Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எக்நெலிகொடவை கொலை செய்ய உத்தரவிட்ட கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய நபர் விரைவில் கைது லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை கொலை செய்யுமாறு உத்தரவிட்ட கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் பலம்பொருந்திய முக்கியஸ்தர் ஒரவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எக்நெலிகொட தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலை தொடர்பில் இராணுத்தின் மேலும் சில உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு இராணுவ கேர்ணல்கள் உள்ளிட்ட 11 உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த அரசாங்கத்தில் மிக…

    • 3 replies
    • 726 views
  2. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளன. அவரது உடலத்தைக் உறவினர்களிடம் கையளிப்பதில் சிக்கல்கள் எழலாம் என சிக்கல்கள் எழுந்திருந்தன. எனினும் நேற்றைய தினமே தமிழினியின் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவரது சொந்த இடமான கிளிநொச்சி - பரந்தனுக்குக் கொண்டுவரப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது பூதவுடலுக்கு தமிழ் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழினியின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். http://www.malarum.com/article/tam/2015/1…

  3. ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகேயின் ஏற்பாட்டில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஆலோசனைக்கு அமைய அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவில் 300 பயிர் செய்கை குடும்பங்களுக்கான உள்நாட்டு ரீதியான நுகர்ச்சி பயிற்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெயாகரின் ஏற்பாட்டில் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், சிறிய வெங்காயம், வெள்ளை எள்ளு, பிஞ்சு மிளகாய் போன்றவற்றை உற்பத்தி செய்தல், பராமரிப்பு முறைகள், உள்நாட்டு வெளிநாட்டு சந்தைவாய்ப்பு தொடர்பில் பிரதேச உற்பத்தியாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். இப் பயிற்சி நெறியில் ஆலையடிவேம்பு பிரதேச திவினெகும முகாமைத்துவப் பணிப்பாளர் நேசராஜா, அமைச்சரி…

  4. முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலை நிலா பல்லவராயன் கட்டு கிரமப்பகுதியிலுள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரளா கஞ்சா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை முழங்காவில் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முழங்காவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.ஜே.ஆரிய வன்ச தலைமையிலான பொலிஸ் குழுவினர், குறித்த பகுதிக்குச் சென்று தேடுதல்களை மேற்கொண்ட போது ஒரு தொகுதி கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. குறித்த கஞ்சா, கேரளா கஞ்சா எனவும் 25 கிலோகிராம் எடை கொண்டது எனவும் முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு, முழங்காவில் குமிழமுனை ம…

  5. வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பினால் இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வடக்கு மாகாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள்; பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமானது அம்மக்களை தொடர்ச்சியாக 25 வருடங்கள் மிகுந்த துயரத்துடனான அவல வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சகல விதமான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து மீள்குடியமர்த்துவதில் கவனஞ் செலுத்தப்பட வேண்டும். …

  6. முள்ளிவாய்க்காலின் பின் மரணத்தால் அனைத்து இதயங்களையும் காயப்படுத்திய இரண்டு ஆளுமைகள் .... 18 அக்டோபர் 2015 முள்ளிவாய்க்காலின் பின் மரணத்தால் அனைத்து இதயங்களையும் காயப்படுத்திய இரண்டு ஆளுமைகள் .... ஒருவர் காந்தியவாதியான டேவிட் ஐயா... இவர் காந்திய உருவாக்கத்தின் காரணகர்த்தாக்களில் ஒருவர் ஆகி புளொட் என்ற தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்துடன் தொடர்புபட்டு 1980களின் நடுப்பகுதியில் அவ்வமைப்பில் இருந்து வெளியேறியவர்.... இருந்த போதும் இயக்க முரண்பாடுகள், கருத்து முரண்பாடுகள் எல்லாவற்றையும் தாண்டி டேவிட் ஐயா அனைவரது இதயங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார்.... மற்றயவர் தமிழனி என்ற சிவகாமி ... விடுதலைப் புலிகளின் மகளீர் அணித் தலைவியாக இருந்து முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் மக்களோடு …

  7. இந்த மண்ணில் வாழ்பவர்கள் எமது இரத்த உறவுகள். நாங்கள் சிலவற்றை பிள்ளை என்று அழைப்போம் கிளிப்பிள்ளை,கீரிப்பிள்ளை தென்னம் பிள்ளை போன்றே கிளிநொச்சி மக்களும் எங்களுடைய கிளிப்பிள்ளைகளே எனத் இந்திய துணைத்தூதுவர் ஆறுமுகம் நடராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் கவின் கலை விழா 2015இல் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்திய அரசாங்கம் வழங்கிவரும் கலைத்துறை சார்ந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாணவர்களையும் இந்தியாவிற்கு அனுப்பி கலைத்துறை உயர் கல்வியை கற்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்த அவர் மாணவர்கள் …

  8. என்னை நன்­றாக படம் எடுங்கள். எடுத்­துக்­கொண்டு ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசியகூட்­ட­மைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்­தோ­ஷப்­ப­டுவர் என முன் னாள் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் (பிள்­ளையான்) நேற்று நீதி­மன்ற வளாகத்தில் வைத்து குறிப்­பிட்டார். முன்னாள் பார­ளு­மன்ற உறுப்­பினர் ஜோஸப் பர­ரா­ஜ­சிங்கம் படு­கொலை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கடந்த ஞாயி­றன்று மாலை கைது செய்­யப்­பட்ட பிள்­ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார். பிள்ளையான் நேற்று பிற்­பகல் 1.00 மணி­ய­ளவில் புதுக்­கடை முதலாம் இலக்க நீதிவான் நீதி­மன்றின் நீதி­பதி கிஹான் பிலப்­பிட்­டிய முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு தொ…

  9. உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர் எம்.ஏ . சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அலைபேசி உரையாடலின் போது தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள…

    • 8 replies
    • 1.9k views
  10. [ ஞாயிற்றுக்கிழமை, 18 ஒக்ரோபர் 2015, 08:48.31 AM GMT ] தமிழ் கைதிகளின் விடுதலை குறித்து நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் காலம் போகும் என்றதில் தான் பிரச்சினை இருக்கின்றது. இந்த பிரச்சினையை அரசியல் ஆக்கி விட்டார்கள். இதனால் கோபத்தாபங்கள், இன ரீதியான சிந்தனைகள், இவை எல்லாம் அவற்றிற்குள் சேர்ந்து கொள்வதனால் சிறையில் உள்ள கைதிகள் தான் பாதிக்கப்படுகின்றார்கள். இவர்களை ஏதோ ஒரு காரணத்திற்காக வைத்துக் கொண்டிருப்பதாக தான் தெரிகின்றது என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் லங்காசிறி வானொலியின் 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலே குறிப்பிட்டுள்ளார. http://www.tamilwin.com/show-RUmtzAScSVgr5I.html

  11. இலங்கை விமானப்படைக்கு இந்தியாவின் போர் விமானங்கள்? [Sunday 2015-10-18 08:00] இலங்கைக்கு புதிய ரக போர் விமானங்களை வழங்க இந்தியாவும் முன்வந்துள்ளது. இலங்கை விமானப்படைத் தளபதி பாகிஸ்தான் செல்லவுள்ளார் என்றும் அவர் பாகிஸ்தானின் ஜேஎப்-17 சுப்பர்சொனிக் விமான கொள்வனவு தொடர்பில் பேச்சு நடத்துவார் என்றும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து இந்தியா, தமது விமானங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கையிடம் கேட்டுள்ளதாக விமானப்படை தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு புதிய ரக போர் விமானங்களை வழங்க இந்தியாவும் முன்வந்துள்ளது. இலங்கை விமானப்படைத் தளபதி பாகிஸ்தான் செல்லவுள்ளார் என்றும் அவர் பாகிஸ்தானின் ஜேஎப்-17 சுப்பர்சொனிக் விமான கொள்வனவு தொடர்பில் பேச்சு நடத்துவார் என்றும் செய்திகள் வெளியாகி…

  12. மிகமுக்கிய பிரமுகரின் மகனின் வங்கிக்கணக்கை முடக்க மறுத்துள்ள துபாய் நீதிமன்றம் ஓகஸ்ட் 17 ம்திகதி பாராளுமன்ற தேர்தலிற்கு பத்து நாட்களிற்கு முன்னர் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரிற்கு முன்னாள் மிகமுக்கிய பிரமுகரின் மகனான இளம் அரசியல்வாதி துபாயின் எமிரேட்ஸ் தேசிய வங்கியில் இரகசிய வங்கி கணக்கை வைத்துள்ளத தகவல் கிடைத்தது. இது குறிப்பிடத்தக்க பரபரப்பை ஏற்படுத்தகூடிய விடயம்,அது குறித்த விபரங்களை பெற்று தேர்தல் பிரச்சாரங்களில் அம்பலப்படுத்தினால் அது ஜனாதிபதியின் கீழ் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் ஐக்கிய தேசியகட்சியினதும் வெற்றி வாய்ப்பை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்க கூடும். இதன் அடிப்படையிலேயே கணக்குவைத்துள்ளவரின் விபரங்களை பெற்று அவரிற்கு எதிராக ம…

  13. நபர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை : யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் நபர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/10/18/நபர்-ஒருவர்-தனக்குத்தானே-தீ-வைத்து-தற்கொலை-யாழில்-சம்பவம்

  14. [ ஞாயிற்றுக்கிழமை, 18 ஒக்ரோபர் 2015, 08:32.05 AM GMT ] வடக்கில் “பாலியல் விருப்பத்துக்கு இந்திய வீடு” என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகமும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் மேற்கொண்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்த விசாரணைகள் செஞ்சிலுவை சங்கத்தின் சில அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் நாளை விசாரணை அறிக்கை தொடர்பில் உயர்மட்ட சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. இதன்போது அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளைää விசாரணைக்கு உட்பட்டு வரும் செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரி ஒருவர் இன்னமும் கிளிநொச்சியில் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்திய வீடுகளுக்காக 8லட்சம் ரூபா ஒதுக்கீ…

  15. கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நாட்டின் பதினான்கு சிறைச்சாலைகளில் இருநூறுக்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருந்துவருகிறார்கள். வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த இந்த அரசியல் கைதிகளின் சரியான எண்ணிக்கையைக் கூட அரசாங்கம் தெரிவிப்பதாக இல்லை. பொது அமைப்புகள் குறிப்பிட்ட, அரசியல் கட்சிகள் சேகரித்த கைதிகள் பற்றிய தகவல்கள் மூலமே தண்டனை வழங்கப்பட்ட 50 சிறைக் கைதிகளுடன் சேர்த்து 216 பேர் இருந்துவருவதாக அறிய முடிகிறது. இவற்றைவிடவும் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் பற்றிய தகவல் உரிய முறையில் வெளியிடப்படாமலும் பலர் இரகசிய தடுப்பு முகாம்களில் இருந்துவருவதாகவும் நம்பப்படுகிறது. சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோரில் 15 வருடங்கள் 10, 8, 5,…

  16. நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிய குடும்ப பெண் கடத்தல் பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றுக்காக சென்று விட்டு திரும்பிய குடும்ப பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் வந்த கும்பல், நேற்று புதன்கிழமை (14) மதியம் கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இராசலிங்கம் ஜனாகி (வயது 32) என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு முடிவடைந்து தனியார் பேருந்தில் கம்பர்மலையில் உள்ள வீட்டுக்;கு வந்திறங்கிய போது, எதிரே வந்த வெள்ளை வான் இருந்தவர்கள் இவரது வாயினை பொத்தி வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத…

    • 3 replies
    • 754 views
  17. நம்பிக்கையில்லா பிரேரணை சிங்கள ஊடகங்களின் கட்டுக்கதை: மாவை எம்.பி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையானது, சிங்கள ஊடகங்களின் கட்டுக்கதையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் எந்தவிதமான உண்மையும் கிடையாதெனவும், அவ்வாறு எவரும் பேசவில்லையெனவும் தெரிவித்த அவர், சிங்கள ஊடகங்கள் தமிழ் மக்களிடையே திட்டமிட்டு பிளவுகளை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மக்கள் இவ்வாறான செய்திகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வடமாகாண சபையூடாக ம…

  18. ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை மீனவர் பிரச்சினை பற்றி முறையிடாது இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறுவது தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முறைப்பாடு செய்வ தில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்தியா, இலங்கையின் அயல் நாடு என்பதனால் இந்தத் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இந்திய ஆங்கில ஊடக மான இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஐரோப்பிய ஒன்றியத்தினால் எமது நாட்டு மீன்களைக் கொள்வனவு செய்வதில்லை என்று தீர்மானிக்கப் பட்டிருப்பதால், அது தொடர்பான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றோம். இலங்க…

  19. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 29 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து இம் மாவட்டத்தின் அபிவிருத்து பற்றி கதைக்கவுள்ளார். அதற்கு முன்னர் நாட்டிலுள்ள சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்து இந்நாட்டில் நல்லாட்சி உள்ளதென்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு வருகை தருவதற்கு முன்னர் சிறைக்கூடங்களில் உண்ணா விரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விட…

  20. எக்நெலிகொட கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 17 அக்டோபர் 2015 லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் எக்நெலிகொட கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடத்திச் செல்லப்பட்ட எக்நெலிகொட வெலிகந்த மனம்பிட்டி என்னும் இடத்தில் காணப்பட்ட இடைக்கால இராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட எக்நெலிகொடவின் சடலம், திருகோணமலை கடற்பரப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவப் புலனாய்வுப் பிரிவு தகவல்களை இதனைக் குறிப்பிட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட எக்நெலிகொட முன்னதாக சொரிவில பிரதேச சகதி குழியொன்றில் புதைக்கப்பட்டதாகவும் சடலம்…

  21. புனர்வாழ்வை ஏற்குமாறு கைதிகளை கோரும் அமைச்சர் விஜயகலா ஜனாதிபதி எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழியளித்துள்ளார்.எனினும் அவர் கைதிகளை எந்த விதத்தில் விடுதலை செய்யப்போகின்றார். தற்பொழுது இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக பொதுமன்னிப்பு வழங்க முடியாத நிலையில் ஜனாதிபதி இருக்கின்றார்.எனவே தான் அரசிற்கு வலியுறுத்தி இருக்கிறேன் பொதுமன்னிப்பு வழங்க முடியாவிட்டாலும் புனர்வாழ்வளிக்கும் படி குறிப்பிட்டிருக்கிறேன்.அத்தோடு கைதிகளிடமும் புனர்வாழ்வை ஏற்கும்படி கோரியுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்.சிறைச்சாலைக்குச் சென்று யாழ்.சிறைச்சாலை தலைமை அதிகாரி அநுர சந்திரால் பெரேராவை…

  22. நாமலுக்காக உக்ரெயினில் இருந்து துபாய் நேஷனல் வங்கிக்கு அனுப்பபட்ட பணம் $500 மில்லியனுக்கு மேலான தொகையின் மீது தடை விதிக்க, துபாய் நீதிமன்று மறுப்பு. கடந்த ஞாயிறு அன்று இந்த வழக்கு துபாய் நீதிமன்றில் விசாரணைக்கு வந்ததபோது, இலங்கை அரசின் சார்பில் ஒரு சட்ட அலுவலகம் வாதிட்டது. துபாய் அரசின் அட்டர்னி ஜெனரல் இந்த வழக்கில் தெரிவித்த ஆட்சேபனையினை நீதிமன்றம் ஏற்று தடைவிதிக்க மறுத்து விட்டது. இலங்கையில் நீதிமன்று ஒன்றில் இது தொடர்பான வழக்கோ, அது தொடர்பான குற்றவியல் விசாரணையோ நடாத்தப் பட்டு அதற்கான அதிகார பூர்வமான கோரிக்கை வராமல், வெறுமனே அரசியல் நோக்கம் கொண்ட கோரிக்கைகள் ஏற்றுக் கொள்வது சரியானது அல்ல என்பதே அட்டர்னி ஜெனரல் இந்த வழக்கில் தெரிவித்த ஆட்சேபனை ஆகும். இந்த ஆட்சேபனை …

  23. இரட்டைக் குடியுரிமைக்காக 13000 பேர் விண்ணப்பித்து உள்ளனர் இரட்டைக் குடியுரிமைக்காக 13300 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் இவ்வாறு விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 1987ம் ஆண்டு 45ம் இலக்க சட்டத் திருத்தங்களின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது பின்னர், 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் விண்ணப்பதாரிகளுக்கு இரட்டைக் குடியுரி…

  24. யாழ்.மண்ணின் சாதனையாளர்கள் கௌரவிப்பு மத்தி.மாணவனுக்கு தங்கம் நடப்பு வருடத்தின் பொதுநலவாயப் போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் நடைபெற்று வருகின்றன. 64 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்தப் போட்டியில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற 17வயதுக்கு உட்பட்ட பளுதூக்கலில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ்.விஸ்ணுகாந் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிச் சாதனை படைத்து யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்த மாணவனுக்கு இன்றைய தினம் பாடசாலை ரீதியாக கௌரவிப்பு இடம்பெற்றது. ஒட்டுமொத்தமாக 227 கிலோ பளுவைத்தூக்கியே விஸ்ணுகாந் இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். பொதுநலவாயப் போட்டிகளில் கனிஸ்ட பிரிவு பளுதூக்கலில் இலங்கையின் உயர்மட்டப் பெறுபேறாக இருந்த 225 கிலோ விஸ்ணுகாந் மூலமாக 227 கிலோவ…

  25. களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் யாழில் கைது யாழ்.சாவகச்சேரி பகுதியில் களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் சாவகச்சேரி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு இராணுவ தரப்பினால் கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், தெரியவருகின்றது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி பிரதேசத்தில் கண்டி வீதியின் இரு மருங்கிலும் விளம்பர பதாகைகள் நடப்பட்டுள்ளன.அவற்றின் இரும்பு குழாய்களை அண்மை நாட்களாக இரவு வேளைகளில் வெட்டி களவாடப்பட்டு வந்தன. அது குறித்து விளம்பர பதாகைகளுக்கு உரிய நிறுவனங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டுகளை பதிவு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.