Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி வடமாகாணசபை வலியுறுத்திவருவது பற்றி தனக்கு ஏதும் தெரியாதென கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இன்றைய போராட்டம் தொடர்பினில் வடமாகாணசபை உறுப்பினரான சித்தார்த்தன் இரா.சம்பந்தனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்த வேளை தனக்கு ஏதும் தெரியாதென கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும் வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்யக்கோரும் வடமாகாணசபை தீர்மானம் ஜனாதிபதி,கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்,தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையினில் வைத்து தெரிவித்தார். அவ்வாறு அனுப்ப்பட்ட கடிதத்தினில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடை…

    • 18 replies
    • 872 views
  2. வடமாகாண முதலமைச்சர் தமிழரசுக்கட்சியின் தலைமையினால் அச்சுறுத்தப்பட்டு மௌனிக்கப்பட்டுள்ளதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையினில் முதலமைச்சரினை அவசரமாக சந்தித்த தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன்,சரவணபவன் தரப்பு அவருடன் காரசாமான விவாதத்தினை நடத்தியுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தினில் முதலமைச்சர் பதவி நான் தந்த பிச்சையென மாவைசேனாதிராசா சொல்லிவிட சீற்றமுற்ற முதலமைச்சர் நான் கதிரை கட்டிப்பிடித்து கொண்டிருக்கும் ஆள் அல்ல ராஜினாமா செய்துவிட்டு போய்விடுவேனென பதிலளித்துள்ளார்.கூட வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே முதலமைச்சரினை சாந்தப்படுத்தியுள்ளனர்.பதிவு இணைய செய்தி இதனிடையே முதலமைச்சர் விவகாரத்தினில் உள்கட்சி முரண்பாடுகளை கடந…

    • 21 replies
    • 828 views
  3. ஒருபுறம் நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்படலாமென்ற பரபரப்பின் மத்தியினில் வன்னியினில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை விடுவித்து, மக்களை மீள்குடியேற்றுவது , மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாஇ செல்வம் அடைக்கலநாதன்இ இரா.செல்வராசாஇ சீ.யோகேஸ்வரன்இ எம்.ஏ.சுமந்திரன்இ சி.சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மீள்குடியேற்ற அமைச்சருடன் நடைபெற்ற இந்த சந்திப்பில் வட மாகாணத்துக்கான பிரதமரின் இணைப்பாளர் மாலியத்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பிரட்மன் வீரக்கோன் ஆகியோர் கலந்துகொண்டனர்…

    • 0 replies
    • 312 views
  4. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வரலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டமைப்பில் கதிரைகளை கைப்பற்ற போட்டிகள் உச்சமடையத் தொடங்கியுள்ளன. யாழ்.மாவட்டத்திற்கென உள்ள 10 வேட்பாளர்களில் சுரேஸ் தரப்பு இரு சீற்களை பெற்றுள்ளது. அதில் ஒன்றில் சுரேஸ் களமிறங்குகின்ற போதும் மற்றைய வேட்பாளர் பற்றி தகவல்கள் இல்லை. புளொட் சார்பில் சித்தார்த்தனும் டெலோ சார்பில் சிறீகாந்தாவும் களமிறங்க திட்டமிட்டுள்ளனர். தமிழரசுக்கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மாவை, சுமந்திரன், சிறீதரன் மற்றும் சரவணபவன் களமிறங்கவுள்ளனர். விநாயகமூர்த்தி யாழில் தங்கியுள்ள போதும் அவரிற்கு இடமுண்டாவென்பதில் கேள்வி தொடர்கின்றது. வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளா…

    • 0 replies
    • 466 views
  5. வடமாகாணசபை உறுப்பினரின் சிறப்புரிமையை மீறும் வகையில் வவுனியா மாவட்டச்செயலர் நடந்து கொண்டமை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசியிருக்கின்றபோதும், குறித்த மாவட்டச்செயலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தவறியிருக்கின்றார்கள். இந்நிலையில் கூட்டமைப்பின் கட்சி தலைமைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவிடயத்தில் கையாலாகாதவர்களாகவோ, நடவடிக்கை எடுக்க விரும்பாதவர்களாகவோ இருக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக எமக்கு தெரியப்படுத்தியமைக்கமைய நாம் ஜனாதிபதி மற்றும் பிரத…

    • 0 replies
    • 323 views
  6. இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வந்தே தீரும் ; யாழில் தெரிவித்தார் ஹக்கீம் யாழ்ப்பாணத்திற்கு தேவையான குடிநீரை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வடபிராந்திய உதவிப்பொது முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அலுவலகம் இரணைமடுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகச் செயற்பட்டு வந்தது. இனி…

  7. சிறிலங்கா கடற்படைக் கொமாண்டோக்களால், தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டது குறித்து, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று, கொழும்பு நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார். 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் 17ஆம் நாள் தெகிவளைப் பகுதியில், கடத்தப்பட்டு காணாமற்போன 5 தமிழ் இளைஞர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் நடந்த போது, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான உதவி ஆய்வாளர் நிசாந்த சில்வா சாட்சியமளித்தார். “தெகிவளையில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், உயர்மட்ட அதிகாரிகள் பலரும் அறிந்திருந்தனர் என்பதற்கான…

    • 0 replies
    • 319 views
  8. காமுகனுக்கு 18 வயது சிங்கள மாணவி புகட்டிய பாடம்! தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் தன்னை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிவரும் இந்த 18 வயது மாணவி அக்குரஸ்சை பகுதியில் தனியாக வந்துகொண்டு இருந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் அவர் நடந்து வரும்வேளை. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த வாலிபர் ஒருவர், குறுக்கே வந்து அவரை மறித்துள்ளார். அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று ஓரமாக வைத்து கட்டிப் பிடித்து , கெடுக்க முனைந்துள்ளார். இதேவேளை தனது நாக்கை மாணவியின் வாய்க்குள் விட அவர் முனைந்தவேளை , காமுகனின் நாக்கை பலமாக கடித்துள்…

  9. புலிகள் குறித்த அமெரிக்க அறிக்கை - கவனத்தில் எடுக்க வேண்டும் என்கிறார் பீரிஸ்! [Tuesday 2015-06-23 07:00] விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு மற்றும் புலிகளின் அனுதாபிகள் தொடர்ந்தும் இயங்குவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை தொடர்பில், அரசாங்கம் தீவிர கவனமெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு, அபயராமவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு தொடர்பான விடயத்தை கையாளும் போது, ஏற்கெனவே இரண்டு தடவைகள் விழுந்ததைப்போல் அதே வலையில் விழுந்து விட வேண்டாமெனவும் வலியுறுத்தினார். சர்வதேச நிதி வலையமைப்பினூடாக வழங்கப்படும் நிதியுதவியால் எல்…

  10. தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் மீளாய்வு! [Tuesday 2015-06-23 07:00] தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களின் பட்டியலை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் வருவதை அறிந்து மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மீண்டும் உயிர் பெறுவதாக சித்தரிக்கும் வகையில் அவசர அவசரமாக இந்த தடைப் பட்டியலை தயாரித்திருந்தார். இதில் சுமார் 05 அல்லது 06 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மையை மீள உறுதி செய்யும் நோக்கில் தடைப்பட்டியலை மீளாய்வு செய்யும் வேலைத்திட்டத்தில் புதிய அரசாங்கம் களமிறங்கியிருப்பதாகவும் அமைச்சர் சமரவீர கூறினார். இலங்கையில் நடை பெறவுள்ள புலம் …

  11. பசுமைத்தாயகம் ,USTPAC உடன் இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவை ஒழுங்கமைப்பு. ஆட்சிமாற்றத்தின் பின் மேற்குலக நாடுகள் இலங்கை அரசிற்கு நெருக்கடி வராமல் தவிர்ப்பதற்காக மனித உரிமைக் கழகத்தில் மார்ச் 2015 இல் வர இருந்த தீர்மானம் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன் சர்வதேச விசாரணையை கைவிட்டு இலங்கை அரசின் உள்ளக விசாரணையாக அதனை நீர்த்து போகச் செய்வதற்கு திரைமறைவில் உலக அரங்கிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மார்ச்மாதத்திலிருந்து இந்தப் போக்கினை மாற்றுவதற்காகவும் இத்திரைமறைவுச் சதியினை அம்பலப்படுத்தவும் பிரித்தானிய தமிழர் பேரவை சகோதர அமைப்புகளுடன் இணைந்து கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக முன்னைய ஸ்ரீலங்கா அரசும் இன்றைய அரசும் உலக அரங்கில…

    • 0 replies
    • 495 views
  12. t வெளிநாட்டு தமிழர் கட்டமைப்பை சிதைப்பதில் முக்கிய அரச புலனாய்வாளர் [ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2015, 04:01.13 AM GMT ] மைத்திரி- ரணில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து நடாத்தும் காய் நகர்த்தலில் விழிப்படையாவிட்டால், இலங்கை அரசின் வெற்றி நிச்சயம் என அரசியல் ஆய்வாளர் ச.பா.நிர்மானுசன் குறிப்பிட்டார். மைத்திரி- ரணில் அரசாங்கம் தமிழ் மக்களை அரவணைப்பது போன்று நடித்து அழிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எதிர்வரும் செப்டம்பரில் வெளிவர இருக்கும் ஐ.நா விசாரணை அறிக்கை இலங்கை அரசிற்கு தர்மசங்கடமான நிலையை தோற்று விக்கக் கூடாது என்பதற்காக தங்களின் வலைக்குள் புலம்பெயர் அமைப்புக்களை சிக்க வைத்துள்ளனர். இதனால் இலங்கை அரசின் பொறிக்குள் சிலர் சிக்குண்டுள்ளார்கள். போன…

  13. வருகின்ற ஜூலை 5 ஆம் திகதி தமிழீழ விடுதலைக்கான மாணவர் மற்றும் இளையோர் கூட்டியக்கம் நடத்தும் "தொடரும் இனப்படுகொலை" ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய கருத்தரங்கம். சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நடை பெறுகிறது. * இலங்கையில் நடந்தது நடந்து கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலை. * தொடரும் இந்த இனப்படுகொலைக் குற்றம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். *ஈழத்தமிழ் மக்களுக்ககான நிவாரணத் தீர்வாகவும் , நிரந்தரத் தீர்வாகவும் , நிரந்தர அரசியல் தீர்வாகவும், ஈழத் தமிழ் மக்களிடையே "தமிழீழ நாட்டிற்கான " பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். http://goo.gl/HrF3cw

    • 0 replies
    • 489 views
  14. இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு பதிலாக உழைப்புக்கேற்ப ஊதியம் என முதலாளிமார் சம்மேளனத்தினால் முன் வைக்கப்பட்ட யோசனையை தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன. இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டம்இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் திங்கட்கிழமை கூட்டு ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளத்திற்குமிடையில் நடைபெற்ற மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் இன்றி முடிவடைந்துள்ளது. இரு தரப்புக்குமிடையிலான கூட்டு ஓப்பந்த்தின் பிரகாரம் தற்போது நாள் சம்பளமாக ரூபா 620 வழங்கப்படுகின்றது. இரு வருடங்களுக்கான அந்த ஓப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வ…

    • 0 replies
    • 310 views
  15. தேசிய விளையாட்டு விழா 2016 இம்முறை வடமாகாணத்தைக் கேந்திரமாக கொண்டு தேசிய விளையாட்டு விழாவை நடத்த அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய 8 போட்டிகளை யாழ். விளையாட்டு கட்டிடத் தொகுதியிலும் மேலும் 14 போட்டிகளை கிளிநொச்சி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியிலும் நடத்தப்படவுள்ளன. ஹொக்கி, ஜிம்னாஸ்டிக், மற்றும் கரையோர உதைப்பந்தாட்ட போட்டிகள் யாழ். மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெளியே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் நடைபெறும் விளையாட்டு விழாவானது பல இனஇ மத இளைஞர் யுவதிகளுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் உறவையும் மேம்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தும். அத்துடன் அமைதியின்மை, இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஏற்படாமல் தடுக்கவும் இதுவொரு சந்தர்ப்பமாக அமையும். இச்…

    • 1 reply
    • 599 views
  16. திருகோணமலை தென்னமரவாடி பகுதியில் குடியேறியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. 1980களில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தாங்களாகவே சென்று குடியேறியதாக தெரிவித்துள்ளனர். எனினும் தங்களுக்கான எந்தவிதமான உதவிகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதில்லை. பாதை வசதிகளோ, மின்சார வசதிகளோ இல்லாத நிலை தொடர்கிறது. சிங்களவர்களின் காணி சுவீகரிப்பும் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரிடம் முறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களும் கைவிட்டுவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். http://www.…

    • 4 replies
    • 495 views
  17. அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறந்து செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ரீ.கலையரசன் இதனைத் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் சிங்கள பிக்கு ஒருவர் பாரிய அளவான தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்துள்ளார். அங்குள்ள தொட்டச்சுருங்கிவட்டை மற்றும் மலையடிவட்டை பகுதிகளில் 200 ஏக்கருக்கும் அதிகமான ஏக்கர் காணிகள் அவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இந்த காணிகள் பௌத்த விகாரைக்கு மாற்றப்பட்டு சிங்கள குடியேறிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை விடுவித்துக் கொள்ள சம்பந்தன் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.pathivu.com/news/41025…

    • 5 replies
    • 545 views
  18. புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு நிதி ஒதுக்கவில்லை! - ஐ.நா பேச்சாளர்.[Tuesday 2015-06-23 07:00] புலம்பெயர்ந்தோர் விழாவுக்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம், நிதி ஒதுக்கியுள்ளதாக வெளியான தகவலை ஆணைக்குழுவின் பேச்சாளர் ரூப்பர் கொல்விலி மறுத்துள்ளார். இந்த செய்தி முற்றிலும் பிழையானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவோ அல்லது மனித உரிமைகள் பேரவையோ இந்த நிகழ்வுக்கு நிதியொதுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த வருட இறுதியில் ஏற்பாடு செய்துள்ள புலம்பெயர்வாளர் நிகழ்வுக்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளதாக கடந்த வாரம் ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியிருந்தது. இந்தநிலையில…

  19. புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் அதை எதிர்கொள்ளத் தயார்! - வெளிவிவகார அமைச்சு [Tuesday 2015-06-23 07:00] புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வார்களானால் அத் தருணத்தில் அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்தார். புலம்பெயர் இலங்கையர்கள் விழாவொன்றை இவ்வருட இறுதியில் நடத்தவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதற்கு இடமளிக்கப் போவதில்லை. நீதிமன்றம் சென்று தடுப்போம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்திருப்பதையும் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை தொடர்பிலும் கேட்ட போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர…

  20. மண்டூர் சமூக சேவை அதிகாரி கொலை தொடர்பாக ஒருவர் கைது! [Tuesday 2015-06-23 07:00] மட்டக்களப்பு- நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரியாக கடமையாற்றி வந்த 42 வயதுடைய சச்சிதானந்தம் மதிதயனின் கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள மண்டூர் பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதவர்களால் மதிதயன் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் விஷேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வந்தது. இந் நிலையில் பல்வேறு குற்றங்களுட…

  21. தேர்தல் முறை மாற்றம் குறித்த இரண்டு நாள் விவாதம் இன்று ஆரம்பம்! - ரணில் வி்சேட உரை[Tuesday 2015-06-23 07:00] தேர்தல் முறைமை மாற்றம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளார். இன்றும் நாளையும் தேர்தல் முறைமை மாற்றம் குறித்து அவை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது. அவை ஒத்திவைப்பு குறித்த யோசனை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜனினால் முன்வைக்கப்படவுள்ளது. தேர்தல் முறைமை மாற்றம் குறித்த யோசனைகளின் போது சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் கருத்துக்கள் கோரப்பட்டதா கேள்வி எழுப்பப்படவுள்ளது.அவை ஒத்திவைப்பு விவாதத்தில் ஆளும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர்.இந…

  22. புலிகளின் வலையமைப்பினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! - நிமால் சிறிபால டி சில்வா[Tuesday 2015-06-23 07:00] புலிகளின் சர்வதேச வலையமைப்பினால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,டயஸ் போராக்களுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தியுள்ளார். புலிகள் இலங்கையில் தோற் கடிக்கப்பட்ட போதும் அதன் சர்வதேச வலையமைப்பு இயங்கி வருகிறது. பணம் திரட் டப்படுகிறது. எமது நாட்டின் மீதான அச்சுறுத்தல் இன்னும் தணியவில்லை. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல் கா…

  23. சிங்கத்துக்கு சவால் விடுகிறதாம் பன்றிக் குட்டி! - மகிந்த யாப்பா கூறுகிறார்[Tuesday 2015-06-23 07:00] பன்றிக் குட்டி சிங்கத்திற்கு சவால் விடுவது போன்று அமைச்சர் ராஜிதவின் புதல்வர் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அண்மையில் ராஜிதவின் புதல்வர் சதுர சேனாரட்ன சவால் விடுத்திருந்தார். முடிந்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெலியத்த தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிக் காட்டுமாறு மஹிந்த ராஜபக்ஸவிற்கு, சதுர சேனாரட்ன சவால் விடுத்திருந்தார். …

  24. Started by nunavilan,

    ரணம்

    • 0 replies
    • 430 views
  25. புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்த சிறப்புக் காவல்துறைக் குழுவின் விசாரணை அறிக்கை சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வித்தியா படுகொலையை அடுத்து, அங்குள்ள மக்களால் பிடிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் அந்த சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார். மாணவி வித்தியா படுகொலை தொடர்பான விசாரணையில் சிறிலங்கா காவல்துறையினர் இழைத்த தவறுகளும் இந்த விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேகநபரை விடுவித்த மூத்த காவல்துறை அதிகாரியிடம், இந்த சிறப்பு விசா…

    • 0 replies
    • 401 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.