Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குருநாகல மாவட்டத்தில் 98 வீத அஞ்சல் வாக்களிப்பு JAN 07, 2015 | 0:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பில், குருநாகல மாவட்டத்தில் அதிகபட்சமாக, 98 வீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக, மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.பி.ஹிதிசேகர தெரிவித்துள்ளார். குருநாகல மாவட்டத்தில், 66,934 அரசாங்கப் பணியாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில், 66,300 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளனர் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ளார். இவ்வாறு அதிகபட்சமானோர் வாக்களித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை எனவும், ஏனைய தேர்தல்களை விடவும் அதிபர் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் அதிகமாக இருப்பது வழக்கமே என்றும் …

    • 0 replies
    • 368 views
  2. தமிழ்நாட்டில் "ஈழ ஆதரவு அரசியல்" செய்யும், "தமிழ் தேசியவாதிகள்" பலருக்கு, இலங்கை அரசியல் நிலவரம் சுத்தமாகப் புரிவதில்லை. பிள்ளையார் பிடிப்பதாக நினைத்து, குரங்குப் பொம்மைகள் செய்து கொண்டிருப்பார்கள். "தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் தடவையாக..." என்று முன்பெல்லாம் சினிமாப் படத்திற்கு விளம்பரம் செய்வார்கள். "தமிழ் தேசியவாத தொலைக்காட்சியான" தந்தி டி.வி., முதல் தடவையாக மகிந்த ராஜபக்சவின் பேட்டியை ஒளிபரப்பி உள்ளது. அது ஒன்றும் ஊடக தர்மத்திற்கு முரணான விடயம் அல்ல. தந்தி டி.வி. கூட விளம்பரதாரர்களின் வருமானத்தை நம்பி இருக்கும் வணிக ஊடகம் தான். (வணிக நலன் தமிழ் தேசிய கொள்கைக்கு எதிரானதும் அல்ல.) ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நேரத்தில், இப்படி ஒரு நேர்காணல் ஒளி…

  3. ருத்திரகுமாருடன் பசிலின் பேரம் உண்மையானதா? வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களில் குறைந்தது பத்துவீதமானவர்கள் தேர்தலை நிராகரித்தால் நாடுகடந்த தமிழீழ அரசைச் சார்ந்த ருத்ரகுமாரிற்கு பணம் வழங்குவதாக பசில் ராஜபக்ச ருத்திரகுமாரிற்கு அனுப்பியதாகக் குறிப்பிடும் மினஞ்சல் ஒன்று சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் நடைபெற்றது போன்று இத் தேர்தலிலும் பணம் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், அது தேர்தலுக்கு முன்னதாகவும் பின்னதாகவும் என இரண்டு பகுதிகளாக வழங்கப்படும் எனவும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலின் அரசியல் பின்புலமே எமது கவனத்திற்குரியது. தீவிர தமிழ்த் தேசியவாதிகளாத் தம்மை வெளிக்காட்டிக் கொண்டவர்களில் பலர் தேர்தல…

  4. ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம். அடுத்த ஆறு வருடங்களுக்கு அதே ஆட்சி இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவே ஏற்படும் எனவே புதிய வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை உடனடியாக அறிவிக்கவில்லை. ஒரு மாதத்திற்கு மேலதிகமாக முடிவை அறிவித்திருக்கிறோம். அந்த முடிவில் உறுதியாக உள்ளோம் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார். போலிப் பிரசாரங்களை நம்பாது மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்!- சம்பந்தன் பா.உ. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8ம் …

  5. டாண் தொலைக்காட்சியில் தேர்தலை பகிஸகரிக்குமாறு அனந்தியின் குரலில் போன்ற விளம்பரம் அனந்தி மறுப்பு:- 05 ஜனவரி 2015 டாண் தொலைக்காட்சியில் தேர்தலை பகிஸகரிக்குமாறு அனந்தியின் குரலில் போன்ற விளம்பரம் அனந்தி மறுப்பு:- இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இயங்கும் டாண் தொலைக்காட்சியில் தேர்தலைப் பகிஸகரிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் வருவது போன்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது.. இந்த விளம்பரத்தை தான் கொடுக்கவில்லை என அனந்த சசிதரன் மறுத்துள்ளார் அவரது மறுப்புக் கடிதம் இணைக்கப்பட்டு உள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115196/language/ta-IN/------.aspx

    • 16 replies
    • 1.4k views
  6. ஜனாதிபதித் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமான இணையத்தளங்கள் இலங்கையில் பார்வையிட முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் பரபரப்பும் பதற்றமும் அனைவரையும் ஆட்கொண்டிருக்கிறது. இந்தநிலையிலேயே அதிரடியாக நூற்றுக்கும் மேற்பட்ட செய்தி இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இயக்கும் தமிழ் ஊடகங்களும் இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் இருந்து இயங்கும் ஊடகங்களுமே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்னரே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தோல்வி அச்சம் கொண்டுள்ளதை இது உணர்த்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. http://seithy.com/breifNe…

  7. தமிழ் மக்கள் அனைவரும் கடந்தகால வரலாற்றை கருத்திற்கொண்டு சிந்தித்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தேர்தலானது தமிழ் மக்களாகிய எமக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத் தரும் என்றோ எமது உரிமைகளுக்கு மதிப்பளிக்குமென்றோ நாம் துளியளவும் நம்பவில்லை. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி என்ற கொள்கையில் இருந்து தளராது தமிழ் மக்களின் உரிமைக்காக என்றும் குரல்கொடுக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36685/57//d,article_full.aspx

    • 11 replies
    • 692 views
  8. கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயருக்கு எதிரணியினர் களங்கம் விளைப்பதாக தெரிவித்தே குறித்த நபர் பாய்ந்து தற்கொலை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=291643783906840702#sthash.SOYkW3XE.dpuf

  9. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே எஞ்சியுள்ளன. யாருக்கு வாக்களிக்க போகிறோம்? இலங்கையில் அன்று தொடங்கி இன்றுவரை ஆட்சி செலுத்திய எல்லா சிங்கள ஆட்சியாளர்களும் கொடிய யுத்தத்தை முன்னெடுத்தமையிலும் தொடர்ச்சியாக இன அழிப்பை மேற்கொண்டு வந்தமையிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களாயிருக்கவில்லை. எனவே.. இறுதி யுத்தத்தை நடத்தியவரை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு யாழ்ப்பாணத்தையும் தமிழர்களின் முதுசமான யாழ் நூலகத்தையும் தன்கையாலேயே கொளுத்திய (1981ம் ஆண்டு) குற்றவாளி ரணிலுக்கு (மைத்திரி வென்றால் பிரதமராகபோகும்) நாம் எப்படி ஆதரவளிக்க முடியும்? இறுதி யுத்தத்தத்தை நடத்தியவரை பழி வாங்க வேண்டுமாயின் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவுக்கு நாம் எப்படி வாக்களித்தோம்? யுத்தத்த…

  10. அதிகார பரவலாக்கல் என்ற பேச்சுக்கு இப்போதைக்கு இடமில்லை 06-01-2015 07:21 AM -யொஹான் பெரேரா, சனத் டேஸ்மண்ட் 'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்கலுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது' என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 'இந்த நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும் எனது முன்னணியும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். நான் பதவிக்கு வந்த பின்னர், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர…

  11. தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி முடிவு! கதி கலங்கி நிற்கும் மகிந்த அரசு!. [ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2015, 08:35.00 PM GMT ] தேர்தல் தொடர்பில் பல சதி நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசு தயாராகி வந்த நிலையில் அதனை அறிந்து எதிர் நடவடிக்கையில் தேர்தல் ஆணையாளர் ஈடுபட்டுள்ளார் என சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல முறையற்ற செயற்பாடுகளுக்கு அரசு முனைவதை அறிந்து அதனைத் தடுக்கும் அதிரடி நடவடிக்கையில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஈடுபட்டுள்ளார் என லங்காசிறி வானொலியின் தேர்தல் கள சிறப்பு ஆய்வில் அவர் தெரிவித்தார். http://www.youtube.com/watch?v=YqqLx-2vUr0 …

  12. யாழில் தேர்தல் பாதுகாப்பு அதிகரிப்பு- அரசாங்க அதிபர் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் துவங்கவிருக்கும் நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வன்முறையற்ற வகையில் நேர்மையாகத் தேர்தல் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். காவல் கடமையில் காவல்துறையினர் வடமாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் இந்தத் தேர்தலுக்கென 526 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்கு 44 வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் சுமார் ஐயாயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ்மாவட்ட அரச…

    • 0 replies
    • 416 views
  13. எம்.எஸ்.எம். ஐயூப் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் போது தாம் ஆதரவளிப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கா அல்லது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கா என்பதை முடிவு செய்யாது இழுத்தடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இறுதியில் அந்த முடிவை எடுத்துள்ளன. அக்கட்சிகளின் முடிவு ஏதும் ஆச்சரியத்துக்குரியது அல்ல. இது எதிர்ப்பார்க்கப்பட்டது தான். அவ்விரு கட்சிகளும் இறுதியில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் என நாடே எதிர்ப்பார்த்து. அதற்குக் காரணம் ஐ.ம.சு.கூ தலைவர்கள் கூறுவதைப் போல் அக்கட்சிகளுக்கும் மைத்திரிபாலவுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் ஏது…

    • 0 replies
    • 335 views
  14. வருகின்ற ஜனவரி 8-ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சிறீசேனா போட்டியிடயுள்ளார். AUDIO ;- https://soundcloud.com/pathivucom/mrnirmanujan_press-meet_06012015 எனினும் ஈழத்தமிழர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் இவ்விருகட்சியினரின் நிலைப்பாடும் தமிழர்களாகிய நமக்கு எதிராகவே உள்ளது. இது தொடர்பாக இன்று காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் காலை 11 மணியளவில் தமிழகம், புலம்பெயர்ந்த நாடு மற்றும் ஈழத்திலிருந்தும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இந் நிகழ்வில் இணையதளத்தின்(skype) ஊடாகவும் நேரடியாகவும் கலந்து கொண்டனர் . இவ் ப…

  15. தமிழில் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்ததேர்தலில் தோல்வியடைவார் என்பதே பல அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பீடாக உள்ளது என தேசிய சமாதான பேரவையின் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். வொய்ஸ் ஓவ் அமெரிக்காவின் இணையத்தளத்திற்கு இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டு;ள்ளதாவது.. பரந்துபட்ட ஆதரவு எதிர்கட்சியின் பிரச்சாரத்தை வலுப்படுத்தியுள்ளது, ராஜபக்ச ஐக்கியதேசிய கட்சி, தமிழ் கட்சி முஸ்லீம்கட்சிகள் மற்றும்தனது கட்சியில் ஒரு பிரிவினர் அடங்கிய குறிப்பிடத்தக்க வலுவுள்ள எதிர்கட்சியை எதிர் கொள்கின்றார், அவரே இந்த தேர்தலில் தோல்வியடைவார் என்பதே பல ஆய்வாளர்களின் கணிப்பீடு. சிறுபான்மையினர் ஜனாதிபதி குறித்து கடும் அதிருப்தியில் …

  16. குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- தனது மானத்தைக் காப்பாற்றித் தருமாறு, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட மலையக மக்களிடம் இறைஞ்சி வேண்டி வருகின்றார். கடந்த காலங்களில் ஜனாதிபதி, பாராளுமன்றம், மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரச்சார உத்திகளுக்கும் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார உத்திகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். என்றுமில்லாத அளவிற்கு இம்முறை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மக்களிடம் தன்னுடைய மானத்தை பாதுகாத்துத் தருமாறு கோரியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்டு வந்த நுவரெலியா…

  17. சிறிலங்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு குறித்து இன்னும் இந்தியா அச்சத்திலேயே இருப்பதாக சீனாவின் சர்வதேச அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சங்காயில் உள்ள சர்வதேச அரசியல் கற்கை நிலையத்தின் விரிவுரையாளர் லியு சொங்காய் இதனைத் தெரிவித்துள்ளார். பாரதீயே ஜனதா கட்சியின் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டதை அடுத்து, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு வலுவடைந்திருக்கிறது. எதிர்வரும் ஆண்டுகளில் சீனா இந்தியாவில் 20 பில்லியன் டொலர்கள் பெறமதியான முதலீட்டுகளை மேற்கொள்ளவுள்ளது. அதேநேரம் சிறிலங்காவும் சீனா வலுவாக காலூன்றி இருக்கிறது. இந்த விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் அச்சத்துடனேயே இருக்கிறது. சிறிலங்காவில் காணப்படுகின்ற சீனாவின் பிரசன்னம், தங்களுக்கு பாதுகாப்ப…

  18. வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீதான எதிர்ப்பலை வலுப்பெற்றுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை என வடக்கு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வடக்கில் கடுமையான இராணுவப் பிரசன்னம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். வடக்கில் சுமார் ஏழு லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் யுத்தத்தின் போது இணைந்து செயற்பட்ட போதிலும், மைத்திரிபால சிறிசேன பாரிய மாற்றங்கள் செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு கிடை…

  19. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரசபை உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகிய இருவருமே அரச பக்கம் தாவியுள்ளதாக, மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. இருப்பினும் தாம் கட்சி மாறவில்லை எனவும் தனிப்பட்ட வேலையின் நிமித்தமே கொழும்பு சென்றிருந்ததாகவும், தாம் இருவரும் இங்கு இல்லாத நேரத்தில் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, கட்டுக் கதையினை புனைந்து பரப்பியுள்ளதாக நகரசபை உறுப்பினர் ஜெ.ஜெயராஜா தெரிவித்தார். வல்வெட்டித்துறை நகரசபை கலைக்கப்பட்டதனா…

  20. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராக ஏ.நட்ராஜன் நேற்று தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவராகக் கடமையாற்றிய வெ.மகாலிங்கம் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து,இதுவரை காலமும் கண்டியில் உள்ள துணைத் தூதரகத்தில் துணைத் தூதுவராகக் கடமையாற்றிய நட்ராஜ், யாழ். துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாலிங்கம் இடமாற்றம் பெற்றுச் சென்றதை அடுத்து இதுவரை காலமும் எஸ்.டி.மூர்த்தி பதில் துணைத்தூதுவராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=124094&category=TamilNews&language=tamil

  21. வடக்கில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நண்பர்களையும் கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கூட்டத்தையும் வைத்துக் கொண்டு, எதிரணியினர் ஆட்டம் காட்டி வருகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெபருவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, கிழக்கில் தனியானதொரு முஸ்லிம் வலயத்தை வழங்குமாறு ரவூப் ஹக்கீம் என்னிடம் கோரினார். நாம் எப்படி அவ்வாறானதொரு தனி வலயத்தை முஸ்லிம்களுக்கு கொடுக்க முடியும். எனக்கு இவ்வளது வாக்குகள் இருக்கின்றன என்றும் அவர் என்னிடம் கூ…

  22. சிங்கள ஊடகவியலாளரும், கேலிச்சித்திர படங்கள் வரைபவருமான பிரகீத் எக்னலிகொடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே கடத்தி வைத்திருக்கிறார் என அவரின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதி வாசஸ்தலத்தின் முன் தனது கணவரை மீட்டுத் தருமாறு கோரி சத்தியாகிரமொன்றை நடத்தினார். இதில் 50இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே சந்தியா எக்னலிகொட மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.pathivu.com/news/36682/57//d,article_full.aspx

    • 0 replies
    • 267 views
  23. சிறிலங்கா தேர்தல் : உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா மற்றும் சீனா JAN 06, 2015 | 12:38by நித்தியபாரதிin கட்டுரைகள் தற்போது இடம்பெறவுள்ள தேர்தலின் பெறுபேறு எவ்வாறு அமையப்போகிறது என்பது தொடர்பாக சிறிலங்காத் தீவில் தமது செல்வாக்கை அதிகரித்து வரும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு அரசாங்கங்களும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Nitin A. Gokhale எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்னும் குறைந்தது ஒரு வாரத்தில் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் தனது வாழ்நாளில் இதுவரை காலமும் சந்தித்திராத மிகவும் இறுக்கமான அரசியற் களத்தை எதிர்கொள்ளவுள்ளார்…

    • 0 replies
    • 283 views
  24. தோல்விக்குப் பின் மகிந்தவை வெளியேற்ற சந்திரிகா வைத்துள்ள இரகசியத் திட்டம் JAN 06, 2015 | 5:38by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் அதிபர் தேர்தலில், தோல்விடைந்த பின்னர், பதவியை விட்டு விலக மகிந்த ராஜபக்ச முன்வராது போனால், அவரை வெளியேற்றுவதற்கு எதிரணியிடம் ஒரு இரகசியத் திட்டம் இருப்பதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். பிபிசி சந்தேசயவுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தோல்வி கண்ட பின்னரும் பதவியை விட்டு விலகாமல், மகிந்த ராஜபக்ச அடம்பிடிப்பாரேயானால், அவரை வெளியேற்றுவதற்கு எதிரணியிடம் ஒரு இரகசியத் திட்டம் உள்ளதாகவும் சந்திரிகா குறிப்பிட்டார். எனினும், அத்தகைய சூழலில்…

  25. சுழிபுரத்தில் அனந்தி வீட்டின் மீது அதிகாலையில் தாக்குதல் JAN 06, 2015 | 0:28by கார்வண்ணன்in செய்திகள் தனது வீட்டின் மீது இன்று அதிகாலை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்கார்டியன், ஆங்கில ஊடகத்துக்குத் தகவல் வெளியிட்டுள்ளார். சுழிபுரம் வடக்கம்பரையில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று அதிகாலை 1.30 மணியளவில், சரமாரியாக கற்கள் வீசப்பட்டதாகவும், தான் எழுந்து விளக்குகளைப் போட்டவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து தாம், தொலைபேசி மூலம், காவல்துறையினருக்கும், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும், முறைப்பாடு செய்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.