Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோத்தா நினைத்தால் எதுவும் நடக்கும்..! குழப்பத்தில் "இந்திய ரோ" [ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2015, 06:28.17 AM GMT ] அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரியை முன்னால் இராணுவ அதிகாரிகள் பலர் சந்தித்தனர். இதன் பின்னனி யார்..? கோத்தபாயவின் அடுத்த இலக்கு..? இலங்கையின் புதிய அரசின் செயற்பாட்டில் இந்தியாவிற்கு சிக்கலா..? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலையால் தடுமாறுகிறதா இந்தியா..? வடக்கு முதல்வரிடம் இந்திய துாதுவரின் கருத்தில் மறைந்துள்ள செய்தி..! இலங்கை நிலைப்பாடுகளால் "இந்திய ரோ" குழப்பத்திலா..? எனும் பல வினாக்களுக்கு லங்காசிறி வானொலியில் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன். …

    • 0 replies
    • 665 views
  2. பொன்சேகாவின் விஸா விண்ணப்பம் நிராகரிப்பு முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் சமர்ப்பிக்கப்பட்ட, ஐக்கிய அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பத்தை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளதாக, சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/161457/%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.OjKZdxEE.dpuf

  3. மகனைத் தேடவேண்டாம் என தொலைபேசியில் மிரட்டல் வந்தது வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறுவர் நன்னடத்தை அதிகாரியால் இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட எனது மகன் அதன் பின்னர் காணாமற்போயுள்ளார்.இது தொடர்பில் நாங்கள் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தபோது, புலனாய்வாளர்கள் எனக்கூறி எங்களுக்கு தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியவர்கள் மகனைத் தேடவேண்டாம் என அச்சுறுத்தல் விடுத்ததாக தந்தையான அல்போன்ஸ் அன்ரன் அலெக்ஸாண்டர் என்பவர் சாட்சியமளித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சாட்சியமளித்…

  4. சாவதற்குள் பிள்ளையை கண்டுபிடிச்சுத் தாங்கோ : புற்றுநோயாளியான தாய் கதறல் நான் சாவதற்குள் எனது பிள்ளையையும், பேரப்பிள்ளையையும் கண்டு பிடிச்சுத் தாங்கோ. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் இவ்வாறு காணாமற் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு அமர்வில் கதறி அழுதார் புற்று நோயாளியான வயோதிபத் தாய். ஆணைக்குழுவின்அமர்வு நேற்றுமுன்தினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. புற்றுநோய்த் தாக்கத்தால் நடக்க முடியாத நிலையிலும் குறித்த தாய் ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளித்தார். எனது மகனான புஸ்பநாதன் சுரேஸ் அவருடைய மனைவி சுகந்தி எனது பேரப்பிள்ளைகளான அபிசன், அபிராமி ஆகியோருடன் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு…

  5. உதயன் மீதான தாக்குதலின் சூத்திரதாரி நாடாளுமன்றில் சுதந்திரமாக செயற்படுகிறார் : சபையில் சுட்டிக்காட்டினார் சரவணபவன் எம்.பி. இராணுவத்தினரின் ஆதரவுடன் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் வெறியாட்டம் நடத்தி இரண்டு ஊழியர்களைச் சுட்டுக் கொன்றார்கள். மூன்று பேரைக் காயப்படுத்தினார்கள். ஒரு கோடி ரூபா அளவிலான சொத்துக்களை நாசமாக்கினார்கள். இதனைச் செய்தவர்களின் தலைவர் -தாக்குதலின் சூத்திரதாரி - முன்னைய ஆட்சியில் அமைச்சராக இந்தச் சபையில் இருந்தார். இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சுதந்திரமாகச் செயற்படுகிறார். இவ்வாறு, நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். …

  6. சோதிடத்தை நம்பியே தோல்வியுற்றார் மகிந்த சோதிடத்தில் நம்பிக்கை வைத்துத் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வி கண்டார். அதனை மறந்து விட வேண்டாம். கடவுளை மட் டுமே நம்புங்கள் என்று காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு அறிவுரை கூறினார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ் வெல் பரணகம. பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று 3 ஆவது நாளாகவும் காணாமற் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்காக வருகை தந்திருந்த புதுக்குடியிருப்பு முத்தையன் கட்டுப்பகுதியினைச் சேர்ந்த தாயயாருவர் தனது மகன் காணாமற்போனமை தொடர்பில் சாட்சியமளித்திருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு, 17 வயதில் எனது மகன் கிருஸ்னன் காண…

  7. பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம். [Saturday 2015-12-05 07:00] பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம். இனியும் பொறுக்க முடியாது. அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட, எமக்கும் தமிழ் மக்களுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம். இனியும் பொறுக்க முடியாது. அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட, எமக்கும் தமிழ் மக்களுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப…

  8. தமிழர்களை ஆதரித்து செல்வதே இனவாதிகளுக்கு பிரச்சினையாக உள்ளது; மங்கள [ Monday,14 December 2015, 05:27:39 ] முன்னைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை புறக்கணித்த நிலையில், நாம் அவர்களை ஆதரித்து செயற்படுவதே இனவாதிகளுக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் முன்னைய ஆட்சியாளர்களை விடவும் தாம் அதிக அக்கறையுடனும் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழர்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் தொடர்பில் அக்கறையுடனும், பொறுப்புடனும் செயற்பட்டு வருவதாகவும், குறிப்பிட்டுள்ள அமைச்சர், மக்களின் விருப்பத்…

  9. ஜனாதிபதியை விட மகிந்தவுக்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு? - மைத்திரி கேள்வி [Monday 2015-12-14 09:00] ஒரு நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் இருக்க முடியாது. நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற நிலை யில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதிகளவான வாகனங்களையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பயன்படுத்தி வருகின்றார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் விசனம் வெளியிட்டுள்ளார். ஒரு நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் இருக்க முடியாது. நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற நிலை யில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதிகளவான வாகனங்களையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பயன்படுத்தி வருகின்றார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் விசனம் வெளியிட்டுள்ளார். ஜன…

  10. கடற்படையினர் கடத்திச் சென்ற எனது கணவர் இறந்துவிட்டதாக நீதிமன்றில் மரணச் சான்றிதழ் தந்தார்கள் எனச் சாட்சியமளித்தார் பெண் ஒருவர். காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் காந்தி யாழினி என்பவர் சாட்சியமளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், அல்லைப்பிட்டிப் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நடைபெற்ற போரின்போது, யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டி ருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், எனது கணவர் செல்வானந்தம் காந்தி 2006 ஓகஸ்ட் 15ம் திகதி கடற்படையினரால் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்துக் கடத்…

  11. போரின் முடிவில் புலிகளின் முக்கியஸ்தர்கள் குடும்பத்துடன் படையினரிடம் சரணடைந்தது எப்படி? - ஆணைக்குழு முன் சாட்சியம் [Monday 2015-12-14 09:00] போரின் இறுதி நாட்களில் வட்டுவாகலில் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் கைக்குழந்தைகளை தாங்கிய பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொதுமக்கள் பலர் முன்னிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவர்களின் கதி என்னவென்று நேற்று பருத்தித்துறையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கேள்வி எழுப்பினார் பெண் ஒருவர். போரின் இறுதி நாட்களில் வட்டுவாகலில் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் கைக்குழந்தைகளை தாங்கிய பத்துக்க…

  12. இலங்கையில் மருத்துவமனை அமைக்கிறது இந்தியா! [ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2015, 01:03.05 AM GMT ] இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ரூ. 87.29 கோடி செலவில், 200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை இந்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வவுனியா, அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோக்கத்தில் அதன் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுகிறது. அடுத்ததாக, அந்த மருத்துவமனைக்கு ரூ. 4.7 கோடி செலவில் மருத்துவ உபகரணங்கள், மேஜை, நாற்காலி ஆகியவற்றை இந்திய அரசு வழங்கவுள்ளது. கிளிநொச்ச…

  13. அனைத்து தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சி: 14 டிசம்பர் 2015 இன்று நள்ளிரவிலிருந்து ஆரம்பமாகவுள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை இது தொடர்பாக முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பொன்றுடன் மேற்கொண்;ட பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பல யோசனைகள் தொடர்பாக இலங்கையின் முக்கிய தொழிற்சங்கங்கள் பல அரசாங்கத்துடன் மிகவும் கடுமையாக முரண்பட்டுவருகின்றன. இதன் தொடர்ச்சியாக தொழிற்சங்க குழவினர் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் பின்னர் கருத்துதெரிவித்துள்ள தொழிற்சங்க பேச்ச…

  14. இலங்கைக்கு வழங்கவுள்ள நிதி குறித்து விளக்கம் தேவை! தமிழர்களுக்கான நாடாளுமன்றக்குழு பிரித்தானிய அரசிடம் கோரிக்கை [ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2015, 02:21.40 AM GMT ] இலங்கையின் இராணுவ மீளமைப்புக்காக வழங்கப்படப் போகும் நிதி குறித்து விளக்கம் ஒன்றை தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சி குழு கோரியுள்ளது. பிரித்தானிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஹூகோ ஸ்வைரியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இராணுவத்தை மீளமைப்பு செய்ய 6.6 மில்லியன் பவுண்ட்ஸ்களை வழங்க அண்மையில் பிரதமர் கமரொன், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் உறுதியளித்துள்ளார். எனினும் இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளது என்பது குறித்து விளக்கம் தேவை என…

  15. வட மாகாண முதலமைச்சரை அவமானப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் [ Monday,14 December 2015, 02:59:52 ] மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தலைமை தாங்குவோர் தொடர்பில் இன்றைய அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு தமிழ் மக்களின் மனநிலைக்கு மாறானது என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். ஏழாலை கண்ணகியம்மன் சனசமூக நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலைவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களுடைய அபிவிருத்தி, நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தி விரைவுபடுத்து…

  16. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மகஜர் ஒன்று கையொப்பமிடப்படவுள்ளது- குளோபல் தமிழ் செய்தியாளர்: 14 டிசம்பர் 2015 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மகஜர் ஒன்று கையொப்பமிடப்படவுள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இந்த மகஜருக்கான கையொப்பங்களை திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் பாராளுமன்றில் தமது சங்கம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இவ்வாறு மஜகரில் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளன. சங்கத்தின் சில உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக பிரதமர் குற்றம் சுமத்தியிருந்தார். அரசாங்கம் சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ளதாக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. …

  17. ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று! [ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2015, 03:05.40 AM GMT ] தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போர…

  18. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் முரண்பாடுகள் களையப்படும் - விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் முரண்பாடுகள் களையப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு தலைவர்களுக்கும் யாழ்ப்பாணத் தலைவர்களுக்கும் இடையில் கொள்கை அடிப்படையிலான முரண்பாடுகள் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இடங்களிலிருந்தும் தமிழர் பிரச்சினை வௌ;வேறு விதமாக நோக்கப்படுகி;றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்ச…

  19. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகள் இரண்டு உள்ளூராட்சித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் தேசிய சுதந்திர முன்னணி, புதிய இடதுசாரி முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகள் உள்ளடங்கியுள்ளன. இவற்றில் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான தொழிலாளர் காங்கிரசும், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டு விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளன. இவற்றில் அதாவுல்லாவின் கட்சி நேரடியாக ஐ…

  20. விமர்சனங்களுக்கு நடுவே விசாரணை நடத்தும் 'காணாமல்போனோர் ஆணைக்குழு' இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் வடக்கு மாகாணத்தில் விசாரணைகளை நடத்திவருகின்றது. இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பிக்கை அளிக்கவில்லை என்று கூறி, அதன் அமர்வுகளை புறக்கணிக்குமாறு காணாமல்போனவர்களை கண்டறியும் குழுக்களின் பிரதிநிதிகள் கோரியிருந்தனர். எனினும், யாழ் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அந்தக் குழுவின் விசாரணைகளில் பலர் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் மாவட்டத்திலிருந்து கிடைத்த 2500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு, மூன்றாவது நாளாக இன்று ஞாயிறன்று பருத்தித்துறையில் விசாரணை…

  21. இனவாதத்தை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை;புதிய சட்டமூலம் விரைவில் இனவாத மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் பேசுவோருக்கு எதிராக கடுமையான சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. ஆளுங்கட்சிப் பிரதம கொறடாவும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலகவினால் இந்த சட்டமூலம் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான இனவாத மற்றும் மதவாத கருத்துக்களைப் பரப்பும் குழுவின் செயற்பாட்டினால் கட்டியெழுப்பப்பட்டு வரும் இன நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுவதாக அரசாங்கத்திடம் சில தமிழ் உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதனை கருத்திற்கொண்டுள்ள அரச தரப்பு இனவாத, மதவாத கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்ப…

  22. SMS களின் காட்டிக்கொடுப்பு !!! தமிழரசுக் கட்சியையும் – மக்களையும் வழிநடத்தவும் வழித்தெரியாமல், கட்சியின் பிரச்சினைகளை அன்னிய நாட்டின் இராஜதந்திரிகளிடம் கையளிப்பதையும், கட்சியைப் பற்றியும் – கட்சியின் தலைமையைப் பற்றியும் விமர்சிக்கின்ற கட்டுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், செய்தி ஆசிரியர்களை வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் ஊடக நிறுவனங்களின் தலைமையிடமும் காட்டிக்கொடுப்பதையும், வழக்கமாகக் கொண்டுள்ள SMS களின் (சம்பந்தன் – சுமந்திரன் – மாவையின்) கையாலாகத்தனம் இன்று அனைத்து மட்டங்களிலும் அம்பலப்பட்டு இராஜதந்திரிகளே முகம் சுழிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. இந்த காட்டிக்கொடுப்பின் உச்சக்கட…

  23. சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவையாற்றிய வீட்டின் உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வசித்து வந்த மேலும் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் இலங்கை திரும்பிய பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். குறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர், உட்பட மூவரும் பல முறை இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த கடந்த வருடம் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். மூன்று பிள்ளைகளின் தாயான 33 வயதான இந்த பெண் பாலியல் வல்லுறவால் கடும் துன்பத்தை அனுபவித்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இலங்கை திரும்பியுள்ளார். இலங்கை திரும்பிய அ…

  24. தாஜூடீன் கொலையாளிகளுக்கு முக்கிய சக்தியொன்றின் பாதுகாப்பு தொடர்கிறது.. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையாளிகளுக்கு முக்கிய சக்தியொன்றினால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை குறித்த விசாரணைகளை மலினப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வரும் காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பினரும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவி;க்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் உயர் பதவிகளை வகித்து வருவதனால் இவ்வாறான விசாரணைகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக…

  25. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக புதிய ஒரு கட்சி உருவெடுத்து விடுமோ என்ற ஏக்கம் இந்தியாவையும் தொட்டு விட்டமை தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது இந்தியாவின் கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகின்றமை தெரிந்ததே. இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எதுவும் செய்ய முடியாதென்ற முடிவில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மிகவும் உறுதியாக உள்ளார். அதாவது, இந்தியாவை மீறி எந்த நாட்டாலும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்துவிட முடியாது என்பதில் இரா.சம்பந்தர் கொண்டுள்ள உறுதிப்பாட்டில் நியாயம் இல்லாமலும் இல்லை. அதற்காக எங்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்தியா சொல்வதாகவே இருக்கும் என்ற கருத்தை எச் சந்தர்ப்பத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.