Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து இராத செய்தி ஆகும். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் யாழ்ப்பாண தமிழர் ஆவார். இவரின் பெயர் ஜெயந்தி. மைத்திரிபால சிறிசேன சிறிய வயது முதல் மார்க்ஸியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். இவர் ஐ. சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார். தலைவர் சண்முகதாஸனுக்கு நெருக்கமான தோழர்களில் ஒருவராக காணப்பட்டார். இவரின் பாரம்பரிய இல்லத்தில் இன்றும் கால் மார்க்ஸ், லெனின், மாவோஓ போன்ற தலைவர்களின் புகைப்படங்களை காண முடிகின்றது. மார்க்ஸிய ஈடுபாடும், தலைவர் சண்முகதாஸனுடனான தொடர்பும் இவருடைய காதல் திருமணத…

  2. உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமைச்சரவை அந்தஸ்துள்ள உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹசீமுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் க்ஷனிகா ஹிரிபுரேகமவை இராஜினாமா செய்யுமாறு சில தரப்பினர் அண்மையில் வலியுறுத்தியிருந்தனர்.இதன் காரணமாக ரஜீவ விஜேசிங்க அதிருப்தியடைந்திருந்ததாக கூறப்படுகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=847063873414288056

  3. தமிழ் மக்களின் உணர்வின் வெளிப்பாடே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் . - இவ்வாறு ஜனாதிபதியிடம் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள் பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் உள்நாட்டலுவல்கள், கடற்றொழில் அமைச்சர் கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன, வட மாகாண ஆளுநர் கௌரவ எச்.எம்.பி.பீ…

  4. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மே 18 ஆம் திகதியில் இராணுவ நிகழ்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய கூட்டணி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மஹிந்த ஆட்சியில் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்ட 'போர் வெற்றி விழா'வானது பெயர் மாற்றத்துடன் 'இராணுவ பாராட்டு விழா'வாக புதிய ஆட்சியிலும் கொண்டாடப்படவுள்ளது. "புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பங்களிப்பு வழங்கிய முப்படை, பொலிஸ், சிவில் படையணி ஆகியவற்றைக் கெளரவிப்பதற்கும், இதன்போது உயிரிழந்த செய்த முப்படை, பொலிஸ், சிவில் படையணிகளின் அதிகாரிகளை நினைவுகூரவும் 2009 இல் இருந்து வருடாந்தம் மே 18 ஆம் திகதி அல்லது அதற்கு அண்…

  5. இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை அறிக்கையினை யார் தடுத்தாலும் உடனடியாக சமர்ப்பிக்க வலியுறுத்தி எதிர்வரும் 24ம் திகதி மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அ. இராசகுமாரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும்இ யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மாபெரும் பேரணியின் போதுஇ இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை அறிக்கையினை சமர்ப்பிக்க வலியுறுத்திஇ ஜநா மனித உரிமை பேரவைக்கு மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளும்இ புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத…

  6. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச்சேர்ந்த 22 வயதான இளைஞனை குற்றப்புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர் போலி விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயன்றபோதே டுபாயில் வைத்து அந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டள்ளார். அவ்விளைஞனை டுபாயிலிருந்து நாடு கடத்தியபோதே குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞன் கடந்த 11 ஆம் திகதி டுபாய்க்கு புறப்பட்டு சென்றுள்ளார். டுபாய் நாட்டு விமானநிலையத்தில் வைத்து அவ்விளைஞனை கைதுசெய்த அதிகாரிகள் எமிரிடேஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே. 650 விமானத்தின் ஊடாகவே அவர், இலங்கைக்கு திருப…

  7. மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரனை கடல் பகுதியை கண்காணிக்க இந்திய கடலோர காவல்படையினரின் அதிநவீன ரோந்து கப்பல் மிகவிரைவில் பணியில் ஈடுபடவுள்ளது இராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு அருகில் இருப்பதால் இந்திய கடற்படை , கடலோர காவல்படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலங்களாக இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இலங்கை அருகே இருக்கும் பாக்நீரனை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். …

  8. சிறிலங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மகிந்தராஜபக்ஷவே சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தது. பதிவு இணைய செய்தி பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் போன்றவை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அந்த காலப்பகுதியில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து முஸ்லிம்கள் யாரும் விலகி இருக்கவில்லை.பதிவு இணைய செய்தி இந்த நிலையில் தங்களின் கோரிக்கையை ஏற்று மகிந்தவையே சிறிலங்கா சுதந்திர கட்ச…

  9. இலங்கையில் நடந்தது இனஅழிப்பே: வடமாகாணசபை பிரேரணை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பகிர்க இலங்கையின் இறுதிப்போர் காட்சி (ஆவணப்படம்)இலங்கையின் வடமாகாணசபையில் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இழுபறி நிலையில் இருந்துவந்த இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற பிரேரணை செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை, இனப்படுகொலையில் இருந்து தமிழ் மக்களைக் காப்பதற்கு சர்வதேச பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த ஆண்டு சபையில் சமர்ப்பித்திருந்தார். அப்போது, அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரங்கள் கிடையாது, அதனை …

  10. சிறிசேனவின் கடந்த கால வரலாறு... அம்பலப்படுத்தும் வைகோ! Posted Date : 12:07 (14/02/2015)Last updated : 12:45 (14/02/2015) சென்னை: இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அம்பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்து இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தனி இறையாண்மையுடன் சுதந்திரமான அரசு நடத்தி வந்த ஈழத் தமிழ் இனம், ஐரோப்பியரின் படையெடுப்புகளால் அதிகாரம் இழந்து, 1948 பிப்ரவரி 4 முதல், சிங்கள இனத்தின் வல்லாதிக்க அரசின் கீழ் உரிமை இழந்தது. மானத்தோடும் கண்ணியத்தோடும், சிங்…

  11. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தில் 17 பேரைக் கொண்ட குழுவொன்று மட்டுமே பங்கேற்வுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு விஜயத்தின் ஊடாகவே, வெளிநாட்டு விஜயங்களுக்கான செலவுகளை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பிரதிநிதிகளுடன் வெளிநாட்டு விஜயத்தை செய்வதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்திய விஜயம் மேற்கொண்ட போது அமைச்சர்கள் உள்ளிட்ட 72 பேர் விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சுகா…

  12. ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தாமதப்படுத்தி இலங்கை அராங்கத்துக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவது நீதியை தாமதிக்கச் செய்து விடுவது மட்டுமல்லாது, நிரந்தரமாகவே மறுதலிக்கவும் செய்துவிடும். இவ்வாறு தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையத் அல்ஹுசைனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான விசாரணை ஐ.நா மனித உரிமை ஆணையாளார் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கும் எதிர்வரும் மார்ச் மாத ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டதொடர் தொடர்பில் தங்களுக்கு தமிழ் சிவில் சமுக அமையம் சார்பில் இம்மடலை வரைகின்றோம். இலங்கையின் வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற 100இற்கு மேற்பட்ட சிவ…

  13. தமிழ் தரப்புக்களது கடுமையான எதிர்ப்பினையடுத்து வளலாயில் மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு அதில் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளும் அரசின் திட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.பதிவு இணைய செய்தி பெரும்பிரச்சாரங்களுடன் வலி.வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளில் 1000 ஏக்கர் நிலப்பகுதியை விடுவிப்பதற்கு புதிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் வளலாயில் மாதிரிக்கிராமம் ஒன்றும் அமைக்கப்பட்டு மக்களை மீள்குடியர்த்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனினும் குறித்த திட்டத்தையே மகிந்த அரசும் கொண்டுவந்தது. இதனால் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.எனவே குறித்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. புதிய அரசு ஆரம்பிக…

  14. சென்னை: இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அம்பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்து இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தனி இறையாண்மையுடன் சுதந்திரமான அரசு நடத்தி வந்த ஈழத் தமிழ் இனம், ஐரோப்பியரின் படையெடுப்புகளால் அதிகாரம் இழந்து, 1948 பிப்ரவரி 4 முதல், சிங்கள இனத்தின் வல்லாதிக்க அரசின் கீழ் உரிமை இழந்தது. மானத்தோடும் கண்ணியத்தோடும், சிங்களவர்களுக்குச் சமமான உரிமைகளோடும் வாழ்வதற்காகத் தொடர்ந்து தமிழர்கள் அறப்போராட்டங்களை நடத்தியபோது, சிங்கள அரசின் கொடிய அடக்குமுறைகளுக்கு உள்ளாகினர். ‘ஈழத்துக் கா…

    • 0 replies
    • 471 views
  15. கோட்டாபய ராஜபக்ஷவினால் இடைநிறுத்தப்பட்ட 10 இராணுவ அதிகாரிகளுக்கு மீண்டும் இராணுவ நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.பதிவு இணைய செய்தி இதன்படி மேஜர் தரம் கொண்ட ஒருவருக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த 10 பேரும் கட்டாய ஒய்வின் அடிப்படையில் இராணுவ பணியில் தொடர முடியாமல் செய்யப்பட்டிருந்தனர். http://www.pathivu.com/news/37798/57//d,article_full.aspx

  16. சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக மகிந்தராஜபக்ஷவை நிறுவதற்கு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மகிந்தராஜபக்ஷ அதிக ஆதரவை பெற்றவர் என்ற அடிப்படையில் அவரையே பிரதம வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்த ஏனைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், மகிந்த, மைத்திரி மற்றும் சந்திரிக்கா ஆகியோர் பிரசார நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் மேலும் இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.http://www.pathivu.com/…

  17. “குற்றச் செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் தண்டிக்கப்படாமையே என் சகோதரர் தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணம்” சொந்த வீடு ஒன்று கூட தமக்குக் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பாரியளவில் சொத்துக்களை திரட்டியதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கியிருப்பதற்கு இதுவரையில் தமக்கு ஒர் சொந்த வீடு கூட கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு போதியளவு பொருளாதார இயலுமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மனைவியின் தயாராது வீட்டிலேயே தற்போது வாழ்ந்து வருவதாகவும், அவர் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்த…

    • 7 replies
    • 753 views
  18. மதிப்புக்குரிய தமிழீழ மக்களே! அறுபது வருடங்களுக்கு மேலாக சிறீலங்கா அரசின் கொடிய இனப்படுகொலைக்கு முகம்கொடுத்து, அதற்கெதிராக பல ஒப்பற்ற உயிர்த் தியாகங்கiளை விலையாகக் கொடுத்து போராடிவரும் அடக்கப்பட்ட மக்களாகிய நாம் இன்று அரசியல் ரீதியாக என்றுமில்லாதவாறு ஓர் அனர்த்த நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். கடந்து சென்ற சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலில் தமிழீழ மக்கள் தமது உறவுகளை மிகக் கொடூரமாக இனப்படுகொலை செய்த, தமிழீழத்தை வஞ்சகமாக ஆக்கிரமித்த இனவெறியன் ராசபக்சவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு அவர்களிடமிருந்த கடைசி ஆயுதமான சனநாயக வாக்குரிமையை பிரயோகித்தார்கள். அதன் அர்த்தம் மைத்திரி பாலவை எற்றுக்கொள்கிறோம் என்று பொருட்படாது. இந்த உண்மை சர்வதேசத்திற்கு சரிவர மொழிபெயர்க்கப்படாமல்,…

  19. தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் உருக்கி உலகின் மௌனம் கலைக்;கத் துணிந்த ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாளான நேற்று (12.02.2015) 20:00 மணியளவில் மோசமான குளிர் காலநிலையிலும் அவர் ஈகைச்சாவினைத் தழுவிய ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் அதே இடத்தில் தமிழ் இன உணர்வாளர்கள் வணக்கம் செலுத்த உறுதியுடன் கலந்து கொண்டனர். நினைவு வணக்க ஒன்றுகூடலில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழ் இன விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த அனைத்து ஈகியர்களையும் நினைவுகூர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்தினைத் தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தி உறுதி எடுத்தனர். ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் அனைத்துலக சமூகத்திற்கு தமிழ் இன அழிப்பை தடுத்து நிறுத்தக் கோரி மரண சாசனம் ஒன்றை …

  20. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு உரிய கௌரவத்தை அளிக்கத் தயங்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.மஹிந்தவை மின்சார நாற்காலியில் இருத்தி தண்டிக்க எவரேனும் முயற்சித்தால் அது தற்கொலை முயற்சியாகும். அவ்வாறான முயற்சிக்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். மஹிந்த ராஜபக்ச மதிக்கப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் அமர்த்தி தண்டிக்கவோ அல்லது அவருக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தவோ இமளிக்கப்பட மாட்டாது என ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=126425&category=TamilNews&language=tamil

  21. வடக்கு மாகாண முதலமைச்சர் இனவாதத்தை தூண்டி அதன் ஊடாக அரசியல் நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அவர் அவ்வாறு செய்வது நியாயமற்றது. தரைவழி போரை நானே வடிவமைத்து திட்டமிட்டேன், படையணிகளுக்கு நானே உத்தரவு பிறப்பித்தேன். கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு நானே ஆணை வழங்கினேன். இந்த போராட்டத்தை நன்றாக கண்காணித்தேன். எனவே, மனித படுகொலைகள்…

  22. FEB 12, 2015 | 1:03 by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளியிடுவது தாமதிக்கப்படுமா என்பது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது. போர்குற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம், உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க கால அவகாசம் தரும் வகையில், இந்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுமாறு கோரியுள்ளது. அமெரிக்காவும் இதற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விசாரணை அறிக்கை சம…

  23. முப்படைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை தமிழ் பேசும் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சி தெரிவித்துள்ளது. முப்படைகளுக்கு பொலிசாருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த 2ஆம் திகதி வர்த்தமானியில் அறிவித்தல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், இந்தநாட்டில் வடக்கு மற்றும் தென்பகுதி மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக சுதந்திர தின உரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள…

  24. இனஅழிப்பு குறித்து வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரமில்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, இவ்வாறான விதிமுறைகளுக்குப் புறம்பான செயற்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்டியெழுப்பப்படவுள்ள தேசிய நல்லிணக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவே தாம் கருதுவதாக எநிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=126456&category=TamilNews&language=tamil

  25. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அரைவாசிப் பகுதி சீனாவிற்கு சொந்தமாகியுள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நாட்டுக்கு முதலீடுகளே தேவைப்படுகின்றது. கடன் பெற்றுக் கொள்வதில் அர்த்தமில்லை. கடந்த அரசாங்கம் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திற்கும் இடமளிக்கவில்லை. முடிந்தளவு கடன்களையே பெற்றுக்கொண்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடனை செலுத்த முடியாத காரணத்தினால், அரைவாசி துறைமுகம் சீனாவிற்கு சொந்தமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். tamilwin.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.