Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. A}இப்போது வாக்கு கேட்கும் ஒரு கட்சியினரது கோஷம் “ஒரு நாடு இரு தேசம் ” என்பதாகும்.தேசம் என்பது வடமொழிச்சொல்.அதற்கு சரியான தமிழ் சொல் நாடு என்றே அர்த்தப்படும்/அப்படியானால் ஒரு நாடு இரு நாடு என்றா கூறுகின்றனர்??இரு நாடுகளை ஒரு நாடு என்று கோர வேன்டிய தேவை எமக்கு இல்லை.பொய் உரைத்து மக்களை ஏமாற்றக்கூடாது:- திரு.சிறிதரன் சில தினங்களுக்கு முன் நல்லூர் செட்டித்தெருவில் பாராளுமன்ற பிரச்சாரக்கூட்டத்தில் கூறியது{உதயன் 03/08/15} B} இந்த நாட்டிலே இரு தேசங்கள் இருக்கின்றன. அவை சிங்கள மற்றும் தமிழ் தேசம். இந்த தமிழ் தேசத்திலே வாழுகின்ற நாங்கள் எங்கள் மண்ணிலே வாழுகின்ற உரிமையினைக் கேட்கின்றோம்.வடக்கு கிழக்கு என்பது வரலாற்று ரீதியாக நாங்கள் தோன்றி வளர்ந்த மண். இந்த வடக்கு கிழக்கு இணைந்…

  2. ”அங்கஜன் அண்ணா” – “அங்கஜன் அண்ணா” எனும் ஸ்ரீகாந்தி யார்? August 04, 201510:52 pm யாழிற்கு கடந்த 28ம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா திடீர் விஜயம் மேற்கொண்ட போது நல்லூர் ஆலய முன்றலில் வடக்கு கிழக்கை சேர்ந்த காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தார்கள். அந்த போராட்டத்தில் ஒரு பெண் முன்னின்று ஒழுங்கு படுத்தி குரல் கொடுத்தார். குறித்த பெண்ணினை அதற்கு முந்திய காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்களில் எவரும் கண்டதில்லை. ஆனால் அந்த பெண்ணே போராட்டத்தை வழி நடத்தினார். பின்னர் ஜனாதிபதியினை சந்திப்பதற்கு என கோவில் வீதியில் உள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.த…

    • 3 replies
    • 802 views
  3. இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணாமல் போனதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழ் அரசியல் தலைமைகள் மீதான அதிருப்தியின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். செவ்வாய்கிழமையன்று, திருகோணமலை சிவன் கோவில் முன்பாக, மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டத்தின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிப்பு, பாதுகாப்பு போன்ற விடயங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் செயல்பாடுகள் மீதான அதிருப்தி ஆகியவற்றின் காரணமாகவே இந்த முடிவ…

    • 2 replies
    • 672 views
  4. ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்ற எமது கட்சியின் கொள்கையில் தேசம் என்பதை தனிநாடு என்ற ரீதியில் சில அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் திரிபுபடுத்திக் கூறி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திங்கட்கிழமை (03) தெரிவித்தார். ஒரு நாடு இரு தேசம் என்பது வெற்றுக் கோஷம் எனவும் அது அர்த்தமில்லாது எனவும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியிருந்தார். இந்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'இது அடிப்படையில் நேர்மையில்லாத பிரசாரம். இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரு நாடு, ஒரு தேசம் என்பதை வலியுறுத்தி வந்தது. பலாலி வ…

  5. யாழ். அரியாலை பகுதியில் ஒரு தொகுதி ஷெல்கள் பொலிஸாரினால் மீட்பு! [ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 04:01.21 PM GMT ] யாழ்ப்பாணம்- அரியாலை கிழக்கு பூவரசம் தீவு பகுதியில் இடம்பெற்று வந்த வெடிமருந்து வியாபாரம் அப்பகுதி மக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் அங்கிருந்து ஒரு தொகுதி ஷெல்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த தீவுக்கு பெருமளவு ஷெல்கள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஷெல்களில் உள்ள வெடிபொருட்கள் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வெடிமருந்துகள் டைனமற் தயாரிப்புக்காக மீனவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் மற்றும் விசேட அதி…

    • 0 replies
    • 401 views
  6. சம்­பந்­த­னிடம் எப்­போதும் ஒரே கொள்­கையும் வெளிப்­ப­டை­யான செயற்­பா­டுமே உள்­ளது. ஆகவே சம்­பந்­தனை சந்­தே­கப்­ப­டாது நம்ப முடியும். ஆனால் ரணில் மிகப்­பெ­ரிய சூழ்ச்­சிக்­காரர். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ரணிலை நம்­ப­மு­டி­யாது என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார். வடக்கில் இருப்­பவை நாய்க்­குட்­டிகள் அல்ல புலிக்­குட்­டிகள் என்­பதை மீண்டும் ஒரு­முறை கூட்­ட­மைப்­பினர் நிரூபித்து விட்­டனர் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டா…

    • 0 replies
    • 442 views
  7. சிறிலங்கா ஒற்றையாட்சி நாடாகவே இருக்க வேண்டும் – என்கிறார் மைத்திரிAUG 05, 2015 | 2:52by கி.தவசீலன்in செய்திகள் எதிர்கால சவால்களை முறியடிப்பதற்காக, சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி நாடாகவே இருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் பிராந்தியத் தலைவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், பிராந்திய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்களில் அவர்கள் எவ்வாறு கரிசனை கொண்டுள்ளனர் என்பதை பார்க்கிறேன். அனைத்துலக சக்திகள் பூகோள, பிராந்திய, தேசிய பாதுகாப்புத் தொடர்பாக, எவ்வாறு சிந்திக்கின்றன என்பதை நானும் அறிவேன். அனைத்துலக நட்பு நாடுக…

    • 0 replies
    • 365 views
  8. டெஸ்மன் டி சில்வாவின் தொழில் நடத்தை குறித்து பிரித்தானிய சட்ட நியமச் சபை விசாரணைAUG 05, 2015 | 2:15by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர் குழுவின் தலைவரான சேர் டெஸ்மன் டி சில்வாவின் தொழில் நடத்தை குறித்து பிரித்தானியாவின் சட்ட நியமச் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சிறிலங்காவில் அமைதி மற்றும் நீதிக்கான அமைப்பின் முறைப்பாட்டின் பேரில், சிறிலங்காவில் இவரது பங்கு தொடர்பான இந்த விசாரணை கடந்த ஜூலை 20 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட பரிஸ்டர்களால் மேற்கொள்ளப்படும் இந்த விசாரணை ஐந்து வாரங்களில் நிறைவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் ச…

    • 0 replies
    • 668 views
  9. சிறிலங்கா தேர்தலைக் கண்காணிக்க 9 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது கொமன்வெல்த் AUG 05, 2015 | 1:31by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் தேர்தலைக் கண்காணிக்க, மோல்டா நாட்டின் முன்னாள் அதிபர் கலாநிதி ஜோர்ஜ் அபேலா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட கொமன்வெல்த் கண்காணிப்புக் குழுவை அனுப்பி வைப்பதாக, கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார். சிறிலங்கா தேர்தல் ஆணையாளரின் அழைப்பின் பேரில், எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள தேர்தலைக் கண்காணிக்க இந்தக் குழுவை அனுப்பி வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களின் போது, சிறிலங்காவுக்கு கொமன்வெல்த் ஆதரவளித்த வலுவான வரலாறு உள்ளது. இந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க கொமன்வெல்த் அழைக்கப்பட…

    • 0 replies
    • 282 views
  10. ஐ.நாவின் எத்தகைய உதவிகளும் வட மாகாணசபை ஊடாக வழங்கப்படாது – சிறிலங்கா அரசாங்கம்AUG 05, 2015 | 0:32by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கு மாகாணத்தில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐ.நாவினால் மேற்கொள்ளப்படும் எத்தகைய உதவிகளும், வடக்கு மாகாணசபை ஊடாக வழங்கப்படமாட்டாது என்றும், மத்திய அரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சு ஊடாகவே வழங்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளின் பேரில், வடக்கு மாகாணத்துக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க ஐ.நா முடிவெடுத்ததாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் சார…

    • 0 replies
    • 524 views
  11. தன்னாட்சிக்கும் நீதிக்கும் அழுத்தம் கொடுக்கும் இலங்கைத் தமிழர்கள் – ஏஎவ்பி AUG 05, 2015by கார்வண்ணன்in கட்டுரைகள் தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான, பரந்துபட்ட தன்னாட்சி உரிமை, சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமான விவகாரமாக இருக்கும். இவ்வாறு, ஏஎவ்பி செய்தி நிறுவனத்தக்காக எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் அமால் ஜெயசிங்க. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் கார்வண்ணன். வீதித்தடைகளும், இராணுவ சோதனைச் சாவடிகளும் காணாமற் போய்விட்டன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அந்தப் பகுதிக்கு பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டன. ஆனால், சிறிலங்காவின் வடக்கில் உள்…

    • 0 replies
    • 612 views
  12. பூநகரியில் புதிதாக முளைத்தது பௌத்த வழிபாட்டுத் தலம்AUG 04, 2015by VANNIin செய்திகள் கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 66-1ஆவது பிரிகேட் தலைமையகத்துக்கு அருகிலேயே, இந்த புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தை 66ஆவது டிவிசனின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விக்கிரமரத்ன கடந்த மாதம் 29ஆம் நாள் திறந்து வைத்துள்ளார். 66-1ஆவது பிரிகேட் தளபதி லெப்.கேணல் எக்கநாயக்கவின் உத்தரவின் பேரில், அந்தப்படைப்பிரிவில் உள்ள அதிகாரிகளின் நிதியுதவி மற்றும், படையினரின் மனித வள உதவியுடன் இந்த வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளது.…

  13. இலங்கையின் முக்கிய அரசியல்கட்சிகள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சமஷ்டிக்கோரிக்கையை நிராகரித்துள்ளதாக இந்தியாவின் ஆங்கில நாளிதழ் ஓன்று தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முண்ணனி மற்றும் ஜே.விபி ஆகிய இதனை நிராகரித்துள்ளதாக அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்தியுள்ள சில பதங்கள் வேறு விதமாக அர்த்தப்படுத்தப்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். சமஷ்டி அவ்வாறன சொல், நீங்கள் அதனை பயன்படுத்தினால் மக்கள் பிரிவினை என கருதுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்க…

  14. கூட்டமைப்பு உருவாக்கிய ஜனநாயக வெளியில் அடிவருடிகள்: வட மகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் கிளிநொச்சி அக்கராயன், ஸ்கந்தபுரம் பொதுச்சந்தை வளாகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் இலக்கம் 10ல் போட்டியிடுபவருமான சி.சிறீதரன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். இதில் கலந்து கொண்ட வடக்கு மகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் உரையாற்றுகையில், நாம் முக்கியமானதொரு தேர்தலை எதிர்கொண்டு நிற்கின்றோம். இந்தநிலையில் கடந்த காலங்களில் திறந்தவெளி சிறைச்சாலையாக இருந்த எம் மண்ணில் பல்வேறு இராணுவ அழுத்தங்கள் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய கூட்…

  15. இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை ஜநா முன்னெடுக்குமானால் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களிற்கு பதிலளிக்க தாம் விசாரணைக்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாக ஜனநாயகப்போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தினில் இன்று இடம்பெற்ற அவ்வமைப்பின் பத்திரிகையாளர் மாநாட்டினில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அதன் ஊடகப்பிரிவினர் இனப்படுகொலைக்கான விசாரணை அறிக்கையினில் விடுதலைப்புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாக கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொள்ளப்படும் விசாரணை சர்வதேச விசாரணையானால் நாம் அதற்கு முன்னிலையாகி விளக்கமளிக்க தயாராக உள்ளோம். ஏற்கனவே நாம் அனைவரும் நீதிமன்றினில் முன்னிலையாகி புனர்வாழ்வு,தண்டனையென அனைத்தையும் அனுபவித்தே வெளிய…

    • 1 reply
    • 470 views
  16. தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்றவர்களை நிராகரித்து தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பில் பகிரங்கமாகவே நான் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றேன். அதே போன்று அவர்களை மக்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்த் தேசியத்தைக் காக்கின்றவர்களிற்கு வாக்களிக்க வேண்டும். யாழ் சுழிபுரத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போ…

    • 0 replies
    • 507 views
  17. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளருக்கு எதிராக யாழில் மக்கள் கிளர்ச்சி August 04, 201511:10 am யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரால் காணாமல் போனவர்களுக்கான கலந்துரையாடல் என அழைத்து, அரசியல் நடத்த முயன்ற கட்சியின் ஆதரவாளருக்கு எதிராக காணாமல் போனவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.நகரில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் பதிவு செய்யப்படுவதாக கூறி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து பல இடங்களிலிருந்தும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வருகைதந்திருந்தனர். குறித்த பதிவு தொடர்பான கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் நாடகம் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் குழப்பமடைந்தபோது, கட்சியின் வேட்பாளர் அங்கஜனால் உணவு தயார்…

    • 0 replies
    • 395 views
  18. நல்லூர் செட்டித்தெருவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் பிரசாரக்கூட்டம் ஒன்றில் பேசிய வேட்பாளர் ஸ்ரீதரன் அவர்கள் 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் தன்னை கைது செய்து தாக்கியதை விட அப்போதிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர் தன்னைத்தாக்கியது தனக்கு இன்னும் வலித்துக்கொண்டிருப்பதாக ஓர் புதிய கதையை அவிழ்த்து விட்டு அனுதாபம்தேட முற்பட்டுள்ளார். இது பத்திரிகையிலும் ஓர் செய்தியாக வெளிவந்திருக்கிறது. இதன் காரணமாக இதற்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமும் செய்திக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய தேவையும் எமது கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. 2010ம் ஆண்டு தேர்தலின்போது இந்த வலியைப்பற்றி பொதுமக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் ஏன்; அவருக்கு ஏற்படவில்லை? அத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக சுரேஸ்பிரேமச்சந்தி…

    • 0 replies
    • 924 views
  19. தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்றவர்களை நிராகரித்து தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் August 04, 201512:55 pm தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்றவர்களை நிராகரித்து தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பில் பகிரங்கமாகவே நான் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றேன். அதே போன்று அவர்களை மக்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்த் தேசியத்தைக் காக்கின்றவர்களிற்கு வ…

    • 0 replies
    • 279 views
  20. சிறிலங்காவின் எதிர்காலம் பின்நோக்கித் திரும்புகிறதா?AUG 04, 2015 | 11:29by நித்தியபாரதிin கட்டுரைகள் ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினால், அவர் தனது பழைய அரசியல் முறையைத் தொடர்ந்தும் பின்பற்றுவார். இதனால் நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது. இவ்வாறு foreignpolicy ஊடகத்தில் TAYLOR DIBBERT எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகஸ்ட் 17ல் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் குருநாகல மாவட்டத்திற்கான வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார…

    • 0 replies
    • 464 views
  21. மஹிந்தவை விடவும் ரணிலுக்கு மக்கள் ஆதரவு அதிகம் - கருத்துக் கணிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விடவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிக மக்கள் அதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.நாடு முழுவதிலும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் குறித்த வாக்காளர்களின் நிலைப்பாடு, கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புக்களின் கீழ் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் பொதுத் தேர்தல் நீதியானதும் சுயாதீனமானதுமாக நடைபெறும் என 67 வீதமானவர்கள் கருதுவதுடன், 4 வீதமானவர்கள் சுயாதீனமாக நடைபெ…

    • 2 replies
    • 742 views
  22. தேர்தலின் பின்னரான கட்சித் தாவல்களை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்சித் தாவல்களில் ஈடுபடுவதனை தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது என ஆணைக்குழுவின் செயலாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் கட்சித் தாவல்களை தடுக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல்களை நடாத்த சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் ஒரு கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டி அதன் பின்னர் கட்சித் தாவல்களில் ஈடுபடுவதனை தடுக்க மனித உரிமை ஆணைக்குழுவினால் எவ்வித நடவடிக்கைய…

  23. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரப் பணிகளிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோதபாய ராஜபக்ஸவுடன் ஏற்படுத்திக் கொண்ட முரண்பாடே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட போது முக்கியமான பங்கினை வகித்து வந்த பசில் ராஜபக்ஸ, தற்போது முழுமையாக தேர்தல் பொறுப்புக்களிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பின் போது கோதபாய ராஜபக்ஸவுடன் ஏற்படுத்திக் கொண்ட முரண்பாடே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பசில் ராஜபக்ஸ தனது ஆதரவாளர்களான ஜகத் வெல்லவத்த, தம்ம திஸாநாய…

  24. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாங்கள் நினைத்தபடி சமஷ்டி முறையை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய கூட்டமைப்பு நாட்டின் இறமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் யோசனையையும் முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மாறாக ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் மகிந்தராஜபக்ச அரசாங்கமே சில யோசனைகளை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் ஓற்றையாட்சி முறை குறித்து உறுதியாகவுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 1949 முதல் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர…

  25. தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானித்துள்ளதாக கிழக்கிலும் காணாமல் போனோரது உறவுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இன்று கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். திருகோணமலை மாவட்ட சிவில் சமூகம் மற்றும் திருகோணாமலை மாவட்ட காணாமல் போனோர் சங்கத்தினால் இக்கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. புதிய அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.தமது உறவுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறும், தமது கோரிக்கை தொடர்பில் விரிவான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. பல அரசியல்வாதிகள் காணாமல்போனோர் தோடர்பில் கதைக்கின…

    • 1 reply
    • 917 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.