Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாலம் அமைப்பதன் மூலம் இலங்கை, இந்தியாவின் மாநிலமாக மாற்றமடைந்துவிடும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டமானது இந்தியாவிற்கு சாதகத்தன்மையை ஏற்படுத்துமே தவிர, இலங்கைக்கு சாதகத்தன்மையை உருவாக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதியில் இந்தியாவின் ஒர் மாநிலமாகவே இலங்கை மாற்றமடைந்து விடக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டத்திற்கு 5.2 பில்லியன் அமெரிக்க டொலரை, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இந்தியா கடனாகக் கோரியுள்ளதாகவும், இதில் இலங்கை எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது குறித்து கூறவில்லை எனவும் …

  2. அமெரிக்காவின் முதலாவது வரைவுக்கு இலங்கை எதிர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைவுக்கு, இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில், ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் எதிர்ப்பை, ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க வெளிப்படுத்தினார். சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவானது, இலங்கை மீது தவறுகளுக்கான திருத்தங்களை முன்வைப்பதாகவும் முன்னரே ஆரம்பத் தீர்மானமொன்றைக் கொண்ட குணத்தையும் இலங்கை மீது வரையறை விதிப்பதாகவும் காணப்படுவதாகவும…

  3. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் - எம்.றொசாந்த் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (22) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வாயில் கதவை மறைத்து மேற்கொள்ளப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வடமாகாண சபை அமர்வில் கலந்துகொள்ளச் செல்ல முடியாமல் வீதியில் நிற்கின்றனர். கடந்த 7ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, வடமாகாண பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்களுக்கு உள்ளீர்ப்புச் செய்யுமாறு கோரி வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்ட செயலர் நாகலி…

  4. சுன்னாகம் ரவுடிகளை விசேட அதிரப்படை மூலம் உடனடியாக அடக்குக : டி.ஐ.ஜிக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் தலைதூக்கியுள்ள ரவுடி கும்பல்களை அடக்குவதற்கு விசேட அதிரடிப்படையை அமர்த்தி உடன் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி நேரடியாக உத்தரவிட்டுள்ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்தி, சமூகத்தில் குற்றச் செயல்களைக் குறைப்பதற்கும் சமூக விரோதச் செயல்களை இல்லாமற் செய்து பொதுமக்கள் அமைதியாகவும் தமக்குரிய சுதந்திரத்துடனும் வாழ்வதற்கும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் நீ…

  5. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சியுடன் இணைவு -ரீ.கே.றஹ்மத்துல்லா கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இருவர் ஆளுங்கட்சியுடன் இணைந்துள்ளனர். கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே எதிர்க் கட்சி உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர் மற்றும் கே.புஸ்பகுமார ஆகியோர் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர். இந்நிலையில்,தற்போது கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சார்பில் 5 பேர் மாத்திரமே அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/154760/எத-ர-க-கட-ச-உற-ப-ப-னர-கள-ஆள-ங-கட-ச-ய-டன-இண-வ-#sthash.KcF8FzXP.dpuf

  6. தமிழ் பொதுமக்களை புலிகளே கொலை செய்தனர் – சரத் பொன்சேகா - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 21 செப்டம்பர் 2015 தமிழ் பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா, இந்திய ஊடகமொன்றுக்கத் தெரிவித்துள்ளார். அரசாங்கப் படையினர் தமிழ்ப் பொதுமக்களை பாதுகாத்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களைக் கொன்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்களுக்கு பிரவேசிக்க முயற்சித்த பொது மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்றனர் என அவர் தெரிவித்துள்ளார். மறுபுறத்தில் தமிழ் மக்களை வரவேற்று அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவதில் படையினர் சிரத்தைக் காட்டியதாகத் தெரிவித்துள்ளார். புலிகளின்…

  7. இறக்கை இல்லாத அறிக்கை -ப.தெய்வீகன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த அறிக்கைக்கு, அரசு உயர் மட்டங்கள் முதல் ஆலய பரிபாலன சபைகள் வரை அனைத்து தரப்பினரும் பதில் கூறிவிட்டனர். சந்து பொந்திலுள்ள சகல சங்கங்களும் தங்களது கருத்துக்களை சொல்லிவிட்டன. இந்த அறிக்கைக்கு அரிதாரம் பூசி குஞ்சரம் கட்டி அழகு பார்க்கும் தமிழர் தரப்புக்கள் தாம் எதற்காக ஆதரவு தெரிவிக்கிறோம் என்று தெரியாமலேயே தமது ஆதரவு அறிக்கைகளை ஊடகங்களில் விளாசி வருகின்றன. தமிழர் தரப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் இந்த அறிக்கைக்கு ஜெனீவாவில் நின்று தனது பலத்த ஆதரவை தெரிவித்திருக்கிறார். இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மட்டுமே வேண்டும் என்று மாகாண சபையில் பிரேரணை நிறைவ…

  8. நாவுல, மீகொல் ஸ்ரீஜினராஜ விகாரையில் வெள்ளை அரசமரம் நாவுல, மீகொல்ல ஸ்ரீ ஜின­ராஜ பௌத்த விகா­ரை­யில் ­வெள்ளை நிறத்­தி­லான அரச மரக்­கன்று முளைத்­துள்­ள­தாக விகா­ரா­திபதி சங்­கைக்­கு­ரிய கோங்­க­ஹ­வெல சுமனதேரர் தெரி­வித்தார். விகா­ரையின் பிர­தான போதி­ம­ரத்தின் அருகில் முளைத்­துள்ள இந்த மரக் கன்று சுமார் 18 அங்­குல உய­ரத்தை கொண்­டுள்­ள­தா­கவும் இந்த அரச மரக்கன்றை பார்­வை­யிட அதி­க­மானோர் வருகை தருவதாக வும் அவர் தெரிவித்தார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=12230#sthash.Xu17F9nm.dpuf

  9. :- 21 செப்டம்பர் 2015 விமான குண்டு வீச்சில் படுகொலையான மாணவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபி வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது. நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது கடந்த 1995ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 22ம் திகதி இலங்கை இராணுவத்தினரின் புக்கார விமானம் குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டது. அந்த தாக்குதலில் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 21 மாணவ மாணவிகள் படுகொலையானார்கள். நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்கு உள்ளானார்கள். அன்றைய தினம் படுகொலையான மாணவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது அத்துடன் படுகொலையான மாணவர்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. குறித்த நினைவுத்தூபியினை நாளைய த…

  10. கொடதெனியாவ பிரதேசத்தில் 5வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17வயதான பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரம் வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 5 வயது சிறுமியின் மரணம் நாடு முழுவதிலும் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் அப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் வணிகப்பிரிவில் உயர்தரம் கற்கும் மாணவன் என்பதுடன், கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப நண்பர் எனவு…

  11. இலங்கையிலுள்ள முதியோர்கள் தொகையில் 2 லட்சத்து 62ஆயிரத்து 974 பேர் பாடசாலைப்பக்கமே செல்லாதவர்கள் எனக் கடந்த ஜூலை மாதத்தில் வெளியான பொது சன மற்றும் புள்ளி விவரத்தரவுகள்அறிக்கையொன்று கூறுகிறது இது நாட்டிலுள்ள முதியோர் சனத் தொகையில் 10.4 வீதமாகும். இலங்கையின் முதியோர்கள் சனத் தொகை 25 லட்சத்து 20 ஆயிரத்து 573 என்பதோடு மொத்தச் சனத் தொகையின் வீதாசாரமொன்றா கக் குறிப்பிடும்போது 12. 4 வீதம் முதி யோர்களின் சனத்தொகையாகும்.அதில் 11லட்சத்து 15 ஆயிரத்து 651 என்ற முதியோர்களான ஆண்களின் சனத்தொகையில் 57ஆயிரத்து 516 பேர் ஒரு நாளாவது பாடசாலைகளுக்குச் சென்றிருக்கவில்லை. அது ஆண்களின் சனத்தொகையின் வீதாசாரத்தில் 6.1 வீதமாகும். முதியோர்களான பெண்களின் சனத் தொகையான 14 லட்சத்து 4 ஆயிரத்து 922 பேரில…

    • 8 replies
    • 883 views
  12. தேநீர் விற்ற மோடி பிரதமராக முடியுமானால் வடை விற்ற எனக்கு ஏன் முடியாது : ஊவா முதலமைச்சர் தேநீர் விற்ற மோடி இந்தியாவின் பிரதமராகியிருக்கின்ராரென்றால் ரயிலில் வடை விற்ற என்னால் ஏன் அவ்வாறானதோர் உயர் பதவிக்கு வர முடியாது இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு அப்படியான சிறப்பான பதவிக்கு ஏன் வர முடியாது என்று ஊவா மாகாண புதிய முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் கதிரையில் அமர்வதற்கு பாடுபட்ட அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பைசர் முஸ்தபா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரை நினைவு கூர்வதுடன் அவர்களுக்கு கௌரவத்தை அளித்து நன்றியும் தெரிவிக்கிறேன் என்றும் கூறினார். பதுளை நகர் மஸ்ஜிதுல் அன்வர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் …

  13. "எங்கள் பிரச்சினைகளை கூறினால் நாங்கள் தீவிரவாதிகளா? : அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 18.09.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். நேரடியாக கேட்க: https://soundcloud.com/imurasu/lttgmol6851v

  14. மத்திய கிழக்கு நாடுகளின் தனவந்தர்கள் குழு மன்னார் விஜயம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கட்டார் மற்றும் சவூதி அரோபியா நாட்டின் தனவந்தர்கள் மன்னார் மாவட்டதிற்கு விஜயம் செய்திருந்தனர். இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மரிச்சிகட்டி கிராம மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது, விசேட வானூர்தியில் சென்ற குழுவினர் மரிச்சிக்கட்டி கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆராய்ந்தனர். அத்துடன், அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தனவந்தர்களினூடாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்தார். - See more at: http://athavans…

  15. சர்வதேச பொறுப்புக் கூறுல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவினால் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களாக திரட்ப்பட்ட கையொப்பங்கள் ஸ்கான் செய்யப்பட்டு கீழுள்ள இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்வையிடுவதற்கான இரகசிய கடவுச் சொல் போன்றவை ஐநா செயலாளர் நாயகம், ஐநா மனித உரிமை செயலாளர் நாயகம், மற்றும் ஐநா அதிகாரிகளுக்கும் மற்றும் சர்வாதேச தூதுவர்கள் இராஜதந்திரிகள் , மனித உரிமை அமைப்புகளுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவராலயங்களின் பிரதிநிதிகள் போன்றோரின் பார்வைக்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இணையத்தள முகவரி http://ww…

  16. கனடிய கடவுச்சீட்டு என்பது ஏதோ பயணத்திற்கு உதவும் ஒரு பொறிமுறையல்ல, அதற்கும் மேலாக அது கனடியர்களின் வலுவை, பண்பாட்டை, மரியாதையை சுட்டும் ஒரு சின்னமாக இருக்கின்றது என்பதை நாங்கள் அனைவரும் உணர வேண்டும் என கனடியப் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கெனி ரொறன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார். எனவே தேசத் துரோகம், நம்பிக்கை மோசடி, கனடியர்களிற்கு எதிரான வன்முறைகளைப் புரிதல், கனடியப் படைகளிற்கு எதிரான போரில் பங்கெடுத்தல், பயங்கரவாதத்தில் ஈடுபடுதல், அதற்கு ஆதரவளித்தல் என்பனவற்றல் அவர்கள் கனடியக் கடவுச்சீட்டை இழக்கும் நபர்களாக இருக்கின்றார்கள். அதேபோல கனடாவிற்கு இரண்டு கப்பல்கள் அகதிகளுடன் இலங்கையை அண்டிய பிராந்தியத்தில் இருந்து வந்த போது நாங்கள் எடுத்த நடவடிக்கை…

  17. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சையிட் அல் ஹுசேனால் வெளியிடப்பட்ட இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற அறிக்கையில் அமெரிக்க .இந்தியா தலையீடு எப்படி வெளிவரும் உண்மைகள்....... ஐ.நா. மனித உரிமை ஆணையாளரால் வெளியிடப்பட்ட பரிந்துரைகள் எப்படி? இலங்கைப் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு வந்தால் கைது செய்ய முடியுமா? அவற்றின் நிலை என்ன என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்ச்சியில் விளக்குகிறார்கள் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குணர் ச.வி.கிருபாகரன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி. http://www.tamilwin.com/show-RUmtyJRUSVipzA.html

  18. பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த வாரம் மிகமுக்கிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இவர்களை சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணை செய்யவுள்ளனர்.இந்தக்குழு, சாதாரண ஊழல் குற்றங்களை மாத்திரம் விசாரணை செய்யும் குழு என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அதற்கு மிக முக்கிய அரசியல்வாதிகளையும் விசாரணை செய்யும் அதிகாரம் உள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த குழுவுக்கு முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் முன்னாள் அரசாங்கத்தின் அதிகாரிகள் தொடர்பில் பல்வேறு ஊழல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த ஆணைக்குழுவின் மேல்நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேன, அமந்திரா விக்கும் களுவாராச்சி, கிஹான் குலதுங்க மற்றும் முன்னாள்…

  19. கடந்த அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனைகளிலிருந்து ராஜபக்ஷவினர் தப்பித்துக் கொள்ள முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மங்கள, கடந்த அரசாங்க காலத்தில் பிரகீத் எக்னெலிகொட போன்ற பலர் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்கள். சிங்களவர்கள் மட்டுமன்றி தமிழ் மக்களில் பலரும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். குறித்த சம்பவங்கள் தொடர்பான புலன்விசாரணைகளின் போது ராணுவத்தினர் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரிய வருகின்றது. எனினும் கடத்திக்கொலை செய்யப்பட்டவர்களுக்கும் ராணுவத்…

  20. யாழ். மாவட்டத்திலே கடந்த 2009 ஆம் ஆண்டினை விட 2015 ஆம் ஆண்டு இம்முறை அதிகமான வருமானங்கள் கொண்ட விவசாய பயிராக கோவா பயிர்ச்செய்கை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை 495.5 ஹெக்டயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இப்பயிர்ச்செய்கை 150.03 மெற்றிக்தொன் உற்பத்திகள் யாழ்.மாவட்டத்தில் கிடைத்துள்ளதாக யாழ.; மாவட்ட விவசாய புள்ளிவிபரத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றின் அடிப்படையில் படிப்படியாக அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கான சலுகை அடிப்படையிலான திட்டங்கள்,மற்றும் மானியத் திட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளன. கோப்பாய்,அச்செழு, புன்னாலைக்கட்டுவான், சுன்னாகம், மருதனார் மடம்,கரவெட்டி, உரும்பிராய், ஊரெழு…

  21. இந்திய மீனவர்களினால் சுரண்டப்படும் எமது கடல் வளத்தினைப் பாதுகாக்க இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுக்களைத் நடாத்தி உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார். தேசிய கடற்கரை தூய்மைப்படுத்தும் செயற்பாட்டினை யாழ்.கோட்டைப்பகுதியில் ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் குட்டைகளை தூய்மைப்படுத்தும் செயற்திட்டத்தினை முன்னெடுக்க இளைஞர் சங்கங்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.அதேநேரம், இந்த செயற்பாட்டிற்கு அமைச்சு அனுசரணையாக இருக்கும் என வடமாகாண முதலமைச்சர் உறுதியளித்தார். இந்த அமைப்பு கொழும்பிலும் ஏ…

  22. கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதி பனைமரங்கள் நிறைந்த அழகிய பிரதேசமாகும். கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளால் இந்த பிரதேசத்தின் பனைவளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக தொடர்ச்சியான யுத்தத்தில் பனைமரங்கள் பெருமளவில் அழிந்தன. தற்போது அந்தப் பகுதியில் எஞ்சியுள்ள பனைமரங்களையும் சட்டவிரோதமான முறையில் சிலர் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் பகுதிலிருந்து பனைகள் வேறு பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். மக்கள் குடியிருப்பற்ற பனைக்காடுகளில் பனைகள் அழிக்கப்படுவதாகவும் அவர்கள் சட்ட முறைப்படி அனுமதிப் பத்திரம் பெற்றிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. பகல்களில் தறிக்கப்பட…

  23. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தேச தீர்மான வரைவுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30ம் அமர்வுகளில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் அநேகமாக 24ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேச தீர்மானத்தின் உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான இலங்கைப் வதிவிடப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். உத்தேச தீர்மான வரைவு ஆவணத்தில் உள்ளடக்கமானது பிழையான, தீர்மானிக்கப்பட்ட, கால விதிப்பானதாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு முக்கியத்தும…

  24. யுத்தக் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கையில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் முன்னதாக உள்ளடக்கப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பெயர் பட்டியலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்க்பபட்ட காரணத்தினால், பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அதற்காக கட்டளைகள…

  25. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டு உள்ளதாக சந்தேகித்த இடத்தில் மேற்கொள்ளபட்ட அகழ்வு பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. பரந்தன் பகுதியில் உள்ள குறித்தோர் இடத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைக்கப்பட்டு உள்ளதாக தடுப்பில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் தகவல் வழங்கினார் என கிளிநொச்சி போலீசார் கிளிநொச்சி நீதிமன்றுக்கு அறிவித்தனர். அதனை அடுத்து நீதவான் குறித்த இடத்தை அகழ்வு செய்வதற்கான அனுமதியினை வழங்கினார். அனுமதியினை பெற்றுக்கொண்ட பொலிசார் திங்கள் கிழமை காலை 9.30 மணியளவில் அகழ்வு பணிகளை முன்னெடுத்தனர். பொலிசார் அகழ்வு பணியினை இரு சமாதான நீதவான்கள் மற்றும் கிராம சேவையாளர் முன்னிலையிலையே முன்னெடுத்ததுடன் அப் பகுதிக்கு பலத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.