ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோயில் வீதி சிவத்த போக்கடியை சேர்ந்த இருபது வயதுடைய தர்மலிங்கம் ஜனனி என்ற இளம் தாய் தனது பத்து நாள் குழந்தையை கைவிட்டு இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு மரணமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குழந்தையின் பெயரில் ஏற்பட்ட சர்ச்சையே மரணத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கணவர் ஜோர்ஜ் வெஸ்லி என்பவருக்கும் ஜனனி என்கவருக்குமிடையில் 13.09.2014 அன்று திருமணம் நடைபெற்றது. கடந்த 02.08.2015 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகப்பிரசவமாக பெண் குழந்தையொன்று கிடைத்தது. இக்குழந்தைக்கு "ஜோய்லா ஷனோ" என்று பெயர் சூட்டி பதிவு வைத்துள்ளான். கனவர் திருகோணமலை தேவாலயம் ஒன்றில் வேலை செ…
-
- 2 replies
- 500 views
-
-
சம்பந்தன் ஐயா எங்கே எம்மை அழைக்கிறார்? தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற நான்கு கட்சிகள் இணைந்த பரந்த அரசியல் முன்னணி 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, பின்னாளில் மீளமுடியாத சிதம்பர சக்கரத்திற்குள் தான் மாட்டிக்கொண்டு இப்படி தவிக்கும் என்று அப்போது கூட்டமைப்பின் தலைமை கனவிலும் எதிர்பார்த்திராது. விடுதலைப்புலிகளின் அரவணைப்பில் நாடாளுமன்றம் செல்லும் செல்லப்பிள்ளைகளாக, தமிழ்ச்செல்வனின் சொல் கேட்டு தமது காலத்தை ஓட்டிவிடலாம் என்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு – 2009 ஆம் ஆண்டின் பின்னர் தமிழ் மக்களை வழிநடத்துவதற்கு கிடைத்த பொறுப்பெனப்படுவது “விஜயகாந்திற்கு எதிர்க்கட்சித்தலைவர்” பதவி கிடைத்தது போன்றதானது. காகத்தின் தலையில் வைக்கப்பட்ட பனம்பழம். அந்த சுமையை சரியான வழியில்…
-
- 1 reply
- 888 views
-
-
ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும் வர்த்தகருமான தியாகராசா துவாரகேஸ்வரன் மாணவி வித்தியர்வின் வழக்கை திசைதிருப்பும் நோக்கில் சட்டத்தரணி கே. வி. தவராசாவை வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தார் என்ற முறைப்ப்பாட்டையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம சந்தேக நபருக்கு இன்று (புதன்கிழமை) 20 இலட்சம் ருபா பிணை வழங்கியது சந்தேக நபரான துவாரகேஸ்வரன் தனது சட்டத் தொழில்துறை கடமையில் சட்ட விரோதமாக தலையீடு செய்வதுடன் தனது தொழிலுக்கு இடைஞ்சல் செய்யும் நோக்கத்துடன் தரக்குறைவானதும் உண்மைக்குப் புறம்பானதுமான கூற்றுகளை இணையவலைத் தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் பரப்பி வருவதாகவும் அச்செயல்பாட்டினால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன…
-
- 3 replies
- 552 views
-
-
வடகிழக்கில் பிரிந்து செல்லுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் கொதிநிலையில் உள்ள இலங்கை இனச்சிக்கலின் நிலை தெளிவாக புலப்படும். தமிழ் மக்களை தொடர்ந்தும் பிரிந்து செல்லும் நிலைக்கே இலங்கை அரசு தள்ளுகிறது.தமிழர்களை தொடர்ந்தும் இரண்டாம்தரப் பிரஜைகளாகவே வாழ வைக்கும் தமது இனத்தால் ஆளப்படும் அதிகாரத்தின் கீழ் அடிமைப்படுத் தும் உரிமையை மறுக்கும் பேரினவாதப் போக்கு இன்னமும் மாறவில்லை என்பதும் அது மிகப் பலம் கொண்டு இருக்கிறது என்பதும் பெரும் துயரம் தரும் செய்தி மாத்திரமின்றி ஈழத் தமிழ் இனத்தின் இருப்பின் ஆபத்தை உணர்த்தும் செய்தியுமாகும். இன்னொரு இனத்தின் அதிகாரத்தை இன்னொரு இனத்தை ஆளும் இலங்கை வரலாறு மாறவேயில்லை. எனவே இந்த தேர்தலில் சிங்கள தேசத்திற்கு தக்க பதிலை வழங்க வேண்டிய தார்மீக…
-
- 0 replies
- 261 views
-
-
வடகிழக்கில் பிரிந்து செல்லுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் கொதிநிலையில் உள்ள இலங்கை இனச்சிக்கலின் நிலை தெளிவாக புலப்படும். தமிழ் மக்களை தொடர்ந்தும் பிரிந்து செல்லும் நிலைக்கே இலங்கை அரசு தள்ளுகிறது.தமிழர்களை தொடர்ந்தும் இரண்டாம்தரப் பிரஜைகளாகவே வாழ வைக்கும் தமது இனத்தால் ஆளப்படும் அதிகாரத்தின் கீழ் அடிமைப்படுத் தும் உரிமையை மறுக்கும் பேரினவாதப் போக்கு இன்னமும் மாறவில்லை என்பதும் அது மிகப் பலம் கொண்டு இருக்கிறது என்பதும் பெரும் துயரம் தரும் செய்தி மாத்திரமின்றி ஈழத் தமிழ் இனத்தின் இருப்பின் ஆபத்தை உணர்த்தும் செய்தியுமாகும். இன்னொரு இனத்தின் அதிகாரத்தை இன்னொரு இனத்தை ஆளும் இலங்கை வரலாறு மாறவேயில்லை. எனவே இந்த தேர்தலில் சிங்கள தேசத்திற்கு தக்க பதிலை வழங்க வேண்டிய தார்மீக…
-
- 0 replies
- 173 views
-
-
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏற்பாடாகியிருந்த வாக்களிப்பு நிலையங்களில் 13 நிலையங்களின் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார். புங்குடுதீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையம், புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாலயத்துக்கும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் இருந்த இரண்டு வாக்களிப்பு நிலையங்கள், உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்துக்கும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்தில் இருந்த இரண்டு வாக்களிப்பு நிலையங்கள், உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன. அத்துடன், சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலிருந்த வாக்களிப்ப…
-
- 0 replies
- 248 views
-
-
எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலயத்துக்குள் நுழையும் நாற்பக்க வீதிகளிலும் பக்தர்கள் இளைப்பாறும் கொட்டகைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆலயத்தில் சுவாமி வீதியுலா வருகையில் விளம்பரப் பதாகைகள் பார்வைக்குத் தென்படாத வகையில் ஆலய வெளிவீதி வளாகத்தைச் சுற்றி ஆலய நிர்வாகத்தால் மறைப்புக் கட்டப்படுகின்றது. ஆலயத்தில் வெளிவீதியில் மணல் பரப்பும் நடவடிக்கையை மாநகர சபை மேற்கொண்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/151864#sthash.v9LV0iBj.dpuf
-
- 0 replies
- 390 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து, கொள்கைப் பற்றுறுதி மிக்க சி.சிறீதரனுக்கு விருப்பு வாக்கில் முன்னுரிமை வழங்கி ஆதரவு வழங்குமாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தல் தொடர்பாக ஈழத்தமிழினத்தின் பணி எவ்வாறு இருக்கமுடியும் என்பதனை நாங்கள் புலமைசார் பெரியவர்களுடன் கலந்துரையாடி, யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் பலம் குன்றிவிடாதவகையில் செயற்படுவதென எங்களுடைய ஒன்றியம் எடுத்த முடிவை வெளிப்படுத்துவது காலத்தின் பணி என கருதுகின்றோம். தமிழர்களது சுதந்திரப் போராட்ட வரலாறு நீண்டதும் நெடியதுமாகும். சுதந்திர வாழ்விற்கா…
-
- 0 replies
- 622 views
-
-
-
- 29 replies
- 3.5k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற ஒரேயொரு தமிழ் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற விசுவாசத்தை பெற்ற கட்சியாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா கலைமகள் விளையாட்டு திடலில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்று இந்த நாட்டிலும் சர்வதேசத்திற்கும் தெளிவாக தெரியும். அதற்காக ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியாக சாத்வீக ரீதியாக ஒப்பந்தங்களை செய்தோம் ஒத்துழைப்புகளை வழங்கினோம். ஆனால் அது கைக்க…
-
- 18 replies
- 706 views
-
-
"தமிழர்களாகிய நாம் நமது தேசியத்தைக் கட்டிக்காக்கவேண்டும் என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தமிழனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி வாக்களிப்பதன் மூலமே கட்டிக்காக்க முடியும்.'' - இவ்வாறு வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு கிராமங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டு சின்னத்துக்கு தமது வாக்கை வழங்குவதோடு, கண்டிப்பாக மூன்று வேட்பாளர்களையும் தெரிவுசெய்வதன் மூலமே நமது இனத்தின் வெற்றியை உலகுக்கு அறிவிக்கமுடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு தனி வேட்பாளருக்கு மட்டும் தமது வாக்கை மக்கள் வழங்காது, ஏனைய இரண்டு விருப்பு வாக்குகளையும் க…
-
- 3 replies
- 563 views
-
-
சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் இளைஞர்,யுவதிகளாகத் தான் இருப்பார்கள்.வயதிலே இருப்பவர்கள் சமுதாயத்தை இருக்கும் விதத்திலேயே கொண்டு நடத்தவே சிந்திக்கின்றார்கள்.சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.ஆகவே சமுதாயத்தில் மறுமலர்ச்சியை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள் இளைஞர்களே இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். இன்று வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜனநாயகத்தின் முகவரி தேடும் இளையோரின் சங்கமத்தினால் முதலமைச்சருக்கு 25 கோரிக்கைகளை உள்ளடக்கிய பிரகடனம் முன்வைக்கப்பட்டது.அதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இளம் சமூகத்தினர் அரசியலுக்கு வருவது தொடர்பில் உங்கள் …
-
- 6 replies
- 545 views
-
-
தெஹிவளையில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் உட்பட கொழும்பு மாவட்டத்தில் 32 பேர் கடத்தப்பட்டு காணாமற்போனமைக்கு கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் காரணமாக இருந்துள்ளமைக்கும் சான்றுகள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி தெஹிவளையில் 3 தமிழ் இளைஞர்களான மாணவர்களும் அவர்களது இரண்டு முஸ்லிம் நண்பர்களான மாணவர்களும் பயணம் செய்த வாகனத்துடன் கடத்தப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்ட மாணவர்களது பெற்றோர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை இவ…
-
- 0 replies
- 270 views
-
-
இந்த தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கயிமான தேர்தலாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்திரமான ஓர் அரசாங்கமின்றி நாட்டை முன்நோக்கி நகர்த்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிவினைவாத சக்திகள் மீளவும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுகொஸ்லாவியா, கிரேக்கம் போன்று இலங்கையிலும் பிரச்சினைகள் ஏற்படுவதனை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் மக்கள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122862/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 167 views
-
-
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் விபத்தில் ஏற்பட்டது எனவும், நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாகவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குடிபோதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. தாஜூடீன் இரண்டு நண்பர்களுடன் நள்ளிரவு வரையில் மது அருந்தியதாகவும், பின்னர் நண்பர்களை வீடுகளில் சேர்த்ததன் பின்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரவு 11.50 மற்றும் 11.55 ஆகிய மணிகளில் இரண்டு நண்பர்களை வீடுகளில் விட்டு 12.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு …
-
- 0 replies
- 301 views
-
-
இலங்கை அரசால் வடமாகாணத்தில் நியமனம் செய்யப்பட இருக்கும் 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களில்; 332 பேர் சிங்களவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் விரைவில் கிடைக்காவிடில் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் நியமனங்களில் 90 விழுக்காடு சிங்களவர்கள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று புதன்கிழமை (12.08.2015) யாழ் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே, நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட…
-
- 0 replies
- 246 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் ஆதரவளிக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி கொள்கைகளுக்கு ஆதரவளிக்க இரண்டு கட்சிகளும் இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தமது கொள்கைகளிலிருந்து மாறுபடாது, நல்லாட்சிக்கு ஆதவரளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு இந்த இரண்டு கட்சிகளும் ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இனவாத பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வினை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வா…
-
- 0 replies
- 207 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவான தரப்பிற்கு வாக்களிக்க வேண்டாம் என மேல்மாகாண முதலமைச்சரும், கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பின் வேட்பாளருமான பிரசன்ன ரணதுங்க பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். நல்லாட்சி கூட்டத்துடன் இணைந்து கொண்டு அப்பச்சி(தந்தை) இறந்து விட்டதாக பிரச்சாரம் செய்த தரப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்க கூடாது என அவர் கோரியுள்ளார். எதிர்வரும் 17ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் மஹிந்தவை பிரதமராக்க வேண்டுமென கோருவோரை மட்டும் பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். நாட்டில் பாதாள உலகக் குழுவொன்றே ஆட்சி செய்து வருகின்றது எனவும், அதனை விரட்டியடிப்பது பெரிய புண்ணிய…
-
- 0 replies
- 178 views
-
-
-
"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சியமைக்க முடியாது. எமது கட்சி பெறப்போகும் பத்து ஆசனங்களைக் கொண்டுதான் ஐக்கிய தேசியக் கட்சி அரசு பலமடையும்.'' - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். திருகோணமலையின் பல இடங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "15 வருடங்களாக நாம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கப் போராடினோம். ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தடவைகள் நாம் பந்தயம் கட்டிய குதிரை வெல்லவில்லை. ஆனால், இந்த முறை நாம் பந்தயம் கட்டிய குதிரை வென்றதோடு அதில் சவாரி செய்யவும் செய்கிறோம். மஹிந்தவின் ஆட்சியில்…
-
- 0 replies
- 245 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவவைகள் பல மில்லியன்கள் கணக்கான பணத்தை வழங்கியுள்ளார். முதல் தடவை 200 மில்லியன் ரூபா பணத்தையும், 2005 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் நிறுவனம் ஒன்றின் ஊடாக 2000 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியிருந்தார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 2005ம் ஆண்டு விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருந்ததாகவும்,…
-
- 0 replies
- 840 views
-
-
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டி முறையில் எமக்கு ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்று நாம் கேட்டுள்ளோம். இதில் புரட்சி எதுவும் இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வவுனியா கலைமகள் விளையாட்டு திடலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்று இந்த நாட்டிலும் சர்வதேசத்திற்கும் தெளிவாக தெரியும். அதற்காக ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியாக மற்றும் சாத்வீக ரீதியாக ஒப்பந்தங்களை செய்தோம். ஒத்துழைப்புகளையும் வழங்கினோம். ஆனால் அது கைகூடவில்லை. வடக்கு க…
-
- 0 replies
- 195 views
-
-
mments - 0 Views - 305 ரஸீன் ரஸ்மின் கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது காணாமல் போன 9 வயது சிறுவனொருவன், 21 வயது இளைஞராக அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று, முல்லைத்தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது. முல்லைத்தீவு, குமாரபுரத்தைச் சேர்ந்த ஜெகநாதன் குருதேவன் என்ற இளைஞரே இவ்வாறு வீடு திரும்பியுள்ளார். சுனாமியின் போது தனது 9 வயதான மகன் காணாமல் போய்விட்டார் என அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் பதிவுகளையும் முறைப்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே அவர், நேற்று வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பில் மீண்டு வந்துள்ள அவ்விளைஞர் கூறியுள்ளதாவது, 'சுனாம…
-
- 0 replies
- 577 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர் சுமந்திரனின் பிரச்சாரக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளினில ஈடுபட்ட முக்கிய எடுபிடியொருவரது வீடு நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளது.கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியினில் நேற்று சுமந்திரன் பிரச்சார கூட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளினில் ஈடுபட்டிருந்த நாதன் என்வரது வீடே தாக்கப்பட்டுள்ளது.கூட்டம் ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் தாக்குதலாளிகள் வீட்டின் மீது முதலில் தாக்கியுள்ளனர்.பின்னர் மீண்டும் ஒரு மணிநேர இடைவெளியின் பின்னர் மீண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலாளிகள் வீட்டினுள் புகுந்த தாக்க முற்பட்டவேளை பெண்கள் அவலக்குரல் எழுப்பியதாகவும் அதையடுத்து அவர்கள் வெளியேற விட்டதாக அயலவர்கள் கூறுகின்றனர்.இதையடுத்து கூட்டத்தி…
-
- 0 replies
- 861 views
-
-
தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக அணிதிரண்டு வாக்களியுங்கள்! எனது அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இளைஞர்களே, யுவதிகளே! தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் யாருக்கு வாக்களிப்பது, யாரை தெரிவு செய்தால் உங்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அவர்கள் வாழவைப்பார்கள் என்பது குறித்து நீங்கள் ஓர் தீர்மானத்திற்கு வந்திருப்பீர்க்ள் என நம்புகின்றேன். உங்களது தீர்மானத்தில் நான் எந்தவொரு செல்வாக்கினையோ அல்லது தலையிட்டினையோ செய்யப்போவதில்லை. இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன். ஆரோக்கியமான அகமுரண்பாடுகள் அவசியமானவையாயினும்கூட, ஒரே கட்சிக்குள் இருந்து கொண்டு ஒரே கொள்…
-
- 0 replies
- 434 views
-