Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு மக்கள் பிரதிநிதியாவது குழப்பங்களை விளைவித்தால் அல்லது முரண்பாடுகளை தோற்றுவித்தால், பொதுமக்களாகிய நீங்கள் அவர்களுடைய கன்னத்தில் அறையுங்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று நிட்டம்புவ பொது விளையாட்டு மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.அங்கு தொடர்ந்து பேசிய முன்னாள் ஜனாதிபதி, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எமது பயணத்தை ஆரம்பிக்கும்போது எம்மோடு பார…

  2. தமிழர் விடயத்தில் மைத்திரிபால சிறிசேன அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை என தமிழரசுக் கட்சியின் துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் நியமனம் தொடர்பாக கருத்து வெளியிடுள்ள அவர், ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கம் கிழக்கிலங்கையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமது பூரண் ஆதரவை வழங்கியுள்ளது. இம் மாகாணத்தில் 11 உறுப்பினர்களையும், சனத்தொகையில் முஸ்லிம்களை விட கூடிய விகிதாசாரத்தை கொண்டதுமான தமிழ் மக்களை பிரதிநிதிபடுத்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆட்சி அமைக்க மத்தியில் உள்ள ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பலவாறு பேசி…

  3. கடந்த நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஜனவரி 8 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டில் ஜனாதிபதி மாளிகைகளில் 158 மில்லியன் ரூபா உணவுக்காக செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை நிட்டம்புவ நகரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது; மக்களின் வாழ்க்கையில் மாற்றம் என்பது கடினமான காரியமே. நாட்டை மாற்றுவோம் மக்களை மாற்றுவோம் எனக் கூறுவதற்கு முன்னர் அந்த மாற்றத்தை தன்னிடத்தே ஏற்…

  4. பொதுப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படாவிடின், நாடாளுமன்றம் இந்தவாரம் கலைக்கப்பட்டுவிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) தெரிவித்தார். ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தை இந்த வாரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த விவாதத்துக்கான திகதியை ஒதுக்கித் தருமாறு சபாநாயகரைஇன்று கோரவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. …

    • 0 replies
    • 1.2k views
  5. மகிந்தவின் ஆட்சியில் உரிய அந்தஸ்து தரப்படவில்லை ; எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எனக்கும் கூட சரியான அந்தஸ்து தரப்படவில்லை. ஆனாலும் நான் கட்சியை விட்டு ஓடிவிடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எந்தப் பதவி என்றாலும் கட்சிக்காக தொடர்ந்து போராடுவதே சிறந்தது. எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெப்ரவரி 14 ஆம் திகதியன்று கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக நீடிக்கும் நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து புதிய அரசாங்கத்தை நிறுவபோவதால் ஜனாதிபதி வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சு…

    • 0 replies
    • 459 views
  6. முல்லைத்தீவில் தமிழரசுக்கட்சிக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்: - ஒரு கூட்டத்தோடு திரும்பினார் மாவை [Monday 2015-02-09 10:00] தமிழரசுக்கட்சிக்கு ஆதவு திரட்ட முல்லைதீவு சென்றிருந்த அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மக்களது கடுமையான எதிர்ப்பினை சந்தித்து திரும்பியுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தினில் கட்சி தலைமைகளான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை,மைத்திரிக்கு நிபந்தனையற்று ஆதரவு வழங்கியமை மீள்குடியமர்வு,கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்களினில் கையாலாகாத நிலை ஆகியவற்றினை பற்றி மக்கள் துருவி துருவி கேள்வி எழுப்பினர் என தெரியவருகிறது. முல்லைதீவில் இரு இடங்களினில் கூட்டங்களை நடாத்த மாவை சேனாதிராசா முற்பட்டிருந்…

    • 0 replies
    • 500 views
  7. வலி.வடக்கில் 3000 ஏக்கர் காணிகளை விடுவிக்க பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் முடிவு! [Monday 2015-02-09 11:00] வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் ஒரு பகுதியை முதல்கட்டமாக இந்த வாரத்துக்குள் விடுவிப்பதற்கு கொழும்பு அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முதலில் சில ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்குத தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவிற்கு முதல் உத்தியோக பூர்வ பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக விடுவிக்கப்படும் காணிகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த ந…

    • 0 replies
    • 396 views
  8. கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன்(பிள்ளையான்) நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அரசாங்கத் தரப்பு தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பிள்ளையானும், அவருடன் புதிதாக இணைந்துள்ள இனியபாரதியும் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு நடத்தினர் என்றும், கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசுத்தரப்பு முன்வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. http://www.malarum.com/article/tam/2015/02/07/8497/%E0%AE%95%E0%AE%BF%…

  9. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக நாடு முழுவதும் சென்று ஆதரவு திரட்ட தயார் எனவும், தனக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வருவதற்கு விருப்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் நலன் விசாரிப்பதற்காக நேற்று மெதமுலன சென்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரிடம் மகிந்த இதனைத் தெரிவித்துள்ளார். தான் ஒருபோதும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுவிட்டு, வேறொரு கட்சியை ஆரம்பிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள மகிந்த, இந்த நிலைப்பாட்டை தற்போதைய கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்துமாறும் வந்தவர்களிடம் மகிந்த கோரியுள்ளார். எவ்வாறாயினும், 'ஶ்ரீலங்…

    • 0 replies
    • 418 views
  10. தோல்விக்குப் பின் மீண்டும் அரசியல் மேடையில் ஏறுகிறார் மகிந்த FEB 08, 2015 | 2:28by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், முதல் முறையாக பொதுமக்கள் முன்பாக அரசியல் மேடை ஒன்றில் தோன்றவுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரம்கட்டுப்பட்டு வரும் நிலையில், மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்தி, புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தினேஸ் குணவர்த்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னைய கூட்டணிக் கட்சிகள் இணைந்து, மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்திப் புதிய கூட…

    • 3 replies
    • 773 views
  11. கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய அரசின் தீர்மானம் தொடர்பில் இந்திய அரசு அதிர்ப்தியில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னால் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரினால் இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட போதிலும் புதிய அரசின் பதவியேற்பின் பின் இத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் கொழும்பு நகர துறைமுக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என, அமைச்சரவை பேச்சாளரும்,சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் கடலில் மணல் நிரப்பி நிர்மாணிக்கப்படும் இத்திட்டமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா …

    • 4 replies
    • 714 views
  12. சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் FEB 08, 2015 | 9:31by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் அனைத்துலக சமூகத்தினால் மதிக்கப்படும் நிலைமைக்கு சிறிலங்கா மீண்டும் வந்துள்ளதாக அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார். வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நல்லாட்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்த, யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரையான இலங்கையர்கள் தேர்தலின் மூலம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர். இறுதியான சமாதானத்தை அடைய உங்கள் நாடு முன்நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் விரும்பு…

  13. புலிகளின் விமானத் தாக்குதலுக்குப் பயந்து அதிபர் மாளிகையில் கட்டப்பட்ட பதுங்குகுழிகள் கண்டுபிடிப்பு FEB 08, 2015 | 2:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மாளிகையில் நிலத்துக்கு அடியிலான பதுங்குகுழி கட்டமைப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை பற்றிய பல இரகசியங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், அதிபர் மாளிகையில் நிலத்துக்கு அடியில், பதுங்குகுழி போன்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால் போர் நடந்த காலத்தில் கட்டப்…

  14. தமிழினத்தின் விடுதலைப்போராட்டப் பயணத்தினை இன்றுவரை சிதைத்துவரும் தமிழரசுக்கட்சி தமது ஊரில் இளைஞர் அணியை உருவாக்குவதற்கோஇ கட்சிக்கிளை அமைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாதென புதுக்குடியிருப்பு இளைஞர்கள் அழைப்புவிடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்களால் சமூக வலைத்தளங்களினூடாக பகிரப்பட்டுள்ள தகவலில் நாளை புதுக்குடியிருப்பில் தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உருவாக்குவதற்கான கூட்டம் நடைபெறப்போவதாக தெரியவருகின்றது. மாவை சேனாதிராஜா வரவுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆயுத கலாசாரம் தவறானது என்று திரும்பத் திரும்பக் கூறிவரும் தமிழரசுக்கட்சி புதுக்குடியிருப்பில் இளைஞர்களை திரட்டி கட்சிக்கு ஆட்பிடிப்பது விடுதலைப்போராட்டத்துக்கு எதிரான நடவடிக்கை. எம்மவர்களும் எமது ஊர் இளைஞர்களும் புரிந்துகொள்ளவேண்…

  15. கடற்படை முகாம், முதலீட்டு வலயத்திற்கான காணிகள், உத்தேச அனல் மின்நிலையம் போன்ற காரணங்களினாலேயே சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ஒஸ்டின் பெர்ணான்டோ இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பிரதேசத்திற்கு சென்று, அங்குள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். மாகாண ஆளுநருடன் திருகோணமலை அரசாங்க அதிபர் ரஞ்சித் டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கு சென்றிருந்தனர். சம்பூர் பிரதேசத்தை பார்வையிட்ட ஆளுநர், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் 9 ஆண்டுகளாக தங்கியுள்ள தங்களை நேரில் வந்து சந்தித்…

  16. முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயாரான புஸ்பாம்பாள் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்ட நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,மக்கள் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ,வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன், மேரிகமலா குணசீலன், சிவமோகன் ,நாங்கள் அமைப்பைச் சேர்ந்த சஜீவன்,மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக அந்தோணி மார்க் மற்றும் சகாயம் ,முல்லைத்தீவு ம…

  17. யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் குடாநாட்டு கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான வலைகளை முற்றாகச் சேதமாக்கிவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குடாநாட்டுக் கடற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும் அத்துமீறல்கள் தொடர்பில் கடற்படையினர் கண்ணை மூடிக்கொண்டிருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் இரவு பருத்தித்துறை பகுதியில் கரையிலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தொலையில் இந்திய இழுவைப் படகுகள் வந்து மீன்பிடித்துள்ளதுடன் குடாநாட்டு…

    • 2 replies
    • 439 views
  18. குழப்பத்தில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தல்கள் Feb 08, 2015 | 10:15 by கார்வண்ணன் in செய்திகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு பழைய வேட்புமனுவின் படியே வரும் 28ம் நாள் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டது. தற்போது, நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ள நிலையில், வரும் 28ம் நாள் தேர்தலை நடத்தவுள்ளதாக சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். ஆனால், 2011ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு…

  19. கோப்பாய் அம்மன் கோவிலுக்கு அருகில், இன்று இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பகுதியை சேர்ந்த ஏ.அலெக்ஸ்தீபன் (வயது 20) என்பவரே இவ்வாறு கையை இழந்து படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனை வீதியில் துரத்தி சென்ற குழுவினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் இளைஞனின் கையை மணிக்கட்டு பகுதியுடன் வெட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். http://seithy.com/breifNews.php?newsID=126195&category=TamilNews&language=tamil

  20. எனது மகன் விமுக்தி எந்த விதத்திலும் அரசியலுக்கு வரமாட்டார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வரவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கட்டுகஸ்தோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வைபவத்தில் கலந்து கொண்ட ஒருவர், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் …

  21. அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருந்தாலும், அங்கு செல்ல முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. போரில் இடம்பெற்ற போர் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய முக்கிய நபரான கோத்தபாய ராஜபக்ச சர்வதேசத்திற்கு மத்தியில் குற்றவாளியாக இருப்பதே அவர் அமெரிக்கா செல்ல முடியாமைக்கான காரணம் என கூறப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் தோல்வியடைந்ததை அடுத்து கோத்தபாயவின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், தாம் கைது செய்யப்பட்டால் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்ற அச்சம் காரணமாக கோத்தபாய அமெரிக்காவுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. மகிந்தவின் தோல்விக்க…

  22. "அபியோகா மீடியா கிளப்"பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகத்துறைப் போட்டியில் கொச்சைத் தமிழில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் தாள்களால் மாணவர்கள் அதிருப்தி. பண்டாரநாயக்க கல்லூரியின் "அபியோகா மீடியா கிளப்"பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மட்டத்திலான ஊடகத்துறை போட்டிகள் கடந்த 07-02-2015 அன்று அநுராதபுரம் மத்திய கல்லூரியில் நடைபெற்றன. மும்மொழிகளிலும் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட குறித்த போட்டிகளுக்காக வழங்கப்பட்ட அறிவுறுத்தல் தாள்கள் ஆங்கிலம், சிங்கள ஆகிய மொழிகளில் சீராகவும், தமிழ் மொழி மூலமான அறிவுறுத்தல் தாள்கள் எவ்வித கருத்துக்களும் புலப்படாதவாறு காணப்பட்டது. இதனால் குறித்த போட்டியில் பங்குபற்றிய மணவர்கள் கருத்துக்கள் தெளிவில்லாததால் போட்டியில் சீரான முறையில் பங்குபற்ற…

  23. கையடக்கத் தொலைபேசியில் பாடலை கேட்டவாறு தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞர்களில் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த சம்பவம் மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலே இவர்கள் மோதுண்டதாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 17 வயதுடைய செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த சரவணபவன் சங்கீதன் என விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 15 வயதுடைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/articles/2015/02/08/%E0%AE%AA…

    • 1 reply
    • 715 views
  24. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பெயர் மாற்றம் பெற்ற “நெளும் பொகுன” வீதி மீண்டும் ஆனந்த குமாரசுவாமி வீதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹோட்டன் சுற்றுவட்டத்தில் இருந்து பொது நூலகம் வரையான வீதிக்கு நெலும் பொக்குன மாவத்தை என கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் குறித்த வீதி முன்னர் காணப்பட்ட ஆனந்த குமாரசுவாமி வீதி என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/02/08/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.