Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆகஸ்ட் 27ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல்? [sunday 2015-05-24 08:00] நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 27ம் நாள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தேர்தலை நடத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 27ம் நாள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன, அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது. 20வது திருத்தச்சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சபை தொடர்பான இணக்கப்பாடுகள் காணப்பட்ட பின்னர், நாடாளுமன்ற…

  2. பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற மாணவன் கைது! - ஒளிந்திருந்து விட்டு வைத்தியசாலைக்கு வந்த போது சிக்கினார். [sunday 2015-05-24 08:00] யாழ் நீதிமன்ற வளாகத்தின் மீதான தாக்குதல் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மாணவன் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் கண்காணிப்பில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். கலவரத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காலில் காயடைந்த மாணவன் இரு தினங்களாக மறைந்திருந்த நிலையில் நேற்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படிக்கும்…

  3. மாகாணசபைகளில் பெண்களுக்கு 30 வீத இடஒதுக்கீடு! - புதிய சட்டம் கொண்டு வரத் திட்டம். [sunday 2015-05-24 08:00] மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 வீதம் ஒதுக்கீடு வழங்க மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இந்த தீர்மானத்தை கொண்டுவந்தன என்றும் தெரியவருகிறது. இலங்கையில் நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் பெண்களுக்கு பிரதிநிதித்தும் இருந்தாலும் அது போதாது என்ற கருத்தே நிலவிவருகிறது. குறிப்பாக மாகாண சபைகளில் 6 சத வீத்திற்கும் மேலா…

  4. ஆர்ப்பாட்டகாரர்களது மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் கழிவுவாய்க்காலிருந்தும் மீட்பு யாழ். பொது நூலகத்திற்கு முன்னாலுள்ள கழிவு வாய்க்காலுக்குள் இருந்து மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் யாழ்ப்பாணப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.நீதிமன்ற வளாகத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையினை அடுத்து பொலிஸாரும் அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை கழிவு வாய்க்காலுக்குள் போட்டுவிட்டு ஆர்ப்பாட்டகாரர்கள் தப்பியோடியுள்ளனர். பூங்குடுதீவில் கூட்டு வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சமபவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கொலைக்கு நீதி கோரியும் கடந்த புதன்கிழமை யாழில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற…

  5. வித்தியாவின் கொலைக்கு நீதி வேண்டி சுதந்திர சதுக்கத்தில் மாலை கவனயீர்ப்பு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் முன்னால் கவனயீர்ப்பு ஒன்று நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதி விவகார அமைச்சு , மகளிர் விவகார அமைச்சு மற்றும் சிறுவர் விவகார அமைச்சு என்பனவற்றின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. எனவே கவனயீர்ப்பில் கலந்து கொண்டு வித்தியாவின் கொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும் இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது தடுக்கவும் மூவின மக்களையும் கலந்து கொள்ளுமாறு மகளிர் வ…

  6. திருக்கணித பஞ்சாங்க கணிதர் காலமானார் திருக்கணித பஞ்சாங்கக் கணிதர் கலாபூஷணம் சி.சிதம்பரநாதக் குருக்கள் தனது 80 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நலம் சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை 5மணிக்கு காலமானார். 18.12.1935 இல் பிறந்த இவர் தென்மராட்சிப் பிரதேசத்தில் பல ஆலயங்களில் பிரதம குருவாகக் குருத்துவப் பணிகளை மேற்கொண்டவர். மட்டுவிலில் இருந்து வெளிவரும் திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரதம ஆசிரியராகவும் திகழ்ந்தார். வேதாகம சோதிட பூஷணம், சிவாச்சாரிய திலகம், கலாபூஷணம் முதலிய கௌரவப் பட்டங்களையும் இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=351504049024567397#sthash.1b3WriI9.dp…

  7. தாக்குதலுக்குள்ளான நீதிமன்ற கட்டடதொகுதி இராணுவத்தினால் புனரமைப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதி இன்று இராணுவத்தினரால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 20 ஆம் திகதி பொலிஸாரின் கட்டுக்களையும் உடைத்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் கற்கள் , பொல்லுகள் மற்றும் கண்ணாடிப் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதம நீதியரசர் உடனடியாக சேதங்களை திருத்துமாறு கட்டளையிட்டார். இதனையடுத்து இன்றைய தினம் இராணுவத்தினரால் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்…

  8. யாழில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் சமூகவிரோத நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறும் பகுதிகள்

    • 7 replies
    • 835 views
  9. விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் ஊருக்கு அனுப்பிவைப்பு எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 16 பேர் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு இந்திய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களை நேற்றையதினம் காலை இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன்படி நேற்று காலை 10 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்த 16 பேரையும் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினர் பொறுப்பேற்றனர். திருகோணமலை மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரையும் அவர்களது சொந்த இடங்களுகளுக்கு பேருந்து மூலம் தாம் அனுப்பி வைத்துள்ளதாக யாழ். கடற்றொழில் திணைக்கள …

  10. இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது; பீல்ட் மார்ஷல் இருளைப் போக்கி இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது புதிய ஒரு யுகத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜய ஸ்ரீ மகா போதியில் தான் பிரார்த்தித்துக்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகாபோதியில் வழிபாடுகளை மேற்கொண்ட பொன்சேகா, அங்கு கூடிய ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்துள்ளதாவது, நாம் தற்போது புதிய பயணமொன்றைத் தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இந்த புதிய அரசாங்கம், நாட்டுக்காக பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. யுத்த வெற்றியை பங்கிட்டுக்கொண்டு அதன் மூலம் வரப்பிரசாதங்களைப் பெற…

  11. கிளிநொச்சி நகரத்திற்கு மிக அருகில் உள்ள இரத்தினபுரம் கிராமத்திற்கு அந் நகரத்திலிருந்து செல்லும் பாதை கடந்த பல வருடங்காக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. இதனால் ஆனந்தபுரம், இரத்தினபுரம், திருவையாறு போன்ற கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் போக்குவரத்தின்போது பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகின்றனர். கிளிநொச்சி நகரத்தின் ஏ-9 பாதையிலிருந்து ஆரம்பிக்கும் இந்த வீதி ஆனந்தபுரம், இரத்தினபுரம் ஊடாக திருவையாற்றிற்குச் செல்கிறது. சுமார் இரண்டரை கிலோமீற்றர் நீளமான இந்த வீதி கடந்த பல வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. அதிகாரிகள் எவரும் இதைக் கவனத்தில் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வீதியில் இரத்தினபுரப் பகுதியில் பாரிய சேற்றுக்கிடங…

    • 0 replies
    • 336 views
  12. யாழ்ப்பாண நகரில ஆர்ப்பாட்டங்களை நடத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவித்துள்ளது. காவற்துறையினரின் விண்ணப்பத்துக்கு இணங்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை தலைமையகம் தெரிவத்துள்ளது. இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி இயக்கம் - மானிப்பாய் மற்றும் ராஜினி தலைமையிலான பெண்கள் இயக்கம் - கொக்குவில் ஆகிய தரப்புக்கு இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் கவச வாகனத்தில் அதிரடிப்படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எ…

    • 15 replies
    • 900 views
  13. ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான உயர் மட்டக் நிபுணர்கள் குழுவில் ஈழத்தமிழர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார். பொது செயலாளர் பான் கீ மூனின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழரான தனஞ்சயன் சிறிஸ்கந்தராஜாவே இந்த குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளார். பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவின் குடியுரிமைகளை கொண்ட அவர், சமுக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். வளங்களுக்கும், நிதியிடலுக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்யும் நோக்கில் இந்த நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி செயலாளர் கிளிஸ்;டாலினா ஜோர்ஜேவியா தலைமை தாங்குகிறார். http://www.pathivu.com/news/40311/57//d,article_f…

    • 3 replies
    • 639 views
  14. (பிரபா மதன்) வித்தியாவிற்காக போராடும் நெஞ்சங்கள் சரணியாவிற்காகவும் போராட வேண்டும் ,அவரின் புகைப்படத்தையும் ஊர்வலத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் ,அந்த கொலையை மறைக்க அவரது பாட்டியை மிரட்டிய பொலிஸ்காரர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் வன்னியை சேர்ந்த 16 வயதுடைய சரண்யா எனும் பாடசாலை மாணவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலேயே இது தொடர்பிலான விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. சரண்யா பெற்றோரை இழந்த பாடசாலை மாணவி. 2006ம் ஆண்டு இடம் பெற்ற யுத்தத்தில் சரண்யாவின் தந்தை உயிரிழந்ததுடன், அவரது தாயார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது பாட்டியின் அரவணைப்பிலேயே சரண்யா மற்றும் அவரது இர…

    • 14 replies
    • 4.2k views
  15. இலங்கை மத்திய வங்கியில் கடந்த ஆட்சியின்போது 2,700 பில்லியன் ரூபா நிதிமோசடி இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி மனுக்கோரல் சபைக்குத் தெரியாமல் தனிப்பட்ட ரீதியில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வங்கி பிணை முறிகளை வழங்கியதன் மூலம் இந்த நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டார். பத்து பில்லியன் ரூபா மோசடி இடம் பெற்றதாகக் கூறப்பட்டதன் காரணமாக அதனைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையிலேயே இந்தப் பாரிய மோசடியைச் சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்த நிதிமோசடி வி…

    • 0 replies
    • 457 views
  16. எதிர்வரும் ஜூலை மாதத்தில் சிங்கள - தமிழ் மக்களுக்கிடையே இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக மிகவும் நம்பரகமான தரப்புத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினையை உக்கிரமடையச் செய்த தமிழர் வரலாற்றில் வடுவாக கறுப்பு ஜூலை காணப்படுகிறது. இதனால், வதால், ஜூலை மாதத்தில் ஏதோ ஒரு வகையில் மோதல் நிலையொன்றை உருவாக்கிவிட்டால், உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்களை ஆத்திரமடையச் செய்ய முடியும் என்பதால் மகிந்த தரப்பினர் ஜூலை மாதத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்த நிகழ்வைக்கூட, யாழ்ப்பாணத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச அண்மையில் தெர…

  17. வித்யாவின் பிரிவு காமுகர்களுக்கும் அரசாங்கத்திற்கும் விழிப்பினை ஏற்படுத்தட்டும்! - ந.சிவசக்தி ஆனந்தன் [saturday 2015-05-23 20:00] மானுடமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாக அமைந்துவிட்ட புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலையைக் கண்டித்து, கடந்த 21.05.2015 அன்று மல்லாவியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வித்யாவிற்கு நேர்ந்தகதி இனி எந்தவொரு பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது. மானுடமே வெட்கித் தலைகுனியும் அளவிற்கு இந்த ஈனச்செயல் அமைந்துள்ளது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் ஈவிரக்கமின்றி, சட்டத்தின்முன் நி…

  18. வித்தியா கொலையைக் கண்டித்து திருகோணமலையில் போராட்டம்! [saturday 2015-05-23 20:00] புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது காலை 8.30 மணியளவில் திருகோணமலை முற்றவெளி மைதானத்திற்கு முன்பாக நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், இவ்வாறான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட…

  19. 47 இராணுவத்தினரைப் போர்குற்றவாளிகளாக பட்டியலிட்டுள்ளதாம் ஐ.நா அறிக்கை! [saturday 2015-05-23 20:00] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிநத ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட இராணுவத்தினர் 47 குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இவ்வறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் இலங்கை தொடர்பாக இடம்பெறுகின்ற விசாரணையின் உத்தியோகபூர்வ அறிக்கை இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்…

  20. இந்த ஆட்சியை மாற்றி, நாட்டில் மூவின மக்களும் மகிழ்ச்சியாக வாழும் ஆட்சி மாற்றமொன்றை விரைவில் உருவாக்குவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று வியாழக்கிழமை (21) தெரிவித்தார். அம்பாறை, உகன வீதியிலுள்ள போதி விஹாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். 'நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத காலத்தின் போது மதத்தலைவர்கள், கல்வியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலதரப்பினர் கொல்லப்பட்ட சம்பவத்தை எண்ணிப்பாருங்கள். அன்றிருந்த பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவன் நானே. சுபீட்சம் ஏற்படக் காரணமாக இருந்தவனும் நானே. எனது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட நல்ல திட்டங்களையும் ப…

    • 10 replies
    • 1.2k views
  21. வடக்கில் 3 அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டி.குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி அமைப்பு மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையிலான யாழ். பெண்கள் சக்தி ஆகிய அமைப்புகளுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவியின் படுகொலைச் சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையிலேயே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. - See more at: http…

    • 2 replies
    • 565 views
  22. சமூக கட்டமைப்பின் வீழ்ச்சியே வித்தியா படுகொலை, வன்முறைகளுக்கு காரணம்! - பேராசிரியர் தயா சோமசுந்தரம் [saturday 2015-05-23 08:00] புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதன் பின்னர் நிலவிய குழப்பகரமான நிலைக்கு யாழ் சமூகத்தின் பாரம்பரிய சமூக மற்றும் நிர்வாக கட்டமைப்புகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணம் என யாழ் பல்கலைக்கழக உளநல பேராசிரியர் தயா சோமாசுந்தரம் தெரிவித்துள்ளார். மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் அதன் பின்னர் நிலவிய சூழலிற்கும் யாழ் சமூகத்தின் பாராம்பரிய கட்டமைப்புகள், மரபுகள், ஆதரவளிப்பது மற்றும் கட்டுப்படுவத்துவதற்கான ஓழுங்கு முறைகளில் …

  23. புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்துக்குள், தேவையின்றித் தன்னை இழுத்து தனது பெயரைக் கெடுக்க சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “புங்குடுதீவு எனது சொந்த இடம். வித்தியா கொலையை அடுத்து நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களில் ஒருவரான, சுவிற்சர்லாந்தில் வந்த எம்.குமார் என்பவரின் தவறான செயற்பாடுகள் குறித்து நான் அறிவேன். குறித்த சந்தேகநபர் புங்குடுதீவுக்கு வந்து சென்றிருக்கிறார். அவர் இங்கு வந்தபோதெல்லாம், அந்தப் பகுதி மக்களிடையே பெரிய பிரச்ச…

  24. வழமைக்கு திரும்பாத யாழ்ப்பாணம் புங்குடுதீவு பள்ளி மாணவியின் கொலையை அடுத்து யாழ். நகர் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட பதட்ட சூழல் இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை. புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டதையடுத்து பல்வேறு போராட்டங்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. அதன் ஒருஅங்கமாக கடந்த 20 ஆம் திகதியும் பல்வேறு அமைப்புக்கள் போராட்டத்தை நடாத்தியதுடன் மகஜர்களையும் அதிகாரிகளிடம் வழங்கி வைத்தனர். அத்துடன் அன்றைய தினம் யாழில் பூரண கடையடைப்பும் அனுஸ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் அமைதிப் போராட்டம் ஒருபகுதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நீதிமன்ற வளாகத்திற்குள் கூடிய ஆர்ப்பாட்டகாரர்களால் நீதிமன்றம் தாக்கப்பட்டதுடன் சிறைச்…

  25. சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம்;மாணவி கொலைக்கு நீதி கிடைக்கும்! - என்கிறார் ரணில். [saturday 2015-05-23 08:00] புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை விவகாரத்தில் பொலிஸார் கடமைகளைச் சரிவர செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும். அதை மக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும். மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது நிலைமைகளை மேலும் மோசமாக்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்கில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தவும் மாணவியின் படுகொலை தொடர்பில் உண்மைகளைக் கண்டறியவும் விசேட பொலிஸ் குழுவினர் மற்றும் சட்டத்தரணிகள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பாடசாலை மாணவி வித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.