Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஐந்து மில்லியன் டொலர் தரை புகையிரத பாதைகள் குறித்து மீண்டும் ஆராய்கின்றோம் - இலங்கை அதிகாரி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஐந்துபில்லியன் டொலர் வீதி புகையிரதபாதை இணைப்பு திட்டம் குறித்து மீண்டும் ஆராயப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி இந்தியாவின் மின்டிற்கு தெரிவித்துள்ளார். இதற்கான செலவை இந்தியாவே பொறுப்பேற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க பொறுப்பேற்றுள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள முதலாவது பெரும் இரு தரப்பு திட்டம…

  2. வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர- நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடல் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது அரசியல் பலம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான மூவரை உள்ளடக்கிய அமைச்சரவையே காணப்படுகின்றது. எந்தவிதத்திலும் இது போதுமானதல்ல. த…

      • Sad
      • Downvote
      • Haha
      • Thanks
      • Like
    • 25 replies
    • 1.5k views
  3. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தமது இராஜினாமா கடிங்களை திங்கட்கிழமை (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அறிவித்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு…

  4. அனுர அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது! October 14, 2024 அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது பொதுவேட்பாளருக்கு சார்பாக செயற்பட்ட ஒருவருக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர் எனமக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-; இந்த ஆட்சியில் இருக்ககூடிய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என உறுதியளித்திருந்தது. இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இன்று சிலருக்கு பயங்கரவாத தடுப்புபிரிவிலிருந்து கடிதங்க…

  5. இலங்கையின் பிரம்மாண்ட சொகுசு ஹோட்டல் இன்று திறப்பு. Cinnamon Life at City of Dreams Sri Lanka சொகுசு ஹோட்டல் இன்று (15) திறக்கப்பட உள்ளது. 1.2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் , இலங்கையில் தனியார் துறையின் மிகப் பெரிய முதலீடாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோட்டல் வசதிகள், வணிகம், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு ஆகிய வசதிகள் இங்கு உள்ளது., தெற்காசியாவின் மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இந்த நாட்டின் சுற்றுலாத் துறைக்கு ஒரு புதிய அர்த்தம் சேர்த்துள்ளது. 687 அறைகளைக் கொண்ட சினமன் லைஃப் Ballroomகள், விருந்து அரங்குகள் மற்றும் மாநாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது. 5,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு ச…

  6. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய நல்லிணக்கக் கொள்கை மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் செயற்றிட்டம் உருவாக்கலுக்கான ஆலோசனைச் செயலமர்வு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் திங்கட்கிழமை (14) யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், இன,மத, மொழி, சமூக,பொருளாதார, அரசியல் சமத்துவத்தை பேணுவதற்காக இவ் அலுவலகம் செயற்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றம் ஊடாக சட்டம் அமுல்படுத்தப்பட்டது எனவும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எல்லோரும் எவ்வித வேறுபாடுகளின்றி சமமானவர்கள் என்ற நோக்கத்தை …

  7. யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப் புதிய கட்சி போட்டியிடவுள்ளது. இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்துள்ளவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். இக் கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை அறி…

  8. சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி தமிழரசு ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடவில்லை என்பதால் வேட்பாளர் தெரிவில் நீக்கினார்கள் - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்! தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு சலாம் போடாத காரணத்தினாலும் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட விடாமல் தடுத்தார்கள் எனவும் தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை செயலாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக…

      • Like
      • Thanks
      • Haha
    • 10 replies
    • 742 views
  9. பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம் adminOctober 13, 2024 மக்கள் நாணயமானவர்களுக்கும், கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலை கையாண்ட போன்று, மற்றைய தேர்தல்களை கையாள முடியாததால் நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் பாவித்த சங்கு சின்னத்தை பாவிக்க வேண்டாம் என கோரினோம். கட்சிகள் விரும்பி இருந்தால் சங்கு சின்னத்தை எடுக்காது இருந்து …

  10. தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் : டக்ளஸ் தேவானந்தா ! By kugen தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (14 ) காலை கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொழும்பில் ஏன் நீங்கள் போட்…

    • 2 replies
    • 346 views
  11. பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் தமிழரசுக் கட்சி! யாழ்.நீதிமன்றில் மீண்டுமொரு வழக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிராளிகளாக, இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் மற்றும் சேவியர் குலநாயகம் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்போது, வழக்கை தொடர்ந்துள்ள மார்க்கண்டு நடராசா முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன, 1 முதல் 3 வரையான எதிராளிகள் 27.01.2024…

  12. நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால், நான் கடைசி வரை போராடுவேன். நாங்கள் இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெ…

  13. இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் 15ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை இன்று (07.10.2024) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி சனத்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று பார்வையிடவுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா சேனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். புதிய சனத்தொகை 2012 மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், சமீபத்திய பட்டியல்கள் வீட்டு அலகுகளில் 24 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 வருடத்துக்கு ஒ…

  14. சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தீவைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, இதுவரை 12 மாவட்டங்கள் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக 126.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் களனிமுல்ல, கடுவெல உள்ளிட்ட அண்டிய பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அத்தனகலு ஓயா பெருக்கெடுத்து ஓடியதால் கொழும்பு-குருநாகல் பிரதான வீதி ஜா…

  15. யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாராயத்தை விற்று எமக்கு வாய்க்கரிசி போடாதே, வீரியம் குறைப்பதும் சாராயம் காரியம் கெடுப்பதும் சாராயம், மதுவை ஒழிப்போம் மாண்பை காண்போம் உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமயம் அப் பகுதியில் ஏராளமான பொல…

  16. மன்னார் காற்றாலை திட்டம் மீள்பரிசீலனை மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். காற்றாலை மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (14) அழைக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இது தொடர்பான மனுக்கள் இன்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் …

    • 0 replies
    • 507 views
  17. இலங்கை விமானப்படை 73 வது வருடத்தை முன்னிட்டு வட மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நட்பின் சிறகுகள் எனும் அமைப்பின் கீழ் "என்னிடமிருந்து வடக்கிற்கு ஒரு புத்தகம்" எனும் செயல்திட்டத்தின் ஊடாக வட மாகாணத்தில் 73 பாடசாலைகளை புனர்நிர்மானம் செய்தல் 73 ஆயிரம் புத்தகங்களை பாடசாலை மாணவர்களுக்காக வழங்குதல் 73 ஆயிரம் மரக்கன்றுகளை வட மாகாணம் முழுவதும் நடுதல் எனும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடம் ஒன்று கடந்த 11ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது. அத்தோடு யாழ்…

  18. நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசநிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்வது குறித்த பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் தீர்மானிக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது மற்றும் மத்தல விமானநிலையத்தினை வேறு நிர்வாகத்திடம் கையளிப்பது போன்ற முடிவுகளை பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் எடுக்கவுள்ளதாக விடயமறிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான பிரிவொன்றை உருவாக்கியிருந்தது. எனினும் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர். முன்னைய அரசாங்கம் உரு…

  19. யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழரசின் வேட்பாளர்கள் adminOctober 10, 2024 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிட தமிழரசு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் கையெழுத்திட்டனர். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி . சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன் , கேசவன் சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர…

  20. அரசியலில் இருந்து ஓய்வு பெறும் கெஹலிய? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என தான் உறுதியாக நம்புவதாகவும், நிரபராதியாக அரசியலுக்குத் திரும்புவேன் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403969

  21. நீர்க் கட்டணங்களைச் செலுத்தத் தவறிய 41 முன்னாள் எம்.பிக்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு அறவிடப்படாது 9 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பொதுவிதிகளுக்கு அமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403924

  22. தமிழரசின் பித்தலாட்டங்களுக்கு நவம்பர் 14 தீர்ப்பு - சபா குகதாஸ் காட்டம்! விடுதலைப் புலிகளின் தியாகத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 ஆண்டின் பின்னர் தமிழ் மக்கள் சார்பில் நியாயமான அரசியல் தீர்மானங்களை எடுக்காது தமிழ்த் தேசிய அபிலாசைகளை பலவீனப்படுத்தி கூட்டுநாடாளுமன்ற பிரதிநித்தித்துவத்தை சிதைத்து 2023 ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து 2024 ஆம் ஆண்டில் பல மிதவாத தலைவர்களதும் பொது மக்களதும் அர்ப்பணிப்பில் வளர்க்கப்பட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பல துண்டுகளாக உடைத்து ஒற்றுமை என்ற இலக்கை சிதைத்துள்ளனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு …

  23. பதவி விலகுவதாக ஹிருணிகா அறிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். ஆனாலும் கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் பணியாற்றுவதாகவும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் விரக்தி ஏற்பட்டதா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். …

  24. சங்கு சின்னமும் அரசியலில் அறமும்! October 11, 2024 சங்கு சின்னத்தை முன்வைத்து பொதுச் சபையினர் ஆங்காங்கே அறம் பற்றி பேச முற்படுவதாகத் தெரிகின்றது. அவர்கள் அவ்வாறு பேசுவது சரியானதா – அதற்கான தார்மீக தகுதி அவர்களுக்கு உண்டா? சங்கு சின்னத்தை ஒரு தேர்தல் தந்திரமாகவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எடுத்திருக்கின்றனர். தேர்தல் என்றால் ஒவ்வொரு கட்சியும் தங்களது வெற்றி பற்றியே சிந்திக்கும். இதில், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சங்கு சின்னத்தை எடுத்திருக்கும் அரசியல் கட்சிகள் தங்களின் நியாயத்தை கூறுகின்றனர். குறிப்பாக, பொதுச் சபையின் சார்பில் பங்கு கொண்ட…

      • Haha
    • 6 replies
    • 437 views
  25. அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பானதுமான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல் துறை சத்திர சிகிச்சை ஆண், பெண் விடுதிகள் நேற்று சனிக்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் மிக நீண்ட கால தேவையாக இருந்த எலும்பு முறிவு மற்றும் சிகிச்சைக்கான விசேட விடுதிகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் ஹனிபா திறந்துவைத்தார். இந்நிகழ்வில் எலும்பியல் சத்திர சிகிச்சை விசேட நிபுணர்கள் டாக்டர் பி. திலீபன், டாக்டர் ஆர்.எம்.எம். தீபன், ஏனைய விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.