Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாறை மத்திய முகாமில் வைத்து பொலிஸ் அதிகாரிகள் மூவரால் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கில் சாட்சியமளிப்பதற்கு இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 21ஆம் திகதியன்று ஆஜராகுமாறே அம்பாறை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திரவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் தொடர்பில் மரண விசாரணை நடத்திய அன்றிருந்த அம்பாறை முன்னாள் நீதவான் மற்றும் மரண விசாரணை மேற்கொண்ட அன்றிருந்த அம்பாறை நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆகிய இருவருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மத்திய முகாமின் பொலிஸ் சோதனைச் சாவடியில் சம்பவத்தினத்தன்று கடமையில் இருந்த காமினி குமாரச…

  2. அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’ போட்டார் சிறிலங்கா பிரதமர் ரணில்SEP 10, 2015 | 1:43by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, கட்டாயம் சமூகமளித்திருக்க வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். “மோதிக் கொண்டிருந்த இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. இது நாட்டின் வரலாற்று புரட்சியாகும். நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும்,ஜேவிபியுடனும் நாம் பேச…

  3. விடுதலைப் புலிகளின் போலி முகாம் ஒன்றைச் செயற்படுத்திய கிரித்தல சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நுழைந்து தேடுதல் நடத்துவதற்கு சிறிலங்கா இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கிரித்தல இராணுவ முகாமுக்குள் தேடுதலை நடத்த ஹோமகம நீதிவான் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், அப்போது நீதிமன்றத்தில் சிறிலங்கா இராணுவத் தரப்பில் முன்னிலையாகியிருந்த சட்டவாளர் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தார். கிரித்தல இராணுவ முகாமுக்குள் நடத்தப்படும் தேடுதல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்…

  4. 'சத்துருக்கொண்டான் படுகொலையின் 25 ஆண்டுகள்' இலங்கையில் மட்டக்களப்பு சத்துருகொண்டான் படுகொலைச் சம்பவம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அதற்கான நீதி தமக்கு கிடைக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இடம்பெற்றதாக உள்ளூர் மக்களால் குற்றஞ்சாட்டப்படும் இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990 ஆம் ஆண்டும் செப்டம்பர் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக அது குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரை அண்மித்த சத்துருகொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த குறித்த 184 பேரும் போய்ஸ் டவுன் . இராணுவ முகாம…

  5. அரசியலமைப்பு சபைக்கு, மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே ஜனாதிபதியின் சார்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும், பிரதமரின் சார்பில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவும் அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் எதிர்கட்சியின் சார்பில் யாரை நியமிப்பது என்பது குறித்த தகவல் நாளை கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்களின் தெரிவு நல்லாட்சிக்கு விரோதமாக மேற்கொள்ளப்படுகிறது என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அம…

  6. யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்குதல் சந்தேக நபர்கள் மூவர் பிணையில் விடுதலை புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்துள்ளது. சம்பவம் தொடர்பாகக் கைதாகியவர்களில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 சந்தேக நபர்கள் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்கள் மூவரை அவர்கள் மீதான மூன்று வழக்கிலும் தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான 5ஆட்பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி பொ. சிவகுமார், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைக…

  7. .................சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நடைப்பயணம் செல்ல, கூட்டமைப்பின் வட-மாகாணசபை உறுப்பினர் திரு. எம். கே. சிவாஜிலிங்கத்துக்கு ஜனநாயக உரிமை உண்டு என்பது என் அபிப்பிராயம். ஆனால், ஒரு கட்சி என்ற அடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது திரு. சிவாஜிலிங்கம் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் பொதுவான ஒரு நிலைபாட்டை இந்த விவகாரம் தொடர்பில் எடுப்பது முறையானது என நினைக்கின்றேன். இல்லாவிட்டால் கட்சியின் நிலைப்பாடு எது என்பது பற்றி ஒரு மயக்க நிலைமை ஏற்படலாம்.......... Mano Ganesan

  8. புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு (அமைச்சர்களின் விபரம் ) ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அர­சாங்­கத்தின் பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் பதவியேற்று கொண்டனர். ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும் 45 பேர் இவ்­வாறு இரா­ஜாங்க மற்றும் பிர­தி­ய­மைச்­சர்­க­ளாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் பத­வி­யேற்­று கொண்டனர். பதவியேற்றுக் கொண்ட புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்களின் விபரம் இராஜாங்க அமைச்ச ர்கள் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன இராஜாங்க நிதியமைச்சராக சத்தியப்பிரமாணம் டி.பி. ஏக்கநாயக்க காணி இராஜாங்க அ…

  9. தமிழ் மக்களின் அரசியல் அக மற்றும் புறக்காரணிகளினால் தொடர்ந்தும் தாக்குதலுக்குள்ளாகி வந்திருக்கின்றது. அதனை, எதிர்கொள்வதற்கான தைரியத்தையும், போராட்ட உணர்வையும் தமிழ்த் தேசியம் எனும் வடிவில் ஒருவகையில் கட்டமைக்கப்பட்ட இராணுவ மனநிலை கொடுத்து வந்திருக்கின்றது. அதுதான், அஹிம்சை மற்றும் ஆயுத ரீதியிலான அரசியலுரிமைப் போராட்டங்களின் வெற்றிகளில் பிரதிபலித்தும் படுபயங்கரமான தோல்விகளிலிருந்தும் வெளிவரவும் வைத்திருக்கின்றது. ஒரு கட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் என்பதே புறக்காரணிகளை அல்லது எதிரிகளை எதிர்கொள்வதற்கான நிலை என்கிற அளவிலேயே மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அது, தன் சார்பில் அக அரசியல் வெளியை சீராக்குவது அல்லது மேம்பட்ட நிலையில் வைத்துக் கொள்வது தொடர்பில் சிந்திப்பதையோ, செயற…

  10. சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டதுஎன நேற்றைய (05.09.2015) தினம் மாவை சேனாதிராசா தெரிவித்த நிலையில் இன்று(06.09.2015) ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கினை பெற்றவருமான சிறிதரன் அவர்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தான் ஐ.நா செல்லவுள்ளதாக உறுதியாக தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தலுக்கு முன்னர் தாம் கூறியதுபோல மக்களுக்கு உறுதியளித்த கொள்கைக்காக தொடர்ந்தும் தனக்குரிய பணியை செவ்வனே செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.அமெரிக்காவால் தான் எந்த தீர்மானத்தையும் கொண்டுவரமுடியும் என்றும் அதற்காக அமெரிக்கா சொல்லும் எல்லாவற்றுக்கும் நாம் தலைஆட்டவேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் நேற்று…

    • 21 replies
    • 1.6k views
  11. கூட்டமைப்பு - ஜே.வி.பி ஏற்கத்தக்க வகையில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு : பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மக்களது பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்;. அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இன்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு நாளாகும். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாம் புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளிலும் தேசிய அரசாங்கங்கள் உ…

  12. [ புதன்கிழமை, 09 செப்ரெம்பர் 2015, 01:04.08 PM GMT ] சமஷ்டி முறையை அரவணைத்துக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காட்டிய தயக்கமும் ச்ரிலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் ஐ.தே.கட்சியிடன் கட்சி சார்பற்ற உணர்வுக் குறைவாகக் காணக்கப்பட்டமையும் நோர்வே எதிர்நோக்கிய இரு நெருக்கடிகள். என இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது விஷேட தூதுவராக பணியாற்றிய நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார். கேள்வி : ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்கு தாங்கள் எழுதிய கடிதத்தில் அண்மைய பொதுத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தீர்கள். ராஜபக்ஷ ஆட்சியைத் தொடர்வதற்கான போராட்டமாக பல வ…

  13. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக மீண்டும் ருவான் விஜேவர்த்தன – விஜயகலாவுக்கு சிறுவர் விவகாரம்SEP 09, 2015by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு இன்று பிற்பகல் 2 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் ஆரம்பமாகியது. இன்று காலை இந்தப் பதவியேற்பு இடம்பெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அமைச்சரவைக் கூட்டத்தினால், காலையில் நடக்கவிருந்த பதவியேற்பு இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேவேளை, இன்று காலை மூன்று அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்றிருந்தனர். ஐதேகவைச் சேர்ந்த மலிக் சமரவிக்கிரம அபிவிருத்தி மூலோபாய, அனைத்துலக வர்த்தக அமைச்சராகவும், ஐக்கிய மக்கள…

  14. மங்கள சமரவீர தலைமையில் இன்று ஜெனிவா விரைகிறது சிறிலங்கா அரச குழுSEP 09, 2015 | 6:13by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான அரசதரப்புக் குழு இன்று ஜெனிவா பயணமாகவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், வரும் 30ஆம் நாள் சிறிலங்கா தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது, சிறிலங்கா தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். இந்த விவாதம் சுமார் மூன்றரை மணிநேரம் இடம்பெறும் என்ற ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், ஜெனிவாவில் சிற…

  15. தலைமன்னார்- இராமேஸ்வரம் தரைவழிப்பாதை திட்டம் குறித்து மோடி முக்கிய கலந்துரையாடல்SEP 09, 2015 | 5:46by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் தலைமன்னாரையும், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரைவழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக, பாரிய தொழில் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வங்கிகளின் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் தரைவ…

  16. "சீரழிந்து வரும் வன்னி இளைஞர்களை சீர்திருத்துவதே எனது நோக்கம்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 04.09.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி சிறீஸ்கந்தராஜா வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/ukdjtj2uw0bq

  17. University of Janna :Signature Campaign Mis à jour : il y a 5 heures யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று கையெழுத்துப்போராட்டம் Signature Campaign in University of Jaffna 9.9.2015 சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவினால் கட்டமைக்கப்பட்ட கையெழுத்துபோராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகம் இணைந்தது இலங்கைதீவில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதஉரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயல்முறை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தும்படி நாம் இத்தால் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்துகிறோம். அதோடு ஸ்ரீலங்கா அரசால் உருவாக்கப்படும் எந்த ஒரு உள்ளக பொறிறையயும், விசாரணையும் நாம் உறுதியாக நிராகரிக்கிறோம். #TACIAM #Geneva #UNHRC #WeNeedJustice#UniversityofJa…

  18. வவுனியா வாரிக்குட்டியூர் 06ஆம் யுனிட்டில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையிலேயே அதி உயரம் கொண்ட (27 அடி) ஐயனார் விக்கிரகத்துக்கு கும்பாபிஷேகத்துடன் கூடிய தரிசிப்புக்கான திறப்புவிழா இன்று திங்கட்கிழமை நடத்தப்பட்டது. சிவஸ்ரீ பால கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் கலந்துகொண்ட, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா, இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மகேந்திரம் ரகு, இவர்களுடன் வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய பரிபாலனசபையினரும், வாரிக்குட்டியூர் கிராம மக்களும் இணைந்து சிற்பாசிரியர்களை கௌரவித்தனர். http://www.malarum.com/article/tam/2015/09/07/11674/இலங்கையிலேயே-அதிக-உயரம்-கொண்ட-ஐ…

  19. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள மிதவாதிகளுக்கும் கடும்போக்காளர்களுக்கும் இடையில் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்த மோதல் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்தே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதியன்று இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போது விக்னேஸ்வரன் தமது கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பதிலாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்குமாறு மறைமுகமாக தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தார். எதிர்வரும் 11ஆம் திகதி நடக்கவுள்ள கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின்போது இந்த விடயம் தொடர்பி…

  20. மத்தள விமான நிலையத்தை நெற்களஞ்சியமாக்கினால், அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டைக்கான அதிவேகப் பாதை போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதற்காக இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படக் கூடாது. நாட்டின் எதிர்கால நலன் கருதி இவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதே எனது நோக்கமாகும். அதற்குப் பதிலாக ஹம்பாந்தோட்டை பிரதேசம் தொடர்பான அபிவிருத்திகள் கைவ…

  21. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதியளிக்காவிட்டால் பதவி துறக்கப் போவதாக அக்கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எச்சரித்துள்ளார். ஐ. நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வது பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை என அறிவித்துள்ளது. வட மாகாணசபை சார்பாக உறுப்பினர்கள் ஜெனிவா கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதெனவும், தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் அங்கு செல்ல முடியும் என்றும் வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜெனீவாவுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர். இத…

  22. சர்வதேச தலையீட்டில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும். எக்காரணத்தை கொண்டும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பேரவையில் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும். எமது ஜெனிவா பயணம் குறித்த தீர்மானம் ஐ.நா விசாரணை அறிக்கையிலேயே தங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டது. அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை மீதான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூ…

  23. யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசிப்பவர்கள் யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவை தரிசிக்காமல் உள்நுழைய முடியாது. அந்த வளைவைக் கண்டதும் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு அவர்களை ஆக்கிரமிப்பதை உணர்ந்தவர்கள் ஏராளம். இந்த வளைவின் அருகில் நடமாடும் கடை ஒன்றையும் அண்மை நாட்களில் நிச்சயம் பார்க்க முடியும். ஆட்டோ ஒன்று கடையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் பல வகையான பழங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த நடமாடும் கடையின் உரிமையாளர் சுண்டுக்குளியைச் சேர்ந்த அ. அமலன் என்பவர். பொலிஸ்காரர், நகர, பிரதேச, சபையினரின் விரட்டல்கள் தன்னை இந்த நடமாடும் கடையை அமைக்கத் தூண்டியதாகக் கூறிய அவர் எம்மிடம் பகிர்ந்து கொண்டவை வருமாறு: தெருவோரங்களில் வியாபாரம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். எனது வியாபாரம் போக…

  24. கொழும்பில் ரஷ்ய இராஜதந்திரியை தாக்கிய வாகனச் சாரதி – காணொளியால் பரபரப்புSEP 09, 2015 | 2:10by கார்வண்ணன்in செய்திகள் கொழும்பில் உள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில், ரஷ்ய இராஜதந்திரி ஒருவர் வாகனச் சாரதியால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ரஷ்யத் தூதரகத்தில் பணியாற்றும் மூத்த இராஜதந்திரியே தாக்குதலுக்கு இலக்கானார். ஹைட்பார்க் கோணரில் ஆர்பிகோ வாகனத் தரிப்பிடத்தில், வாகனத்தை நிறுத்தியதில் ஏற்பட்ட சச்சரவை அடுத்தே, பிஎம்.டபிள்யூ வாகனச் சாரதியால், ரஷ்ய இராஜதந்திரி தாக்கப்பட்டார். நேற்றுமுன்தினம், வெளிவிவகார அமைச்சுக்குச் சென்ற குறிப்பிட்ட ரஷ்ய இராஜதந்திரி, அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து இதுதொடர்பாக முறைப்பாடு செய்தார். இத…

    • 3 replies
    • 948 views
  25. யாழ்.மாவட்டக் குடிநீரின் தரம் மிக வேகமாக மாற்றமடைந்துவருகின்ற நிலையில் குடிநீரின் அளவும் குறைவடைந்துவருகின்றது என்று யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் எச்சரிக்கை செய்துள்ளார். மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே தாளையடிப் பகுதியில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒரு போதும் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாது என்றும் அரச அதிபர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். http://www.thinakkural.lk/article.php?local/ki7dsegbwc1205b571ecea1612336kzwipa9824023ee1af16897a582nwvtb#sthash.BN800kzH.dpu நாவற்குழி நன்னீர் தேக்கத்தை பாதுகாக்க அணைக்கட்டு அமைப்பு யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாப்பதற்காக நாவற்குழி நன்னீர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.