ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
தமிழினியின் தாய் சின்னம்மா:- நேர்காணல், படப்பிடிப்பு – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்………. தமிழினி உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்? அவ இருக்கும்போது யாரும் வந்து பார்த்து எதுவும் செய்யவில்லை. நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிள்ளை நாங்கள் நல்லா இருக்க வேணும் என்று நினைச்ச போது யாரும் அதுக்கு உதவயில்லை இனியென்ன மகளே இல்லை எனவே நாங்கள் இப்படியே இருந்தாலும் பரவாயில்லை. தயவு செய்து தமிழினியை வைத்து அவவின்ர மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அதைதான் எல்லாரிட்டையும் கேட்கிறன். மற்றது பாருங்கோ இயக்கத்தில் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த என்ற மகளின்ர வாழ்கையை தடுப்பால வந்த பிறகு …
-
- 2 replies
- 871 views
-
-
அடைமழை.... தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழைக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் அதிகரித்துள்ளதால் விவசாய நிலங்கள் நீரில் முழ்கியுள்ளன. மேலும் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வி.சுகிர்தகுமார் -அம்பாறை சுப்பிரமணியம் பாஸ்கரன் -கிளிநொச்சி நடராசா கிருஸ்ணகுமார்- யாழ்ப்பாணம் வடிவேல் சக்திவேல் -மட்டக்களப்பு புத்தளம்:ஹிரான் பிரியங்கர மன்னார் ஆர்.ரஸ்மின்: முல்லைத்தீவு …
-
- 2 replies
- 789 views
-
-
வீட்டிற்குள் சென்று 14 வயது சிறுமியின் தலையை கவ்விய முதலை! கிளிநொச்சியில் சம்பவம் [ சனிக்கிழமை, 14 நவம்பர் 2015, 04:30.42 AM GMT ] கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது. இதனை கண்ட சிறுமியின் அப்பா முதலையுடன் போராடி மகளை காப்பற்றி உள்ளார். எனினும் சிறுமி காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசர சிகிச்சிப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் பெய்துவரும் கடும் மழையால் வெள்ள நீர் மற்றும் வான் நீர் என்பன மக்கள் குடியிருப்பினூடு பாய்ந்து வருகிறது. வெள்ள நீருடன் சேர்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்கு பெரிய அளவிலான முதலை ஒன்று…
-
- 1 reply
- 714 views
-
-
கிளிநொச்சியில் சூறாவளி - வீடுகள் முற்றாக சேதம் -மக்கள் நிர்க்கதியில் கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையால் 502 குடும்பங்களைச் சோ்ந்த 1646 போ் பாதிப்பு:- கிளிநொச்சியில் சூறாவளி வீடுகள் முற்றாக சேதம் மக்கள் நிர்க்கதியில் இன்று மதியம் வரை அதிகாரிகள் எவரும் செல்வில்லை. கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வீசிய சூறாவளி காரணமாக மக்களின் பத்து வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, 50 க்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட சூறாவளியினாலும் சாந்தபுரத்தில் பல குடும்பங்கள் பெரும் நெருக்கடிக…
-
- 0 replies
- 695 views
-
-
யுத்த சூன்ய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா ஒப்புக்கொண்டுள்ளார். யுத்த சூன்ய வலயம் அமைந்திருந்த புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வைத்தியசாலை மீது கனரக ஆயுதங்கள் கொண்டுதாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தவறுதலாக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் ஓப்புக்கொண்டுள்ளார். யுத்த சூன்ய வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்ற அரசாங்கத்தின் வாதத்தை பொய்ப்பிக்கும் வகையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக யுத்த சூன்ய வலயம் மீது தாக்குதல் நடத்துவது சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக்கொடி சம்பவ…
-
- 19 replies
- 968 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய நாளை வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மீளவும் ஆரம்பித்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், தமிழ் அரசிய…
-
- 0 replies
- 506 views
-
-
சர்ச்சைக்குரிய மிதக்கும் ஆயுதக் களஞ்சியமான எவன்ட் கார்ட் கப்பலிலுள்ள சகல ஆயுதங்களும் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. எவன்ட் கார்ட் நிறுவனத்தின் கீழுள்ள ஆயுதங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். தென்பகுதி கடற்படையைச் சேர்ந்தவர்கள் குறித்த கப்பலில் உள்ள ஆயுதங்களை கரைக்குக் கொண்டுவரும் பணிகளை ஆரம்பித்திருப்பதுடன், இந்த நடவடிக்கையை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பூர்த்திசெய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 3000 ஆயுதங்கள் குறித்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தில் காணப்படுவதாக கடற்படை பேச்சாள…
-
- 0 replies
- 446 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த தமிழர்களும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருப்பதை நேற்றைய ஹர்த்தால் பிரதிபலித்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதொரு செய்தியை எடுத்துக் கூறியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நீண்டகாலத்துக்குப் பின்னர் சாத்வீக ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கைதிகள் விடுதலையில் தமிழர்களின் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு அரசாங்கம் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். அரசாங்கத்துக்கு நேற்றைய ஹர்த்தால் நிச்சியமானதொரு செய்தியைக் கூறியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி என்ன…
-
- 0 replies
- 544 views
-
-
விடுதலைக்கு ஆர்ப்பரித்தார்கள், ஆனால் பிணை எடுக்க ஆளில்லை. அமைச்சரவைப் பேச்சாளர் கிண்டல் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்று பெரிதாக கோஷமெழுப்பியவர்களெவரும் அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணைவழங்கப்பட்டபோது பிணையெடுப்பதற்கு அங்கிருக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 12000 முன்னாள் விடுதலைப்புலிகள் அங்கத்தவர்களை விடுதலை செய்ததாக அடிக்கடிக் கூறி தம்பட்டமடித்துக்கொள்ளும் அரசாங்கம் எதற்காக 200 வரையான அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கு இத்தனை இழுபறிப்…
-
- 19 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு காடழிப்பு சூத்திரதாரிகளை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் : ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை முல்லைத்தீவு 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறுமதியான மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன். இரவோடு இரவாக காடுகளை வெட்டியவர்கள் யார்? வெட்டிய காட்டிலிருந்த பெறுமதியான மரங்களை கடத்தியவர்கள் யார்? என்பதை கண்டறியுங்கள். அது யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார். வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் நேற்று முன்தினம் ஜனாதிபதியைச் சந்தித்து பேசினா…
-
- 1 reply
- 682 views
-
-
ஓரவஞ்சனை கபடநாடகம் நெஞ்சி லுரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ-கிளியே வாய்ச்சொல்லில் வீரரடீ... இது பாரதியாரின் 'நடிப்பு சுதேசிகள்' என்ற தலைப்பின் கீழுள்ள கவிதையடிகளில் ஒரு பந்தியாகும். அவ்வரியில் உள்ளவை, இக்கால தமிழ் அரசியல்வாதிகளுக்கு சாலப் பொருந்தும். தற்கால தமிழ் அரசியல்வாதிகள், செயற்பாட்டு அரசியலை விடவும் அறிக்கை அரசியலில் மகா வல்லவர்கள். ஒரு விடயம் கிடைத்துவிட்டால் மற்றொரு விடயம் கிடைக்கும் வரையிலும் உடும்புப் பிடிபோல் அதிலேயே ஒட்டிக்கொள்வர். அதிலும் சில தமிழ் அரசியல்வாதிகள், நாடாளுமன்றக் கதிரையைச் சூடாக்குவதில் மட்டுமே குறியாக இருப்பர். அது வேறுவிடயமாகும். …
-
- 0 replies
- 458 views
-
-
"தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யக் கோரி வடக்கு, கிழக்கில் நேற்று நடைபெற்ற பூரண ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்கான எமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் நடைபெறவுள்ளது.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், …
-
- 2 replies
- 471 views
-
-
பல அரசியல் காரணங்களுக்காக, அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமல் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகையில், அரசியல் கைதிகளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பினார். சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன் வால்கர் நிடெர்கூர்ன் (ர்நiணெ றுயடமநச நேனநசமழழசn) அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை (13) விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையிலேயே, முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 'அரசியல் கைதிகள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவர்களை கோரமுடியாதா? என அவர்கள் என்னிட…
-
- 0 replies
- 378 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல வீதிகள் புனரமைக்க வேண்டிய வீதிகளாக இருப்பதானால் அந்த வீதிகள் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியுள்ளன. மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத 15 ஆயிரத்து 592 குடும்பங்கள் இருக்கின்ற நிலையில், இவ்வாறான பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல வீடுகளில் நீர் ஊறுகின்றது. கிராமப் புறங்களுக்கான போக்குவரத்து வசதிகளும் தடைப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதுன், மழையாலும் மக்கள் முடங்கியுள்ளனர். http://www.tamilmirror.lk/159062/%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE…
-
- 0 replies
- 475 views
-
-
கடல்பாதுகாப்பு தொடர்பில் இலங்கையும் அமெரிக்காவும் சந்திப்பு [ சனிக்கிழமை, 14 நவம்பர் 2015, 04:16.28 AM GMT ] இலங்கையும், அமரிக்காவும் கடல் பாதுகாப்பு தொடர்பில் நேற்று சந்திப்பை நடத்தியுள்ளன இலங்கையின் கடற்படையினரும் அமரிக்க கடற்படையினரும் இந்த சந்திப்பை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடற்படை தலைமையத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இலங்கையின் சார்பில் கடற்படை தளபதி வைஸ் அடமிரல் ரவீந்திர விஜேகுணரட்னவும், அமெரிக்காவின் சார்பில் கரையோர பாதுகாப்பு பிரிவின் பிரிகேடியர் ஜெனரல் டி எட்வேட் பண்டாவும் பங்கேற்றனர். இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உதவி பாதுகாப்பு அதிகாரியும் இதன்போது சமூகமளித்திருந்தார். பயிற்சிகள், ஆராய்ச்சிகள், மீட்பு …
-
- 0 replies
- 296 views
-
-
மகிந்தவுக்கு மேல் நீீதிமன்றம் அழைப்பாணை! [Saturday 2015-11-14 07:00] 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழு பேரை எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழு பேரை எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 2015 தேர்தல் பிரசாரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி 142 மில்லியன் ரூப…
-
- 0 replies
- 379 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வதில் தவறில்லை – சரத் பொன்சேகா:- 14 நவம்பர் 2015 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வதில் தவறில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத்; பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. சுதந்திரமாக இருக்க முடியுமானால் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வதில் தவறில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைது செய்பய்பட்ட 12000 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்க…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கை வருகிறார் சமந்தா பவர்! - முக்கிய பேச்சுக்களை நடத்துவார். [Saturday 2015-11-14 09:00] ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவரும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியமானவருமான சமந்தா பவர் மூன்று நாட்கள் விஜயமாக எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின் போது அவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உறுதிப்படுத்தினார். ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவரும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியமானவருமான சமந்தா பவர் மூன்று நாட்கள் விஜயமாக எதிர்வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
கார்த்திகை வீரர்கள் நினைவுதினம்: யாழில் சுவரொட்டி கார்த்திகை வீரர்களின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வுகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக யாழில் பரவாலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் நாளை கொழும்பு விஹாரமாதேவி திறந்த வெளியரங்கில் மாலை 3.30 மணியளவில் நடைபெறவுள்ளதாகவே சுவரொட்டிகள் பரவலாக யாழில் ஒட்டப்பட்டுள்ளன. இதேவேளை முன்னிலை சோஷலிச கட்சியினரும் நுகேகொடையில் நாளை 3.30 மணியளவில் கார்த்திகை வீரர்கள் நினைவுத்தினத்தை அனுஷ்டிக்கப்பட உள்ளதாக யாழில் பரவலாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். v …
-
- 1 reply
- 535 views
-
-
காணமல் போகடிக்கப்பட்ட இரு மகன்மாரை பற்றி தகவல் தருவதாக கூறி தன்னிடம் நபரொருவர் ஒரு லட்சத்து 30 ரூபாய் பணத்தினை ஏமாற்றி பெற்றுக்கொண்டு உள்ளதாக காணமால் போகடிக்கப்பட்ட இரு மகன்களின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை காணமால் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்களை காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வந்துள்ள ஐ.நா செயற்குழுவினர் சந்தித்தனர். குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை நாவற்குடா பகுதியை சொந்த இடமாக கொண்டனாங்க. அங்கிருந்து இடம்பெயர்ந்து அம்பலவான்பொக்கனை பகுதியில் தங்கி இருந்து கடற்தொழில் செய்து வந்தோம். அந்ந…
-
- 1 reply
- 355 views
-
-
முன்னாள் ஊடக அமைச்சர் கெகலிய றம்புக்வெலவுக்கு யாழ் நீதவான் பிடிவிறாந்து பிறப்பித்தார் முன்னாள் ஊடக அமைச்சர் கெகலிய றம்புக்வெலவுக்கு யாழ் நீதவான் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளா. காணாமல் போகடிக்கப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் ல்லித், குகன் தொடர்பான வழக்கில் கெகலிய றம்புக்வெலவுக்கு அழைப்பாணை அனுப்ப்ப்பட்டும் கடந்த 3 வழக்குகளிலும் முன்னிலையாகாதனை அடுத்து யாழ் நீதிமன்ற நீதவான் ப. சிவகுமார் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்… குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125892/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 649 views
-
-
கைதிகள் விடயத்தில் சம்பந்தன் அசமந்தம் : சுரேஸ் அரசியல் கைதிகள், தங்கள் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க, அவர்களை 7ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக நேரில் சென்று உறுதிமொழி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இந்தியா, டெல்லியில் இருப்பது முறையல்ல எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மருத்துவ சிகிச்சையென்பது முக்கியமானது. ஆனால், தமிழர்களின் தலைமைக் கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப…
-
- 8 replies
- 812 views
-
-
சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம் [ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2015, 08:33.58 AM GMT ] அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இன்று அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும், இதன் போது சுமந்திரனுக்கு எதிராக கூடியிருந்த இளைஞர்கள் தமது கருத்தை வெளியிட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களைச் சந்த…
-
- 117 replies
- 8.8k views
-
-
2015ஆம் ஆண்டு செப்தம்பர் மாதத்தில் ஐநா மனித உரிமைப் பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய கருத்துரைகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கருத்துரைகளை பேராசிரியர் சந்திரகாந்தன் சிறீதரன் சிவஞானம், M.P. (யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) விசுவநாதன் உருத்ரகுமாரன்- (பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்) ஸ்கைப் வழியாக உரையாற்றினார். தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இங்கு கருத்துரை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிடுகையில், யாழ்…
-
- 0 replies
- 618 views
-
-
தமிழரை ஏமாற்றுவதையே வழமையாகக் கொண்டிருக்கும் பெரும்பான்மை தலைமை : சரா எம்.பி காட்டம் தமிழ் மக்களின் வாக்குகளால் பதவியைப் பெற்றுக் கொண்;ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் செய்யாமல் ஏமாற்றியிருக்கிறார்.அரசியல் கைதிகளைக்கூட விடுதலை செய்யாமல் தமிழர்களை அவர் மீண்டும் போர்க் காலச்சூழலுக்குள் தள்ளியிருக்கிறார். இன்றைய கடையடைப்புப் போராட்டம் மூலம் மீண்டும் முரண்பாட்டுக்கான வித்தை விதைத்திருக்கிறார்.கடந்த கால சிங்கள அரசியல் தலைமைகளுக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை என்பதை தமி…
-
- 1 reply
- 675 views
-