Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது குறித்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி நேரத்தில் விலகிக்கொண்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடப் போகிறதா? இல்லையா? எனும் முடிவு எடுக்கப்படாத நிலை தொடர்ந்து இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இது பற்றிய எமது உண்மை நிலையை கொழும்பு வாழ் தமிழர்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு இருப்பதாக உணர்கின்றோம். கொழும்பு மாவட்டத்தில் வாழும் வட-கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற தொடர்ச்சியான அழுத்தங்கள் எமக்கும் தலைமைப் பீடத்திற்கும் கடந்த சில மாதங்களாகவே விடுக்கப்பட்டு வந்தன. இது குறி…

    • 11 replies
    • 863 views
  2. இலங்கையை காப்பாற்ற புதிய வழியை தேடும் அமெரிக்கா! [ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2015, 02:29.44 PM GMT ] இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் அமெரிக்காவுக்கு தற்போது அக்கறையில்லை என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் தீவிர செயற்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச நிதி வலைப்பின்னல் தொடர்ந்து இயங்கி வருவதாக கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியது. இந்த அறிக்கையானது பல புலிகள் எதிர்க்கும் விமர்சகர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இரையாக வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு பிரிவு முல்லை பெரியாறு …

  3. இனப்படுகொலை விவகாரம் - முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா அழுத்தம்! [Sunday 2015-07-12 08:00] இனப்படுகொலை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வடக்கு மாகாண மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுமாறு, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. வட மாகாண முதலமைச்சர், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிசெயலாளர் நிசா பிஸ்வாலை சந்தித்துள்ளார்.இதன்போது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் வடக்கின் நல்லிணக்கம், புனரமைப்பு மற்றும் புனர்வாழ்வு விடயத்தில் முன்னேற்ற …

  4. தமிழீழம் குறித்த எண்ணம் தங்களுக்கு இல்லை என்று, முன்னாள் விடுதலைப் போராளிகளின் அரசியல் கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சி அறிவித்துள்ளது. அதன் தலைவர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனைக் கூறியுள்ளார். தாங்கள் முழுமையான அரசியல் நீரோட்டத்தில் கலக்கும் நோக்கில் வன்முறைகளையும், தமிழீழ கோட்பாட்டையும் கைவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற நிலைப்பாட்டில் இருப்பதாலேயே தாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆசனத்தை கோரியதாகவும், எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களின் அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்வதற்காக கூட்டமைப்பு தங்களுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.http://www.pathivu.com/news/41510/57//d,article_full.aspx

  5. கருணாவுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் இடமளிக்கப்படும் என் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் பொது செயலாளர்கள், இந்த விடயத்தை தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி தேர்தலுக்கு பின்னர் தமக்கு தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் கருணா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.pathivu.com/news/41509/57//d,article_full.aspx

  6. வடக்கு மக்கள் ஒன்றிணைந்து எங்கள் கரங்களை பலப்பத்தவேண்டும்; த.தே.கூ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வடமாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தேச விரோத சக்திகளை நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத்தலைவருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். உதயன் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வரும் ஒளியரசி சஞ்சிகை வாசகர்களிடையே நடாத்தப்பட்ட கட்டுரை , விவாதம் மற்றும் குறுக்கெழுத்து ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நெல்லியடி உதயன் கிளைக்காரியாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி…

  7. தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்போராளிகளை முற்றாக புறக்கணித்துள்ள நிலையினில் அதிரடியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெண் போராளிகள் மற்றும் விசேட தேவையுடைய போராளிகளை களமிறக்க தயாராகியுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வகையினில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மாவட்டங்களிற்கான நாளை தாக்கல் செய்யப்படவுள்ள வேட்பு மனுக்களினில் இவர்கள் களமிறங்கவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இவ்வாறு விடுதலைப்போராளிகளின் மூத்த தலைகளை களமிறக்க திட்டமிட்டுள்ள நிலையினில் அது கூட்டமைப்பிற்கு மிகப்பெரிய தலையிடியாக மாறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே மற்றொரு தரப்பு சுயேட்சையாக முன்னாள் போராளிகளை பலியாடாக்க முற்படுவதான விமர்சனங்கள் மத்தியினில் முன்னணியின் அதிரடி பலதரப்பினை…

    • 3 replies
    • 590 views
  8. சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இருபதாவது உலக கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக ஜேர்மனி மோதியது. ஜேர்மன் அணியின் முன்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் தடுப்புகளை தகர்த்துக் கொண்டு முன்நகர முயற்சிக்க, ஜேர்மன் அணியின் பின்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் முன்கள வீரர்களின் ஊடுருவல்களை தடுக்கும் முயற்சியில் தடுப்பு உத்திகளை அமைத்திருந்தார்கள். இதன் ஒரு அங்கமாக, ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரரும் கோல்களை போடக்கூடியவர் எனவும் எதிர்பார்க்கப்பட்ட லயனல் மெசியை ஒரு கட்டத்தில் ஜேர்மன் அணியின் மூன்று வீரர்கள் முற்றுகையிட்டிருந்தனர். அதேவேளை, ஜேர்மன் அணியின் ஏனைய வீரர்கள் ஆர்ஜென்ரீனா அணியின் ஏனைய வீரர்கள் இடைவெளிகளை பயன்படுத்தாதவண்ணம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார…

    • 0 replies
    • 531 views
  9. வித்தியாவின் வழக்கில் இருந்து பின்வாங்கினார் சட்டத்தரணி தவராசா? நீதி கிடைக்குமா? [ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2015, 05:42.16 AM GMT ] வித்தியா என்ற அழகான மலர் மலரும் முன்பே கருகி சிதைக்கப்பட்டு இன்னும் இரண்டு மாதங்கள் கூட கடந்து விடவில்லை, வித்தியா என்ற பிஞ்சு உள்ளத்திற்கு ஏற்பட்ட அநீதிக்காக முழு இலங்கையும் , புலம்பெயர் உறவுகளும் நீதி கேட்டு போராடியது. இத்தகைய புலர் பெயர் அமைப்புக்களினதும் வித்தியாவினது தாய் சகோதரங்களின் வேண்டுகோளையும் ஏற்று தனது சொந்த ஊரான புங்குடுதீவில் நிகழ்ந்த கொடுமைக்காக எவ்வித பலனையும் பாராது இந்த வழக்கில் வாதாட சிரேஸ்ட சட்டத்தரணியான தவராசா முன்வந்தது மிகப் பெரிய வரப்பிரசாதமாக தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டது. வித்தியாவிற்கு நிகழ்ந்த கொடுமை வேறு எந…

    • 0 replies
    • 184 views
  10. வவுனியாவில் திருமண நிகழ்வுகளில், கோவில் திருவிழாக்களில் மற்றும் சன நெரிசல் மிக்க இடங்களில் நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண் ஒருவரும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அப்பெண்ணின் கணவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேற்படி திருட்டு சம்பவங்கள் குறித்து வவுனியா பொலிசாருக்கு முறையிட்டதைத் தொடர்ந்து வவுனியா பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி சன் அபயரெட்னவின் அறிவுறுத்தலுக்கமைய உப பொலிஸ் பரிசோதகர் நிலாந்த தலைமையில் பொலிஸ் கான்ஸ்டபிள்களான (36508) ஜெயபிரகாஸ், (37348) திசநாயக்க மற்றும் (64662) புத்திக்க ஆகியோரின் குழு புலன்விசாரணைகளை மேற்கொண்டதுடன் திருட்டில் ஈடுபட்ட தம்பதியினரை கிளிநொச்சியில் வைத்து கைது செய்தனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://w…

  11. எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாடு முழு­வதும் மொத்­த­மாக ஒரு கோடியே 50 இலட்­சத்து 44, 490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்ளனர். அத்­துடன் நாடு முழு­வதும் 12,021 வாக்க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் தேர்­த­லா­னது 2014 ஆம் ஆண்டு வாக்­காளர் இடாப்பின் பிரகாரம் நடை­பெ­ற­வுள்­ளது என்று மேல­திக தேர்தல்கள் ஆணை­யாளர் எம்.எம். மொஹம்மட் தெரி­வித்தார். தேர்­தலில் மாவட்­டங்­களின் ரீதியில் 196 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்யப்­ப­ட­வுள்­ள­துடன் 29 பேர் கட்­சி­க­ளுக்கு கிடைக்­கின்ற வாக்­கு­களின் அடிப்­ப­டையில் தேசிய பட்­டியல் மூலம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். அந்­த­வ­கையில் 225 பாரா­ளு­மன்…

  12. தமிழர் தேசத்தில் போதைப்பொருள்களால் சத்தம் இன்றிய யுத்தம்; ஒழுக்கவியல் விரிவுரையாளர் ரவிராஜ் யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களை விடவும் தற்போது மதுப் பாவனை அதிகரித்துள்ளதாக புனித சவேராயர் குருத்துவ கல்லூரியின் ஒழுக்கவியல் விரிவுரையாளர் ரவிராஜ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2002ஆம் ஆண்டு யாழில் மது பாவனை ஒரு மில்லியன் லீற்றராகவும் 2012ஆம் ஆண்டு இப் பாவனை 2 மில்லியன் லீற்றராகவும் காணப்பட்டது. ஆனால் 2013ற்கும் 2015ற்கும் இடையில் மது பாவனையின் அளவு 4.5லீற்றராக அதிகரி…

    • 1 reply
    • 276 views
  13. வடக்கில் நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் மக்களின் சிவில் நடவடிக்கையில் தலையிடுவது மக்கள் மத்தியில் பெரும் அழுத்தத்தை தரும் நடவடிக்கையாக தொடர்ந்தும் இடம்பெறுவதாக குளோபல் தமிழ் வன்னிப் பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார். இராணுவத்தின் தொடர் ரோந்துகளும் வீடுகளை ஊடறுத்துச் செல்லும் சோதனை நடவடிக்கைகளும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று மக்களை உணரச் செய்கிறது. வடக்கில் வவுனியாவில் உள்ள சோதனைச் சாவடியை தாண்டி பயணிக்கத் தொடங்கினால் இராணுவத்தினரை பார்க்க இடமில்லை. அவர்கள் வடக்கின் தெருக்கள் தோறும் இராணுவ ரோந்துகளில் ஈடுபட்டு மக்களை கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். வடக்கில் தொடர்ந்தும் மக்கள் கண்…

    • 2 replies
    • 495 views
  14. போதைப் பாவனையை ஒழிக்காவிட்டால் அது எமது சந்ததிக்கு செய்யும் துரோகம்: யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் எமது சமூகத்தில் பரவியுள்ள போதைப் பொருள் பாவனையை நாங்கள் இல்லாது செய்யாவிட்டால், அது எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்த துரோகமாக அமைந்து விடும். இவ்வாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கள் வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது போதைப் பொருள் பாவனை ஒரு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. குறிப்பாக கஞ்சா போன்ற சட்ட விரோதமான போதைப…

  15. முஸ்லிம் காங்கிரசுக்குத் தாவினார் அலி சாகிர் மௌலானா! [Sunday 2015-07-12 08:00] கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்துள்ளார். நேற்று மாலை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இவர் அக்கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டார். அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கும் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் முன்னர் ஐதேகவில் இருந்து மகிந்த ராஜபக்சவினால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/bre…

  16. கொழும்பிலேயே போட்டி - சரத் பொன்சேகா திட்டவட்டம்! [Sunday 2015-07-12 08:00] நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னரே யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவரது ஜனநாயக கட்சி ஏற்கனவே பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கொழும் பு மற்றும் கம்பகாவில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. இந்தநிலையில் புதிதாக இன்று அமைக்கப்படவுள்ள ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொள்ளுமாறு சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் தாம் ஏற்கனவே தாக்கல் செய்த வேட்புமனுக்களை திரும்பப்பெறப் போவதில்லை என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். எனவே தேர்தலுக்கு பின்னரே தாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கவு…

  17. மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரப்பகிர்வு! - கொழும்பு கூட்டத்தில் ரணில் அறிவிப்பு[Sunday 2015-07-12 08:00] ஐக்கிய இலங்கைக்குள் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் என என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து இன சமூகங்களும் சம உரிமைகளுடன் வாழக்கூடிய நிலைமை உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கைப்பற்றப்பட்ட காணிகள் உரிமையாளர்களிடம் உரிய முறையில் வழங்கப்படும். ஊழல் மோசடிகளுக்கு எதிரான பிரிவிற்கு முழு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்படும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கூடுதல் விருப்பு …

  18. பொது பல சேனாவுக்குள் பிளவு! - ராஜீவை தாக்கிய விஜித ரோகண விலகினார்[Sunday 2015-07-12 08:00] பொது பல சேனா அமைப்பில் பாரிய பிளவு நிலை ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் அமைப்பில் இருந்து விலகியுள்ளனர். கம்பஹாவில் பொது பல சேனா சார்பில் வேட்புமனுவை பெற்றிருந்த விஜித ரோஹன பொதுபலசேனா அமைப்பில் இருந்து விலகியுள்ளார். எனினும் காரணங்களை வெளியிடவில்லை. இந்தநிலையில் நாளையதினம் பொது பல சேனா தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரர் களுத்துறையில் போட்டியிடவுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=135732&category=TamilNews&language=tamil

  19. புத்தரின் படம் பொறித்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கைது 4 மணி நேரங்களுக்கு முன்னர்பகிர்க இலங்கையின் கிழக்கே அறுகம்பை கடலோரத்தில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். புத்தரின் படம் பொறித்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கைதுகுறித்த இரு சுற்றுலா பயணிகளும் கடந்த 4ம் திகதி இந்தியாவிருந்து இலங்கைக்கு வந்து, மறுநாள் 5ம் திகதி அறுகம்பைக்கு வந்து சேர்ந்ததாக பொத்துவில் போலிஸார் தெரிவிக்கின்றனர். பௌத்த மதத்திற்கும் புத்த பெருமானுக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடந்து கொண்டதாக பொலிஸாரால் குற்றஞ்சாட்…

  20. பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே.ஶ்ரீங்கா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு வேட்பு மனு கிடைக்கவில்லையெனத் தெரியவருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவின் 18ஆவது திருத்திற்கு ஆதரவாக வாக்களித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியிலும் அவருக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், தற்போது ஶ்ரீரங்கா மற்றுமொரு அரசியல் கட்சியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்க…

    • 4 replies
    • 474 views
  21. கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் இருக்கிற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்கான முக்கியமான தேர்தலாகதான் நாங்கள் இந்த தேர்தலைப் பார்க்கிறோம். - இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்திற்கான வேட்பு மனுவை நேற்று வெள்ளிகிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தபின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: வடக்கு, கிழக்கில் நீடித்த 30 வருட கால போர் எமது மக்களிடம் அரசியல் கைதுகள், காணாமல் போகச் செய்யப்…

  22. மகிந்தவையும் மைத்திரி அரசையும் வீழ்த்துவதே ஜேவிபியின் இலக்கு! - ரில்வின் சில்வா[Saturday 2015-07-11 08:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை அவர் பொய்யாக்கிவிட்டார். மஹிந்தவை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொண்டு மைத்திரியின் உண்மை முகத்தை வெளிப்படுத்திவிட்டார். மஹிந்தவை மட்டும் அல்ல மைத்திரி அரசாங்கத்தையும் வீழ்த்துவதே எமது இலக்காகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள், மக்களின் அர்ப்பணிப்பு அனைத்தையும் சிதைவடையச் செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டில் மூவின மக்களும் மைத…

    • 2 replies
    • 307 views
  23. நீங்கள் செய்த காட்டிக் கொடுப்பு காரணமாக நாடு இரத்தக் காடாக மாறும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் திட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. " மைத்திரி நீர் செய்த இந்தப் பாரிய காட்டிக்கொடுப்பால் நாடு இரத்தக் காடாக மாறும். நீர் இப்படித் துரோகியாக மாறுவீர் என்று எண்ணியிருந்தால் நான் உம்மை பொது வேட்பாளராக நிறுத்தியிருக்கமாட்டேன் ' என நேரடியாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா , கடும் அதிருப்தியில் லண்டன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா , மைத்திரியை இவ்வாறு சாடும்போது அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷ உட்பட மோ…

  24. ஏமாற்று தலைமையில் மாற்றம் வேண்டுமாம் கூறுகிறார் டக்ளஸ் தென்னிலங்கையில் மாத்திரம் அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் போதாது தமிழர் மத்தியிலும் தமிழ் அரசியல் ஏமாற்றுத் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே தேர்தலின் பிரதான கோஷமாம் என ஈ.பி.டி.பின் முதன்மை வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு ஈ.பி.டி.பி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தது. அதனையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். நீண்டகாலமாக எமது மக்களின் வாக்குகளை அபகரிக்க பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்தனர். எனவே இம்முறை மக்களிடம் ஏமாற்றம் அடைவார்கள் என்று நம்புகின்றேன். …

  25. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வரும் இரா. சம்பந்தன். இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான உறுப்பினர்களை பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று, திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.