Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போருக்குப் பின் போதை எனும் பேரழிவு! WEDNESDAY, 27 MAY 2015 08:17 ஆயுதப் போராட்டங்கள் வடக்கு- கிழக்கில் முடிவுக்கு வந்தாலும், சமூக ரீதியிலான சீரழிப்பு நடவடிக்கைகள் பெருமெடுப்பில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன. மூப்பது வருடங்களாக போர் தின்ற சமூகத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக போதையும், சமூக ஒழுக்க மீறலும், மனித விரோத சிந்தனையும் ஆட்கொண்டிருக்கின்றது. “வடக்கு (கிழக்கு) இளைஞர்களை இலக்கு வைத்து தீய சக்திகள் இயங்குகின்றன. அவை, போதைப் பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் ஆதங்கம் வெளியிட்டு வருகின்றார். இந்த நடவடிக்கைகளின் பின்னால் ஆளும் தரப்பு இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டி வந்திரு…

  2. பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் மகிந்த – அவரது பேச்சாளர் உறுதிப்படுத்தினார் JUN 01, 2015 | 17:30by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்காவில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக,அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மகிந்த ராஜபக்ச முயற்சிப்பதாக, அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் உள்ள, அதிபர் மைத்திரிபால சிறிசேன, அந்தக் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்…

    • 0 replies
    • 467 views
  3. வித்தியா கொலையுடன் தொடர்புடையோருக்கு உச்சத் தண்டனை பெற்றுக்கொடுப்போம்! - சட்டத்தரணி தவராஜா [Monday 2015-06-01 20:00] புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு அதியுச்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சார்பாக வாதிட்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி,தவராஜா தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்தார். மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களுக்கு எதிராக மாணவியை கடத்த…

  4. போதைப் பொருள் விற்பனையாளருக்கு மரணதண்டனை! -ஜனாதிபதி பரிந்துரை [Monday 2015-06-01 20:00] இலங்கையில் போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்ததாகும் என்று தான் யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அதற்கான வாதப்பிரதிவாதங்களை நாட்டில் இன்று முதல் ஏற்படுத்துவதற்கான யோசனையை தான் முன்வைப்பதாகவும் அதனூடாக வெளிப்படும் மக்களின் கருத்துகளை செவிமடுத்து அடுத்த கட்டநடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  5. இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இலங்கைத் தமிழர்கள் மூன்று பேரை ராமேஸ்வரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கோடி இந்திய ரூபா மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்துக்கு அருகில் மண்டபம் தோணித்துறைப் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கியூபிரிவு பொலிஸார் சோதனை நடத்தினர். இதன்போது அப்பகுதியில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. தமிழகம் வந்த இவர்கள் மண்டபம் அகதிமுகாமில் தங்கியிருந்ததும் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடந்த முயன்றதும் விசாரணையின் போது தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. http://www.malarum.com/article/tam/2015/06/01/10338/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%…

  6. புங்குடுதீவில் 18 வயதான மாணவி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதான சந்தேக நபர்களுக்கு இன்று மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கைதான 9 பேரும் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது அவர்களை எதிர்வரும் 15ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. http://www.pathivu.com/news/40513/57//d,article_full.aspx

    • 3 replies
    • 1.6k views
  7. ஒபாமாவின் சிறிலங்கா பயணம் – ஏற்பாடுகள் நடப்பதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா JUN 01, 2015 | 13:16by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறிலங்கா பயணம் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக. சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். சிறிலங்கா தலைவர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வது ஒன்றும் புதிய விடயம் அல்ல. ஆனால், அமெரிக்கத் தலைவரின் சிறிலங்கா பயணம் வரலாற்று ரீதியானது. என்றும் அவர் கூறியுள்ளார். சிறிலங்காவுக்கு வருகை தருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு, சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக, கடந்த மாதம் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உறுதிப்படுத்தியிருந்தார். …

    • 4 replies
    • 633 views
  8. தற்போது கிறிஸ்பூதத்திற்கு பின்னரான மிகப்பெரும் சவாலக உருவெடுத்து ஆட்டிப்படைக்கும் கொடுமையான விசயமாக இருப்பது இந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்தான். “உடையவன் இல்லையேல் ஒரு முழம் கட்டை என்பது” தற்போது தமிழர் பகுதிகளிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் நடந்தேறும் பாலியல் கொடுமைகளின் மூலம் வெளிப்படையாக காணமுடிகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் இருந்த சமூகமே தொடர்ந்து வாழ்கிறது விடுதலைப்புலிகள் இருந்தபோது வராத காமம் ஏன் இப்போது வருகிறது? மக்களின் சுதந்திரத்தையும் வாழ்வியல் போக்கையும் பாதிக்கும் சதியாக பெண்களின் உணர்வுகளை சீரளிக்கும் திட்டமிட்டசதியாக இது இடம்பெறுவதை யாவரும் உணர்ந்துவிட்டார்கள். கடந்த 4 மாதத்தில் மாத்திரம் 35 ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள…

  9. தமிழ்மக்களின் இனப்படுகொலைக்கு தாமதமற்ற நீதி வேண்டும் – கலாநிதி அப்துல் ருப் JUN 01, 2015 | 11:31by நித்தியபாரதிin கட்டுரைகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் ‘தமிழ் இனத்தை நிர்மூலமாக்குவதற்கான’ திட்டமிட்ட மூலோபாயம் அரங்கேற்றப்பட்டது. தமிழ் மக்கள் சிறிலங்காவில் எஞ்சியிருக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறானதொரு இனப்படுகொலை முயற்சி மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஏசியன் ரிபியூன் ஊடகத்தில், கலாநிதி அப்துல் ருப் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் பிரித்தானிய கொலனித்துவம் நிலவிய காலப்பகுதியில் சிறிலங்காவின் தேயிலைத் தோட்டங்கள், நெடுஞ்சாலைகள், வர்த்தகம் மற்றும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடு…

    • 0 replies
    • 579 views
  10. கொக்கிளாயில் மருத்துவமனை அமைந்துள்ள பகுதி மற்றும் அதற்கு அண்மைய தனியாருக்குச் சொந்தமான காணிகளை நீதிமன்ற ஆணையையும் மீறி அடாத்தாக அபகரித்து, படைத்தரப்பினரின் உதவியுடன் பௌத்ததுறவி ஒருவர் புத்தவிகாரையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்தக் காணி அபரிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2011ம் ஆண்டிலிருந்து அப்போதைய அரசாங்கத்திடம் பல்வேறு முறைப்பாடுகளைச் செய்தும் இன்றுவரை குறித்த காணி உரியவரிடம் கையளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்பொழுது அங்கு விகாரையை கட்டும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாயில் விகாரை அமைக்கப்படும் தனியார் காணியை உரியவரிடம் ஒப்படைக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளையும் மீறி நடைபெறும் இச்செ…

  11. இலங்கையில் யுத்த காலத்தில் கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் விவகாரத்தை தான் பொறுப்பேற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தம்மிடம் தெரிவித்ததாக அவரை அண்மையில் சந்தித்த காணாமல்போனவர்களின் உறவினர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர். காணாமல்போனவர்களின் உறவினர்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்களின் உறவினர்களைத் தேடி பல வழிகளிலும் போராடி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடனான சந்திப்பில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அந்தோணி ரவீதா பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம். http://www.bbc.com/tamil/sri_lanka/2015/05/150531_missing_people_chandrika

  12. பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 225 ஆக காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்படுவதனை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். விகிதாசார மற்றும் தொகுதிவாரி ஆகிய கலப்பு முறைமைகளில் தேர்தல் நடத்தப்படுவதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்கின்ற போதிலும், பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 125 உறுப்பினர்கள் தொகுதிவாரி அடிப்படையிலும் ஏனைய 100 உறுப்பினர்களும் விகிதாசார மற்றும் தேசியப் பட்டியல் அடிப்படையில் தெரிவு செய்யப்ப…

    • 1 reply
    • 510 views
  13. சிறிலங்கா தரப்பின் கருத்துக்களால் இந்தியா அதிருப்தி – கவலையை பரிமாறத் திட்டம் JUN 01, 2015 | 0:59by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் மீனவர் விவகாரத்தில் சிறிலங்கா தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட கருத்துக்களால், இந்தியா கடும் சீற்றமடைந்துள்ளதுடன், இதுகுறித்து சிறிலங்காவுக்கு இராஜதந்திர முறைப்படி கவலையைத் தெரிவிக்கவுள்ளது. புதுடெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மீனவர் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா தரப்பில் இருந்து வெளியாகும் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் குறித்து, இந்தியா கவலையைப் பரிமாறத் திட்டமிட்டுள்ளது. இந்த அறிக்கைகள் இந்த விவகாரத்தில் பேச்சுக்கான சூழலை பாழாக்கி விடும். மீனவர் விவகார…

  14. யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்விற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளதாக மகாவலி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாரிய விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைக் காரணம் காட்டி மணல் அகழும் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இது குறித்துக் கருத்து வெளியிட்ட மகாவலி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க, யாழ்ப்பாணத்தில் மணல் வளம் கூடிய பகுதிகளில் அதனை அகழ்வதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வுகளின் முடிவின் அடிப்படையில் மணல் அகழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் யாழ். அரச அ…

  15. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இந்திய உளவு கட்டமைப்பின் கொலை முயற்சியிலிருந்து தப்பித்து உள்ளமை உறுதியாகியுள்ளது.யாழ்ப்பாணம்- கொழும்பு இந்திய தூதரகங்களினால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இரகசிய நடவடிக்கையினிலேயே கஜேந்திரனை கொலை செய்ய முயற்சிகள் இடம்பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.பதிவு இணைய செய்தி இந்திய ரயில்வே பாதை அமைப்பொன்றிற்கு சொந்தமான கனரக வாகனமொன்றை பயன்படுத்தி இக்கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.கஜேந்திரனின் நடமாட்டங்கள் துல்லியமாக அவதானிக்கப்பட்டு குறித்த கனரக வாகனத்தை செலுத்தி வந்த சாரதியின் கைத்தொலைபேசிக்கு வழங்கப்பட்ட கடைசி உத்தரவு மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.எனினும் கொழும்பு உயர்மட்ட பணிப்பினையடுத்து விசாரணைகள் முடக்கப்பட்டுள்ள…

    • 44 replies
    • 2.9k views
  16. சிராந்தி ராஜபக்சவிடம் நாளை விசாரணை MAY 31, 2015 | 13:38by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு முன்பாக, சிராந்தி ராஜபக்ச நாளை முன்னிலையாகவுள்ளார். சிராந்தி ராஜபக்சவின் ஊடக இணைப்பு அதிகாரி அனோமா வெலிவிற்ற இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சிராந்தி ராஜபக்சவை நாளை விசாரணைக்கு வருமாறு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விடுத்திருந்த நிலையில், அவர் நாளை காலை 9.30 மணிக்கு, விசாரணைக்கு சமூகமளிக்கவுள்ளார். கார்ல்டன் சிரிலிய சவிய பவுண்டேசன் என்ற அமைப்பின் வங்கிக் கணக்குத் தொடர்பான விசாரணைக்கே சிராந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின் காப்பாளராக சிராந்தி ராஜபக்ச இர…

    • 0 replies
    • 520 views
  17. மகிந்தவின் பெறாமகன் உதயங்க வீரதுங்க டுபாய் விடுதியில் – கொழும்பு ஆங்கில வாரஇதழ் MAY 31, 2015 | 12:46by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவினால் தேடப்பட்டு வரும், ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாயில் தங்கியிருப்பதாக, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரேனிய பிரிவினைவாதப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க, ரஷ்யாவுக்கான தூதுவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவுக்கு திரும்பாமல் ஒளிந்து வாழ்கிறார். மகிந்த ராஜபக்சவின் பெறாமகனான இவர், மிக் போர் விமானக் கொள்வனவிலும் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்…

    • 0 replies
    • 490 views
  18. தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு சிறிலங்கா தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு? MAY 31, 2015 | 12:28by கி.தவசீலன்in செய்திகள் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, சிறிலங்காவில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கக் கூடும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். “இது தொடர்பான சட்டரீதியான தடைகளை அகற்றும் சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில் தங்கியுள்ள அகதிகளும், சிறிலங்காவில் நடக்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும். தற்போதைய சட்டங்களின் படி, அவர்களை வாக்காளர்களாக சேர்த்துக் கொள்ள முடியாது. அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்றத்தி…

    • 0 replies
    • 385 views
  19. சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நிராகரித்துள்ளார். இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், “மூன்று மாதங்களில் இரண்டு தரப்புகளிலும், நான்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்று மாதங்களில் நான்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது வெளிப்படையானது. ஏனென்றால், வெளிப்படையான உறவுகளை வைத்துக் கொள்ள நாம் விரும்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2015/06/01/news/6668

    • 0 replies
    • 263 views
  20. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்பு JUN 01, 2015 | 1:30by கார்வண்ணன்in செய்திகள் பிரான்சின் லியோன் நகரில் இன்று ஆரம்பமாகும், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐந்து நாள் அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்கவுள்ளது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது குறித்த இந்த நான்காவது அனைத்துலக பயிலரங்கை, அனைத்துலக காவல்துறையான இன்ரபோல் ஒழுங்கு செய்துள்ளது. அனைத்துலக காவல்துறையின், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் பணியகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பயிலரங்கில் 30 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் சிறிலங்காவில் சார்பில்…

    • 0 replies
    • 304 views
  21. கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மணியம் விதுசா (வயது 16) என்ற மாணவியை கடந்த 28ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (30) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஊற்றுப்புலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி நகரிலுள்ள தனது தாயார் பணி செய்யும் சிறுவர் இல்லத்துக்கு சென்று, தாயைச் சந்தித்துத் திரும்பிய மாணவி, இதுவரையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்றுவருகின்றார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். http://www.tamilmirror.lk/147252#sthas…

  22. தமிழ் தேசிய கூட்டங்களுக்கு தங்களுடன் ஒன்றித்து செயற்படுவதாக சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி - அஸ்கிரிய மஹாநாயக்கரை சந்தித்து இந்த விடயத்தை கூறியுள்ளார். கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு சிறந்தஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அவர்கள் அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே அவர்களுடன் பிரச்சினைகள் எவையும் இல்லை என்று குறிப்பட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்து அஸ்கிரிய மஹாநாயக்கர் வினவியபோதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/40487/57//d,article_full.aspx

  23. மகிந்த அரசின் ஊழல்கள் குறித்த விசாரணைகள் தீவிரம் – அமெரிக்க அதிகாரிகள் உதவிக்கு வருகை MAY 31, 2015 | 3:17by கார்வண்ணன்in செய்திகள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்கா அதிகாரிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த தலைவர்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு விசாரணை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம், நீதித் த…

    • 1 reply
    • 455 views
  24. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வீட்டில் இருந்திருக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அவர் செய்த காரியங்கள் தொடர்பில் அவரே நன்கு அறிவார், அதிகாரமின்றி அவரினால் இருக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு தேர்தலிலும் தோல்வியடையாது தாம் ஒன்பது ஆண்டுகள் வீட்டிலிருந்ததாகத் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1980களிலும், 2001ம் ஆண்டிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடைச் சிலர் உதவிகளை செய்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்களினால் நாம் பின்வாங்கி விடக் கூடாது என அவர் தெரிவித்துள்ள…

    • 0 replies
    • 433 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.