Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் படையினருக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமயகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் படைவீரர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்க “படைவீரர் சட்ட நிவாரணம்” என்ற அமைப்பு உருவாக்கப்படும். புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பலர் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அறியாமை காரணமாக இவர்கள் ஊரில் இருக்கும் சட்டத்தரணியின் உதவியைப் பெற்றுக்கொள்கின்றனர். தமிழ் பிரிவினைவாதிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்க சிவா பசுபதி, விஸ்வநாதன் ருத்ரகுமாரன் போன்ற புகழ்பெற்ற சட்ட வல்லுனர…

  2. 44 அமைச்சுக்களுக்கு புதிய செயலர்கள் – விக்னேஸ்வரனுடன் மோதிய விஜயலட்சுமிக்கும் முக்கிய பதவிSEP 09, 2015 | 1:50by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில், 44 அமைச்சுக்களுக்கான புதிய செயலர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபரின் செயலர் பி.பி. அபேகோன், அமைச்சுக்களின் புதிய செயலர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார். இதன்படி, நியமைச்சின் செயலராக கலாநிதி சமரதுங்கவும், வெளிவிவகார அமைச்சின் செயலராக சித்ராங்கனி வகீஸ்வராவும், பாதுகாப்பு அமைச்சின் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 44 அமைச்சுக்களுக்கான செயலர்களில், நான்கு பேர…

  3. புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி – பஸ்நாயக்கவின் பதவி பறிப்புSEP 09, 2015 | 1:31by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்றதையடுத்து, 44 அமைச்சுக்களுக்கான செயலர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் அதிகாரியான இவர் முன்னர் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையின் செயலராக பணியாற்றியிருந்தார். கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சவை நீக்கி விட்டு, பி.எம்.யூ.டி…

    • 0 replies
    • 1.2k views
  4. "நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எனது சேவை இரு கோணங்களில் தொடரும். பொதுக் கடமை என்ற ஒரு கோணத்திலும், முக்கிய கடமை என்ற மற்றொரு கோணத்திலும் இந்தச் சேவை தொடரும். நாட்டுக்காகக் குரல் கொடுப்பது எனது பொதுக் கடமையாகும். தமிழ் மக்களுக்கு நியாயமான - நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது எனது முக்கிய கடமையாகும்.'' - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனக்…

    • 12 replies
    • 1.7k views
  5. நல்லூர் திருவிழாவின் போது, கலாச்சார சீரழிவு குற்றங்கள், மற்றும் குற்றம் புரிபவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல், கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையின்போதே நீதிபதி இவ்வாறு எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நல்லூர் ஆலயத்தில் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த ஆலயத்தின் தேர் மற்றும் தீர்த்தத்திருவிழாக்கள் மி…

  6. அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் மைத்திரியுடன் பேச்சுSEP 08, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இன்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலராக இருந்தவர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ். இந்தக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பேச்சு நடத்திய போது, அதில் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் ஈடுபாடு காட்டியிருந்தார். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மீதான அ…

  7. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குமா ஐ.நா அறிக்கை? – அமந்த பெரேராSEP 08, 2015 | 6:28by நித்தியபாரதிin கட்டுரைகள் ஜெனீவா எங்குள்ளது என்பது தவராசா உத்தரைக்கு மிகத் துல்லியமாகத் தெரியாவிட்டாலும், சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சுவிசில் உள்ள நகரில் மிக விரைவில் வெளியிடப்படவுள்ள அறிக்கைக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார். சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்ற அறிக்கையை ஆறு மாத காலம் தாமதித்து வெளியிடுமாறு கோரிக்கை விடுத்த நிலையில் ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையகமானது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான தனது அறிக்கையை இன்னும் சில வாரங்களில் வெளியிடவுள்ளதாக இறுதியாக அறிவித்துள்ளது. இந்த அறி…

  8. அனைத்துலக நீதிமன்ற விசாரணையையே கோருகிறது கூட்டமைப்பு – மாவை சேனாதிராசா விளக்கம்SEP 08, 2015 | 5:58by கார்வண்ணன்in செய்திகள் இன்னொரு அனைத்துலக விசாரணை தேவையில்லை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக நீதிமன்ற விசாரணையே தேவை என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2014 மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் சிறிலங்கா தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு அனைத்துலக விசாரணை. இந்த நிலையில் இன்னொரு அனைத்துலக விசாரணை தேவைய…

  9. பொதுத்தேர்தல் முடிவடைந்தபின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பது சாத்தியமில்லையெனத் தெரிவித்திருந்தார். சர்வதேசப் போர்க்குற்ற நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்து இடாதபடியாலும், ஐ.நா பாதுகாப்புச் சபையின் அனுமதி கோரினால் அதை ரஷ்யாவோ சீனாவோ வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து ரத்துச்செய்து விடும் நிலை ஏற்படும் என்பதாலும் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையில் பயனில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதன் அர்த்தம் தமிழ் மக்கள் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்வதை விட வேறு வழயில்லை என…

  10. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகள் வரவேற்கப்பட வேண்டிது என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியான விசாரணைகள் அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் யுத்தம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட்ட போதிலும்இ முதல் தடவையாக சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் இடம…

  11. மகிந்தவின் உறவினர் பிரசன்ன விக்கிரமசூர்யவை விசாரிக்க தீர்மானம்.. கொழும்பு பண்டாரநாயக்க விமானநிலைய பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து பல மில்லியன் ருபாய் பெறுமதியான தங்கம் மற்றும் ஆபரணங்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் காணமற்போனது குறித்து விமானநிலையத்தினதும், விமான சேவைகளினதும் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினருமான பிரசன்ன விக்கிரமசூர்யவை விசாரிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களம் அல்லது நிதிமோசடிகள் தொடர்பான விசேட விசாரணை பிரிவு இவரை விசாரணைக்கு அழைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் தோற்றபின்னர், பிரசன்ன விக்கிரமசூர்ய குறிப்பிட்ட பதவியிலிருந்து விலகியதாகவும் அதன் பின்னர் விமானநிலையத்தின்…

  12. தீவிரவாதிகளுக்கு பயந்து இராணுவத்தை விட்டு தப்பி சென்று வெளிநாட்டில் வேலை செய்து, அண்ணனின் அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட ஒருவரின் ஆசனத்தில் தான் அமர மாட்டேன் என பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நான் தற்போது பெற்று கொண்டிருக்கும் பீல்ட் மார்ஷல் பதவி மிகவும் உயர்வானதொன்றாகும். பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்றுகொண்டு இராணுவத்தினால் என்னிடம் வழங்கப்பட்டிருக்கும் எனது சிறந்த பதவியை அவமதிக்க மாட்டேன். அத்துடன் தற்போது எனக்கு அமைச்சரவை அமைச்சரை விடவும் சிறப்பான பதவி கிடைத்துள்ளமையினால் ப…

  13. இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என இரகசிய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சிறந்த அதிகாரிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் ஊடகங்களில் வெளியிட்டு, அந்த திறமையான அதிகாரிகளை காட்டிக் கொடுக்க வேண்டாம். இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வரும் ஒரு சில ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மோசமான அதிகாரிகளை பாதுகாத்துக் கொள்ள ஒட்டுமொத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினையும் இவ்வாறு காட்டிக் கொடுப்பது மிகவும் சோகமான ஒர் நிலைமையாகும். பிரகீத் எக்னெலிகொட கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் வரையில், எக்னெலிகொட புலிகளுடன் தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தப்படவில்ல…

  14. பிரகீத் கடத்தல்- மேலும் மூன்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைதுSEP 07, 2015 | 11:50by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்படிவம் தொடர்பாக மேலும் மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் ராஜகிரியவில் வைத்து சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு, கிரித்தல இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அங்கு மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், காணாமற்போகச் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, ஏற்கனவே, ஓய்வு பெற்ற இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதி…

  15. நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் வயலின் வாசித்துக் கொண்டிருந்த வயலின் வித்துவான் இராதாகிருஸ்ணண் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.நல்லூர் மகோற்சவத்தை முன்னிட்டு தினமும் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் இசை நிகழ்வு நடைபெற்று வருகின்றது. வழமை போன்று நேற்று இரவும் திருவிழா முடிவடைந்த பின்னர், இசை நிகழ்வு ஆரம்பமானது.இதன் போது வயலின் வாசித்துக்கொண்டிருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடன், அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும்,அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/news/140

  16. தேசிய அரசாங்கத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைக்க வேண்டிய மீதமுள்ள அமைச்சு பதவிகள், ஏ.எச்.எம்.பௌசி, ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, பைஸர் முஸ்தபா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை இவர்கள், சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. நாளை பிரதியமைச்சர்கள் சிலர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதுடன், நாளை மறுதினம் மேலும் சில பிரதியமைச்சர்களும் ராஜாங்க அமைச்சர்களும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். அதேவேளை புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் வெளியிடப்பட உள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=140070&category=Tam…

    • 2 replies
    • 511 views
  17. நாடாளுமன்றில் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் என ஒரு தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றச் சட்டங்கள் மற்றும் மரபுகளுக்கு புறம்பான வகையில் எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்தமைக்கு எதிராக, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் பாரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வுகளின் பின்னர் யார் எதிர்க்கட்சியில் இருக்கப் போகின்றார்கள் என்பதனை அடையாளம் கண்டு, அவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்பட உள்ளது. எமது நடவடிக்கைகயை தடுக்க ஆளும் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியு…

  18. தமிழ் மக்கள் விரும்பாத எந்த தீர்வையும் ஏற்கமாட்டோம் – இரா.சம்பந்தன் உறுதிSEP 08, 2015by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் தாம் ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். திருகோணமலையில் நேற்றுமுன்தினம் மாலை நடந்த, கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மக்களின் விருப்பத்துக்கு மாறாக நாம் எப்பொழுதும் நடந்து கொள்ளமாட்டோம். எமது இலக்கை நோக்கி நாம் முடியும் வரை தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்போம். எமது இலக்குக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி யென்பது எப்பொழுதும் தடையாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனக்குத் தரப்பட்ட எதிர்…

  19. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்- என்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாSEP 08, 2015 | 1:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் போர்க்குற்றங்களில், மகிந்த ராஜபக்சவோ கோத்தாபய ராஜபக்சவோ அல்லது உயர் இராணுவ அதிகாரிகளோ ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. தொலைக்காட்சி செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்ச மாறிவிட்டார் என நான் கருதவில்லை. பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வில் மகிந்த ராஜபக்ச எனக்கு அருகில், அமர்ந்திருந்தார். பல தடவைகள் என்னைப் பார்த்து உரையாட முயற்சித்தார் அவர். நான் அவரை பார்க்காமலேயே இருந்தேன். பின்னர் ஹேமா பிரேமதாசவ…

    • 0 replies
    • 1.2k views
  20. ஐ.நா அறிக்கை வெளியான பின்னரே ஜெனிவா செல்வது பற்றி முடிவு – சுமந்திரன்SEP 08, 2015 | 1:33by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்குப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதா என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் ஜெனிவா செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இதுதொடர்பாக ஊடகங்களின் மூலம் நானும் அறிந்து கொண்டேன். தனிப்பட்ட முறையில் சில உறுப்பினர்கள் ஜெனிவா செல்லக் கூடும்…

  21. பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறி – பதவியேற்பு நிகழ்வு மீண்டும் ஒத்திவைப்புSEP 08, 2015 | 1:07by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் புதிய கூட்டு அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. நாளையே 5 அமைச்சர்கள், 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டு அரசாங்கத்தில் இடம்பெறும் 48 அமைச்சர்களில், 43 பேர் ஏற்கனவே பதவியேற்றுள்ளனர். எஞ்சிய 5 அமைச்சர்களும், 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் இன்று பதவியேற்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பதவியேற்பு நிகழ்வு இடம்பெறாது என்றும், நாளையே இவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால ச…

  22. இலங்கையின் 8 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் எதிர்கட்சித் தலைவருக்கான கோரிக்கையும் முன்வைக்கப்படாமை காரணமாக இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவதாக தெரிவித்தார். இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவார். சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நாட்டின் நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.…

    • 53 replies
    • 4.6k views
  23. ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்க தேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிடப்பட்டிருந்தார். அதற்காக தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவரை விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவர் விலக முடியாதென மறுத்துள்ளதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினராக பொன்சேகாவை நியமிக்க முடியாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சு இதுவரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் கீழ் செயற்படுவதனால் பாதுகாப்பு செயலாளர் பதவியை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வழங்குவதற…

  24. கருணா – பிரபாகரன் பிளவிற்கு என்ன காரணம் – உருத்திரகுமாரன் சாட்சி? 08/29/2015 இனியொரு. தென்னிந்தியத் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிய புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் இராணுவத் தளபதி கருணா, தனக்கும் பிரபகரனுக்கும் இடையிலான முரண்பாடு என்ன என்று தெரிவித்துள்ளார். கருணாவின் திடீர் இந்தியப் பிரசன்னம் இந்திய உளவுத்துறை மீண்டும் ஈழப் பிரச்சனையில் மீண்டும் தீவிர அக்கறைகொள்வதை சுட்டிக்காட்டுகிறது. இலங்கையை தயவு தாட்சணியமின்றிக் கூறுபோடும் ஏகாதிபத்தியங்களுக்கு மத்தியில் இந்தியா தனது பங்கை எதிர்பார்ப்பது கருணாவின் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனுக்கும் தனக்கும் இடையிலான முரண்பாடு நோர்வேயில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நோர்வே அ…

  25. வடகிழக்கு கரையோரக் காடுகளில் வெளிநாட்டுப் படையினருடன் சிறிலங்கா படைகள் போர்ப் பயிற்சிSEP 07, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கு- கிழக்கு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்தும், நீர்க்காகம்- 2015 போர்ப் பயிற்சியில், 53 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்பதாக, சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை இணைந்து, கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தி வரும் நீர்க்காகம் போர்ப் பயிற்சி கடந்த 3ஆம் நாள் கொக்கிளாயில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போர்ப்பயிற்சியில், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 2500 படையினர் பங்கேற்கின்றனர். இவர்களில், பெரும்பாலானவர்கள் கொமாண்டோக்களும், சிறப்புப் படையினருமாவர். இவர்களுடன், 245 சிறிலங்கா கடற்படையினரும், 140 வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.