Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகசின் சிறைச்சாலையில் முன்னாள் போராளி மரணம்! [Friday 2015-05-15 08:00] கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி நேற்று உயிரிழந்துள்ளார்.மகசின் சிறைச்சாலைக் கைதியான 36 வயதுடைய கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் என்னும் முன்னாள் போராளியே நேற்றிரவு உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் குளித்துக் கொண்டிருந்த நிலையில் கிணற்றடியில் வழுக்கி விழுந்தபோதிலும், இவரின் உடல்நிலையைக் கண்டுகொள்ளாத சிறை அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னரே வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று கொழும்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறைச்சாலையில் உயிரிழந்த நான்காவது அரசியற் ச…

    • 17 replies
    • 1.1k views
  2. காணிகளை மக்களுக்கு விடுவிக்கும் புதிய அறிவிப்பினால் 4 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என்கிறது தனியார் நிறுவனம் இலங்கையின் கிழக்கே சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணியொன்றை தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலைக்காக வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தொழிற்சாலையை அமைக்கவிருந்த ஸ்ரீலங்கா கேட்வே இண்டஸ்ட்ரீஸ் தனியார் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்தபோதே நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2012-ம் ஆண்டு தமக்கு தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை வழ…

    • 0 replies
    • 554 views
  3. முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 9.30அளவினில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர். உயிரிழந்த மக்களை நினைவு கூர தடையில்லையெனவும் எனினும் தடை செய்யப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்களை நினைவு கூர அனுமதியில்லையெனவும் வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுமதி தொடர்பினில் தொடர்பு கொண்ட வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரியவிக்கப்படுகின்ற நிலையினில் முல்லைதீவு பொலிஸார் இன்றிரவு வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர். எனினும் தான் உத்தியோகபூர்வமாக எந்த…

    • 0 replies
    • 712 views
  4. சிறிலங்காவில் யுத்தம் நிறைவடைந்துள்ள போதும், இன்னும் சமாதானம் ஏற்படவில்லை என்ற கனடாவின் எதிர்கட்சியான லிபரல் கட்சி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜஸ்ரின் ரியுடோ அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனைக் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. பலர் இன்னும் அகதி முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இறுதி யுத்ததின் போது காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பல தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காக, கனடாவின் லிபரல் கட்சி நியாயம் கிடைப்பதற்காக தொடர்ந்து வலியுறுத்தும் என்று அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார். இறுதியு…

  5. தமிழ் மக்களுக்கான வெளியில் உள்ள வழி” என்ற தொனியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமான இன்றைய பொது விவாதம் ஈரோவில் மாநாட்டு மண்டபத்தனில் நடந்திருந்தது. சுமார் நான்கரை மணித்தியாலங்கள் விவாதம் நீடித்தது. இருதரப்பும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்துகின்றன. பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஒரு நாடு இரு தேசம் தீர்வென தெரிவித்திருந்தார்.ஆனால் சுமந்திரன் அது சமஷ்டியாக இருக்கலாம் என்கிறார். கூட்டமைப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைவதற்கு ஆட்சேபனை இல்லை என சுமந்திரன் தெரிவக்க ஏன் இணையமுடியாதென்பதற்கு கஜேந்திரகுமார் விளக்கமளித்திருந்தார். சிங்கக்கொடி விவகாரம் மற்றும் இலங்கை சுதந்திரதினத்தினில் சம்பந்தன் குறித்த சர்ச்சைக்குரிய கேள்…

  6. அண்மைக் காலமாக யாழ் குடாநாட்டில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவதாகப் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து இப் போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் புங்குடுதீவில் பாடசாலை மாணவி வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலைசெய்ய்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகளில் போதைப் பொருள் பாவனை இருப்பதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னமே முறையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்வாறான சமூகத்தை வேரோடு அழிக்கவல்ல போதைப் பொருள் விநியோக இடங்களின் முதற்கட்ட விபரங்கள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இவ்விபரங்கள் ஏற்கனவே பொலிஸ் அதிகாரிகளிடம் நேரடியாகக் கையளிக்…

    • 0 replies
    • 514 views
  7. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால்; முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இதை தடைவிதிக்க வேண்டும் என முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட விண்ணப்பத்தின் பிரகாரம் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தடை உத்தரவு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிற்கு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை தொடர்பினில் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவிக்கையினில் கடந்த 11 ம் திகதி திங்கட்கிழமை நிகழ்வு…

    • 3 replies
    • 728 views
  8. எவன்கார்ட் மற்றும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் என்பன சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக எவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் நடவடிக்கை முகாமையாளர் கப்டன் உதய திஸாநாயக்க புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். எவன்கார்ட் மெரிட் டைம் நிறுவனம் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் இணைந்து மேற்கொண்ட சட்ட விரோதமான கொடுக்கல் வாங்கல்கள் மூலம் இலங்கையின் ஆயுத சட்ட மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம், அந்நிய செலாவணி சட்டம் மற்றும் தொழிலாளர் கட்டளைச்சட்டம் என்பவற்றை மீறியுள்ளதாக கூறியே அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பொய்யானவைகள் என கூறுவார்களேயானால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவருடன் பகிரங்க வ…

  9. மே 18 ஆம் திகதி, போரில் உயிர் நீத்தோர் நினைவாக அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக, வீடுகளினில் விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். எனினும் தமது கட்சி சார்பினில் பொதுநிகழ்வு ஏதும் இடம்பெறுமாவென அவர் தெரிவித்திருக்கவில்லை. உயிர் நீத்தோருக்கு ஈமக்கடன் செய்வதும், ஆன்ம ஈடேற்றத்துக்காகப் பிரார்த்தனை செய்வதும், அவர்களை நினைவுகூர்ந்து கோவில்களில், வீடுகளில்,பொது இடங்களில் கூடி நின்று உறவினரும், பொதுமக்களும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பங்கேற்பதும் அந்தந்த மதநம்பிக்கை க…

    • 5 replies
    • 638 views
  10. செப்டம்பரில் வெளியாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கைiயை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளோம், என கனடாவின் லிபரல் கட்சியின் தலைவர் டுரூடியு தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைகூறும் நிகழ்விற்கு அனுப்பிவைத்துள்ள செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் யுத்தம் ஆறு வருடங்களுக்க முன்னர் முடிவிற்கு வந்துள்ள போதிலும்,சமாதானம் என்பது இன்பது இன்னமும் சாத்தியமாகவில்லை. பலர் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்கின்றனர், குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை இராணுவத்திடம் பறிகொடுத்துள்ளன. பொதுமக்கள் சிறைச்சாலைகளில் குற்றச்சாட்டுகள் சுமத்;தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் இலங்…

    • 5 replies
    • 491 views
  11. கடந்த 1990ஆம் ஆண்டு வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுத்து அவர்களின் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், இனவாதம் கக்கும் ஊடகங்களையும் செய்திகளை திரிபுபடுத்தும் ஊடகங்களையும் தாம் கண்டிப்பதாக கோஷம் எழுப்பினர். ஏறாவூர் முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில்; வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் பெரிய பதாதையுடன் கொழும்பு –மட்டக்களப்பு நெடுஞ்சாலையூடாக பேரணியாக வந்து ஏறாவூர் நகரசபை முன்றலில் நகரபிதா எம்.ஐ.எம்.தஸ்லீமிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இதன்போது, ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம், தேசிய காங்கிரஸ் மாவட்ட செயல…

    • 1 reply
    • 441 views
  12. நெடுந்தீவு குமுதினிப் படகு கோரப்படுகொலை இடம்பெற்று நாளையதினத்துடன் 30 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத்தமிழர்களின் மனதில் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்துக்குப் பின்னர் மீண்டும் ஒரு பழிதீர்க்கும் படலமாக மிகப்பெரிய இனப்படுகொலையாக 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நடுக்கடலில் நடத்தப்பட துயரச் சம்பவமே குமுதினிப் படகுப் படுகொலையாகும். அந்த அனர்த்தத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இன்றையவரையிலும் உயிரைக் கிலிகொள்ளவைக்கும் சம்பவமாகவே அது அமைந்தது. அன்றைய நாள் 65 பயணிகளுடன் நெடுந்தீவில் இருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான்துறை நோக்கி வந்துகொண்டிருந்த குமுதினிப் படகை நடுக்கடலில் வழிமறித்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த ஆண்கள், பெண்கள்,மாணவிகள், குழந்தைகள், வயதானவர்கள் என எந்தவித பாகுபாடுமற்று …

  13. மன்னார், சிலாபத்துறையிலுள்ள அல்லிராணிக்கோட்டைக்கு தடுப்புச்சுவர் மன்னார், சிலாபத்துறையிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டொரிக் மண்டபம் என அழைக்கப்படும் அல்லிராணிக்கோட்டையை பாதுகாப்பதற்காக தற்போது தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலாபத்துறை கடல் அலையின் தாக்கம் காரணமாக அல்லிராணிக்கோட்டை சேதமடையும் நிலையிலுள்ளது. இந்தக் கோட்டையை பாதுகாக்கும் நோக்கில் கடற்கரை பாதுகாப்புத் திணைக்களமானது 60 மில்லியன் ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புக்களை அமைத்துவருகின்றது. அரிப்பு கடலுக்கு அருகிலுள்ள கற்பாறையொன்றில் மேல் செங்கற்களையும் சுண்ணாம்பையும் கொண்டு மிகவும் பாதுகாப்பாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை நான்கு சிறிய அறைகளைக் கொண்ட மாடியா…

  14. பொறுப்புக்கூறலுக்கு சர்வதேசம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்! - எரிக் சொல்ஹெய்ம் [Friday 2015-05-15 08:00] எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமும் சுபீட்சமும் கூடிய இலங்கையை உருவாக்கும் நோக்குடன் போர் காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். வரலாறு முக்கியமானதென்றபோதிலும் எதிர்காலம் மிகவும் அத்தியாவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலமாக வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழர் வாழ்வில் மிகவும் துயர்நிறைந…

    • 4 replies
    • 767 views
  15. இந்த மண்ணில் புரட்சி வெடிக்கும் என கிளிநொச்சி மாணவர்கள் மிகவும் எழுச்சிபூர்வமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யபட்டதைத் தொடர்ந்து வடமாகாணம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அரச அதிபரிடம் மனுக் கையளிப்பதற்கு முன்னர் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை ஊடகங்களிடம் பதிவு செய்துள்ளார்கள். http://www.pathivu.com/news/40087/57//d,article_full.aspx

    • 3 replies
    • 1.1k views
  16. சம்பூர் காணியை கையகப்படுத்தும் வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர் நீதிமன்றம்! [Friday 2015-05-15 20:00] சம்பூர் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றை அரசாங்கம் கையகப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 2012ம் ஆண்டு இந்த காணியை அரசாங்கம் முதலீட்டு சபையின் அபிவிருத்தி திட்டமொன்றிற்காக வழங்கியிருந்தது. புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சம்பந்தப்பட்ட காணியுடன் கூடிய பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என பிரதேச அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்த…

  17. புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் மனங்களை வெல்லவேண்டும்! [ வெள்ளிக்கிழமை, 15 மே 2015, 01:28.21 AM GMT ] புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி சொந்த நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு தயாராக இருந்த போதிலும், அதற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. கொடூர யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து தமிழகத்திலுள்ள அகதிமுகாம்களில் தங்கியிருந்த 65 இலங்கைத் தமிழ் அகதிகள் நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளனர். இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து தமிழ் அகதிகளை விருப்பத்தின் பேரில் திருப்பி அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரத்திற்க…

  18. கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சிறிலங்கா அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “முன்னர், சிறிலங்காவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதாக அறிக்கைகள் வெளியாகும். தமிழர்களின் பிரச்சினைகளை சிறிலங்கா அரசாங்கம் தீர்க்கத் தொடங்கிய பின்னர், புலம்பெயர் தமிழர்கள் அமைதியாகி விட்டனர். முன்னர், ஐ.நாவுக்கு அருகிலும், ஏனைய இடங்களிலும், புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்தியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகும். இப்போது அத்தகைய அறிக்கைகளை காண முடியவில்லை. வடக்கில் இந்தவாரம் போரில் இறந்தவர்கள் நினைவாக நடத்தப்படும் நிகழ்வுகளில் புலிகளை நினை…

  19. . Published on May 12, 2015-9:28 am · No Comments மேற்குலக நாடுகளில் உள்ள நீதிமன்றங்கள் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களை குற்றவாளியாக கண்டு தண்டனை வழங்கும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்து வந்தாலும் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பும், மீண்டும் ஒரு யுத்தம் என்ற போக்கும் தணிந்ததாக தெரியவில்லை. 2009ஆம் ஆண்டு மேமாதத்துடன் இலங்கையின் வடகிழக்கில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்ட போதிலும் சிறிது காலம் மௌனமாக இருந்த மேற்குலக நாடுகளில் உள்ள புலிகள் தற்போது யுத்தத்திற்கான முனைப்புகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இலங்கையில் சிங்கள தேசம், தமிழர் தேசம் என்ற இரு தேசங்கள் என்ற கோரிக்கையுடன் அரசியல் நடத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடாக தமது எண்ணத்…

  20. போரில் இறந்த உறவுகளை நினைவு கூரத் தடையில்லை! - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் [Friday 2015-05-15 08:00] நாட்டில் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் போரின்போது இறந்த தமது உறவுகளை நினைவுகூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, எதிர்வரும் 18 ஆம் திகதி தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூரலாம். அது அவர்களது உரிமை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இறுதிப் போரில் உயிரிழந்த தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில…

  21. மே-18இல் வீடுகளில் விளக்கேற்றுமாறு கோருகிறார் மகிந்த! [Friday 2015-05-15 08:00] போரில் உயிரிழந்த படைவீரர்களை நினைவு கூர்ந்து விளக்கு ஏற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். எதிர்வரும் 18ம் திகதி நாட்டின் அனைத்து மக்களும் போரில் உயிரிழந்த படைவீரர்களை நினைவு கூர்ந்து விளக்கு ஏற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார். தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை ஏற்றி படைவீரர்களை நினைவுபடுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார் http://www.seithy.com/breifNews.php?newsID=132112&category=TamilNews&language=tamil

  22. பாராளுமன்றக் கலைப்பு ஒருவாரம் தாமதமாகும்! [Friday 2015-05-15 08:00] பாராளுமன்றம் எதிர்வரும் 19ம் திகதியளவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மேலும் ஒரு வாரம் கழித்து 27ம் திகதியளவில் கலைக்கப்படலாம் என்று அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் முறை மாற்றம் தொடர்பான இறுதி வரைபு இதுவரை தயாராகாத நிலையிலேயே பாராளுமன்றம் கலைப்பு தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 20ம் திகதி அமைச்சரவை உப குழுவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதும் அது வர்த்தமானியில் அறிவித்து விட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் இம்மாத இறுதியில் தேர்…

  23. தலைமன்னார் - இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஐநா. கோரிக்கை! [Friday 2015-05-15 08:00] தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரத்தின் பிரதிநிதியான கொலம் அபாஸ் இந்தக் கோரிக்கையை இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் விடுத்துள்ளார். இலங்கையில் நல்லெண்ண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் திரும்பிவரத் தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் இந்த வாரத்தில் 60 அகதிகள் வரை இலங்கை வந்துள்ளனர். எனினும் இவர்கள் அத…

  24. இன்றுடன் முடிகிறது 234 உள்ளூராட்சி சபைகளின் ஆயுள்! - விசேட ஆணையாளர்களின் கீழ் நிர்வாகம். [Friday 2015-05-15 08:00] உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் 234 உள்ளூராட்சி சபைகள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார். 335 உள்ளூராட்சி சபைகளில் 234 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 65 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஜுலை 31 ஆம் திகதி நிறைவடையும் அதேவேளை 21 நிறுவனங்களின் பதவிக்காலம் ஒக்டோபர் 16 ஆம் திகதி பூர்த்தியடைகிறது.இரு உள்…

  25. ஆனையிறவு உப்பளத்தினில் புதிய குடியேற்றத்திட்டங்கைள தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் மூலம் உருவாக்க அரசு முற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பினில் உப்பள ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள குற்றச்சாட்டினில் தெரிவிக்கையினில் ஆனையிறவு உப்பளமான பிரித்தானிய அரசாங்கள் ஆட்சிக்காலத்தில் 1938ம் ஆண்டு சிறையிலிருந்து நன்னடத்தையால் வெளிவந்த சிறைக்கைதிகளையும், பாதுகாப்புசேவை அதிகாரிகளையும் உள்ளடக்கி உப்பு திணைக்களம் அமைக்கப்பட்;டு இயங்கி வந்தது. பின் இலங்கையிலுள்ள உப்பளங்கள் யாவும் 1966ம் ஆண்டு அரசியிலால் இலங்கை தேசிய உப்பு கூட்டுதாபன்த்தில் உள்வாங்கப்பட்டது. ஆனையிறவு , குறிஞ்சாதீவு, செம்மணி, கல்லுன்டாய், திருக்கோணமலையிலுள்ள கும்புறுப்பிட்டிய,நிலாவெளி ஆகிய உப்பளங்கள் இலங்கை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.