ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
பிளவுபடாத நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்; சம்பந்தன் [ Friday,1 January 2016, 05:43:44 ] ஸ்ரீலங்காவிலுள்ள பல்லின சமூகங்கள் தமது வேறுபாடுகளை களைந்து மக்களின் உரிமைகளையும் மனித நேயத்தையும், சுதந்திரத்தையும் நல்வாழ்வையும் மதித்து பாதுகாக்கின்ற பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கான அர்த்தமுள்ள ஒரு தீர்வை அட…
-
- 1 reply
- 693 views
-
-
இலங்கையில் மூன்றாவது யுத்தத்திற்கு தயாராகிறது சர்வதேசம்! இலங்கையில் மூன்றாவது யுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுகளாக செய்த தியாகங்கள் இழப்புக்கள் துன்பங்களுக்கெல்லாம் அவர்களுக்கு கிடைத்தது என்ன? தனது ஆயுத பலத்தின் ஊடாக இலங்கையில் தன்னிச்சையான சுதந்திர தேசம் ஒன்றை உருவாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்களின் இன்றைய நிலை என்ன? தமிழ் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதா? அல்லது தமிழர்களின் போராட்டம் அவர்களது இலக்கை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றதா? என்ற பல கேள்விகளுடன் தமிழ் மக்களின் இன்றைய நிலை குறித்து ஆராய வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. 200…
-
- 4 replies
- 670 views
- 1 follower
-
-
யாழ். கைதடி வடக்கு அம்பிகா முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் - 2015 கைதடி மாதர் அபிவிருத்திச் சங்க முன்றலில் நேற்று நடைபெற்றது. கைதடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் உப தலைவர் திருமதி செ.கேதாரகௌரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக திருமதி ப.செல்வநாயகம் (அதிபர், குருசாமி வித்தியாசாலை, கைதடி), திரு. ச.தங்கராசா (முன்னைநாள் பிரதேசசபை உறுப்பினர்), திருமதி சு.தனபாலசிங்கம் (முன்பள்ளி இணைப்பாளர், தென்மராட்சி),…
-
- 0 replies
- 420 views
-
-
தனக்காக சுவரொட்டி ஒட்டி வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தவர்களுக்கு முதலில் வேலைவாய்ப்பு வழங்குவேன் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “எனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது என்னைக் கைவிடாது சுவரொட்டி ஒட்டி, வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எதிர்வரும் வாரங்களில் இவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும். நான் தொட்டது எல்லாம் துலங்குகின்றது அந்த வகையில் நான் அதிர்ஸ்டசாலிதான். 2020ம் ஆண்டிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதுவரையில் பதற்றமடைய வேண்டியதில்லை. எனது தலைவரும், ஜனாதிபதியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. என கொ…
-
- 0 replies
- 341 views
-
-
TNAயின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் வடமாகாணசபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.. கொழும்பின் முக்கிய பிரமுகர் கனிகீஸ்வரனின் ஏற்பாட்டில் கொழும்பு இசுப்பத்தானை மாவத்தையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127230/language/ta-IN/article.aspx
-
- 33 replies
- 2.1k views
- 2 followers
-
-
தையிட்டியிலும் வதை முகாமாம்? சொர்ணகுமார் சொரூபன் அதியுயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ஆம் திகதியன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் சீலிங், முட்;கம்பிகளினால் வேயப்பட்டுள்ளது.இதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்குச்சென்று திரும்பியோர் தெரிவித்தனர். மேற்படி பகுதியில் இராணுவத்தினரின் பயிற்சி முகாம் ஒன்று இருந்துள்ளது. அந்தப் பயிற்சி முகாம் அங்கிருந்த வீடுகளை உடைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன், சில வீடுகள் இராணுவத்தினரின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு இராணுவத் தேவைக்கு பயன்படுத்தப்பட்ட வீடுகள் தற்போது எஞ்சி…
-
- 0 replies
- 424 views
-
-
ஒற்றுமை, கூட்டு ஒத்துழைப்பு, சகவாழ்வை பாதுகாப்பதே புத்தாண்டின் இலட்சியங்கள் – ஜனாதிபதி [ Friday,1 January 2016, 05:02:59 ] ஒற்றுமை மற்றும் அதனூடாக வலுவடையும் கூட்டு ஒத்துழைப்பினையும் சகவாழ்வினையும் பாதுகாப்பதே புத்தாண்டில் எமது இலட்சியங்களாக அமைதல் வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எண்ணற்ற எதிர்பார்ப்புகள் நம் எதிரே சுடர்விட்டு எரிந்து கொண்டிருப்பதாகவும் புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரியில் எங்களுடையதும் எமது பரம்பரையினரதும் வாழ்வினை புதியதொரு திருப்புமுனைக்கு இட்டுச்சென்ற ஒரு முக்கியமான பிரவேசத்தின் ஊடாக மிகவும் பலம்வாய்ந்த நிலைபேறான நோக்கத்துடன…
-
- 1 reply
- 1.2k views
-
-
சகவாழ்வினை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது – ஜனாதிபதி சகவாழ்வினை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதிகாரத்தை கைவிட்டு மக்களை அதிகாரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் ஓர் திருப்பு முனையாக அமைந்திருந்தது எனத் தெரிவித்துள்ளார். ஜனநயாக சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டு, அடக்குமுறைகள் இல்லாதொழிக்கப்பட்டு, சர்வதேச நாடுகளின் நட்புறவுடன் நல்லிணக்க முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்…
-
- 0 replies
- 477 views
-
-
ஹிருனிகா கடத்தியமை நிரூபணம் ? ஹிருணிகாவிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தை பக்கச்சார்பற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களின் கூட்டு இயக்கம் வேண்டுகோள்:- பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிமேசந்திர கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டமை நிரூபணமாகக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெமட்டகொட பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட நபர், கொலன்னாவயில் அமைந்துள்ள ஹிருனிகாவின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை நிரூபணமாகியுள்ளது. கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் மகள் ஒருவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 483 views
-
-
இலங்கைக்குப் பாகிஸ்தான் தண்டர் விமானம் விற்பனை 01-01-2016 01:33 பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இம்மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். அவரது விஜயத்தின் போது, JF-17 தண்டர் விமானம் ஒன்றை இலங்கைக்கு விற்பனை செய்யும் உடன்படிக்கையொன்றில் கையொப்பமிடுவார் என டிபென்ஸ் வீக்லி எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. JF தண்டர் விமானம் பாகிஸ்தான் மற்றும் சீன விமான தயாரிப்பு கம்பனிகள் இணைந்து தயாரித்த 3ஆம் தலைமுறை விமானமாகும். விமானப்படைத் தளபதி ககண் புளத்சிங்களவிடம் இந்த விமானத் தயாரிப்பு நிலையத்தை பார்வையிட தொழில்நுட்பவியலாளர் அணியொன்றை அனுப்பும்படி பாகிஸ்தான் கேட்டிருந்தது. இலங்கை விமானப்படையிடம…
-
- 0 replies
- 632 views
-
-
தரம் குறைந்த பொலித்தீனை பயன்படுத்துவதற்கான தடை இன்று முதல் அமுல் [ Friday,1 January 2016, 05:51:24 ] தரம் குறைந்த பொலித்தீனை பயன்படுத்துவதற்கான தடை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. தரம் குறைந்த வகையிலான பொலித்தீனை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்தல் என்பன குற்றமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தை செய்பவரிடம் 10 ஆயிரம் ரூபாவுக்குக் குறையாத தண்டப்பணம் விதிக்கப்படும் என அவ்வதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மர்வின் தர்மசிறி கூறியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு இரு வருடங்களுக்குக் கு…
-
- 0 replies
- 476 views
-
-
தையிட்டியிலும் இராணுவத்தின் வதைமுகாம்! [Friday 2016-01-01 09:00] உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் சீலிங், முட்கம்பிகளினால் வேயப்பட்டுள்ளது. இதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்கு சென்று திரும்பியோர் தெரிவித்தனர். உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் சீலிங், முட்கம்பிகளினால் வேயப்பட்டுள்ளது. இதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்கு சென்று திரும்பியோர் தெரிவித்தன…
-
- 0 replies
- 457 views
-
-
யாழ்.குடாநாடு கடலில் மூழ்கும் ஆபத்து! - விஞ்ஞானிகள் எச்சரிக்கை [Friday 2016-01-01 09:00] யாழ். குடாநாடு கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளதெனவும், யாழ்ப்பாண வாசிகள் அனைவரும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் கடல்நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம் நேரிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞானிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை தொடர்பில் தெளிவுபடுத்திய வட மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், யாழ்ப்பாண மக்கள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்வார்களாயின் மேற்கண்ட அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். யாழ். குடாநாடு கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளதெனவும், யாழ்ப்பாண வாசிகள் அனைவரும் எதிர்வரும் ஐந்து வருட…
-
- 0 replies
- 444 views
-
-
2015ஆம் ஆண்டு வடமாகாணசபை வரவு செலவு
-
- 0 replies
- 332 views
-
-
2015ஆம் ஆண்டு வடமாகாணசபை வரவு செலவு
-
- 0 replies
- 280 views
-
-
தமிழ் மக்கள் பேரவையில் விரைவில் இணைவேன்! ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக தமிழ் மக்கள் பேரவை திகழும் என்கின்ற நம்பிக்கை தனக்குள்ளதாகக் குறிப்பிட்ட முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), விரைவில் அப்பேரவையில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்ளவுள்ளதாகவும் கூறினார். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாள்வதற்கு சகல தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பொன்று…
-
- 25 replies
- 1.5k views
- 1 follower
-
-
பிரபாகரன் ஒருவரே தேசியத் தலைவர்! இனியொருவர் உருவாகப் போவதில்லை! தேசியத் தலைவர் ஒருவரே, அவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. இவருக்கு முன்பும் ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை. இவருக்குப் பின்னர் இனியொரு தேசிய தலைவர் உருவாகப் போவதில்லை இவ்வாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் தலைவராக ஆரம்பத்தில் தந்தை செல்வா இருந்தார். அவர…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
டக்ளஸ், கருணாவை பேரவையில் இணைக்கலாம் என்று விக்கி ஐயா கூறிய கருத்திற்கு சில யாழ் நண்பர்கள் துடியாய் துடித்து துரோகிகளை பேரவையில் இணைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள் அதற்கான சுருக்கமான விளக்கத்தைத்தர கடமைப்பட்டுள்ளேன்! ஏன் எல்லாரும் அவதிப்படுகின்றீர்கள் நான் சேரப்போவதாக கூறவில்லையே இதில் கருணா என்பது முக்கியமில்லை இதில் கருத்து தெரிவித்திருக்கும் நீங்கள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் உங்களின் உள்மனங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு இது சிறந்த உதாரணம் நாம் அரசியல் பிச்சை கேட்கவில்லையே விக்கினேஸ்வரன், குமார்பொன்னம்பலம் அவர்களின் கருத்து, கொள்கைகள் எங்களுக்கு பிடித்திருக்கின்றது அவ்வளவுதான்.தமிழனுக்கு விடிவு கிடைக்க கிழக்கு மக்களாகிய நாங்களும் உதவுவோம் நீங்கள் …
-
- 5 replies
- 868 views
-
-
அடுத்த ஆண்டுச் செயற்பாடுகள் இலங்கை நோக்கியதாக இருக்கும் : வடக்கு முதல்வர் வடக்கு மாகாண சபையின் தனித்துவத்தை பேணும் வகையிலும் எமது இலக்கை நோக்கிய பயணிக்கும் ஆண்டாக அடுத்தாண்டு செயற்பாடுகள் அமைய வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டிற்கான வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று மதியத்துடன் நிறைவுக்கு வந்ததன் பின்னர், செயலாளர்கள், மற்றும் உத்தியோகத்தர்களுடனான மதிய போசன நிகழ்வு யாழ்.கிறின் கிறாஸ் விடுதியில் நேற்று மதியம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; …
-
- 2 replies
- 676 views
-
-
வடக்கில் தங்கிவாழும் நிலையில் 42 ஆயிரம் பெண்-தலைமை குடும்பங்கள்' 42 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ளனர் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட 42 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றிருப்பதனால் மற்றவர்களில் தங்கி வாழ வேண்டிய நிலையில் சமூக சீரழிவுக்கு ஆளாகக் கூடிய ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக வடமாகாண சுகாதாரத்துறை மற்றும் பெண்கள், சிறார்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் பிபிசி தமிழோசையிடம் கூறினார். வடக்கு மாகாணசபையின் பெண்கள்,சிறார்கள் விவகாரங்களுக்கான திணைக்களம் சுகாதாரத்துறை அமைச்சின் கீழ் வந்துள்ள போதிலும், அதற்குரிய ஆளணிகள் வழங்கப்படவில்லை. …
-
- 0 replies
- 430 views
-
-
மக்கள் பேரவை கூட்டத்தை ஏன் மூடிய அறைக்குள் நடத்த வேண்டும் என மாவை கேள்வி தமிழ் மக்கள் பேரவையில் நாம் இணைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் திங்கள் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மக்கள் பேரவை எனும் பெயரில் இரகசியமாக கூட்டம் நடாத்தபப்ட்டு உள்ளது. வெளியில் சொல்லப்படும் கருத்து நாங்கள் அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்று பிரச்சாரம் செய்கின்றார்கள் தமிழரசி கட்சியுடனோ, அல்லது அதன் தலைமையுடனோ யாரும் பேசவில்லை அப்படி ஒ…
-
- 30 replies
- 1.5k views
- 1 follower
-
-
29 தமிழக மீனவர்கள் கைது எல்லை தாண்டி மீன் பிடித்தத தமிழக மீனவர்கள் 29 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மீனவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் என இந்திய செய்திகள் கூறுகின்றன. மேலும் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் திருகோணமலை ராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி குறிப்பிடுகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=75630
-
- 1 reply
- 513 views
-
-
ஹிருணிக்கா எம்.பி.யை கைது செய்ய முடியுமா? - சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரும் சீ.சீ.டி. கொழும்பு, தெமட்டகொட மேம்பாலத்துக்கு அருகில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்குள் பட்டப்பகலில் அத்துமீறி அங்கிருந்த ஊழியர் ஒருவரை டிபெண்டரில் கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்ய முடியுமா, இல்லையா என கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆறு பேரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ள நிலையிலேயே அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை, முறைப்பாட்டடாளர…
-
- 3 replies
- 684 views
-
-
வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி ஆயுதமுனையில் கொள்ளை! உரும்பிராய் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் ஆயுத முனையில் துணிக கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. உரும்பிராய் கிழக்கு ஞானவைரவர் கோவில் வீதி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.மூன்று மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத ஏழு நபர்கள் தமது முகத்தினை துணியால் கட்டி மறைத்த வண்ணம் வாள், கத்தி, பொல்லு போன்று கூரிய ஆயுதங்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தினை மேற்கொண்டுள்ளனர். குறித்த வீட்டில் புடைவை வியாபார நிலையம் ஒன்று இருப்பதனால் எப்பொழுதும் வாடிக்கையாளர்களால் சூழ்ந்து காணப்படும். …
-
- 0 replies
- 694 views
-
-
தாஜூதீன் கொலை உட்பட பல வழக்குகள் ஜனவரியில் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் சம்பந்தமான நீதிமன்ற நடவடிக்கைகள் அடுத்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் கீழ் சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்படவுள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த எதிர்ப்புகளை நெறிப்படுத்தும் விதம், அதன் பிரதானிகள் யார் என்பது குறித்து எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதோடு,தாஜூதீனின் கொலை…
-
- 0 replies
- 497 views
-