Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை பலர் கைதாகி நீதிமன்றங்களில் ஆஜர்; பொலிஸ் அதிகாரிகள் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு நேரடி அறிக்கை:- குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டிருப்பதாக, யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரும், மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜராகி தெரிவித்திருக்கின்றனர். சுன்னாகத்தில் கடையொன்றுக்குள் புகுந்த ரவுடிக் கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்;டு நடத்திய சம்பவ…

  2. சித்த மருத்துவம் அல்லது சுதேச மருத்துவ முறைமைகள் தற்போது மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளன. மக்கள் அனைவரும் மேலைத்தேய மருத்துவ முறையில் நாட்டம் கொண்டவர்களாகவும் இலகுவாகத் தமது நோய்களை மிகவிரைவில் மாற்றிக் கொள்கின்ற மனோநிலையைப் பெற்றவர்களாகவும் இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது இவ்வாறு தெரிவித்தார் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். இன்று கிளிநொச்சி கல்மடுநகர் பிரதேசத்தில் மூலிகைத் தோட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று ECG, X-RAY, CT SCAN என பல நவீன மருத்துவ இயந்திர முறைகள் மூலம் உடலின் உள்ளே கண்டறியப்படுகின்ற பல நோய்களை சித்த மருத்துவ வைத்தியர்கள் கைநாடி மூலம் இலகுவில் கண்டறிந்து அதற்க…

  3. போக்குவரத்து அமைச்சர் நிமல் வவுனியாவுக்குத் திடீர் வருகை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று வவுனியா வுக்கு சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடத்தையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அதை விரைவில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இலங்கை போக்குவரத்துச் சபை, தனியார் பஸ் பயணிகள் தரிப்பிடத்தை ஒரே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்பின்னர் அவர் வவுனியா ரயில் நிலையத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டார். ரயில் நிலைய ஊழியர்களின் விடுதி, சிற்றுண்டிச்சாலை, மலசல கூட வசதிகள் என்பவற்றின் நிலைமை தொடர்பிலும் நேரில் பார்வ…

  4. ஆங்கிலத்திலேயே இணைத்து இருக்கிறேன். மன்னிக்கவும். மூலம் - கொழும்பு டெலி கிரப் பத்திரிகை On Genocide; An Open Letter To Sumanthiran. By Karthigesu Nirmalan-Nathan – Karthigesu Nirmalan-Nathan Dear Mr. Sumanthiran MP, Permit me to begin by saying, that the use of the “G” word should be measured. That said, I want to make it abundantly clear what happened in Mulliyvaikal was indeed “Genocide” and fits the definition perfectly – if you as a lawyer feel that you can’t prove it as such with the mountain of evidence available, your certificate is not worth the paper it is printed upon. I’ve never cried Genocide for what happened to our beloved Tamil people and us as a co…

  5. இலங்கை தொடர்பில் நேற்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு தாமும் அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு நாடுகளால் நேற்று இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை அடுத்து, எதிர்காலத்தை எந்த அச்சமும் இன்றி எதிர்கொள்ள முடியும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையினால், சர்வதேச சமூகத்துடன் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான இணக்கப்பாட்டை எட்டமுடிந்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்குள் சர்வதேச ந…

    • 2 replies
    • 447 views
  6. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவை நிறுவனம் தொடர்ந்து செயற்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்ன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பாரிய முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் சாட்சியமளித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்தின ஹெட்டியாரச்சி, ரக்னா லங்கா நிறுவனம் மூலமாக அரசாங்கத்துக்கு பாரிய வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக ரக்னா லங்கா நிறுவனத்தில் உள்ள சிற்சிறு குறைபாடுகளைக் களைந்து அதனை ஒரு வர்த்தக நிறுவனமாக நடத்திச் செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என்று பாதுகாப்பு செயலாள…

  7. விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக ஊடகவியலாளர் பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஜெனிவாவில் சாட்சியமளித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா சென்றுள்ள சந்தியா, இதுகுறித்த சாட்சியமொன்றை அளித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமை குறித்து கடத்திக் காணாமல் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அறிந்திருந்ததாக அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடான போரில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமை தொடர்பில் இராணுவம் தொடர்ந்தும் மறுத்துவரும் நிலையில் சந்தியா எக்னெலிகொடவின் சாட்சியம் முக்கியமானதாக அமைந்துள்ள…

  8. வெதமுல்லையில் பாரிய மண் சரிவு: ஐவர் பலி; 9 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் பாதிப்பு (பின்னிணைப்பு) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேச செயலக அதிகாரத்துக்கு உட்பட்ட கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி (Lily's Lane Estate) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஐந்து பெண்கள் பலியாகியுள்ளதாகவும் இவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இருகால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 50) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை, மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ் அனர்…

  9. குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் பெய்து வரும் மழையினால் கிளிநொச்சி அக்கராயன் வீதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. ஒரு சில நாள் பெய்த மழைக்கே வீதியின் நிலமை இவ்வாறு காணப்படுகிறது என்றால் மாரி மழையின்போது வீதி எவ்வாறு காணப்படும் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிளிநொச்சிக்கும் முழங்காவிலுக்கும் இடையிலான அக்கராயன் ஊடாகச் செல்லும் வீதி கடந்த பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. கிளிநொச்சியிலிருந்து கோணாவில், அக்கராயன், வன்னேரிக்குளம், ஜெயபுரம், முழங்காவில், இலுப்பைக்கடவை என பல பிரதேசங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியின் ஊடாக பயணம் செய்கின்றனர். இந்த வீதியின் ஊடாக பயணம் மேற்கொள்ளும் தாம் சந்திக்கும் இடர்பாடுகள் க…

  10. யாழ்ப்பாணத்தில் சமீப நாட்களாக இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப் கேள்விக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு யாழ்ப்பாணத்தை பெரும் அச்சறத்திற்கு உள்ளாக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து யாழ் கொக்குவில் பகுதியில் இருபது வயது இளைஞன் ஒருவன் பலத்த வாள்வெட்டுக்கு இலக்காகியிருந்தான். வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டு அதிரடிப்படையை கடமையில் ஈடுபடவும் கட்டளை பிறப்பிதிருந்தார். கடந்த சில நாட்களாக சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மற்றும்…

  11. ஜெனீவா பயணமாகும் செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று இரவு ஜெனிவா நோக்கிய பயணமாகவுள்ளார். அவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கவிந்திரன் கோடீஸ்வரனும் ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளார். http://onlineuthayan.com/news/573

  12. எமது இரா­ணு­வத்­தையும் நாட்­டையும் காப்­பாற்­றவே உள்­ளக பொறி­மு­றை­களை கோரு­கின்றோம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். நல்­லி­ணக்­கத்­துக்­கான தேசிய முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் நடை­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், இலங்­கையில் நடை­பெற்ற யுத்­தத்தின் போது போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இதில் உண்மைத் தன்­மை­களை கண்­ட­றிய வேண்டும். ஆனால் அந்த நட­வ­டிக்­கை­களின் மூலம் நாட்டை மீண்டும் பழைய ஆயுதக் கலா­சா­ரத்துக் கொண்டு செல்­வதை நாம் அனு­ம­திக்க மாட்டோம். யுத்தம் முடி­வ­டைந்து நாட்டில் அமை­தி­யான சூழ­லொன்று உரு­வா­கி­னாலும் நாட்டில் மூவின மக்­களின் மனங்­க­ளையும் வென்…

  13. ஐ.நாடு பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமாவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையில் 18 மாத காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பாக விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக உள்ளக விசாரணை பொறிமுறையின் ஒரு அங்கமான உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுபவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவின் ஆலோசனை மற்றும் உதவிகளுடனேயே இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவானது மத தலைவர்கள் மற்றும் ஆணையாளர்களை உள்ளடக்கிய…

  14. இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையையும், அமெரிக்காவின் உத்தேச வரைபையும் இந்தியா எதிர்க்கும் என நம்பிக்கை தெரிவித்த முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார, ஐ.நா.வின் தேவையை நிலைநாட்டவே அரசாங்கம் பல்வேறு விசாரணைக் குழுக்களை அமைக்கவுள்ளது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில், ஐ.நா.வின் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு நாம் இயங்க வேண்டிய அவசியமில்லை. இலங்கை இறையாண்மை கொண்ட நாடு. எமக்கென்று நீதித்துறை உள்ளது. எனவே எமது பிரச்சினைக்களை நாமே விசாரிக்க வேண்டும். அவ்வாறான உள்ளக விசாரணையென்பது வெளிப்படைத் தன்மையாக அமையவேண்டும். இதன்மூலம் எமது படையினர் மனித உரிமைகளை மீறியிருந்தால் அது தொடர்பான விசாரணைகள் உற…

  15. தமிழ்இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவாவில் ஐ.நா நோக்கி நடத்தப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி முன் நகர முற்பட்ட வேளை சுவிஸ் விசேட காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனைத் தடுப்பதற்கு தமிழீழ காவல்த் துறையினர் மற்றும் பொலிசார் இணைந்து செயற்பட்டனர். பேரணி ஐ.நா பிரதான வாயிலை அண்மிக்க முற்பட்ட வேளை வழமைக்கு மாறாக முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொலிசாரின் பாதுகாப்பு ஐ.நாவின் முன்பகுதியில் அதிகரிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=140961&category=TamilNews&langua…

    • 31 replies
    • 2k views
  16. எத்தனோல் கடத்தல்: நட்சத்திர வீரரின் சகோதரனுக்கு தொடர்பு: அரசாங்கம் புது தகவல் இலங்கைக்கு சட்டவிரோதமாக எத்தனோல் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரின் சகோதரனுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இத்தகவலை தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ந்து கூறுகையில், இலங்கைக்கு எத்தனோல் கொண்டுவரப்பட்ட விடயம் தொடர்பில் ஊடகங்களில் அடிக்கடி பேசப்பட்டது. எனினும் தற்போது அடிக்கடி பேசப்படுவதில்லை. அரசியல்வாதிகளுடன் நெ…

  17. டிசம்பரில் இலங்கை வருகிறார் அல் ஹ_செய்ன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை உறுதி செய்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சயிட் அல் ஹ_செய்னுக்கு உத்தியோகபூர்வமாக அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 14ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக சயிட் அல் ஹ_செய்னை சந்தித்து தாம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பினை, நட்பு ரீதியாக அவர் இதனை ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். http://onlineuthayan.com/news/574

  18. மன்னாரில் தனியார் பேருந்துகள் பணிப்பகிஸ்கரிப்பு மன்னாரில் இரண்டாவது நாளாகவும் இன்று மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருவதனால் பாடசாலை மாணவர்கள்,அரச தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பேருந்து ஒன்றின் மீது கடந்த புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் காரணமாக குறித்த பேருந்து கடும் பாதிப்புக்குள்ளாகியதோடு அதன் சாரதி மற்றும் பெண் பயணி ஆகிய இருவரும் காயங்களுக்கு உள்ளாகினர். இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான சாரதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மன்னார் தனியார் பேருந்து ஒன்றின் சாரதியை மன்னார் பொலிஸார் கைது செய்த…

  19. வலி.வடக்கின் சில பகுதிகள் விரைவில் மக்கள் பாவனைக்கு ஒட்டகப்புலம் ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் வறுத்தலைவிளானில் உள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை வீட்டுத் திட்டக்காணிகள் என்பவற்றை பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் இணங்கியுள்ளது என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்தனர். இதன் பின்னர் வலி.வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் படிப்படியாக மீள்குடியமர்வு நடவடிக்கைகள் 2012 ஆம் ஆண்டு வரையில் இடம் பெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென 6 ஆயிரத்து 384 ஏக்கர் காணி, வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு படைத்தரப்பின் தேவைக் காக நிரந்தரமாக சுவீகரிக்கப்பட்டது. இ…

  20. ஐ.நாவில் பிரேரணையின் நகல்வடிவில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு இலங்கை பிரதிநிதிகள் வாதாட்டம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவுள்ள பிரேரணையின் நகல்வடிவில் பல மாற்றங்களை மேற்கொள்ளுமாறு இலங்கை பிரதிநிதிகள் நேற்று கடுமையாக வாதாடியுள்ளனர். அங்கத்துவ நாடுகளின் மத்தியில் சமர்பிக்கப்பட்டுள்ள நகல்வடிவம் குறித்து நேற்றும் ஆலோசனைகள் இடம்பெற்றன பிரேரணையின் நகல்வடிவில் காணப்படும் 14 பத்திகளை முற்றாக நீக்கவேண்டும் என இலங்கை பிரதிநிதிகள் கடுமையாக வாதடியுள்ளனர். குறிப்பாக சர்வதேச நீதிபதிகள், விசாரணனையாளர்கள் பற்றி தெரிவிக்கப்படுவதற்கு அவர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சாட்சிகளை பாதுகாப்பது, இராணுவத்தினரிடம் காணப்படும் நிலங்களை மீள …

  21. இலங்கை குறித்த தீர்மானம் முக்கியமானது – ஜோன் கெரி 25 செப்டம்பர் 2015 இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச தீர்மானம் மிகவும் முக்கியமானது என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தினால் நம்பகமான நீதி விசாரணை நடத்தி நியாயம் வழங்க இந்த தீர்மானம் முக்கிய உந்து சக்தியாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மை, நீதி மற்றும் மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதனை தடுக்கும் நோக்கில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.நட்பு நாடு என்ற ரீதியில் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்…

  22. புதிய தீர்மான வரைவை ஜெனிவாவில் முன்வைத்தது அமெரிக்கா! - வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே விசாரணை [Friday 2015-09-25 08:00] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மான வரைவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை தொடர்பான தீர்மானத்திற்குப் பிரதான அனுசரணையாளரான அமெரிக்காவுடன் பிரிட்டன், மஸிடோனியா, மொன்டிநிக்ரோ மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் இணை அனுசரணை வழங்கியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை கோரும் அமெரிக்காவின் தீ…

  23. ஆயுதங்களுடன் வீடு புகுந்து பெண்ணை கடத்தி வன்புணர்வு - தேடுதலில் இரண்டு பேர் கைது நள்ளிரவில் ஆயுதங்களுடன் வீடு புகுந்தவர்கள், கணவனைத் தாக்கி விட்டு அவரது மனைவியைக் கடத்தி வன்புணர்வு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் வேலணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட பெண்ணை அப்பகுதி முழுவதும் இரவிரவாகத் தேடிய பொலிஸாரும், பொது மக்களும் அதிகாலையில் காட்டுக்குள் இருந்து பெண்ணை மீட்டுள்ளனர். பெண்ணைக் கடத்திய - தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.கடத்தப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது பரிசோதனைகளின் மூலம் உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டது. யாழ். ஊர்காவற்றுறை, வேலணையில் நேற்றுமுன்தின…

  24. 35 கிலோ கஞ்சாவுடன் இராணுவ மேஜர் கைது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பிரதேசத்தில் வைத்து, 35 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் வளான கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பிரதேசத்திலிருந்து கொழும்பிற்கு எடுத்து வந்து மீண்டும் கொழும்பிலிருந்து எடுத்துச் செல்லும் போதே இந்தப் போதைப்பொருளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இராணுவ அடையாள அட்டை ஒன்றை வைத்திருந்த குறித்த நபர் மாதம் ஒன்றுக்கு 90 ஆயிரம் ரூபா குத்தகை செலுத்த வேண்டிய அடிப்படையில் ஹைபிரைட் கார் ஒன்றை கொள்வனவு செய்து அதன் ஊடாகவே போதைப்பொருள் கடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்தள்ளது. மேலும் மீட்கப்பட்ட கஞ்சாவின் சந்தைப் பெறுமதி 7 இலட்சம் …

  25. நான் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை, கட்சி ஒன்றின் சார்பாகவே போட்டியிட்டேன். விளம்பரக் கட்டணங்கள் செலுத்தப்படாமல் இருந்தால் அதற்கான முழுப் பொறுப்பினையும் கட்சியே ஏற்றுக்கொள்ள வேண்டும். விளம்பரக் கட்டண நிலுவைக்கு தாம் பொறுப்பு அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் அரசியல் பிரச்சார விளம்பரங்களின் ஊடாக நல்ல இலாபமீட்ட முடியும் என்பதனால் ஒரு விளம்பரத்திற்கு பணம் செலுத்தி விளம்பரம் செய்தால், அந்த நிறுவனம் மேலும் இரண்டு விளம்பரங்களை ஒளிபரப்புச் செய்ய முயற்சிக்கும் நிலைமை காணப்பட்டது. கட்டணங்கள் செலுத்தாமைக்கு நான் பொறுப்பு கிடையாது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் தேர்தல் காலத்தில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.