ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உதறித் தள்ளிவிட்டு முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு வழங்கினார் வடக்கின் முதலமைச்சர் !! நடைபெறப் போகும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில், வடக்கின் முதலமைச்சர் மேற்போந்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனநாயக வழிக்கு வந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் கட்சியான ஜனநாயகப் போராளிகளின் கட்சியின் கொள்கைகளுக்கு விக்னேஸ்வரன் ஆதரவான வெளிப்பாட்டைத் தெரிவித்து தனது கருத்தை வெளியிடுள்ளார். வடக்கு மாகாணத்தில் அதிகளவான அரசியல் கட்சிகளும…
-
- 2 replies
- 850 views
-
-
மகிந்த பிரதமராவதால் இந்தியாவுக்கு என்ன பாதகம்?JUL 31, 2015 | 7:02by நித்தியபாரதிin கட்டுரைகள் ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராகினாலும் கூட, இவர் அதிபராகப் பதவி வகித்த போது செயற்பட்டது போன்று பலமுள்ள ஒருவராகத் தன்னைக் காண்பிக்க முடியாது. இவ்வாறு dailyo இணையத்தளத்தில், SEEMA GUHA எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னமும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு பல்வேறு எதிர்வுகூறமுடியாத அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. சிறிலங்காத் தீவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மிகவும் வெற்றிகரமாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியைப் ப…
-
- 0 replies
- 331 views
-
-
பொதுத் தேர்தல் குறித்து அரச புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட கணிப்பீட்டு ஆய்வறிக்கைக்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும், ஆசன எண்ணிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி சற்று முன்னிலை வகிக்கிறது. வடக்கு கிழக்கு, மற்றும் மாத்தளை, கேககாலை ஆகிய மாவட்டங்களின் முடிவுகள் நிச்சயமற்றிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி 90 ஆசனங்களைக் கைப்பற்றும் எனவும், 12 முதல் 14 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெறும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 81 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, 10 முதல் 12 தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெறும் நிலை …
-
- 0 replies
- 994 views
-
-
விக்னேஸ்வரன் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம்: இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்ற வட மாகாண முதல்வரின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, கூட்டமைப்பினர் அமைச்சரவை பதவிகளை ஏற்கக்கூடாது என விரும்புவதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லையென்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில், "கூட்டமைப்பினர் என்னை வட மாகாண முதலமைச்சராகத் தேர…
-
- 6 replies
- 1.2k views
-
-
பொலிசாரிக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீற்பு. August 01, 20157:42 am பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதியொருவர் பொலிசார் தன்னிடம் சொல்லச் சொல்ல தானே தனது கைப்பட எழுதியதாகக் கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சான்றாக ஏற்க முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்து, அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்துள்ளார். கடந்த 1995 ஆம் ஆண்டு அரச விரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை பொலிசார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அப்போது அந்தக் கைதியினால் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் எனக் கூறி பொலிசார் வாக்மூலம் ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர…
-
- 0 replies
- 350 views
-
-
இருபது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாருங்கள். 2016 இல் தீர்வைத் தருகிறோம் என்ற பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கும் கருத்து மீண்டும் ஒரு தடவை தமிழர்களை உசுப்பேத்தி, நம்பவைத்து வாக்குகளைச் சுரண்டும் தந்திரமின்றி வேறில்லை என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஊடகவியலாளருமான என்.வித்தியாதரன் குற்றம் சுமத்தினார். 2016 இல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான தனது திட்டம், தந்திரோபாயம், உத்தி குறித்தெல்லாம் வெளிப்படையாக எதுவும் சொல்லாமல் மீண்டும் ஒரு தடவை ஏமாற்று வாக்குறுதிகள் மூலம் பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்ற அவர் எத்தனிக்கின்றார். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட…
-
- 1 reply
- 764 views
-
-
யாழில் என் மக்களே யாருக்கு வாக்களிக்கப் போகிறோம்? TNA காட்டும் தும்புத் தடிக்கா? இல்லை, மக்களாட்சிக்கான போராளிகளுக்கா? தயவு கூர்ந்து இவர்களின் கருத்துக்களையும் செவிமடுங்கள், தியாகங்களுக்கு விலையாக உங்கள் வாக்குகளை கேட்கவில்லை! அவர்களின் விழுப்புண்ணுக்கு விலையாக உங்கள் வாக்குகளை இரங்கவில்லை! ஆடிப்பழகிய கால்கள், சித்திரம் தீட்டிப் பழகிய கைகள் ஓயாதது போல எங்களுக்காக போராடி பழகியே போன போராளியாக கேட்பது உங்கள் வாக்குகளை, கொடுப்பதால் குறையப் போவது எதுவுமில்லை, சிலந்திக்கு வாக்களியுங்கள், ஒரு சந்தர்பம் கொடுங்கள்! Please help them, please please.. http://www.newjaffna.com/moreartical.php?newsid=39606&cat=nnews&sel=current&subcat=1 http://www.newj…
-
- 3 replies
- 717 views
-
-
தமிழ் சமூகத்தோடு இணைந்து போகின்ற எழுச்சி பெற்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர், முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் புதிய யுகம் பிறந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சகோதர தமிழ் சமூகத்தோடு முரண்பாட்டு அரசியலைச் செய்யாமல் கைகோர்த்துக் கொண்டு போகின்ற எழுச்சி பெற்ற வியூகமாக அது இருக்கும். சரித்திரத்திலே அதிகாரத்தில் பங்கெடுக்காமல் இதுவரை ஒதுங்கி தங்களுடைய அரசியலை தனியே செய்து கொண்டிருந்த தமிழ் அரசியல் த…
-
- 0 replies
- 494 views
-
-
பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரமளவில் அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸவிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக உயர் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வசீம் தாஜூடீன் மரணம் விபத்து அல்ல எனவும், அது படுகொலைச் சம்பவம் எனவும் கடந்த ஜூலை மாதம் 27ம் திகதி நீதிமன்றில், புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக தாஜூடீனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் கடந்த 28ம் திகதி உத்தரவிட்டிருந்தார். 2012ம் ஆண்டு மே…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐநா தீர்மானம் 2012 - சுமந்திரன் சொன்னது என்ன?
-
- 0 replies
- 427 views
-
-
புத்தகத்தை தோள்களில் சுமந்து பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில் வடக்கில் உள்ள பல சிறுவர்கள் போதைப் பொருள் சுமப்பதாக குறிப்பிடும் குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் பார்த்தீபன் யுத்தத்தில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள் இராணுவத்திற்காய் போதைப் பொருளை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவதாக இக் கட்டுரையில் பதிவு செய்கின்றார். இந்த நடவடிக்கை இன்றைய ஈழத்தில் சிறுவர்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் இனஅழிப்பு நடவடிக்கை என்றும் விளக்குகிறது இக்கட்டுரை. இன அழிப்பு என்பது 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றதைப்போன்று கொத்துக்கொத்தாக கொல்லப்படுவது மாத்திரமல்ல. பெண்கள் வன்புணர்வாக்கி படுகொலை செய்யப்படுவதும், சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றழிப்பதும் காணாமல் ப…
-
- 0 replies
- 288 views
-
-
வடக்கு குறித்த விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு ஆதரவளிக்கப்படும் - ஐ.நா குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனினால் வடக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. தொழில்நுட்ப மற்றும் நிதியியல் ரீதியான உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையை முடிவுக்குக்கொண்டு வருதல், சமாதானத்தை கட்டியெழுப்புதல், இடம்பெயர் மக்களை ம…
-
- 0 replies
- 353 views
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் சந்திரகாந்தன் சந்திரநேரு வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/JjOWQxYT
-
- 0 replies
- 745 views
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/YyZDdlNG
-
- 0 replies
- 968 views
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர் ஜனகன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/Q2MzNlNm
-
- 0 replies
- 772 views
-
-
இராணுவத்தினர் வலி.வடக்கு மண்ணில் நீண்டகாலம் உண்டு, உறங்கி வாழ்ந்து விட்டனர். தாங்கள் சுகபோகமாக வாழ்ந்த அந்த மண்ணை விட்டு வெளியேற இராணுவத்தினர் விரும்பவில்லை. - இப்படித் தெரிவித்திருக்கிறார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் தோப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொணடு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு வற்புறுத்த முடியவில்லை. இதனால்தான் வலி. வடக்கில் மக்களை மீளக்குடியமர்த்த முடியாது உள்ளது. எனினும் இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.malarum.com/ar…
-
- 2 replies
- 457 views
-
-
யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளின் உற்பத்தியை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளார். வட்டு. கிழக்கு சித்தங்கேணியில் இயங்கும் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பெண்களுக்கான ஒரு தொழில் முயற்சியாகவே இந்த இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்தும் திட்டங்களில் ஒன்றாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதணிகளின் உற்பத்திக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல், சந்தைப்படுத்தல் ஆலோசனைகளை வழங்குதல், மூலப்பொருள்களைக் கொள்வனவு செய்தல் போன்ற தேவைகளுக்கென ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் 3.45 மில்லியன் ரூ…
-
- 3 replies
- 1k views
-
-
கொழும்பு புளுமெண்டல் பிரதேசத்தில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். நிதியமைச்சரும், கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருமான ரவி கருணாநாயக்க தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வந்து, திரும்பிய பின்னரே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.srilankamirror.com/news/item/3747-2015-07-31-06-51-07
-
- 2 replies
- 938 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியே அவசியம் என்பதே வடமாகாண முதலமைச்சரின் எண்ணமாக உள்ளதாம் என்கிறார் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன். யாழில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பரப்புரை பொது கூட்டம் வெள்ளிக்கிழமை சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என பகிரங்கமாக அறிக்கை விடுத்துள்ளார். சமாதான முயற்சி மூலம் தீர்வை காணக்கூடியவர்களுக்கு அவர் மக்களை கோரி இருக்கின்றார். அடுத்த ஆட்சியில் அரசியல் தீர்வினை காண்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அவசியம் ஆகும். இதனால் எமது பிரதிநித…
-
- 1 reply
- 351 views
-
-
யுத்த காலத்தில் காணாமல் போக செய்யப்பட்டவர்களை கண்டுபிடிக்கவும், அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் விசேட செயலணி ஒன்றை உருவாக்குவோம். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவோம். இதேபோன்று யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். இவ்வாறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று யாழப்பாணம் - நல்லூர் சங்கிலியன் தோப்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்ட வாக்குறுதிகளை வழங்கினார். அதில் அவர் மேலும் பேசியவை வருமாறு: சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் கசப்புணர்வுகளை இல்லாமல் செய்து இனங்களுக்கு மத…
-
- 0 replies
- 243 views
-
-
போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளியான மொஹமட் முஜாஹித்திற்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கும் தொடர்பு உள்ளது. ஆகவே, இது தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாட்டிற்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சரும் கம்பஹா மாவட்டத்தின் ஐ.தே.க.வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்தார். போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 25 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்விபரங்களை ஔடத கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நிஷாந்த சமரசிங்க உடனடியாக வெளியிட வேண்டும்.இல்லையேல் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவி…
-
- 2 replies
- 330 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேல்தல் பரப்புரைகளை முடக்குவதற்கு அரசாங்கம் சில சதி முயட்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் ஆதரவாளர்களை இலக்கு வைத்துள்ள பொலிஸார் அவர்களுக்கு பல்வேறு தெந்தரவுகளை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சாவகச்சேரி பகுதிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 25 பேர் கொண்ட குழு சென்ற வேளை அவர்களை பொலிஸார் கைது செய்து, தடுத்து வைத்துள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களை பொலிஸார் கடுமையாக அச்சுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பதிவு இணையத்திற்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ;- சட்டத்தினை மீறி நாங்கள் எந்த பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இன…
-
- 1 reply
- 633 views
-
-
பொலிகண்டி, ஆலடி வைரவர் கோயிலடி பகுதியில் 9 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற 43 வயதுடைய சந்தேகநபரை ஓகஸ்ட் மாதம் 12ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேசராசா வியாழக்கிழமை (30) உத்தரவிட்டார். சிறுமியின் அயல்வீட்டுக்காரரான சந்தேகநபர், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்திருந்த சிறுமியை தாய் விசாரித்த போது, நடந்தவற்றை சிறுமி தாய்க்கு கூறியுள்ளார். இது தொடர்பில் சிறுமியின் தாய் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (29) முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய ப…
-
- 0 replies
- 355 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீதான மக்களது நம்பிக்கை வேகமாக இழக்கப்பட்டு வரும் அதே வேளை விருப்பு வாக்கினை பெறுவதற்கான குடுமிப்பிடி சண்டை உச்சமடைந்துள்ளது.அவ்வகையினில் நேற்றிரவு கிளிநொச்சி வட்டக்கச்சியினில் நடைபெற்ற பிரச்சார கூட்டமொன்றினில் சுரேஸ்பிறேமச்சந்திரனின் ஆட்கள் சிறீதரனின் குண்டர்களினால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த சுரேஸின் ஆதவாளர்கள் பின்னர் இலங்கை காவல்துறையினரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி நகரினில் கொண்டுவந்துவிடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் நேற்றைய தினம் சிறீதரன் -சுமந்திரன் -மாவை பங்கெடுத்த கூட்டமொன்று கிளிநொச்சி வட்டக்கச்சியினில் நடைபெற்றது.சிறீதரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்த வ…
-
- 4 replies
- 467 views
-
-
தலதா மாளிகையில் பறந்த சிங்களக் கொடி! [Thursday 2015-07-30 19:00] தலதா மாளிகையில் இன்று திரிபு படுத்தப்பட்ட தேசிய கொடியான சிங்களக் கொடி, கம்பத்தில் ஏற்றப்பட்டது பெரும் சர்ச்சை யினை ஏற்படுத்தியுள்ளது.இன்று தலதா மாளிகைக்கு சென்ற சிங்களவர்கள்த சிலர் இலங்கையின் தேசிய கொடியினை கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கியதுடன், திரிபு படுத்தப்பட்ட தேசிய கொடியினை ஏற்றுவதற்கும் முயற்சித்தனர். இதன்போது குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸாருக்கும் பௌத்த மதகுருமார்களுக்கும் இடையில் பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அத்துடன், இதன் காரணமாக குறித்த இடத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. எனினும், பௌத்த மதகுருமார் தலதா மாளிகையின் கொடிக்கம்பத்தில் திரிபு படுத்தப்பட்ட தேசிய கொடியினை ஏற்றிய…
-
- 1 reply
- 403 views
-