ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
மீண்டும் விருந்தினராக படை அதிகாரிகள்!! வடக்கினில் பொதுநிகழ்வுகளினில் அழையா விருந்தாளிகளாக படையினர் மீண்டும் நுழைய தொடங்கியுள்ளனர்.கடந்த காலங்களினில் படை அதிகாரிகளை பொது நிகழ்வுகளினில் விருந்தினராக அழைப்பது தொடர்பினில் சுற்றுநிரூபமாக விடுக்கப்பட்டிருந்தது. ,தையடுத்து ஆளும் தரப்பு பிரமுகர்களுடன் படை அதிகாரிகளும் அழைக்கப்பட்டே வந்திருந்தனர். எனினும் தற்போதைய ஆட்சி மாற்றத்தையடுத்து முடங்கியிருந்த படை அதிகாரிகள் தற்போது மீண்டும் தலைகாட்டத்தொடங்கியுள்ளனர்.அதன் ஒரு அங்கமாக பாடசாலை நிகழ்வுகளினில் படை அதிகாரிகள் சீரூடையுடனும் சிவில் ஆடையிலும் கலந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.பதிவு இணைய செய்தி http://www.pathivu.com/news/37834/57//d,article_full.aspx http://www.pathivu.com/news/3…
-
- 0 replies
- 582 views
-
-
எங்கள் நிலங்களில் இராணுவம் : நாங்கள் வீதியில் https://www.youtube.com/watch?v=pbXTZ3yG0mI#t Überspringen
-
- 0 replies
- 450 views
-
-
இந்தியாவையும் ஐ.நா.வையும் சமாளிக்கும் தந்திரோபாயமே 1000 ஏக்கர் காணி விடுவிப்பு: சஜீவன் Feb 15, 20150 இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது இந்தியாவை சமாளிக்கும் முகமாகவும், வரவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரினை சமாளிக்கும் திட்டமுமே, கடந்த அரசினால் கொண்டு வரப்பட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்த வலி.கிழக்கு காணி விடுவிப்பு என்ற பேச்சு எனத் தெரிவித்த வலி.வடக்கு பிரதேச சபையின் துணைத் தவிசாளர் ச.சஜீவன், இந்நிலம் மக்கள் குடியேற்றத்துக்கு உகந்த நிலம் அல்ல எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; புதிய அரசு விடுவிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கும் 1000 ஏக்கர் நிலம் வலி.வடக்கிற்கு சொந்தமானது அல்ல. அது வல…
-
- 0 replies
- 329 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமைச்சின் அதிகாரங்களுக்கு அப்பால் சென்று வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளார் என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. நாட்டின் பாதுகாப்பு படையினரிடம் இருந்த பெற்ற நவீன ஆயுதங்களை, கோத்தபாய ராஜபக்ச துணை இராணுவத்தை பயன்படுத்தி வெளிநாடுகளில் இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம், போக்கோ ஹராம், கடற்கொள்ளையர்களுக்கு விற்றுள்ளார். இதன்மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்துள்ள தகவல்களை கவனத்தில் கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இலங்கை படையினருக்கு இறக்குமதி செய்யப்ப…
-
- 0 replies
- 618 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இன்று ஞாயிறுக்கிழமை மாலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வார். இந்தியப் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து விஷேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் அம் மாகாணங்களில் சிவில் நிர்வாகத்தை உறுதி செய்வது போன்ற விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பெருந்தோட்ட துறையில் இந்திய நிதியுதவியுடன் 20,000 வீடுகளை தீர்மா…
-
- 2 replies
- 389 views
-
-
சிரேஷ்ட அரசியல்வாதியாகவும் ராஜதந்திர அரசியல் வல்லுனராகவும் விளங்கும் இரா. சம்பந்தன் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டதை அர்த்தமற்ற முறையில் விமர்சிப்பதை தமிழ் தலைவர்கள் தவித்துக்கொள்ள வேண்டும் என்று மூதூர் சிவில் அமைப்பினரும் திருமலை மாவட்ட சமூக அமைப்பினரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மூதூர் சிவில் அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான கந்தையா நடேசபிள்ளை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட் டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் 67வது சுதந்திர தின நி…
-
- 28 replies
- 1.8k views
-
-
சென்னையில் நடை பெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கத்தில் ஊடகவியலாளர் கா.அய்யநாதன் அவர்கள் 13 வது சட்டத்திருத்தம் தீர்வாகுமா? என்ற தலைப்பிலும் உரையாற்றினர். முழுமையான உரை காணொலியில்.. http://www.pathivu.com/news/37826/57/13/d,article_full.aspx
-
- 0 replies
- 446 views
-
-
மின்பிறப்பாக்கிகளை இயக்க தொடர்ந்தும் தடை!! மேல்நீதிமன்று உத்தரவு!! சுன்னாகம் கழிவு ஓயில் குடிநீர் விவகாரம் தொடர்பினில் மேல் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் நொதேர்ண் பவர் நிறுவனம் சார்பில் தோன்றிய சட்டத்தரணிகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் மூடப்பட்ட குறித்த நிறுவனத்தினை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். இதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆயராகிய சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச அமைப்பாளருமான மணிவண்ணன் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்திருந்தார். பதிவு இணைய நியூஸ் , பதிவு இணைய செய்திகள் இதனை தொடர்ந்து குறித்த விண்ணப்பத்தினை; மீண்டும் நிராகரித்ததுடன் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வழக்கேட்டினை மேல் நீதி மன்றில் …
-
- 26 replies
- 1.4k views
-
-
கழிவு ஒயில் நிலத்தடி நீரில் கலப்பதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண கோரி சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தையில் இன்று காலை இடம்பெற்றது. http://onlineuthayan.com/News_More.php?id=472873874615265672
-
- 1 reply
- 485 views
-
-
பிரயோசனமற்ற அரசியல் தீர்வு எதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்றப் பிரதிநிதியுமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நீடித்து நிலைத்து நிற்கக் கூடியதும் பாதுகாப்பு, காணி, கல்வி, விவசாயம், பொருளாதாரம் ஆகிய அதிகாரங்களை உள்ளடக்கியதும் பிராந்திய ரீதியில் ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவதுமாக அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கும் என்றும் சம்பந்தன் கூறினார். திருகோணமலையில் நியூசில்வர் ஸ்டார் விடுதியில் நேற்று சனிக்கிழமை பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இக் கருத்துக்களை வெளியிட்டார். இலங்கைத் …
-
- 2 replies
- 372 views
-
-
யாழ்.விக்டோரியா வீதியில் வைத்து மாணவியொருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ். விக்டோரியா வீதியால் வந்து கொண்டிருந்த போது குறித்த மாணவியை வானில் வந்தவர்கள் இன்று காலை கடத்திச் சென்றுள்ளனர். பூநகரியை சேர்ந்த மேரி லாவண்யா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். பூநகரியில் வசிக்கும் இவர், சனி, ஞாயிறு தினங்களில் அரியாலையிலுள்ள உறவினர் வீடொன்றில் தங்கியிருந்து தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று கல்விகற்று வருகின்றார். இவ்வாறு இன்றும் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றபோது, ஹயஸ் ரக வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். எனினும் சில தினங்களுக்கு முன்னர் வானில் வந்த சிலர் தன்னை பின்…
-
- 0 replies
- 659 views
-
-
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணை செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். இது குறித்து வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவர் தற்போது தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றார். எனவே அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச பொலிஸாரின் உதவியை நாட உள்ளோம் என்றார். இதேவேளை அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள பசில் ராஜபக்ஷ மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் லொஸ்ஏ…
-
- 0 replies
- 364 views
-
-
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் நீடிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. முப்படையினருக்கும் காவல்துறை அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் மாதாந்தம் நீடிக்கப்பட்டு வந்தது. புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த வர்த்தமானி அறிவித்தலை நீடித்திருந்தார். இந்த வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு புதிய அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட ஏதுவாக அமைந்திருந்தது. எதிர்வரும் காலங்களில் இந்த விசேட சட்டத்தின் ஊடாக காவல்துறை அதிகாரங்கள் முப்படையினருக்கு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது என புதிய அரசாங்கம் தீர்மா…
-
- 0 replies
- 332 views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் அச்சமின்றி வாழவும் ஜனநாயகம் , கருத்துச் சுதந்திரம் என்பன நிலைநாட்டப்படவும் ஈ.பி.டி.பி குறித்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் நாங்களாகவே அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்களின் இயல்பு வாழ்க்கையினை குழப்புபவர்கள் ஈ.பி.டி.பியினரே. இந்தப் பகுதியில் இடம்பெற்ற பல கொலைகள், காணாமல் போன சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என மக்கள் சந்தேகிக்கின்றனர். எனவே இந்தப் பகுதியில் இருக்கும் ஈ.பி.…
-
- 17 replies
- 1k views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் அலரிமாளிகை யில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் அரச விரோத சூழ்ச்சி யில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் பெற்றுவரும் அனைத்து வரப்பிரசாதங்களையும் இழக்கப்பட நேரிடுமென சட்டத்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்த அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், வாகனம், செயலகம், பாதுகாப்பு அதிகாரிகள் …
-
- 0 replies
- 365 views
-
-
வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அருகில் உள்ள மக்களுடைய காணிகள் துறைமுக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்ற அறிவித்தல் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இராணுவம் பிடித்து வைத்துள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று புதிய அரசாங்கத்தினால் பரப்புரைகள் செய்யப்பட்டுவரும் இந்நிலையில் புதிய காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் வலி.வடக்கு மக்களை அச்சமடைய வைத்துள்ளன. காங்கேசன்துறை வீதியின் முடிவில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் பாதையின் இரு மருங்கிலும் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில், இக் காணியானது இலங்கை துறைமுக அதிகார சபைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தல் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அறிவித்தல் பலகைக…
-
- 1 reply
- 399 views
-
-
இன்று யாழ்ப்பாணத்தில் வெளியான பத்திரிகைகளில் வித்தியாதரன் புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பான விளம்பரம் வெளியாகியுள்ளது. கட்சியில் இணைய விரும்புவோர், மற்றும் அது குறித்த கருத்து வெளியிட விரும்புவோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கூறுகிறது விளம்பரம். ‘தேசியம்’ தொடர்பான கட்சி என்று விளம்பரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இன்று இங்கு வெளியான உதயன் பத்திரிகையில் நான் பார்த்த விளம்பரம் என்ற முறையில், இதை ஒரு தகவலாக இங்கு பதிகிறேன். என்மீது கடுப்புள்ள அன்பர்கள், தயவு செய்து இந்த கட்சி பற்றி என்னிடம் கேள்விக்கணைகளை வீசாதீர்கள். விளம்பரம் மட்டுமே பார்த்தேன். கட்சியில் சேரும் உத்தேசமோ, வாக்களிக்கும் திட்டமோ கிடையாது.
-
- 14 replies
- 1.1k views
-
-
தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சிலர் "உயிருடன் இருக்க விருப்பம் இல்லையா" என்று மிரட்டினர் என்று தெரிவித்து மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளார். நேற்றிரவு சில அநாமதேய தொலைபேசி இலக்கங்களில் இருந்து தனக்கு அழைப்புக்கள் வந்தன என்றும், அதில் பேசியவர்கள், தான் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி, " உயிருடன் இருக்க விருப்பமில்லையா" என்று மிரட்டினர் என்றும் பிரதி அமைச்சர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் http://www.malarum.com/article/tam/2015/02/15/8619/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%…
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையின் அறிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கூறுகின்றது. அந்த விசாரணை தற்போது முடிவடைந்திருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகின்றார். இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அறிக்கையை அடுத்த மாத இறுதியில் வெளியிடாமல் சிறிது காலம் பிற்போடுவது தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அழுத்தங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. வெ…
-
- 0 replies
- 278 views
-
-
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மனித உரிமைகள் நிலைமையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் தனது ருவிட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=126563&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 564 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று சிஐடியினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். காலி துறைமுகத்தில் கப்பலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட எவெட்ன்ட் காட் தனியார் பாதுகாப்பு பிரிவின் ஆயுதங்கள் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மீட்கப்பட்ட ரக்ன லங்கா பாதுகாப்பு பிரிவுக்கான ஆயுதங்கள் போன்றவை தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே கோத்தபாயவிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=126510&category=TamilNews&language=tamil
-
- 7 replies
- 703 views
-
-
நாங்கள் பொலிஸார் எமக்கு பணம் கொடுத்தால் உனக்கு நல்லது. என நகைக்கடை வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி பெருந்தொகை பணத்தை கப்பமாக கேட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் யாழ்.மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.கஸ்தூரியார் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் ச.மோகனதாஸ் என்பவரின் வீட்டிற்கு (பிறவுண் வீதி) கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்ற நெடுங்கேணி பொலிஸார் அவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டு ஒன்று உள்ளதாக கூறி (LG - 9591) என்ற இலக்கம் கொண்ட பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் 0242053008 என்ற இலக்கத்திலிருந்து அழைப்பு எடுத்த பொலிஸார் 10 பவுண் நகை மற்றும் பணம் கொடுத்தால் தந்தையை விடுவிப…
-
- 0 replies
- 586 views
-
-
காங்கேசன்துறை துறைமுகம் திறக்கப்பட்டால் யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்;அர்ஜுண ரணதுங்க காங்கேசன்துறை துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு விடுவித்தால் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களும் சிறுவர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவார்கள் என கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார். கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டிருந்தார். அதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வளம் மிக்கதும் பெறுமதியான துறைமுகம் யாழ்ப்பாணத்தில் உள்ளத…
-
- 12 replies
- 1.2k views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமையவேண்டும் இதற்கு வாழ்த்துக்களைக் கூறுவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ்வாறு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென அந்த நாட்டு பிர…
-
- 4 replies
- 419 views
-
-
இனப்படுகொலை விசாரணை அறிக்கையினை வெளியிடுக! யாழினில் 24ம் திகதி போராட்டம்!! இனப்படுகொலை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதமின்றி மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, யாழில் மாபெரும் பேரணி ஒன்றை எதிர்வரும் 24ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாகவும் பல்கலைக்கழக சமூகம் அறிவித்துள்ளது.பதிவு இணைய செய்தி இத்தகவலை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் ஏ.இராஜகுமாரன், இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.பதிவு இணைய செய்தி இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால விடுதலை போராட்டத்தில் பல உயிர்களை பறி கொடுத்து பல இழப்புக்களை சந்தித்துள்ளோம். இறுதிப் போரின்போது உச்சக்கட்டம…
-
- 0 replies
- 452 views
-