Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 200ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் யாழ்.மத்திய கல்லூரி யாழ்.மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 200ஆவது ஆண்டினை நெருங்கும் நிலையில், 2016 ஆம் ஆண்டில் 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்லூரியின் அதிபர் க. எழில்வேந்தன் நேற்று தெரிவித்தார். யாழ்.மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மத்திய கல்லூரி 2016 ஆம் ஆண்டு 200ஆவது ஆண்டினை அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இதனை முன்னிட்டு 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன…

  2. யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிகளால் நடாத்தப்படும் கொடூரக் கொலைகள்! [Tuesday 2015-11-10 23:00] யாழ் போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்கள், தாதியர்களது அசமந்தப் போக்கினால் பல உயிர்கள் காவு கொள்ளும் நிலை அண்மையில் ஏற்பட்டுள்ளது. மாரடைப்பால் சென்ற நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து இரண்டாம் விடுதியில் அனுமதிக்கபட்டு 12 மணித்தியாலங்கள் வரை கதிரையிலேயே அமர்ந்திருந்திருக்கிறார்.அவருக்கு கட்டில் கொடுக்கபடவுமில்லை.படுப்பதற்கு பாய் வசதிகள் கூட செய்துகொடுக்கப்படவில்லை.அங்கு படுப்பதற்கு இடமுமில்லை. அங்கே பணி புரிகின்ற தாதியர்கள் நோயாளிகள் மீது எரிந்து விழுவதும் மரியாதை குறைவாக கதைப்பதும் நோய்க்காரணமாக பயத்தோடு …

  3. பாடசாலை ஆசிரியைகள் சாறியைத் தொப்புளுக்கு கீழே அணிவது தொடர்பில் மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவிகள் அணியும் நடன ஆடையைக் கூட தொப்புள் தெரிவது போல அணிய அனுமதிக்கப்படுவதில்லை என்று முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தாம் அணியும் ஆடைகள் தொடர்பில் ஆசிரியைகள் தீர்மானிப்பார்கள் என்றும் இதனை முதலமைச்சர் தீர்மானிக்கத் தேவையில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'முதலமைச்சரின் அறிக்கைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம். ஆசிரியைகள் தொப்புள் தெரியாமால் ஆடை ஆணிவது தொடர்பில் நாங்கள் எந்தத் தவறையும் காணவில்…

  4. நயினாதீவு என பெயர் மாற்றம் செய்ய வட மாகாணசபைக்கு அதிகாரமில்லை! - என்கிறார் மகிந்த [Wednesday 2015-11-11 20:00] ஊர்களின் பெயர்களை மாற்றும் அதிகாரம் வடக்கு மாகாண சபைக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாகதீப என பெயரி மாற்றப்பட்டுள்ள நயினாதீவின் இரண்டு வட்டாரங்களின் பெயர்களை மீண்டும் நயினாதீவு என மாற்றம் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இவ்வாறு பெயர்களை மாற்றம் செய்தால், வணங்குவதற்காக பாடப்படும் பாசுரங்களிலும் மாற்றம் செய்ய நேரிடும். அவர்கள் எல்லாவற்றிலும் மாற்றம் செய்வார்கள் எனவும் முன்னாள் ஜனா…

  5. 7 மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட நடத்துனர்! - வவுனியா பொலிஸ் விசாரணை [Wednesday 2015-11-11 19:00] ஏழு பாடசாலை மாணவிகளை பஸ் வண்டியில் இருந்து தள்ளிவிட்ட பஸ் நடத்துனர் தொடர்பபாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். டிப்போ முகாமையாளர் செய்த முறைப்பாட்டிகமையவே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்த திருகோணமலை நோக்கி பயணித்த இந்த பஸ் வவுனியா பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, அதில் ஏறிய பாடசாலை மாணவிகளே நடத்துனரால் தள்ளிவிடப்பட்டுள்ளனர். பஸ்ஸில் கூட்டம் அதிகம் என கூறி மாணவிகளை நடத்துனர் தள்ளிவிட்டதால், சில மாணவிகள் நிலத்தில் விழுந்து சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவ…

  6. 31 தமிழ் அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் விடுதலை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன் குறித்த நபர்கள் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/11/11/31-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%…

  7. தங்கள் சினிமா கதாநாயகனின் திரைப்படம் வெளியாகும் போது தீபாவளி, புதுவருடக் கொண்டாட்டங்கள் போல, பாலபிஷேசம் செய்து பட்டையக் கிளப்பும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நடுவில் தீபாவளித்தி திருநாளன்று வெளியாகிய தங்கள் சினிமா கதாநாயகனின் புதுப்படத்தைக் கொண்டாடப்போன யாழ்ப்பாண ரசிகர்கள் திரையரங்கு வாயியில் புதியதோர் தொடக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். யாழ் செல்லா திரையரங்கில் விசேட தேவையுடையோரை அழைத்த ரசிகர்கள் அவர்களிற்கு உபகரணங்கள் வழங்கி உதவி செய்த நிகழ்வு நின்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருக்கிறது. பால் ஊற்றுகிறார்கள், கட்டவுட் வைக்கிறாரை்கள் என சினிமா ரசிகர்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற சூழலில் தலை ரசிகர்களின் இந்த முயற்சி எதிர்மறை விமர்சகர்க…

  8. இலங்கைக்கு வந்துள்ள ஜப்பானியக் கப்பல்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் இரண்டு இலங்கைக்கு வந்துள்ளன. ஜே.எஸ் மகிநமி மற்றும் ஜே.எஸ் சுசுநமி ஆகிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. நேற்றைய தினம் வந்த இந்தக் கப்பல்களை சில நாட்கள் வரை இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையும் ஜப்பானும் கடல்எல்லை தொடர்பில் இணக்கத்தோடு செயற்படும் நோக்கிலேயே இந்தக் கப்பல் விஜயம் இடம்பெறுள்ளது. ஏற்கனவே, 2011இல் ஜப்பானின் 8 கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன. 2012இல் 12 கப்பல்களும் ,2013இல் 11 கப்பல்களும் மற்றும் 2014 இல் 8…

  9. இலங்கையில் 2030ஆம் ஆண்டளவில் 13.5 வீதமானவர்கள் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும் இன்று உலக நீரிழிவு நோய் தினம். உலகை அச்சுறுத்தும் நோய் வகைகளுள் ஒன்றுதான் நீரிழிவு நோய். நீரிழிவு நோய் பரம்பரை நோய்.இது தொற்றாதது என்றாலும் அது சடுதியாக மக்கள் மத்தியில் ஊடுறுவுகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலை சிறுநீரக வைத்திய நிபுணர் பேரானந்தராஜா தெரிவித்தார். இன்றைய தினம் நீரழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும் விதமாகவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில…

  10. மஹிந்தவின் முன்னாள் செயலாளர் கருணாரத்ன கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சம்பிக்க கருணாரத்ன நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சின் அதிகாரியாகவும் தேசிய லொத்தர் சபையின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் 3 அரசாங்க நிறுவனங்களிலும் சம்பளம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் ஊடகங்களினால் கப்பம் சம்பிக்க, லஞ்சம் சம்பிக்க என குறித்த நபர் அழைக்கப்பட்டதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல் வெளியிட்ட…

  11. அரசாங்கம் குறித்த மக்களின் நம்பிக்கை இழக்கப்பட்டது அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது உடைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, களுத்துறை மாவட்டத்தின் உறுப்பினர் மற்றும் கடந்த கால அமைச்சர் ஒருவரினாலே இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் முன்னர் பயனற்று இருந்தமை எங்களுக்கு தெரியும். அந்த விசாரணை நடவடிக்கைகள் அதற்கு பின்னர் ஆரம்பமாகவில்லை. அத்துடன் மேலும் பல காரணங்கள் உள்ளன. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பென்ஸ் வாகனத்தின் இலக்கத்தினை பயன்படுத்திய ரேசிங் கார் ஒன்று கைப்பற்றப்பட்டது. எனினும் இதுவரையி…

  12. தமிழ் அரசியல் கைதிகள் குறித்து மறக்கவில்லை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் மனித உரிமைகளின் அவுஸ்திரேலிய செனட்டரான ரெஹினொன் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து மறக்கவில்லை என்பது முக்கியமானதாகும்.நாம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். தடுத்து வைக்கப்பட்டவர்களின் சுதந்திரம் இரண்டு மத்திய சமகால மனித உரிமைகளின் தரங்களுக்கு முக்கியமானதாகும். …

  13. காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா.வின் பிரதிநிதிகள் மன்னார் விஜயம் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள், இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளனர்.காணாமல் போனோர்களின் உறவினர்களை சந்தித்து தகவல்களை பெற்றுக்கொள்ள வருகை தந்துள்ளனர். மன்னார் கீரி ஞானோதய மண்டபத்திற்கு இன்று பி.ப 2 மணியளவில் வருகை தந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் 200 பேர் வரை ஞானோதய மண்டபத்திற்கு முன் ஒன்று கூடி காணாமல் போவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு காணாப்பட்டனர். இதன் போது வருகை தந்த 5 பேர் அடங்கிய ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள் காணாமல் போனவர்களின் உறவினர்களை பார்வையிட்டனர்…

  14. 31 தமிழ் அரசியல் கைதிகளை நாளை விடுதலை செய்ய தீர்மானம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 31 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்களை பிணையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது சிறைகளில் உள்ள தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்வதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 31 பேரையும் விடு…

  15. யாழ்ப்பாணத்தில் சாதிய அமைப்பு பற்றி ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி முதல் தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த (Casteless or Caste-blind?: Dynamics of Concealed Caste Discrimination, Social Exclusion and Protest in Sri Lanka : 2009)1 ஆய்வுகள் வரை நிறைய கல்வித்துறை சார் நெறியுடன் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. மேற்கத்தியர்களும் காலனியக் காலம் முதல் விடுதலைப் புலிகளின் காலம் வரை வடகிழக்கில் சாதி குறித்த ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சூழலில் விடுதலைப் புலிகளின் சாதி பற்றிய அரசியல் கேள்விகளை முதன் முதலில் எழுப்பியவர் (அன்றைய நிறப்பிரிகை வட்டம் சார்ந்த தலித்தியக் கோட்பாட்டாளரும், இன்றைய விடுதலைச் சிறுத்தைகளி…

  16. சொல்ஹெய்மின் குண்டு: வடக்கை புலிகளுக்கு கையளிக்க இருந்தாரா மஹிந்த? இலங்கையின் இனப் பிரச்சினையை மிகவும் நியாயமான முறையில் தீர்க்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பமான 2002ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் ஏன் தோல்வியடைந்தன என்பதைப் பற்றிய சில முக்கிய விடயங்கள் கடந்த மாத இறுதியில் இலண்டனில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது ஆராயப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலும் நடத்தாமல், வட பகுதியைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் கையளிக்கவிருந்தார் என்ற, இதுவரை எவரும் அறிந்திராத தகவல் ஒன்றும் அக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. 'டு என்ட் எ சிவில் வோர்- நோர்வேஸ் பீஸ் என்கேஜ்மன்ட் இன்; ஸ்ரீ லங்கா' (வுழ நுனெ ய ஊiஎடை ற…

  17. வெள்ளியன்று கடையடைப்பு சிறைகளில் உண்ணாவிரதமிருக்கும் எமது உறவுகள் விடுதலைக்காகவும், நீதிக்காகவும் ஆதரவு தெரிவித்து நாளை மறுதினம் வடக்கு, கிழக்கு மாகாணம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் செய்யுமாறு அனைவரிடம் வேண்டுகோள் விடுப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான, மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அரசியல் கைதிகளின் விடுதலையுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசை வற்புறுத்துகின்றோம். வர்த்தக நிலையங்கள் போக்குவரத்துதுறை மற்றும் பொ…

  18. ஆட்கடத்தல், கொலைகளின் பின்னணியில் நான் இல்லை! - குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா [Wednesday 2015-11-11 08:00] கடந்த காலங்களில் நடந்த கடத்தல்கள், கொலைகளின் பின்னணியில் நான் இருப்பதாக கூறும் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பழி வாங்கவே அரசாங்கத்தினால் ஒருசிலர் ஏவிவிடப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கடந்த காலங்களில் நடந்த கடத்தல்கள், கொலைகளின் பின்னணியில் நான் இருப்பதாக கூறும் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பழி வாங்கவே அரசாங்கத்தினால் ஒருசிலர் ஏவிவிடப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தும் ந…

  19. அரசியல் கைதிகளுக்குப் பிணை மறுக்கப்பட்டது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கான எவ்வித ஆலோசனைகளோ, ஆவணங்களோ தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லையென குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். 32 தமிழ் அரசியல் கைதிகள் 9ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்படுவர் என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும்இ பின்னர் இன்று 11ஆம் திகதி 32 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கமைய இன்று காலை சுமார் 20இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களுக்கு பிணை வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த குற்றப…

  20. தமிழ்க் கைதிகள் விடயத்தில், வேறொரு முகம் காட்டி நிற்கும் அரசு. முதல்வர் விக்னேஸ்வரன். தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் இதுவே வடக்கு மாகாண சபையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ள வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை, போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்து விட்டபோதும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்குத் தீர்வு கிட்டவில்லை. எம் தந்தை எப்போ வருவார், என் கணவர் எப்போ விடுதலையாவார் எம் பிள்ளையை நாம் எப்போது பார்ப்போம் என்று பிள்ளைகளும் மனைவியரும் பெற்றோரும் கண்ணீரும் கம்பலையுமாக அவ…

  21. ஐ.நா. அமைப்பை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்ய இயலாது 11-11-2015 09:49 AM ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடர முடியாதென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றிலேயே, வெளிவிவகார அமைச்சு கடந்த திங்கட்கிழமை (09) மேற்கண்டவாறு அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தி அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட தருஸ்மன் அறிக்கை உட்பட சர்வதேச விசாரணைகளுக்கான அனைத்து பரிந்துரைகளும், சட்ட விரோதமானதென தீர்ப்பளிக்குமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகரவினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழ…

  22. “நான் பதவி விலகப் போவதில்லை கோத்தாபயவை கைது செய்யப் போவதும் இல்லை” - விஜயதாச ராஜபக்ச:- 11 நவம்பர் 2015 நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்பதால் தான் பதவி விலகப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்வதற்கும் தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். என்மீது கடும் ஆத்திரமடைந்துள்ள விரக்தியடைந்த சோசலிஸ்ட்களே அவன்ட்கார்டே தொடர்பில் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். எனக்கு அவன்ட் கார்டே நிறுவனத்துடன் சிறிய தொடாபும் கிடையாது, எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு சிறிய காரணம் கூட கிடையாது. நான் அந்த நிறுவனத்தி…

  23. காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களை அமைதி பேணுமாறு ஐ.நா கோரியுள்ளது:- 11 நவம்பர் 2015 காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களை அமைதி பேணுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த பிரதிநிதிகள் காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தங்களுடன் நடத்தப்படும் சந்திப்புக்கள் குறித்து எவ்வித தகவல்களையும் ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து ஐக்கிய நா…

  24. சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை கண்டனம்! [Monday 2015-11-09 19:00] சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை அரசியல்பிரிவு தலைவர் எஸ். நிஷhந்தனின் பகிரங்கக் கண்டனமும் எதிர்ப்பும் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்திய சுமந்திரன் அவர்களுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை அரசியல்பிரிவு பகிரங்க கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அண்மைக்காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் சுமூகமற்ற ஓர் உறவு நிலை நிலவுவதற்கும்இ கருத்துமோதல்கள் ஏற்படுவதற்கும்இ புலம்பெயர் வாழ் தமிழர்களின் அமைப்புக்கள்இ தமிழ் சமூகங்களுக்கிடையில் விர…

  25. காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது. அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு உண்டு என்று விஷால் கூறியுள்ளார். விஷால் சென்னையில் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ''பாண்டிராஜ் இயக்கத்தில் 'கதகளி' படத்தில் நடித்து வருகிறேன். பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் 'மருது'வில் நடிக்கிறேன். அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' நடிக்கவிருக்கிறேன். 'மருது' படத்தில் ராதாரவியுடன் நடிக்கவிருப்பதாக செய்தி வருகிறது. அது இன்னும் முடிவாகவில்லை. அவ்வாறு நடிக்கும் சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நடிகர் சங்கம் என்பது வேறு, நடிப்பு என்பது வேறு. ராதாரவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.