Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய றோலர் படகுகள், யாழ்ப்பாண கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் எதிர்பார்த்தளவுக்கு மீன் உற்பத்தியை மேற்கொள்ள முடியவில்லையென மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, புதிய தொழில்நுட்பம் தொடர்பில் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் ஆழ்கடல் மீன்பிடிக்கான போதிய வசதிகள் இன்மையால் யாழ்;ப்பாணத்தின் மீன் உற்பத்தியானது பாதிக்கப்படுகின்றது. இருந்தும், யாழ்ப்பாணத்தின் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பருத்தித்துறை வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளுக்காக 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது…

  2. மஹிந்த, கோதாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென முன்மொழிந்தவர் அதனை வாபஸ் பெற வேண்டுமென கோரிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள டாக்டர் பட்டங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதக் கொள்கை பீடத்தின் முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டங்களை வழங்கியிருந்தது. 2009ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி குறித்த இருவருக்கும் கலாநிதி பட்டங்களை வழங்…

  3. பார்பர் வீதி கோவில் பிரச்சினைக்கு சுமூக தீர்வு மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகாவித்தியாலய வீதியின் 36ஆம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலின் தேர் திருவிழா இம்மாதம் 22 முதல் 31 வரை உட்பட்ட தினத்தில் நடைபெறவுள்ளது. இன்று இடம்பெற்ற தேசிய கலந்துரையாடலின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நவராத்திரி உற்சவங்கள் ஆரம்பித்து உள்ளதால் இந்த திருவிழா தேர் பவனியுடன் இந்த மாதமான ஒக்டோபர் இறுதிக்குள் ஆகம முறைப்படி சாஸ்திரிகள் தீர்மானத்து கொடுக்கும் ஒரு சுபதினத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், எனது அழைப்பை ஏற்று இந்த கலந்துரையாடலில் இரு தரப்பினரும் கலந…

  4. இலங்கை வெளிவிவகார அமைச்சில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதை மங்களசமரவீர உறுதிசெய்துள்ளார் இலங்கை வெளிவிவகார அமைச்சில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதை அமைச்சர் மங்களசமரவீர உறுதிசெய்துள்ளார்இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வெளிவிவகார அமைச்சில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதை அமைச்சர் மங்களமசமரவீர உறுதிசெய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களுடைய ஆலோசனைகளுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.அமைச்சரின் இந்த நடவடிக்கை காரணமாக வெளிவிவகார அமைச்சில் தற்போது முக்கிய பதவிகளில் உள்ள சிலர் மாற்றப்படலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன, இதேவேளை இந்தவிவகாரம் தொடர்பாக பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்…

  5. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?: யாழ்ப்பாணத் தம்பி எல்லாம் அப்பவே தெரியும். திருடனின் தாயாரிட்டை சாத்திரம் கே்கிற குழு மாதிரித்தான் உள்ளக விசாரணை எண்டு எல்லாருக்கும் தெரியும். அவையள் தெளிவாய் இருக்கினம் கண்டியளே? மகிந்தவை காப்பாற்ற வேணும் எண்டுற கடமையை தலைமேல் கொண்டிருக்கினம். மகிந்தவிலை பாசத்திற்காய் இல்லை. மகிந்தவை சர்வதேச விசாரணைக்கு முன்னாலை நிறுத்தினால் இனவாத வாக்குகள் இனி வாற காலங்களிலை கிடைக்காது எண்டு. அதான் மகிந்தவை தூக்கு கயிற்றிலை இருந்து நான் பாதுகாத்தன் என்று ஒருத்தர் துள்ளிக்குதித் இன்னொருத்தர் இனி மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரட்டும் இல்லை எண்டுறார். அமைச்சர் ராஜிதவோ மகிந்தவுக்கு தயாரித்த மின்சாரக் கதிரையை பஞ்சு…

  6. எதிர்க்கட்சித் தலைவரின் நோக்கம் தான் என்ன? எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின்னர் யாழ்ப்பாணத்துக்கு முதன் முதலாக வருகை தந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் குடாநாட்டின் பல இடங்களுக்கும் சென்றிருந்தார். அவர் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். பின்னர் வலி. வடக்குப் பகுதிக்குச் சென்றதுடன் முக்கிய ஆலயங்களையும் தரிசித்து விட்டுச் சென்றிருந்தார். இறுதியாக உதயன் பத்திரிகைக்கு நேர் காணல் ஒன்றையும் நடத்தியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் இன்னுமொரு கருத்தையும் கூறியிருந்தார். வன்முறையின் காரணமாகவே தமிழினத்துக்குப் பெரும் அழிவு ஏற் பட்டது. நாங்கள் ஏ…

  7. யாழில் “பியர்” நுகர்வு வெகுவாக அதிகரிப்பு யாழ்.மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் கள்ளுத்தவறணைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. ஆயினும் மதுபான சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே போன்று, பியர் - வெளிநாட்டு மதுபானம் என்பவற்றின் நுகர்வும் கடந்த 7 ஆண்டுகளில் 20 மடங்காக அதிகரித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு 52 மதுபான சாலைகள் இயங்கியதுடன், 2012 ஆம் ஆண்டு 77 மதுபானசாலைகளாக அது அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது 75 ஆகக் குறை வடைந்துள்ளது. கள்ளுத் தவறணைகளின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டு 153 ஆக காணப்பட்ட துடன் 2014 ஆம் ஆண்டு 149 ஆகக் குறைவடைந்துள்ளது. மதுபான நுகர்வுகளும், கடந்த 7 ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்த…

  8. ஆட்கொல்லி நோய்களுக்கு எதிராக 2 ஆவது இன்னிங்சை தொடருகின்றேன்: சச்சின் வயிற்றோட்ட நோய்கள் காரணமாக நாளொன்றுக்கு 1600 பிள்ளைகள் உயிரிழக்கின்றனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும். இவ்வாறு ஆட்கொல்லி நோய்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். மேலும் சிறுவர்களை ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது எமது பொறுப்பு என்பதோடு இந்நோய்களை இல்லாதொழிக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். இதுவரை காலமும் இந்திய கிரிக்கெட் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நான் இன்று முதல் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து ஆட்கொல்லி நோய்களுக்கு எதிராக என இன்னிங்சை தொடர உள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சச்சின் டெ…

  9. Published on October 6, 2015-9:56 am · No Comments • தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளே அமெரிக்க தீரமானத்தை நிராகரித்த நிலையில் நீங்கள் ஆதரித்ததேன்? • உள்நாட்டில் நடைபெறப்போகும் விசாரணையில் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? • நடைபெறப்போகும் விசாரணைக்கு வழக்குகளை தொடுக்கப்போவர்கள் உள்நாட்டு வழக்கு தொடுநர்களா? பொதுநலவாய நாடுகளின் வழக்கு தொடுநர்களா? • ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளரே இலங்கையில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லியிருக்கின்ற நிலையில் இப்போது சாட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறது என நம்புகிறீர்களா? • தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இந்த விசாரணைக்குழுவுக்கு உண்டா? • நீங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக உங்கள் மீது தேர்தல் காலத்திலும் …

  10. [ புதன்கிழமை, 29 யூலை 2015, 09:38.34 AM GMT ] திருகோணமலை மாவட்டத்திலுள்ள 49 நிறுவனங்களுக்கு பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நிதியின் கீழ் 5.7 மில்லியன் தொகை நிதியானது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் வைத்தே கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி வழங்கி வைத்தார். இவ் ஒதுக்கீட்டின் மூலமாக மாவட்டத்திலுள்ள 30 பாடசாலைகளுக்கும் விண்ணப்பங்களின் அடிப்படையில் நிதியானது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போரின் காரணமாக கணவனை இழந்தவர்கள், காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினர்கள் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குமாக தெரிவு செய்யப்பட்ட 60 நபர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான திட்டத…

    • 3 replies
    • 387 views
  11. [ திங்கட்கிழமை, 12 ஒக்ரோபர் 2015, 08:53.44 AM GMT ] கீரிமலையில் அமைந்திருந்த சிறிய கடற்படை முகாம் இன்று பகல் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த வீடுகளும் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கீரிமலை கேணிக்கு அண்மையாக மூன்று வீடுகளில் கடற்படையினர் நிலைகொண்டு இருந்தார்கள். இதில் ஒரு வீடு ஏற்கனவே உரியரே்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் மிகுதியாகவுள்ள இரண்டு வீடுகளிலும் கடற்படையினர் தங்கி இருந்தார்கள். இன்று திங்கட்கிழமை குறிப்பிட்ட இடத்தில் இருந்த மிகுதியான இரண்டு வீடுகள் மற்றும் இரண்டு தனியாருக்கு சொந்தமான காணிகளும் வலி வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனனிடம் கையளிக்கப்பட்டதைத் தெர்டர்ந்து வீடுகள் மற்றும் காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந் …

  12. 2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி, ஜோர்தானில் இருந்து திரும்பியதும், போரை வென்று விட்டோம், பயங்கரவாதத்தை முற்றாக அழித்து விட்டோம், ஈழக் கனவைக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம் என்று தெரிவித்திருந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதுபோலத் தான், ஐ.நா பொதுச்சபையின் 70ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு, கடந்தவாரம் நாடு திரும்பியதும், சர்வதேச ஆதரவை வென்று விட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. கிளிநொச்சியில் கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், உலகில் இப்போது இலங்கைக்கு எதிரி நாடுகளே இல்லை, எல்லா நாடுகளும் நட்பு நாடுகள் தான் என்றும் கூறியிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ வென்றதாக கூறியது ஆயுதப்போரில், மைத்திரிபால சிறிசேன வென…

  13. இலங்கை ஆணழகர் போட்டியில் பங்கேற்க உதவி கோரும் இளைஞன் மலையகத்தில் பல சாதனையாளர்கள் சந்தர்ப்பங்களும், உதவிகளும்இன்றி முடங்கி கிடக்கின்றனர். இவை கிடைத்தால் நாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்டுவோம் என மலையக இளைஞன் மாதவன் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். அண்மையில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஹங்வெல இராஜசிங்க வித்தியாலயத்தில் 19 வயதிற்கு கீழ் ஆண்களுக்காக ஆணழகர் போட்டி நடைபெற்றது. இதில் போட்டியாளராக கலந்துக் கொண்ட மாதவன் ராஜ்குமார், முதலாம் இடத்தை பெற்று தேசிய ரீதியில் வெற்றி பெற்று சாதனையை நிலை நாட்டினார். இந்த சாதனை மலையகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் மிஸ்டர் சிறிலங்கா (இலங்கை ஆணழகர்) போட்டி நடைபெறவுள்ளது. குறித்த போட்டி…

  14. கொழும்பு 13 பாபர் வீதி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழாவினை நடாத்த அனுமதிக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா இயக்கம் கோரியுள்ளது. இயக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலன்த விதானகே இந்த கேரிக்கையை முன்வைத்துள்ளார். தேர்தல் திருவிழாவினை நடாத்த, கோயிலுக்கு அருகாமையில் காணப்படும் பள்ளிவாசலைச் சேர்ந்த முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் அறிவித்த போதிலும் இதுவரையில் எவரும் தலையீடு செய்யவில்லை என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 10ம் திகதி நடத்தப்படவிருந்த திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்…

  15. எக்நெலிகொட கிரித்தலே முகாமில் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்? லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. எக்நெலிகொட ஐந்து நாட்கள் கிரித்தலே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும், மூன்று நாட்கள் மிகக் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் புலனாய்வுப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “குடும்ப மரம்” என்ற தலைப்பிலான சஞ்சிகை ஒன்று தொடர்பில் முதல் இரண்டு நாட்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எக்நெலிகொடவிடம் கடுமையான விசாரணை நடத்தியுள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் பேணப்பட்ட உறவுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இரண்…

  16. அமெரிக்கத் தீர்மானத்துக்கு நியூசிலாந்து அனுசரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால், ஐ.நா மனித உரிமைகள் சபையில் கடந்த 1ம் திகதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இலங்கை உள்ளிட்ட 12 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.இதையடுத்து இந்த மாதம் 16ஆம் திகதி வரை இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் மேலும் 26 நாடுகள், இணை அனுசரணை வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தன. இதனால் இணை அன…

  17. 4 ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதி நாளை அனுமதி அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய நாடாளுமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ள 10 ஆணைக்குழுக்களுக்குள் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆகிய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகளை நாளை ஜனாதிபதி மைத்திரிபால பெயரிடவுள்ளார். சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கடந்த 9ஆம் திகதி கூடிய அரசமைப்புப் பேரவையில் மேற்படி நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்குமான பிரதிநிதிகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு அனுமதிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கமைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்குமான பிரதிநிதிகளின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால ச…

  18. உற்பத்தி நிறுவனத்துக்கு அபராதம் உற்பத்தியின் போதிய விபரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வழங்கிய உற்பத்தி நிறுவனத்துக்கு சாவகச்சேரி நீதிமன்றால் 15,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஜீவாகாரம் போசாக்கு மா பொதியில், நாளாந்த பாவனை அளவு குறிப்பிடாமலும், பொருள்களின் சேர்மானப்பட்டியல் விபரம் முழுமையாகக் குறிப்பிடாமலும், தொகுதி இலக்கம் அச்சிடப்படாமலும் இருந்தமை தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதவான் குறித்த உற்பத்தி நிறுவனத்துக்கு மூன்று குற்றங்களுக்குமாக தலா 5,000 ரூபா வீதம் அபராதம் விதித்தார். http://onlineuthayan.com/news/1136

  19. பட்டினிச்சாவுக் குற்றத்துக்கு ஆளாகாமல் இலங்கை அரசை இரணைமடுக்குளமே காப்பாற்றியது இலங்கை அரசு தமிழ் இனஅழிப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய குற்றச்சாட்டுக்கும் ஆளாகிச் சர்வதேசத்தின் முன்னால் இன்று தலைகுனிந்து நிற்கிறது. இக்குற்றச்சாட்டுகளோடு, இலங்கை அரசு தமிழ் மக்களைப் பட்டினியால் கொலை செய்த பட்டினிச்சாவுக் குற்றச்சாட்டுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அவ்வாறு ஆளாகாமல் இலங்கை அரசை இரணைமடுக்குளமே காப்பாற்றியது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து விவசாய உள்ளீடுகளை வழங்கும் நிகழ்ச்சி கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப் பணிமனையில் நேற்று முன்தினம்…

  20. ஒரு வார காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் : கூட்டமைப்பு குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்ட நாட்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஒரு வார காலத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டுமென, அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து, இன்று முதல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து கைதிகளின் விடுதலையை எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இனிமேலும் அவர்களை…

  21. கலப்பு விசாரணையே நடக்கும் – சுமந்திரன் செவ்வி OCT 11, 2015 இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின்படி “ஹைபிரிட்” என்ற கலப்பு நீதிமன்ற விசாரணையே இடம்பெறும். இவ்வாறு வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அளித்துள்ள செவ்வியில், குறிப்பிட்டுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன். கேள்வி: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை – -அமெரிக்க இணை பிரேரணையின்படி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை கள் மீறல்கள் குறித்து ‘ஹைபிரிட்’ விசாரணை நடைபெறுமா? அல்லது உள்ளக விசாரணை நடைபெறுமா? …

  22. சீனாவுடன் அதியுயர் உறவை விரும்புவதாக இலங்கை தெரிவிப்பு [ திங்கட்கிழமை, 12 ஒக்ரோபர் 2015, 04:31.13 AM GMT ] சீனாவுடன் அதியுயர் ரீதியான உறவை விரும்புவதாக இலங்கை தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சின் செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் சீனாவின் விசேட பிரதிநிதி லியூ சென்மினுக்கும் இடையில் இலங்கையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரிலேயே சீனாவின் விசேட பிரதிநிதி இலங்கை வந்திருந்தார். பிரதிநிதி இலங்கையின் வெளியுறவு அமைச்சருடன் இருநாட்டு உறவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmtzASWSVhw4B.html

  23. வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்திருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை:- 12 அக்டோபர் 2015 வெளிநாட்டு வங்கியொன்றில் கணக்கு வைத்திருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையின் அதி முக்கிய பிரபு ஒருவரின் புதல்வர் டுபாயின் பிரபல வங்கியொன்றில் இரகசிய கணக்கு ஒன்றில் பாரியளவு பணத்தை வைப்புச் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், தமக்கோ தமது சகோதரர்களுக்கோ குறித்த வங்கியில் கணக்கு கிடையாது என நாமல் ராஜபக்ஸ அறிவித்துள்ளார். தமது தாய் தந்தைக்கும் இவ்வாறு கணக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை அரசுடமையாக்கும் நோக்கி…

  24. இலங்கை ஏமாற்றுகின்றது: கருணாநிதி 12-10-2015 09:40 AM சர்வதேச அரங்கில் நாடகமாடி இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் இலங்கை ஏமாற்றி வருகிறது என்று குற்றஞ்சாட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'இராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச்செல்லும் இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் மிரட்டி, தாக்கி, கைது செய்து கொண்டு போய் சிறையிலே அடைப்பதும், மீன்பிடிச் சாதனங்களையும், படகுகளையும் சேதப்படுத்துவதும், உடனடியாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எப்போதும் போல் கடிதம் எழுதுகிறாரோ இல்லையோ, பத்திரிகைகளில் அதைப் பெரிதாகச் செய்தி வெளியிடச் செய…

  25. மாவை சேனாதிராஜா 08 10 2015சுவிசில் நடைபெற்ற ஒன்றுகூடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் ஒன்றுகூடலை கலைத்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.கடந்த 08.10.2015 வியாழக்கிழமை பாசல் மாநிலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த ஆதரவாளர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றுகூடலில் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராசா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.இவ்வொன்றுகூடலில் கலந்து கொண்டவர்களின் கேள்விக்கான நேரத்தில் சுவிசில் வசிக்கும் தமிழ் இளைஞர் ஒருவரினால் மாவை அவர்களை நோக்கி வைக்கப்பட்ட கேள்விக்கான பதிலை அவர் வழங்காமல் அவ்இளைஞனை நோக்கி சரமாயாக திட்டியதுடன் ஒன்றுகூடலையும் கலைத்து கூட்டத்திலிருந்து வெளியேறினார். https://youtu.be/q2Bzpbh2BtI நன்றி! http://ww…

    • 0 replies
    • 598 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.