Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாணசபையின் நிதியொதுக்கீடுகளில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி துண்டுப்பிரசுர விநியோகத்தை முன்னெடுத்துள்ளது. கிழக்கு மாகாணசபையின் ஊழலை வெளிப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் இந்த துண்டுப்பிரசுர விநியோகம் ஞாயிற்றுக்கிழமை (14) மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிப்பொதுச்செயலாளர் ஜோர்ஜ்பிள்ளை தலைமையில் கட்சியின் ஆதரவாளர்களால் மட்டக்களப்பு நகரில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. http://www.tamilmirror.lk/148385#sthash.zKuHadar.dpuf

    • 0 replies
    • 527 views
  2. கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட 'மிஸ்டர் ஈஸ்ரன்' ஆணழகன் போட்டியில், மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். கிழக்கு மாகாண விளையாட்டு விழா மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. இவற்றில் 'மிஸ்டர் ஈஸ்ரன்' ஆணழகன் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பெருமளவான வீரர்கள் கலந்துகொண்டனர். இதனடிப்படையில் இறுதிப்போட்டியில் முதல் இடத்தை, மட்டக்களப்பைச் சேர்ந்த எஸ்.சியாம்குமார் பெற்றுக்கொண்டதுடன், இரண்டாம் இடத்தை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.சி.எம்.அஸ்மீர் பெற்றுக்கொண்டதுடன…

    • 0 replies
    • 696 views
  3. Comments - 0 Views - 7 ஆட்சி மாற்றத்துடன் அரசாங்கம் அறிவித்திருந்த நூறு நாள் வேலைத்திட்டம், தமிழ் மக்களின் கைகளுக்கு எட்டாத கானல் நீராகிப் போனதற்கு யார் காரணம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 09.06.15 அன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நூறு நாள் வேலைத்திட்ட விவாதம் குறித்து ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி கொண்டிருக்கும் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், 'வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைமைகளைத் தவிர, அரசுடன் இணைந்திருக்கும் ஏனைய அரசியல் தலைமைகள் நாட்டின் ஏனைய பாகங்களில் நூறு நாள் வேலைத்திட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, தத்தமது மக்களுக்கான சேவைகளை வழங்கி, அ…

    • 0 replies
    • 490 views
  4. கடந்த சில வருடங்களில் சிறிலங்கா அரசாங்கம் 2.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரொக்ஹேம் சர்வதேச சமாதான ஆய்வு மையத்தின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. பதிவு இணைய செய்தி சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதிவு இணைய செய்தி யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இந்த அளவான ஆயுதங்கள் எதற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழுகிறது.பதிவு இணைய செய்தி கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷ பாரிய அளவில் ஆயத விற்பனையை மேற்கொண்டு வந்தமையும், யுக்ரெயின் கிளர்ச்சியாளர்களுக்கு மகிந்தவின் மருமகனால் ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறி…

    • 0 replies
    • 286 views
  5. இந்திய துணைத் தூரகத்தின் ஏற்பாட்டில் ரவீந்திரநாத் தாகூரின் 154 வது பிறந்த நாள் நினைவு நிகழ்வுகள். June 13th, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூரகத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை பகல் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவரான ரவீந்திரநாத் தாகூரின் 154 வது பிறந்த நாள் நினைவு நிகழ்வுகள் இந்திய துணைத் துதாரகத்தின் துனைத்தாதுவர் எ.நடராசா தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துனை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்னமும் மற்றும்p விருந்தினர்களாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வட மாகாண ஆளுனரின் செயலாளர் எல்.;இளங்கோவன் உட்…

    • 6 replies
    • 1k views
  6. ஊழல் பேர்வழி பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னதாக கடுவலை நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கமறுத்திருந்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் றொக்க பிணையிலும், 1 மில்லியன் ரூபாய் சரீர பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் குற்றம் சுமத்தப்பட்டிருந்த மேலும் நான்கு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர் பிணை பெற்றுக்கொள்வதற்காக 100 மில்லியன் ரூபாய் லஞ்சத்தை காவற்துறை அதிகாரி ஒருவருக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/40860/57//d,article_full.…

    • 0 replies
    • 400 views
  7. நடந்தது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ள இன்று வரை மறுக்கின்ற கூட்டமைப்பும் ஜிரிஎவ்ப் அமைப்பினரும் பிரிட்டனில் நடத்திய ரகசிய சந்திப்பு தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்டுள்ள அப்பட்டமான துரோகமென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார். ஜெர்மனில் பேர்கொவ் பவுண்டேசன் ஏற்பாட்டினில் நடைபெற்ற கூட்டத்தினில் நடந்தது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவும் பொதுசன வாக்கெடுப்பு தேவையில்லையென்ற நிலைப்பாட்டையும் கடைப்பிடித்திருந்த கூட்டமைப்பும் ஜிரிஎவ்ப் அமைப்பினரும் இன்று வரை அதனையே கடைப்பிடிக்கின்றனர்.அத்தகைய தரப்பினர் நடத்திய இரகசிய சந்திப்பு எத்தகையதாக இருக்குமென்பது பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லையெனவும் அவர் தெரிவித்தார். வீடமைப…

    • 18 replies
    • 1k views
  8. சம்பூரில் மீள்குடியேற சென்ற மக்கள் பொலிஸாரினால் வெளியேற்றம் [ சனிக்கிழமை, 30 மே 2015, 04:21.18 PM GMT ] [ பி.பி.சி ] திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து தமது காணிகளை துப்பரவு செய்த காணிகளின் உரிமையாளர்களும் தற்காலிக கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். குறித்த காணி தொடர்பான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. காணிக்குள் நடமாடும் வெளியாரை வெளியேற்றுமாறு நீதிமன்ற அறிவித்தல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே ப…

  9. வலி.வடக்கு மக்களை அவரவர் நிலங்களில் விரைவில் முழுமையாகக் குடியமர்த்துங்கள்.இல்லையேல்,கடந்த அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியதைப் போல் விரைவில் வீதியில் இறங்கிப் போராடத் தயங்கமாட்டோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம். வலி.வடக்கு மக்கள் அவர்களது சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்து இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன.அதனை முன்னிட்டு வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் ஓர் அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1990ஆம் ஆண்டு ஜீன் மாதம் 15ஆம் திகதி தொடங்கிய அவலவாழ்வு,26ஆவது ஆண்டிலும் நீடிக்கின்றது.38 நலன்புரி நிலையங்கள…

  10. இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடைமுறையை மாற்ற வழி செய்யும் அரசியல் சாசனத்தின் மாற்றியமைக்கப்பட்ட 20ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தாலும், அதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன என்று சிறிய மற்றும் சிறுபான்மையினரின் கட்சிகள் கூறுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது குறித்த விளக்கம் தேவை என்று கோரியுள்ளது. தமது நிலைப்பாடு குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம். http://www.bbc.com/tamil/sri_lanka/2015/06/150614_20a_sumanthiran

    • 0 replies
    • 264 views
  11. இறைமையை பாதுகாத்து நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் தயார்! - நாடாளுமன்றில் மங்கள சமரவீர தெரிவிப்பு!! இலங்கையின் நல்லிணக்கத்தையும், இறைமையையும் பாதுகாத்து ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் தயாராக உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; எனக் கூறி எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த மங்கள சமரவீர, பயங்கரவாதிகள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்களை ஒதுக்கத் தாம் தயாரில்லை என்றும் தெரிவித்தார். அதேவேளை, புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்க்கட்சியினர் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். சிறிலங்காவின் எ…

  12. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்தவை குறித்து இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் பங்களிப்பு பாரியளவில் இருந்தமை வெளிப்படையான உண்மை. சாட்சியங்கள் இல்லாமல் நடத்தப்பட்ட இன அழிப்புப் போரில் சாட்சியத்தைக் கொண்டுவரும்படிக் கோருவதும் அதற்கான ஆதாரத்தைக் கேட்பதும் நகைப்பிற்குரியது என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், ‘இறுதிப்போரில் நாங்கள் இருந்தோம் எங்களுடைய சாட்சியைத் தவிர வேறு சாட்சி இல்லை,’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.பதிவு இணைய செய்தி அவர் மேலும் தெரிவித்ததாவது; இறுதிப்போரில்…

  13. தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லையாம் – என்கிறார் கோத்தா JUN 15, 2015 | 1:22 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக தம்மால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும், தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை பாதுக்க, உடுமுல்ல ஆலயத்துக்குச் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்சவிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வதை தாம் உறுதி செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, அரசியலுக்கு வருவீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு, கோத்தாபய ராஜபக்ச, தாம் அரசியலுக…

  14. அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் சமல் ராஜபக்ச JUN 15, 2015 | 1:12by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தாம் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவிருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும், நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக சமல் ராஜபக்ச நிறுத்தப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் உள்ளன. பிரதமரான நான் நியமிக்கப்படவுள்ளதாகவோ, பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாகவோ வெளியாகும் செய்திகளில் அடிப்படை இல்லை. எனக்க…

    • 0 replies
    • 988 views
  15. June 5th, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது. இலங்கைத்தமிழரசுக்கட்சியின் அக்கரைப்பற்றுப் பணிமனைத் திறப்புவிழா நாளை 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு ஓய்வுநிலை கிழக்குமாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா கலந்துகொள்கிறார். தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன் பொன்.செல்வராசா பா.அரியநேத்திரன் சீ.யோகேஸ்வரன் ஆகியோருட்பட பலர் கலந்துகொள்கின்றார்கள். இன்று சேவை நலன் பாராட்டுவிழா! இதேவேளை அரசாங்க வைத்தியத்துறையில் கடந்த 31வருடங்கள் சேவையாற்றி 30.05.2015இல் ஓய்வுபெற்ற கிழக…

  16. கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழுள்ள காரைநகர் பிரதேசசபை தவிசாளர் வே.ஆனைமுகன் உள்ளிட்ட ஐவரை நேற்று பொலிசார் கைது செய்துள்ளனர். வீடொன்றிற்குள் புகுந்து ஒருவரை தும்புத்தடியால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22ம் தகதி வலந்தனையிலுள்ள கிருசாந்தன் என்பவரது வீட்டுக்குள் நுழைந்து, தும்புத்தடி மற்றும் கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த கிருசாந்தன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வீடு திரும்பியுள்ளார். ஆனைமுகன் தலைமையில் வந்த குண்டர்கள் தன்னை தாக்கினார்கள் என்றும், வீட்டிலிருந்த தும்புத்தடியை எடுத்து தன்னை ஆனைமுகன் கடுமையாக தாக்கினார் என்றும், …

    • 3 replies
    • 522 views
  17. நாடாளுமன்ற தேர்தல் கனவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரபலங்கள் அலையத்தொடங்கியுள்ள நிலையில் குழிபறிப்புக்களும் ஆரம்பமாகியுள்ளது. சம்பந்தன்-சுமந்திரன் தரப்பினது இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தையினை அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்து வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்க கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அவர் சார்ந்த கட்சி தலைமைக்கு சிவாஜிலிங்கத்திற்கு யாழ்.மாவட்டத்தில் போட்டியிட இடம் வழங்கப்படக்கூடாதென்ற அடிப்படையிலேயே ஒரு இடம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. அந்த இடத்தினில் சிறீகாந்தா தேர்தல் களம் குதிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே வடமாகாணசபையின் மற்றொரு உறுப்பினரான அனந்திக்கு இடம்கொடுக்க …

    • 50 replies
    • 2.8k views
  18. ரவீந்திரநாத் தாகூரின் 154 ஆவது பிறந்த நாளையும், 1934 ஆம் ஆண்டு ஆனிமாதம் அவர் யாழ்ப்பாணம் வருகை தந்த நாளையும் நினைவுகூரும் வகையில் இந்தியத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணப் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நிகழ்வொன்றினை நேற்று ஏற்பாடு செய்திருந்தது. பலருக்கும் வலிந்து அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையினில் நிகழ்வின் ஈற்றில் ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு குறுந்திரைப்படம் காட்டப்பட்டது. நாலுபேர் மட்டும் குறும்படம் பார்த்தனர். நால்வருள் ஒருவராய் இருந்து அக்குறுந்திரைப்படத்தை முழுவதுமாக பார்த்து முடித்தார் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம். எனினும் இன்று வரை நுழைவு விசா அனுமதி மறுக்கப்பட்டவர்களுள் சிவாஜிலிங்கமும் ஒருவராவார். இந்திய தூ…

    • 3 replies
    • 472 views
  19. சம்பூரில் சுமந்திரன்! -மீளக்குடியேறும் மக்களை சந்திப்பு [sunday 2015-05-24 08:00] திருகோணமலை சம்பூர் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் கிழக்குமாகாண கல்வியமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சருமான தண்டாயுதபாணி அவர்களுடன் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் சம்பூர் மக்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=132635&category=TamilNe…

    • 26 replies
    • 3k views
  20. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வருகை தரும் பகுதிகளில் அவர்களை கவருவதற்காக சூதாட்ட விடுதிகளை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்டின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான அபிவிருத்தி திட்டங்களை திட்டமிட்ட வகையில் முன்னெடுக்க வேண்டும். சில இடங்களில் திட்டமிட்ட வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன- சுற்றுலாத்துறை உட்கட்டுமானவசதிகள் அதிலொன்று. அதேவேளை சுற்றுலாப்பயணிகளை கவரும் இடங்களை அபிவிருத்தி செய்தல்,, சூதாட்ட விடுதிகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எனக்குள்ளது. நான் சூதாட்டத்திற்கு எதிரானவன், ஆன…

    • 1 reply
    • 491 views
  21. யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியிலுள்ள தேவாலயத்துக்குச் சனிக்கிழமை (13) சென்ற சுன்னாகம் கிழக்குப் பகுதியை சேர்ந்த உ.ஸ்டெலா (வயது 20) என்ற யுவதியைக் காணவில்லையென யுவதியின் பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சனிக்கிழமை காலை தேவாலயத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற யுவதி இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும் எங்கு தேடியும் யுவதி கிடைக்கவில்லையெனவும் பொலிஸ் முறைப்பாட்டில், யுவதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர். www.tamilmirror.lk/148301#sthash.SvuFqlRk.dpuf

    • 0 replies
    • 602 views
  22. குடியமர்ந்த மக்களிற்கு எதுவுமே கிட்டவில்லை! சஜீவன்; குற்றச்சாட்டு!! கடந்த 25 வருடங்களின் பின்னர் அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக பல தரப்பினர்களும் வாக்குறுதி வழங்கியிருந்த போதும் மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இதுவரையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இங்கு மீள்குடியேற்றத்திற்காக பல மில்லின் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் அறிவித்திருக்கின்ற நிலையில் அந்த நிதி எங்கு , யாருக்கு செலவிடப்படுவதாக கேள்வியெழுப்பி இருக்கின்றார் சஜீவன். அத்துடன் வலி. வடக்கு மீள்குடியேற்றக்குழுவின் தலைவரான அவர் மீள்குடியமர்ந்த மக்களிற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொட…

    • 1 reply
    • 348 views
  23. மாணவிகளைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் வவுனியாவில் கைது! [sunday 2015-06-14 07:00] மாணவர்களைத் துஸ்பிரயோகம் செய்த வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயகெனடி தெரிவித்தார். பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தின் குறித்த ஆசிரியர் சிறுமிகள் மீது தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்து பூவரசன்குளம் பொலிஸாரிடம் அப்பகுதி மக்களும், தாய் சிறுவர் இல்ல அருட் சகோதரி ஒருவரும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர். இதையடுத்து குறித்த ஆசிரியர் சில நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்றுமுன்தினம் பொல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.