ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
ஏகலைவனின் கட்டை விரலை துரோணர் பெற்றதில் தவறில்லை [ திங்கட்கிழமை, 20 யூலை 2015, 10:21.26 AM GMT ] [ வலம்புரி ] துரோணாச்சாரியார் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. பாரத இதிகாசத்தில் துரோணர் மிகச் சிறந்த வில்வித்தை நிபுணர். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குரு வாக இருந்து வில் வித்தையை போதித்த துரோணாச்சாரியரால் தான் பாரதப் போர் நடந்தது. துரோணரிடம் வில்வித்தை பயில வேண்டும் என ஏகலைவனின் ஆசையை துரோணர் நிறைவேற்ற வில்லை. துரோணரைத் தன் மானசீகக் குருவாகக் கொண்டு வில்வித்தையை ஏகலைவன் கற்கிறான். ஒருநாள் தன் குருவின் சிலையை நாய் ஒன்று அசிங்கப்படுத்தி விட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஏகலைவன் நாய் மீது அம்பு தொடுக்கிறான். நாய் உயிரிழந்து போகிறது. நாயின் உடலில் ஆயிரம் துளைகள். அம்புப…
-
- 1 reply
- 2.2k views
-
-
யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவருக்கே நாட்டை ஒப்படைக்க வேண்டும். மாறாக நாட்டை பிரிவினைக்கு கொண்டு செல்லும் தலைவரை தெரிவசெய்வது ஆபத்தானது என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். வடக்கில் தமிழ் மக்கள் சுதந்திரகமாக வாழ்வதும் நாட்டில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதும் மஹிந்தவால் என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் வெற்றி தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது நிலவும் மோசமான ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும். இந்த ஆட்சியை உருவாகியது மக்கள் அல்ல. மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சி மாற்ற…
-
- 6 replies
- 853 views
-
-
மகிந்தவை பிரதமராக நியமிக்காவிடின் செங்கோலைக் கைப்பற்றுவோம் – எச்சரிக்கிறது மகிந்த அணிJUL 20, 2015 | 14:58by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்கா விட்டால், செங்கோலைத் தூக்கிக் கொண்டு, தாம் நாடாளுமன்றத்தைச் சுற்றி ஓடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சாலிந்த திசநாயக்க. குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும், சாலிந்த திசநாயக்க இன்று பொல்பிட்டிகமவில் நடந்த தேர்த்ல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சாலிந்த திசநாயக்க, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று, மகிந்த ராஜகபக்சவை பிரதமராக நிய…
-
- 3 replies
- 622 views
-
-
கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் குறித்த பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு அதிபர் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கரைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சுஜீவ சேனசிங்க பதிலளித்தார். அப்போது,கே.பி. இப்போது சிறிலங்காவில் இருக்கிறாரா அல்லது வெளிநாட்டிலா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சுஜீவ சேனசிங்க, கே.பி தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்துப் பரிந்துரைப்பதற்காக அதிபர் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் சட்டமாஅதிபருக்கு கிடைக்கவில்லை என்று தெ…
-
- 7 replies
- 1.1k views
-
-
கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும், ஐ.ம.சு.கூட்டமைப்பிலேயே, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் விசுவாசிகளுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கப்பட்டிருப்பதானது, நல்லாட்சி ரசிகர்களின் மனதில் பேரிடியை இறக்கி விட்டிருக்கிறது. இதனால், ஆறு மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசியலில் 'வானத்திலிருந்து இறங்கிய ஒரு மீட்பர்' போல் பார்க்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஒரு சிலருக்கு…
-
- 0 replies
- 862 views
-
-
-
- 2 replies
- 632 views
-
-
20 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் தீர்வுக்கான பேரம்பேசும் சக்தியை பெறமுடியும் – இரா.சம்பந்தன்JUL 20, 2015 | 0:03by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை, சேருவில தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் தொகுதிக் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் தமிழரசுக் கட்சி…
-
- 18 replies
- 2.5k views
-
-
மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் வேகமாக நடைபெற்று வரும் மதமாற்றம் (படம்) மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வறுமை நிலையில் உள்ள தமிழ் குடும்பங்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிய வருகின்றது. முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் சவூதியில் உள்ள தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக நடைபெற்ற வருவதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டு தினங்களில் எட்டுக் குடும்பங்கள் இவ்வாறு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வறுமையினை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இவர்கள் ஆரையம்பதி, தேற்…
-
- 2 replies
- 650 views
-
-
சர்வதேச ஒலிம்பிக் குழுவில் யாழ் மாணவன்..! தெரிகிறதா...? (படம் இணைப்பு) யாழ் இந்துக்கல்லூரி மாணவனான நடேசமூர்த்தி சிவமைந்தன் சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பங்குபற்றுகிறார். இந்த போட்டிகளின் �பிரிவில் பங்குபற்றுகிறார். இவர் 3வது தடவையாகவும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர். இவர்களுள் இவர் ஒருவரே தமிழ் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1437384455&archive=&start_from=&ucat=1&
-
- 0 replies
- 507 views
-
-
செப்ரெம்பர் வரை நீடித்துள்ள ஈழத்தமிழர்களின் நீதிக்கான வேட்கையின் மில்லியன் கையெழுத்து இயக்கத்தில், கனேடிய அரசியற் பிரமுகரான திரு. பற்றிக் பிறவுண் அவர்கள் இணைந்துள்ளதோடு, ஒப்பமிடுமாறு அனைவரையும் ஒப்பமிடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் யூலை15ல் பத்து இலட்சத்தினைக் எட்டியிருந்ததோடு, செப்ரெம்பர் வரை இவ்வியக்கம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனேடிய ஒன்ராறியோ மாநிலத்திற்கான கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவரும், கனேடிய பாராளுமன்ற (ஒன்பது ஆண்டுகள்) உறுப்பினருமாகிய திரு.பற்றிக் பிரவுண் அவர்கள், இக்கையெழுத்து இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளதோடு அனைவரையும் ஒப்பமிடுமாறு அழைப்ப…
-
- 0 replies
- 444 views
-
-
பிரித்தானிய சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் இலங்கைக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரஜைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இலங்கையர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வறியர்வகள் உடல் ஊனமுற்றவர்கள் போன்றவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. 1200 பவுண்ட்களுக்குக் கூட தங்களது சிறுநீரகங்களை விறப்னை செய்ய தயாராக சிலர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இடைத்தரகர்கள் பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான மொத்த செலவாக 75000 ஸ்ரெலிங் பவுண்ட்களை அறவீடு செய்வதாக பிரித்தானிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சமூக ஊடக வலைய…
-
- 0 replies
- 427 views
-
-
கேள்விக்குறியாகும் சிறிலங்காவின் எதிர்காலம் – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்JUL 20, 2015 | 11:39by நித்தியபாரதிin செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானமானது பெரியளவில் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றல்ல. ஜனவரி 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச எதிர்பார்த்திராத அளவுக்கு தோல்வியடைந்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தான் அரசியலில் நிலைப்பதற்காக தனது ஆதரவாளர்களை ஒன்றுசேர்த்து வருகிறார். சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்ததுடன் வரும் மாதம் தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் அறிவித்தார். இந்த வாய்ப்பைத் தற்போது ராஜபக்ச தனதாக்கிக் கொண்…
-
- 0 replies
- 358 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றிபெற முடியாது – ராஜபக்சக்களைத் தாக்குகிறார் கருணாJUL 20, 2015 | 14:04by கி.தவசீலன்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில், “கடந்த அதிபர் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான பரப்புரையும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே இருந்தது. இப்போது அவர் எப்படி மாறமுடியும்? அவரால் முடியாது. எனவ…
-
- 0 replies
- 370 views
-
-
தம்மாலேயே, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துனர் எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.மூன்று தசாப்த காலமாக நீடித்து வந்த யுத்தத்தை தாமே முடிவுக்குக்கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.யுத்தம் முடிவுக்குக்கொண்டு வந்த காரணத்தினால் சிவாஜிலிங்கம் போன்ற பலர் பொதுத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கெர்டக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடிய சூழ்நிலையை தமது அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் பொதுத் தோதலில் போட்டியிடக் கூடிய சந்தர்ப்பத்தை தமது அரசாங்கம் ஏற்…
-
- 1 reply
- 330 views
-
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை பெற்ற 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது இந்த மேல்முறையீட்டு மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு யாருக்கு உரிமை என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். ஆயுள் தண்டனை பெற்றவ…
-
- 0 replies
- 273 views
-
-
கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பெண் வேட்பாளர் மதனி ஜெபநேசன் தொடர்பினில் வடமராட்சியினில் பலதரப்புக்களும் கடும் சீற்றமடைந்துள்ளன.தோல்வி அடைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பினில் அவர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலுவான போட்டியாளர்கள் முன்னதாக தோற்கவேண்டுமென எதிர்பார்த்து அவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் ஆதவாளர்கள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன் மற்றும் விரிவுரையாளர் இராசகுமாரன் ஆகிய மும்மூர்த்திகள் வடமராட்சியினில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் வாக்கு வங்கியினை திரட்டும் வலுக்கொண்டவர்களாவர். ஆனால் கூட்டமைப்பினில் தோற்றுப்போவது நிச்சயமென தெரிந்து சுமந்திரன் ஒருபுறமிரு…
-
- 0 replies
- 514 views
-
-
தேர்தலுக்கு பின்னர் தங்களின் கொள்கைகளையும், கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்கின்ற கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் போச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போதைக்கு கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. இந்த முறை தேர்தலில் பிரதமானமாக இரண்டு விடயங்களை கூட்டமைப்பு முன்னிலைப்படுத்துகிறது. நீண்டகாலமாக தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்வு, மற்றையது காணாமல் போனோர், அரசியல் கைதிகள் போன்றோருக்கான தீர்வும் மீள்குடியேற்றமும். இந்த விடயங்களுக்கு இணக்கம் தெரிவிக்கின்ற கட்சியுடன் கூட்டணி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.http://www.pathivu.…
-
- 0 replies
- 480 views
-
-
சம்பூரில் விடுவிக்கப்பட்ட 818 ஏக்கர் காணியில் அதன் மக்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அவர்கள் கடற்படையினரால் எந்த தருணத்திலும் துரத்தியடிக்கப்படலாம் என்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பூர் மக்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே குடியேற்றத்துக்கு தயாராக நான்கு முறை அவர்கள் துரத்தப்பட்டுள்ளனர். தற்போது நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற போதும், கடற்படையினர் குடிநீரைக்கூட தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சர்வதேச சமுகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.pathivu.com/new…
-
- 0 replies
- 261 views
-
-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டு வெல்வதல்ல முக்கியம், நாம் பிரதிநித்துவப்படுத்தும் மக்களின் வெற்றியே முக்கியமென திருகோணமலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அரசியல் ஆய்வாளரும் இளம் வேட்பாளருமான ஆ.யதீந்திரா தெரிவித்தார். திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்ற நிலையில், நேற்றை தினம் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டமொன்று திருகோணமலையிலுள்ள சில்வெஸ்டர் உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் த.தே.கூ. திருகோணமலையில் இம்முறை இரு ஆசனங்களை வெற்றிகொள்ள வேண்டுமென்னும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோரிக்கை தொடர்பில் பேசிய போதே யதீந்திரா மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மே…
-
- 0 replies
- 327 views
-
-
யாழ். பருத்தித்துறை பகுதியிலிருந்து யாழ். நகருக்கு கஞ்சாவை கொண்டுவந்து விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேக நபர்களை யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை கைதுசெய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். இது தொடர்பில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஒரு தொகை கேரளா கஞ்சா பொதியினை கொண்டுவந்து யாழ். நகரில் விற்பனை செய்வதற்காக இருவர் கோட்டை முனியப்பர் கோவிலுக்கு அருகில் காத்து நிற்பதாக இரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்றபோது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் நின்ற இருவரையும் சோதனை செய்தபோது, அவர்களிடம் இருந்த…
-
- 0 replies
- 251 views
-
-
இலங்கை -– பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் நேற்றிரவு ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியின் நடுவில் ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன் பின்னர் கைகலப்பில் ஈடுபட்டவர்களை மைதானத்தை விட்டுவெளியேற்றியுள்ளனர். அதன்பிறகு ஆர்.பிரேமதாஸ மைதானத்தின் 'பி' பிரிவு பகுதியிலிருந்து மைதானத்திற்குள் கற்கள் வீசயப்பட்…
-
- 2 replies
- 1.4k views
-
-
சம்பந்தர் ஏன் தமிழ்மக்களுக்கு சைக்கிள் வேண்டுமென்று கேட்டார்??? ஏன் எமக்கு, எம்மில் அக்கறை கொண்ட, அர்ப்பணிப்புள்ள, புவிசார் அரசியலை விளங்கிக்கொண்ட, பிறசக்திகளின் நலன்களுக்காக எமது மக்களை விலைபேசாத உறுதியான தலைமை தேவை என்பதை இப்பதிவு விளங்கப்படுத்துகிறது. பதிவு 1) பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான த தே கு தலைமையின் சந்திப்பு 2013 பதிவு 2) ஐநா மனித உரிமைசெயலாளரின் வாய்மொழி மூல அறிகையை முன்னிட்டு கஜேந்திரகுமார் ஐ நாவில் ஆற்றிய உரை 2014 'இனி நீங்களே முடிவு செய்யுங்கள்' பதிவு 1) மூடிய அறைக்குள்ளே இருவர் மட்டும் கதைப்பது என்ன என்று எங்களுக்கு தெரிவதில்லை. வெளியில் வந்து அந்த இருவரும் சொல்வது தான் எமக்கு பத்திரிகைகள் வாயிலாக வரும். ஆனால், மூடிய அறைக்குள்ளே 2013ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 362 views
-
-
மகிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு உயிரூட்ட வேண்டிய அவசியமில்லை. அவர் அந்த நிலையிலும் இல்லை. அவருக்கு சேலைன் ஊட்ட வேண்டியதே தற்போதைய நிலையில் மிகவும் அவசியமானது. அவர் மூன்றாவது முறையாகவும் அரசியலில் பிரவேசித்துள்ளார். இம்முறை தேர்தலுடன் அவரது அரசியல் கடவுச்சீட்டை இல்லாமல் செய்வதற்கு, மக்கள் இம்முறை ஒன்றிணைவார்கள் நாட்டு மக்களின் பொருளாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட ஐவகை அபிவிருத்திகளை மேற்கொண்டு, நவீன இலங்கையை உருவாக்க ஐந்தாண்டு வேலைத்திட்டதினை முன்வைத்துள்ளோம். இதனை நடைமுறைப்படுத்த நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் ஐ.தே.க. அமோக வெற்றியடைய வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். ஹாலி-எல பொது மைதானத்தில் நடைபெற்ற ஐ.தே.க. பிரசார கூட்டத்தின்…
-
- 1 reply
- 304 views
-
-
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 500 மில்லியன் ரூபாவிற்கு (50 மில்லியன்) விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேசியப் பட்டியல் கருப்பையா கணேஷமூர்த்தி என்றழைக்கப்படும் கணேஷ்காத் என்ற நபருக்கு இந்த தேசியப் பட்டியல் பதவி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேசியப் பட்டியலைப் பெற்றுள்ள குறித்த நபர், டுபாய், இலங்கை ஆகிய நாடுகளில் வசித்துவரும் பிரித்தானிய பிரஜையொருவரிடம் 129 மில்லியன் ரூபா மோசடி செய்தவர் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளவர் எனவும் தெரியவந்துள்ளது. http://www.tamil.srilankamirr…
-
- 0 replies
- 418 views
-
-
தேர்தல் நெருங்கும்போது போலி போர்க் குற்ற அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதுகுறித்து அரசாங்கத்திற்கு தகவலளித்துள்ளதாகவும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்தும், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணை அறிக்கையைப் போன்றே இந்த (போலி) அறிக்கையை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள ஓகஸ்ட் மாதத்தின் முதல்வாரத்தில் இந்த போலி அறிக்கையை வெளியிடுவதற்கு ராஜபக்ச தரப்பி…
-
- 0 replies
- 315 views
-