ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
26 NOV, 2024 | 10:18 AM நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையையடுத்து, ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக உரிய பரீட்சை நிலையங்களுக்கு செல்லமுடியாத க.பொ.த. உயர்தர மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பரீட்சார்த்திகள், அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் அவரச தொடர்பு இலக்கமான 117 க்கும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https:…
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது என அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அத்தகைய நினைவேந்தல் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழுவுடன் எந்த தொடர்பும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “விடுதலைப் புலிகள் ஒரு நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும், நவம்பர் 27 அன்று மாவீரர் நாளின் போது அவர்களின் …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படாமல் போனது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் அரசாங்கத்திற்கு சார்பாகவே செயற்பட்டிருப்பார். எனவே, அவர் தேர்தலில் தோல்வியுற்றது அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனக் கூறப்படுகின்றது. சுமந்திரன் தமிழ் மக்களின் உரிமைக்காக தீவிரமாக போராடியிருந்தால் தென்னிலங்கையில் அவருக்கு இந்தளவுக்கு ஆதரவு இருந்துருக்காது. இவ்வளவு காலமும் அரசாங்கத்துக்கு சார்பாக சுமந்திரன் செயற்பட்டதாலேயே அவரை வடக்கு மாகாண மக்கள் நிராகரித்த போதும…
-
-
- 2 replies
- 405 views
-
-
அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே அது குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு முடியாது. எவ்வாறு இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். …
-
-
- 13 replies
- 1k views
-
-
தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. அத்தேர்தலின் முடிவுகளை நாம் பார்க்கின்றபோது, தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவர்கள் அடுத்து வரும் காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். இந்தத் தருணத்தில் அவர்கள் ஏலவே மைத்திரி-ரணில், கூட்டாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதிய அரசியலமை…
-
- 3 replies
- 302 views
- 1 follower
-
-
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீனத் தூதுக்குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்கும், பொதுத் தேர்தலில் அவரது கட்சிக்குக் கிடைத்த அமோக வெற்றிக்கும் வாழ்த்துத் தெரிவித்த சீன உப அமைச்சர், இந்த வெற்றிகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பரிமாற்றங்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்பட சீனா தயாராக இருப்பதாகவும் உப அமைச்சர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். சீனா மற்றும் இ…
-
-
- 2 replies
- 433 views
- 1 follower
-
-
சீன் போடுகிறார்களோ அல்லது செயலாற்றுவார்களோ தெரியவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்படுகிறவர்களே எட்டிப்பார்க்காத மக்கள் இடர்பாடுகளின்போது ஒரு அமைச்சர் யாழ்ப்பாணத்தில் வீடுவீடாக சென்று குறை விசாரிப்பது வரவேற்கதக்கது. சீன் போடாமல் செயலாற்றினார்களென்றால் அடுத்த தேர்தலிலும் யாழ்பகுதி தமிழ்கட்சிகள் பொழைப்பு சறுக்கிக்கிட்டு போவும்.
-
-
- 65 replies
- 9k views
-
-
பத்தாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற மரபு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு இம்மாதம் 25, 26, 27 ஆகிய திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று சனிக்கிழமை (16) வெளியிடப்படவுள்ளது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக பாராளுமன்ற ஊழியர்களின் விடுமுறையும் 18 முதல் 22 வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பாராளு…
-
- 5 replies
- 556 views
- 1 follower
-
-
25 NOV, 2024 | 10:22 AM நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சமீபத்தைய சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினருடன் நான் நேரடியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளேன். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பேன் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அர்ச்சுனாவின் தனிப்பட் நோக்கங்கள்எங்களிற்கு தெரியாது, இருப்பினும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் அபிலாசைகள் குறித்து சந்தேகமில்லை, என கண்டியில் தெரிவித்துள்ள சபாநாயகர் தற்போதைய அரசியல் சூழலில் இதுபோன்ற செயற்பாடுகளை மக்கள் ஆதரிக்கவில்லை என…
-
- 1 reply
- 173 views
- 1 follower
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை மீள நீதிமன்றம் அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி குழாம் மேல் நீதிமன்ற நீதிபதி குழாமிற்கு இன்று அறிவித்தது. அவர்களை விடுப்பதற்கான உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதன் ஊடாக தெரிந்தே கடமையை புறக்கணித்தமை, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீ…
-
- 3 replies
- 399 views
- 1 follower
-
-
25 NOV, 2024 | 05:37 PM கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விடுக்கப்படும் கோரிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் உதாசீனம் செய்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாவட்ட வைத்தியசாலைக்கு தகவல்களை அறிவதற்கான உரிமை சட்டத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்படுகின்ற போது சட்டத்தில் விதந்துரைக்கப்பட்ட காலத்திற்குள் பதில் வழங்காமை, கோரிய தகவல்களை முழுமையாக வழங்காமை, சட்டத்திற்கு புறம்பாக சென்று தகவல்களை வழங்க மறுகின்றமை, போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதகாவும், இது தொடர்பில் குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு மேன் முறையீடு செய்கின்ற போதும் அங்கும் இதே போன்ற நடவடிக்கைகளே இடம்பெறுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
கூட்டை முறிக்க யோசிக்கிறதா?; ரெலோவும் தனி வழியில்? மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்து கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா?அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இனி வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா?என்பது குறித்து கட்சியின் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது என மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ரெலோ கட்சிக்காக பல்வேறு வகையிலும் உதவி புரிந்த கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திப்பும் மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) மதியம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இட…
-
-
- 4 replies
- 306 views
- 1 follower
-
-
வட மாகாண ஆளுநர் (Governor of Northern Province), என்பவர் இலங்கையின் வட மாகாண சபையின் நிருவாகத்தைக் கவனிக்கவென இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவரைக் குறிக்கும். 1987 ஆம் ஆண்டின் மாகாண சபைச் சட்டம் இல. 42, அதன் 28 ஆம் இலக்க திருத்தச் சட்டம் (1990) மற்றும் 13வது திருத்தச் சட்டம் ஆகியன ஆளுனரின் அதிகாரங்களை எடுத்துரைக்கின்றன.[1] இல. பெயர் படிமம் கட்சி தொடக்கம் முடிவு மேற்கோள்கள் மொகான் விஜேவிக்கிரம (பதில்) சுயேச்சை 1 சனவரி 2007 3 சூலை 2008 [2] 1 …
-
- 0 replies
- 636 views
- 1 follower
-
-
10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று (25) நடைபெற்ற திசைமுகப்படுத்தல் செயலமர்வில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரினார். “எங்கே அமர வேண்டும் என்று கேட்டேன்.. அப்போது சொன்னார்கள் மறுபுறம் போய் உட்காருங்க. எந்த பிரச்சனையும் இல்லை டொக்டர், நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் அமருங்கள் என்று. பிறகு நாம் முன்னே சென்று அமர்ந்தோம். எமக்கு கெம்பஸ் சென்று பழக்கம்.. கையை உயர்த்தி பாராளுமன்றத்துக்கு வரவில்லை. எங்கு வேண்டுமானாலும் போய் உட்காரலாம் என்று நினைத்தேன். அப்போது நாலு பேர் வந்து என்னுடன்…
-
-
- 6 replies
- 550 views
- 2 followers
-
-
25 NOV, 2024 | 03:12 PM யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது தான் நடந்துகொண்ட விதத்திற்கு எதிர்ப்பு வெளியாகியுள்ளதால் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான செயலமர்வில் கலந்துகொண்டவேளை தான் கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான சம்பவத்தினால், என்னால் வீதியில் நடக்ககூட முடியாத நிலை காணப்படுகின்றது, ஊடகங்கள் 45 ஐம்பது நிமிடங்கள் என்னை ப…
-
-
- 4 replies
- 589 views
- 1 follower
-
-
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் வெளியிட்ட கருத்து மிகுந்த மனக் கவலையை அளிப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவித்ததாக அறிய முடிந்தது. அவ் ஊடக சந்திப்பில் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் அவர்கள் இனி உயிருடன் திரும்பப் போவதில்லை எனவும் காணாமலாக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களே என்றவாறும் கருத்து தெரிவித்திருந்தார். உண்மையாகவே அவர் ஒரு தமிழராக இருந்தும் இப்படி ஒர…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
25 NOV, 2024 | 05:29 PM அனர்த்த முகாமைத்துவ நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல, தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒழுங்கற்ற மனித நடவடிக்கைகளே இயற்கை பேரழிவுகளுக்கு காரணம் நிறுவன மட்டத்தில் விதிமுறைகள் இருந்தும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர பதவியேற்பு நிகழ்வில் இன்று (25) இணைந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வல…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
இலங்கையின் மின்சாரத் துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 200 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதன் ஊடாக மின்சாரம் பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிக அளவில் ஒருங்கிணைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், வீடுகளுக்கு 100% மின்சார விநியோகத்தை இலங்கை அடைந்தது. மேலும், இந்த நாட்டில் மின்சாரத் தேவை 2023 ஆம் ஆண்டில் அதிகபட்சமாகப் பதிவு செய்யப்பட்டதுடன், அதன் அளவு 2800 மெகாவோட் ஆகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தது. இது 2030 ஆம் ஆண்டில் கணிசமாக வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம்…
-
- 0 replies
- 512 views
- 1 follower
-
-
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள், வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை,சம்மாந்துறை மற்றும் பல பிரதேசங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தாழ்நில பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் முழ்கிக் காணப்படுவதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 575 views
- 1 follower
-
-
25 NOV, 2024 | 09:15 AM யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். இந்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடியவேளை அவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/199597
-
- 0 replies
- 531 views
- 1 follower
-
-
25 NOV, 2024 | 02:09 PM இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/199632
-
- 0 replies
- 551 views
- 1 follower
-
-
முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன்அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020 இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன். தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிச…
-
- 0 replies
- 616 views
- 1 follower
-
-
றிப்தி அலி கடந்த நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரிய வெற்றியினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சுவீகரித்தது. செப்டம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் சுமார் 120 ஆசனங்களையே அக்கட்சி பெறும் என ஆய்வாளர்கள் எதிர்வுகூறியிருந்தனர். இந்த எதிர்வுகூறலுக்கு முற்றிலும் மாற்றமாகவே பொதுமக்களின் வாக்களிப்பு அமையப் பெற்றிருந்தது. இலங்கை வரலாற்றில் எந்தவொரு தனிக் கட்சியும் கைப்பற்றதாக 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பறியுள்ளது. இந்த எண்ணிக்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்ம…
-
- 0 replies
- 226 views
-
-
வேலணையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு adminNovember 24, 2024 தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலணை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதிப்பளிக்கப்பட்டனர் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் வேலனை துறையூர் சந்தியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வேலணை ஐயானார் சனசமூக நிலைய மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணியப்பட்டு கண்ணீர் மல்க மலர் வணக்கம் செலுத்தப்பட்டது அதனை தொடர்நது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களை கௌரவிக்க…
-
- 0 replies
- 780 views
-
-
வரலாறு படைத்த மேக சூரியாராச்சி! வியட்நாமில் அண்மையில் இடம்பெற்ற ‘Mr World 2024′ போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மேக சூரியாராச்சி (Megha Sooriyaarachchi) மக்களின் விருப்பத் தேர்வு விருதினை வென்றுள்ளார். இலங்கையின் கலாசாரத்தை பெருமையுடனும், அழகுடனும் வெளிப்படுத்தியமைக்காக ‘தேசிய ஆடைக்கான மக்கள் தெரிவு’ விருதினையும் அவர் வென்றுள்ளார். இதேவேளை இப் போட்டியின் இறுதி கட்டத்தில் இரண்டு விருதுகளைப் பெற்ற ஒரே போட்டியாளர் மேக சூரியாராச்சி எனக் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது மிஸ்டர் வேர்ல்ட் போட்டியின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றையும் மேக சூரியாராச்சி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.c…
-
- 0 replies
- 676 views
-