ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
மகிந்தராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜெயந்த இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் மகிந்த பிரதம வேட்பாளராகவோ, குழுத் தலைவராகவோ நியமிக்கப்படுவாரா? என்பது தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் நேற்று இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது, மகிந்தவுக்கு வேட்புரிமை வழங்கவும், ஆனால் பிரதமர் வேட்பாளராக நியமிக்காதிருக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/41316/57//d,article_full.aspx
-
- 0 replies
- 248 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவ்…
-
- 1 reply
- 388 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்காக தம்மை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் எமது கட்சி தனித்து போட்டியிடப் போகிறது. எமது கொள்கையான தேசியம், சுயநிர்ணயம், தாயகம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும். என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் அவர்கள் கூறியுள்ளார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்தேசிய மக்கள் முன்னணி இரு தேசங்கள் ஒரு நாடு என்னும் கொள்கை அடிப்படையில் தொடர்ந்தும் பயணிக்கும். மக்கள் தமிழ்தேசியத்தின் உயர்ச்சிக்கா? அழிவுக்கா? வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கவேண்டும். என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் வடகிழக்கு மாகாணங்களில் தேர்தலை சந்திக்கவுள்ளது. எம்மை பொறுத்தமட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல் ஒரு திருப்பும…
-
- 0 replies
- 365 views
-
-
வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சுமார் 13 வரையான கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் சார்பில் கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் மாகாணசபை உறுப்பினர்களே நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். இவர்களில் கிழக்கு மாகா முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலரும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, ஆரியவதி கலப்பதி, இம்ரான் மஹ்ரூப், முன்னாள் முதல்வர் நஜீ…
-
- 0 replies
- 313 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சி முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சி முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வரும் ஜூலை ஆறாம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்திருக்கும் பின்னணியில் அரசியல் கட்சிகள் தமக்குரிய வேட்பாளர்களைத் தெரிவு செய்வது உட்பட தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவருமான அன்டனி ஜெகநாதன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற…
-
- 0 replies
- 207 views
-
-
மன்னார் - இலுப்பைக்கடவை பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில்; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டனர். பின்னர், குழந்தையொன்று மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் மகளின் பிள்ளை ஆகியோர் மடுத் திருத்தல ஆடித் திருவிழாவுக்கு வந்துவிட்டு, யாழ்ப்பாணம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியும் மன்னார் நோக்கி பயணித்த வானும் மோதியதாக ப…
-
- 0 replies
- 212 views
-
-
பாடசாலை மாணவிகள் 5 பேரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரபல கல்லூரி ஒன்றின் ஓய்வுபெற்ற பிரதி அதிபரான சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் ம.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். 5 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என பருத்தித்துறை பொலிஸாரால் குற்றச்சாட்டப்பட்டு குறித்த நபர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது, பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னிலையான சட்டத்தரணி, இவ்வாறான சம்பவத்தின் மூலம் மேலும் வித்தியாக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு சந்தேகநபரை விளக்கமறியல் வைப்பது அவசியம் என வாதிட்டார். சந்தேகநபரை பிணையில் விடுமாறு அவரது சார்பில் முன்னிலையான…
-
- 0 replies
- 145 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஓர் பாசிசவாதி என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சி பீடம் ஏறினால் நாட்டில் பாசிசவாத ஆட்சியே நீடிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இடதுசாரித் தலைவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர மற்றும் திஸ்ஸ வித்தாரண போன்றவர்கள் பாசிசவாதிகளின் காலணிகளை கழுவி வருகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு, கம்பஹா, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் ஒரு தடவை ஜனநாயகம் சீர்குலைந்து போவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
-
- 0 replies
- 205 views
-
-
எதர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சந்திரிக்கா அவசரமாக முடிவெடுத்துள்ளதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது
-
- 5 replies
- 532 views
-
-
முல்லைத்தீவில் மகிந்தரின் முக்கியஸ்தர் கூட்டமைப்பில்..! பல மில்லியன் பாய்ந்தது சிக்கியது.une 29, 20152:08 pm கூட்டமைப்பின் ஆசனப் பங்கீட்டு ஆரவாரத்தில் மகிந்த ராஜபக்சவினது முகவர் ஒருவர் சாமர்த்தியமாக உள்நுளைந்துள்ளார் என செய்தி கசிந்துள்ளது . தமிழர் பகுதிகளில் இன அழிப்பு போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் படையினருக்கு கணணித்தொளில்நுட்பங்களை பயிற்றுவிற்பதற்காக நாமல் ராஜபக்சவினால் ஒரு கல்லுரி ஆரம்மிக்கப்பட்டது. அந்தக் கல்லூரியை நிருவகித்த நிறுவனம் நாமலினதும் அவரது நண்பர்களினதுமாகும்பங்குடமையாகும் அந்த நிருவனத்தில் சில தமிழ் இளைஞர்களும் பங்குதாரர்கள் அதில் முக்கியமானவர்கள் சக்தி டிவி ஜே ரங்கா, மற்றும் ஜனகன் விநாயகமூர்த்தி ஆகியோராகும் இவர்கள் நாமல் ராஜபக்சவில் நண்பர்கள். …
-
- 13 replies
- 715 views
-
-
மரண தண்டனையால் ஹீரோவான ஆமி. June 26, 20152:07 pm மிருசிவில் 8 பேர் கொலைவழக்கில் மரண தண்டனைக்கு உள்ளான இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக பிரசித்தப்படுத்தப்பட்டு வருகிறார்… யுத்தத்தில் பங்காற்றிய இந்த சிப்பாய் மீதான மரண தண்டனை சிங்கள தேசியத்திற்கு எதிரானது என சிங்கள மக்கள் மத்தியில் மத்தியில் பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது… இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு தெற்கில் சிங்கள இனவாதம் தலையெடுத்து வருவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு பாதிக்கும் என்பதனை எதிர்வு கூற முடியாதிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 24 மணி நேரத்திற்குள் 11 ஆயிரம் பேர் லைக்….. http://www.jvpnews.com/srilanka/113952.html
-
- 48 replies
- 3k views
- 1 follower
-
-
புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் பொதுத்தேர்தலில் திருமலையில் போட்டியிட விண்ணப்பத்தை மாவையிடம் கையளித்தார்! [ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2015, 02:35.49 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். இலக்கம் 36 மார்டின்வீதி யாழ்ப்பணத்திலுள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் தமது எழுத்து மூலமான விண்ணப்பத்தை, நேற்று முன்தினம் சமர்ப்பித்தார். இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட…
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா சவப்பெட்டிகள் வாங்கித்தருமாறு கோரியுள்ளார். ஆண்டு தோறும் உறுப்பினர்களிற்கென ஒதுக்கப்படும் நிதியிலேயே சவப்பெட்டிகளை வாங்கித்தர தவராசா கோரியுள்ளார். மக்கள் சேவைக்கென ஒதுக்கப்படும் மாகாணசபை உறுப்பினர்களிற்கான நிதியினை பெரும்பாலானவர்கள் தமது ஆதரவாளர்களிற்கு ஒதுக்கிவிடுவத வழமையானது. அவ்வாறு ஒதுக்கிய நிதியில் தனக்கு தேவையான சவப்பெட்டி கடைகாரரிற்கும் நிதி ஒதுக்கியுள்ளார் தவராசா. குறித்த சவப்பெட்டிகளை கொள்வனவு செய்து வழங்க மாகாணசபை அதிகாரிகளிற்கு பிரதம செயலாளா பணித்துள்ள நிலையில் அவர்கள் திண்டாடிவருகின்றனர். ஆதவாளரோ சவப்பெட்டிதான் வேண்டுமென்று விடாப்பிடியாக நிற்க அதிகாரிகள் சவப்பெட்டிகளை கொள்வனவு செய்ய கடைகள் தோறும் ஏறி இறங்கிவருவதாக கூறப்…
-
- 1 reply
- 526 views
-
-
கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கு பிரதேசத்தில் கடந்த 3ம் மாத இறுதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களை திங்கள் கிழமை மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் மகளீர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ,எம்.ஏ சுமந்திரன் , அ.விநாயகமூர்த்தி , ஈ.சரவணபவன் ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உள்ளிட்டவர்களும் சென்று பார்வையிட்டனர். அதன் போது வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள வீதியான குரும்பசிட்டி - தெல்லிப்பளை வீதியினை இராணுவத்தினர் மக்கள் பாவனைக்கு…
-
- 2 replies
- 489 views
-
-
மூன்று தடவைகளிற்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களிற்கு இம்முறை தேர்தலில் இடம் வழங்கக்கூடாதென தமிழரசுக்கட்சி முக்கியஸ்தரும் வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே போன்று தமிழ்நாடு தவிர்ந்த வேறு இடங்களினில் குடும்பங்களை வைத்திருப்பவர்களிற்கும் இடம்வழங்க வேண்டாமென கேட்டுக்கொண்ட அவர் புதியவர்கள்,இளவயதினர் மற்றும் பெண்களிற்கு போதிய சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டுமெனவும் கோரியுள்ளார். தமிழரசுக்கட்சியின் தேசிய தலைவர் இரா.சம்பந்தன் என முகவரியிட்டு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தினில் வேட்பாளர்களது கல்வி தகைமைக்கு முன்னுரிமை அளிக்க கோரியுள்ளதுடன் 19வது திருத்த சட்டமூலம் பிரகாரம் ஜனாதிபதி இருதடவைக்கு மேல் பதவியிலிருக்க கூடாதென…
-
- 1 reply
- 495 views
-
-
வெளிநாடுகளில் இயங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி வலையமைப்பை முறியடிப்பதற்காக, புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட புலனாய்வு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த வலையமைப்பு தொடர்பான தகவல்களை கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/41238/57//d,article_full.aspx
-
- 0 replies
- 389 views
-
-
பிரதமர் பதவிக்கு என் பெயர் வராவிட்டால் பிறகு தெரியும்; மிரட்டுகிறார் மகிந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முன்மொழியாவிட்டால் அது குறித்து தான் அன்றைய தினம் பார்த்துக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலமா மாளிகையில் இன்று வழிபாட்டில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அதன்பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தார். அதன்போது மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்முறை அக்கட்சியின் சார்பில் வேட்புமனு வழங்கப்படப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டு வரும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிரு…
-
- 5 replies
- 418 views
-
-
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருவதுடன் தமது விண்ணப்பங்களையும் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இம்முறை தமிழ்த் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், நாம் திராவிடர் அமைப்பு போன்றவை தேர்தல் களத்தில் இறங்கவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட பலரும் முன் வந்திருக்கின்றனர். இம்முறை பாராளுமன்றத்திற்குப் புத்திஜீவிகள், கல்விமான்கள், மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களை அனுப்ப வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இம்முறை தமிழ்த் தரப்பில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் என பல புதிய முகங்கள் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில்…
-
- 2 replies
- 345 views
-
-
மகிந்தவுக்கு வேட்புமனு இல்லை! தேசியப் பட்டியலும் வழங்கப்போவதில்லை : மைத்திரி திட்டவட்டம் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தான் ஒருபோதும் வேட்புமனு வழங்கப் போவதில்லை என்றும் தேசியப் பட்டியல் எம்.பி. நியமனத்தை வழங்கவும் தான் தயாரில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்களுடன் நேற்று முழு நாளும் பேச்சு நடத்தியுள்ளார். இடதுசாரிக் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் என்று சந்திப்பில் கலந்துகொண்ட இடதுசாரி தலைவர் ஒருவர் தெரிவித்…
-
- 1 reply
- 422 views
-
-
சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள 45 வயதுடையவருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதாலும் மணப்பெண்ணின் சகோதரரை வெளிநாட்டுக்கு எடுத்துவிடுவதாகவும் கொடுத்த வாக்குறுதியையும் அடுத்து இந்தத் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்ததாக தெரிய வருகின்றது. இதில் உள்ள சுவாரசியமான விடயம் என்னவெனில் மணப்பெண்ணின் பெற்றோருக்கு மணமகனின் வயதை விட மிகக் குறைந்த வயது என்பதேயாகும். மணப்பெண்ணின் தாயுக்கு அவரின் மருமகனின் அதாவது அவரின் மகளின் கணவனின் வயதை விட 10 வயது குறைவாகும். இத்திருமணம் யாழ்ப்பாணம் உரும்பிராயில் இன்று இன்று (29) நடந்துள்ளது. யாழ்ப்பாணம் முன்னேறிடும்…!! http://www.jvpnews.com/sr…
-
- 4 replies
- 1.1k views
-
-
மஹிந்த, கோத்தபாயவைத் தண்டிக்க விடமாட்டோம்! - என்கிறார் பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க[Tuesday 2015-06-30 07:00] போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு சர்வதேசத்திற்கு இடமளிக்கப்படாது எனத் தெரிவித்த பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க, விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியாகத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சர்வதே…
-
- 2 replies
- 526 views
-
-
நாட்டின் தனிநபர் வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பு : ஜனாதிபதி எதிர்வரும் 5 ஆண்டுகளில் நாட்டின் தனிநபர் வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கு அரசு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதற்குரிய முதலீடுகள் கைத்தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் விரிவான அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சீதாவகை ஆற்றில் இரத்தினக் கற்கள் அகழும் ஒருங்கிணைந்த முன்னோடிக் கருத்திட்டத்தின் பயன்களை அப்பிரதேச மக்களிடம் ஒப்படைக்கும் வைபவம் நேற்று முற்பகல் தெகியோவிட்ட பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அங்கு கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புனித பூமி 165, சமுர்த்தி…
-
- 0 replies
- 473 views
-
-
தமிழ்மக்களுக்கான தீர்வு என்ன என்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்த வேண்டும்! - சம்பந்தன் கோரிக்கை[Tuesday 2015-06-30 07:00] தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தேசிய கட்சிகள் தமது நிலைப்பாட்டினை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்க வேண் டும். இனிமேலும் காலத்தை கடத்தமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத் தில் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் இனிமேலும் காலத்தைக் கடத்த முடியாது.புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பின் விரைவில் தீர்வை கொண்டுவருவதற்குரிய தீவிர முயற்சிகளை வருகின்ற அரசாங்கம் எடுக்க வேண்டும். தேர்தலின் பின் மூன்றில் இரண்டு பெரும்பான…
-
- 0 replies
- 215 views
-
-
தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தல் நேற்று ஆரம்பம்! - அதிகாரிகளுக்கு இன்று முக்கிய கூட்டம்[Tuesday 2015-06-30 07:00] பொதுத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காகத் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று சகல தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோரை சந்திக்கிறார். அதேவேளை, தேர்தல் ஆணையாளருக்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு 2ஆம் திகதி (வியாழக்கிழமை) இடம்பெற இருப்பதாக தேர்தல் திணைக் களம் தெரிவித்தது. பாராளுமன்றம் கடந்த வாரம் கலைக்கப்பட்ட நிலையில் ஜுலை 6 முதல் 13ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு ஓகஸ்ட் 17அம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஒழுங்குகள், மற்றும் தேர்தல் ஒழுங்குகள்…
-
- 0 replies
- 221 views
-