ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்சவின் மனைவி சசி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோர் விரைவில் கைதுசெய்யப்படலாம் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போலி கடவுச்சீட்டை வைத்திருந்தமைக்காக சசியும், போதைபொருள் குற்றச்சாட்டுகளுக்காக துமிந்தவும் கைதுசெய்யப்படலாம் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். துமிந்த சில்வாவிற்கு எதிரான 50வீத விசாரணைகள் பூர்த்தியாகிவிட்டன,அடுத்த சில வாரங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளுக்கு மிக முக்கியமானவை,விசாரணைகளுக்கு பின்னர் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். சசி வீரவன்ச போலிகடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்தமை தொடர்பான விபரங்களை குடிவரவுகுடியகல்வு திணைக்கள ஆணையாளர் நாயகம் பொ…
-
- 0 replies
- 492 views
-
-
"திருட்டுத்தனமாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தெரிவு தொடர்பில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருடன் கலந்துரையாடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த விடயம் தொடர்பில் எமது கட்சியுடன் எவ்வித கருத்துப் பரிமாறல்களையும் செய்யவில்லை." - இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும். கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது:- "மத்திய அரசில் எமது கட்சி பங்காளியாகவுள்ளது. அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதே ஆட்சியில் இருக்கின்றது. அதேபோல் கிழக்கு மாகாண சபையிலும் இரு கட்சிகளும் மிகவும் நெருக்கமாக இருந்து செயற்பட…
-
- 0 replies
- 584 views
-
-
மைத்திரி அரசுக்கு மஹிந்த அமரவீர எச்சரிக்கை அரசை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கவிழ்ப்பதற்கான இயலுமை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ரன்ன பகுதியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் அரசை நாம் கைப்பற்ற முடியும். இன்று கூட எமக்கு தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் கையொப்பிமிடப்பட்ட பிரேரணையொன்றை முன்வைத்து எமது பிரதமர் ஒருவரை நியமிக்க முடியும். எமது அமைச்சரவையை நியமிக்க முடியும். புதிய ஜனாதிபதிக்கு கௌரவம் செலுத்தும் வகையிலேயே இந்த நூறுநாள் நிருவாகத்தை முன்னெடுக்க இடமளித்துள்ளோம். ஆனால் இந்த அரசு மேற்கொள்ளு…
-
- 0 replies
- 416 views
-
-
குடும்பச் செலவு 7500 ரூபாவால் வீழ்ச்சி ; அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நாட்டில் சாதாரண குடும்பம் ஒன்றிற்கு மாதச் செலவு 7500 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். புதிய அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பொருட்களுக்கான விலைகள் குறைப்பு மற்றும் எரிபொருள் விலைக் குறைப்பு போன்றவற்றினால் இவ்வாறு குடும்பம் ஒன்றின் செலவு வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சாதாரணமாக நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் மாதச் செலவில் 7500 ரூபா குறைவடைந்தள்ளது. இவ்வாறு விலைகள் வீழ்ச்சியடைவதன் மூலம் மத்திய தர குடும்பங்கள், தொழிலாளர்கள் குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளன. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலைகள் உலக சந்தையில் வ…
-
- 0 replies
- 325 views
-
-
தமிழ்க் கைதிகள் 274 பேரை விடுவிக்க முயற்சி தமிழ் அரசியல் கைதிகள் 274 பேரை முதல் கட்டமாக விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி விசேட செயலணி ஆராயும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லிணக்க நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இவ்விசேட ஜனாதிபதி செயலணியில் 7பேர் வரை அங்கம் வகிப்பர். கடந்த காலங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களினால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 274 தமிழ் கைதிகளின் …
-
- 0 replies
- 325 views
-
-
இலங்கை புதியர் அதிபர் மைத்திரியின் சிக்னல்களால் குழம்பிப்போயுள்ளதாம் இந்தியா..! [Friday 2015-02-06 20:00] இலங்கையின் புதிய அரசாங்கத்திடமிருந்து வெளிப்படும் சில குழப்பகரமான சமிக்ஞைகளால் இந்திய அரசாங்கம் கவலை அடைந்துள்ளதாக டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்திற்கான ஏற்பாடுகளை புதுடில்லி மேற்கொண்டுள்ள அதேவேளை தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பாக கொழும்பிலிருந்து வரும் குழப்பகரமான சமிக்ஞைகள் காரணமாக மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பின்னர் தோன்றிய பாரிய எதிர்பார்ப்பை இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் குறைத்துக்கொண்டுள்ளதாக மூத்தஅதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எங்களது தரப்பிலிருந்து சிறிசேன அரசாங்கம் குறித்து பலத்…
-
- 0 replies
- 431 views
-
-
இன்றைய இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றையதினம் தீர்மானிக்கவுள்ளது. புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தை ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்று முற்பகல் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களுக்கான நிவாரணங்கள் எவையும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமல் போகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 311 views
-
-
கொழும்பு துறைமுக நகர கட்டுமானம்; 'இன்னும் முடிவாகவில்லை' 8 மணி நேரங்களுக்கு முன்னர் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் விமர்சனங்களுக்கு உள்ளானதுஇலங்கையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சீனாவுடன் செய்துகொண்டிருந்த கொழும்பு துறைமுக நகர கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறிவருகின்றது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் குறித்த கவலைகளுக்கு மத்தியில் கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம் கைவிடப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்புகளே பெரும்பாலும் நிலவின. எனினும், இந்த செயற்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தது. ம…
-
- 0 replies
- 408 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 19 நிமிடங்கள் துர்வார்த்தைகளினால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தாம், அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்தாகவும் அதன் போது கடுமையான துர்வார்த்தைகளினால் 19 நிமிடங்கள் தம்மை திட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஏற்கனவே சில ஊடங்களில் தகவல் வெளியிட்ட போதிலும் அவை வெளிப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தம்மை தொடர்ச்சியாக திட்டிக் கொண்டே சென்றதாகவும் இறுதியில் தமக்கு தெரிந்த இரகசியம் ஒன்று பற்றி கூறிய போது அப்படி…
-
- 13 replies
- 1.2k views
-
-
February 3, 2015 அரசியல் கைதிகளுக்கு விடுதலையையும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, “நாங்கள்” இயக்கத்தால் சமநேரத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்ச்சிகளால் அதிர்ந்தன வடக்கு கிழக்கு மாகாணங்கள்! பெப்ரவரி நான்கு! அதாவது நாளை சிறீலங்காவின் சுதந்திரநாள்! தன்னை ஒரு ஜனநாயக நாடாகவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும், அவற்றைப்பேணிப்பாதுகாக்கும் கனவான்களின் நாடாகவும், காட்டிக்கொள்ள வழமை போலவே இந்த வருடமும் முயற்சிக்கிறது. மனித உரிமைப்பிரகடனங்களை வழித்தொடரும், மனித மாண்புகளுக்கு கௌரவிப்பளிக்கும் நாடாக சிறீலங்கா, பூகோளப்பந்தில் தன்னை அடையாளப்படுத்த விரும்புகிறது எனில், ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்ப…
-
- 4 replies
- 553 views
-
-
2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்திருந்ததையும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார். அவ்வாறே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் அரசாங்கக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருந்த ம…
-
- 2 replies
- 728 views
-
-
சீனாவின் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பிக்க உள்ளது. எயார் சைனா விமான சேவையின் சீ.ஏ.425 இலக்க விமானம் சீனாவின் சேங்க்து விமானத்தில் இருந்து புறப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி இரவு 9.50 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது. இதனையடுத்து 10 ஆம் திகதி முதல் வாரம் தோறும் எயார் சைனா விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான 4 விமான சேவைகளை நடத்த உள்ளது. எயார் சைனா விமான சேவையானது மக்கள் சீன அரசின் தேசிய விமான சேவையாகும். எயார் சைனா விமான இலங்கைக்கான சேவை ஆரம்பிப்பதை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைபவம் ஒன்று நடைபெறவுள்ளதுடன் அதில் சீன பிரதிநிதிகளும், இலங்கையின் துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர…
-
- 1 reply
- 409 views
-
-
அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கெதிராக வெள்ளிக்கிழமை(06) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிபாரிசு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை மாவட்டம் தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவவதாகவும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சாய்ந்தமருது பிராதான வீதியில் அமைச்சர் ரவூப் ஹக்கிமின் கொடும்பாவியை எரிப்பதற்கு முயற்சித்த…
-
- 0 replies
- 345 views
-
-
இந்திய பிரதமர் மோடியோ வேறு சர்வதேசப்பிரதிநிதிகளோ வடகிழக்கை எட்டிப்பார்ப்பதால் எமது பிரச்சினைகள் தீரப்போவதில்லையென தெரிவித்துள்ளார் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சிவகரன் தெரிவித்துள்ளார். பதிவு இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியினில் இது பற்றி மேலும் தெரிவிக்கையினில் காணாமல்போனோர் விவகாரம் மற்றும் நிலஆக்கிரமிப்பு,இராணுவ பிரசன்னம் என்பவை தொடர்பினில் புதிய மைத்திரி அரசு பதவியேற்றபின்னர் கூட எந்தவொரு முன்னேற்றமுமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். மோடி மற்றும் சர்வதேச பிரதிநிதிகளது வருகை தற்போதைய அரசை முண்டுகொடுத்து காப்பாற்றவே அன்றி வேறு எதற்குமல்லவெனவும் தமிழ் மக்களைப்பொறுத்த வரை எந்தவொரு முன்னேற்றமுமில்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டின…
-
- 0 replies
- 535 views
-
-
குடியியல் உரிமைகள் மீண்டும் வழங்கப்பட்டமையை அடுத்து இன்று நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பதவியேற்கவிருந்தபோதும் அது நடைபெறவில்லை. ஜனநாயக கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜெயந்த கெட்டகொட பதவி விலகி, இடம்தராமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியியல் உரிமைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளமையால் சரத் பொன்சேகா, மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியும் என்று சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார். இந்தநிலையில் கெட்டகொட பதவி விலகினால் மாத்திரமே சரத் பொன்சேகாவினால் பதவியேற்க முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சரத் பொன்சேகா. புதவியேற்க வேண்டுமானால் கெட்டகொட பதவிவிலக வேண்டும் என்ற…
-
- 0 replies
- 402 views
-
-
இலங்கை அரசாங்கம் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக சீனாவின் விசேட பிரதிநிதி லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார். இலங்கையின் தலைவர்களை சந்தித்த பின்னர் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கம், சீனாவின் திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் விசேட பிரதிநிதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்களின் போது சீனாவின் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் தடைகள் இருப்பதாக தாம் கருதவில்லை என்று பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார். சீனாவை பொறுத்தவரை, இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்று வி…
-
- 0 replies
- 271 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த மஹிந்த, கே.பி ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய நபர் என கூறியிருக்கின்றார். இதன் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளதாக மக்களும் நாங்களும் கருதுகிறோம் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் கே.பியிடம் இருந்த சொத்துக்கள், பணம், கப்பல்கள் போன்றவற்றுக்கு என்ன நடந்தது? போன்ற பல கேள்விகள் இந்த நாட்டு மக்களுக்கும் விசேடமாக தமிழ் மக்களுக்கும் உள்ளது. அதற்காகவே கே.பி கைது செய்யப்பட வேண்டும். என்னும் நிலைப்பாட்டினை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எடுத்திருக்கின்றது. அதற்காக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கட்சியின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ…
-
- 0 replies
- 293 views
-
-
புதிய அரசாங்கம் எங்களை அரசியல் ரிதியில் துன்புறுத்தி வருகின்றது' என்று ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அன்று போலவே இன்றும் நாம் மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறோம். தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் என்னையும் எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=126054&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 688 views
-
-
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று 15ம் திகதி இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் ஜனாதிபதி 18ம் திகதி வரை அங்கு தங்கியிருப்பாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார்.அத்துடன், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து அவர் பேசவுள்ளார். இதேவேளை, பெளத்தர்களின் புனித தலமான புத்தகயாவுக்குச் செல்லவுள்ள அவர், அங்கி…
-
- 7 replies
- 465 views
-
-
யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக சற்றுமுன்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன பலாலி விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இராணுவ வெற்றி நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில், பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். (படங்கள்: பிரதீப் பத்திரண) http://www.tamilmirror.lk/139272
-
- 2 replies
- 547 views
-
-
காணி உரிமையாளரை கொலை செய்து விட்டு கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையத்துக்கும் தக்ஷிணாராமய விகாரைக்கும் நடுவில் அமைந்துள்ள காணியை (படலிவத்தை) கோத்தபாய ராஜபக்ச அபகரித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகிந்த ராஜபக்ச அரசில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச, அரச அதிகாரத்தை பயன்படுத்தி கைப்பற்றிய காணியை ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினர் நேற்று பார்வையிட்டனர். இதுகுறித்து காணியின் உரிமையாளரின் மகள் தெரிவிக்கையில், இந்த காணி தனது தந்தைக்கு சொந்தமானது. எனது தந்தையை கொலை செய்து விட்டு, கோத்தபாய ராஜபக்ச காணியை பலவந்தமாக கைப்பற்றியதாக கூறியுள்ளார். இதேவேளை குறித்த காணியில் ரஷ்யர்கள் சிலர் கட்டட நிர்மாணிப்பு பணியில் ஈடுபட்…
-
- 0 replies
- 469 views
-
-
13ஆவது திருத்த சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.நல்லூர் பிரதேச சபையின் புதிய கட்டிட தொகுதி திறப்பு விழா நேற்று நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தமிழ் தேசிய இனத்தின் அடையாளங்களை அழிப்பதிலும் பௌத்தம் இல்லாத இடங்களில் பௌத்த சின்னங்களை வைத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்து வந்தது. இதற்காக அதிகப்படியான இராணுவம் குவிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சியை நடத்தியது.சுதந்திரமாக கருத்துக்கூற முடியாத சூழல் நிலவியது. ந…
-
- 5 replies
- 564 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சீனாவின் அனுசரணையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாட்டுத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட செயலாக்க ஆய்வு மற்றும் சூழலியல் நிலைகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத் துறைமுகத்திட்டம் நிறுத்தப்படுமிடத்து …
-
- 2 replies
- 312 views
-
-
நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக இன்று சாய்ந்தமருது மக்களால் அமைச்சரின் கொடும்பாவியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நியமனத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் சிபாரிசு செய்துள்ளமையை ஆட்சேபித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி தொடர்பிலான விவகாரம் பரபரப்பாகியுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஹாபிஸ் நபீர் ஹஹமரை முதலமைச்சர் வேட்பாளராக சிபார்சு செய்துள்ளது. இதனை எதிர்த்து சாய்ந்தமருது மக்கள் இன்று ஜும்மா தொழுகையின் பின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஹாபிஸ் நபீர் ஹஹமரை சி…
-
- 2 replies
- 488 views
-
-
-பொ.சோபிகா இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டத்தை பகிஷ்கரிக்காது கூட்டமைப்பில் உள்ள அனைவரும் பங்குபற்றி இருக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சியைக் கட்டி எழுப்புவதற்காக புதிய அரசாங்கம் 100 நாட்களை அவகாசமாகக்கோரி உள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அமைப்பதற்காக 50 நாட்களாவது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட வேண்டும். நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக பல கட்சிகள் தமது தனிப்பட்ட கொள்கைகளை கைவிட்டு ஓரணியில் இணைந்துள்ளன. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ள சிலர் நல்லாட்சியைக் குழப்புவதற்கும் பிரச்சினையை உருவாக்கவும் முயற்சி செய்கின்றனர். சுதந்திர தின வைபவத்…
-
- 2 replies
- 367 views
-