் நடந்துவருகின்றன (கோப்புப் படம்) இலங்கையில் சிறைச்சாலைகளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவருவதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக குரல்கொடுத்துவரும் அமைப்பினர் கூறுகின்றனர். கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் கடந்த மாதம் 22-ம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் நேற்று புதன்கிழமை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை …

  24. நிலக்கண்ணி வெடி தடை உடன்படிக்கையில் இலங்கையும் இணையவுள்ளது நிலக்கண்ணி வெடிகளை உலகளவில் தடை செய்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒட்டாவா உடன்டிக்கையில் இலங்கையும் இணைவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிகாரத் துறை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதனடிப்படையில் நிலக்கண்ணி வெடிப்பொருட்களை பயன்படுத்துவதிலிருந்து இலங்கை விலகிக்கொள்ளப்போவதாக அவர் அறிவித்துள்ளார். ஒட்டாவா உடன்படிக்கையில் சுமார் 180 நாடுகள் கையெழுத்திட்டிருந்த நிலையில், கையெழுத்திடாத சுமார் முப்பது நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது என்று கூறிய அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இலங்கையில் மீண்டும் போர் நடக்காது என்பதை உலகி…

  25. முல்லைத்தீவில் சுனாமி அச்சத்தால் விடிய விடிய தூங்காதிருந்த மக்கள் 03 மார்ச் 2016 இந்தோனேசியாவில் ஏற்று நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2004ஆம் ஆண்டில் சுனாமிப் பேரலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய முழித்திருந்தனர். 2004ஆம் ஆண்டில் சுனாமிப் பேரலை வீசியதால் முல்லைத்தீவு நகரம் முழுமையாக அழிந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இன்றளவும் அந்த தாக்கத்திலிருந்து முல்லைத்தீவு மீளமுடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் நேற்றைய சுனாமி எச்சரிக்கை முல்லைத்தீவு மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.