Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவத்தினரையும் சிங்கள விவசாயிகளையும் குடியேற்றுவதற்காக தமிழனை அழிக்கத் திட்டமிடுகின்ற ஆட்சியாளர்கள் தான் நாட்டில் இருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை. சேனாதிராசா தெரிவித்தார். கிளிநொச்சி கண்டாவளை உழவனூரில் நடைபெற்ற, மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் தோற்றுப்போனவர்களல்ல. முள்ளிவாய்க்காலில் மடிந்து போனவர்களல்ல. நாம் நிமிர்கின்றவர்கள். எமது மண்ணில் எமது அடையாளங்களை அழித்து பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்புக்காக பயன்படுத்தி இராணுவத்தினரையும், சிங்கள விவசாயிகளையும் இங்கே குடியேற்ற எம்மை அழிக்க திட்டமிடுகின்ற ஆட…

  2. எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் புதன்கிழமை (17) அறிவிக்கும் என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திங்கட்கிழமை (15) தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (17) நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரில் யாரை ஆதரிக்கின்றீர்கள் என்று அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/1…

  3. கோடரியால் கதவை கொத்தி திறந்து அப்பாவை இராணுவம் பிடித்து சென்றது! 13 வயது மகன் உருக்கம் (வீடியோ) செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் உள்ள எமது வீட்டின் கதவை கோடரியால் கொத்தித் திறந்த இராணுவம் அப்பாவை பிடித்துச் சென்றது என 13 வயது மகன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போதே குணராசா டிலக்சன் என்ற 13 வயது சிறுவன் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் - "எனக்கு அப்ப 7 வயது. 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி இரவு 8 மணியளவில் எமது வீட்டுக்கு வந்த இராணுவம் கதவைத் தட்டியது. நாங்கள் திறக்கவில்லை. கோடரியால் கதவை கொத்தி அப…

  4. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தற்போது வயதான கோழி போல கொக்கரிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வயதான கோழி எப்படி கொக்கரித்தாலும் முட்டை கிடைக்காது என்பது நாட்டின் புத்தியுள்ள மக்களுக்கு தெரியும். பிரதி அமைச்சர்களாக இருந்த இராதாகிருஸ்ணன் மற்றும் திகம்பரம் ஆகியோர் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமை காரணமாகவே கட்சியில் இருந்து விலகியதாக கூறியது பச்சைப் பொய்.மேலும் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறை வரவ…

  5. தமிழர்களின் முதுகில் புலி முத்திரை குத்தி ஏமாற்றும் சிங்களப் பெண்! [Tuesday 2014-12-16 09:00] தமிழர்களின் முதுகில் புலி என முத்திரை பதித்து, பணம் சம்பாதிக்க முயற்சித்த சிங்களப் பெண் ஒருவர் பற்றி தகவல்கள் அம்பலமாகியுள்ளன. நேபாளத்தில் உள்ள ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் காண்பிப்பதற்காக சிங்கள பெண்ணொருவர், தமிழர்களுக்கு மதுபானத்தை கொடுத்து பலவந்தமாக அவர்களின் முதுகில் சூட்டு காயம் மூலம் சிங்களத்தில் கொட்டி (புலி) என முத்திரை பதித்துள்ளார். தமிழர்களின் முதுகில் புலி என முத்திரை பதித்து, பணம் சம்பாதிக்க முயற்சித்த சிங்களப் பெண் ஒருவர் பற்றி தகவல்கள் அம்பலமாகியுள்ளன. நேபாளத்தில் உள்ள ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் காண்பிப்பதற்காக சிங்கள பெண்ணொருவர்,…

  6. அலரி மாளிகைக்கான மாதாந்த உணவுச்செலவு 25 மில்லியன் ரூபா என்றும், அதைவிட பழங்களுக்காக மாதம் தோறும் 5 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில், ஹைட் பார்க்கில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகைக்கான மாதாந்த உணவுச்செலவு 25 மில்லியன் ரூபா என்றும், அதைவிட பழங்களுக்காக மாதம் தோறும் 5 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் தகவல் வெளியிட்டார். ஊழல்மிக்க ராஜபக்ச அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை விட்டுச் செல்வதை தடுப்பதற்காக அவர்களுக்கு 250 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் சந்திரிக்கா குற்றம்சாட்டினார். “எங்களைத் தேசத் துரோகிகள் என்றும், 100 நாட்களுக…

  7. அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர், 5.2 பில்லியன் அமெரிக்க டொலர் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கியொன்றில் வைப்பிலிட்டுள்ளார் என பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன, நேற்று திங்கட்கிழமை (15) தெரிவித்தார். சக்திவாய்ந்த அரசியல்வாதிகளால் வைப்பு செய்யப்படும் இந்த கறுப்பு பணத்தை இலங்கைக்கு கொண்டுவந்து, நாட்டின் அபிவிருத்திக்காகவும் ஏழைகளின் உயர்வுக்காகவும் பயன்படுத்தப்படும் என அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மக்களுக்கு ஆறுதல் வழங்க இந்த கறுப்புப் பணம் போதுமானது' எனவும் அவர…

  8. மகிந்தவின் இரகசியங்களை போட்டுடைக்கிறார் சம்பிக்க DEC 15, 2014 | 15:56by கார்வண்ணன்in செய்திகள் 2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் உரையாற்றிய அவர், “சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது அரசாங்கமும், 2005ம் ஆண்டு லண்டனில் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான எமில் காந்தனுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதையும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும், அடிப்படையாக கொண்டதே 2005ம் ஆண்டு வ…

  9. ஊவா மாகாணசபை, கோட்டே மாநகரசபைகளில் ஆட்சியைக் காப்பாற்ற போராட்டம் DEC 15, 2014 | 15:32by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கோட்டே மாநகரசபையில் நான்கு உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதால், அங்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. கோட்டே மாநகரசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் தனுக விஸ்வஜித் ஏற்கனவே எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரையடுத்து மேலும் மூன்று மாநகரசபை உறுப்பினர்கள், எதிரணியின் பக்கம் தாவவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டே மாநகரசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, 14 உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகள் தரப்பில் 6 உறுப்பினர்களும் உள்ளனர். நான்கு …

  10. நேற்றிரவு போர்க்களமானது யாழ். ஐந்து சந்தி! – மோதலில் மோட்டார் சைக்கிள், சைக்கிள் எரிப்பு. Top News [Monday 2014-12-15 09:00] யாழ்ப்பாணம்- ஐந்து சந்தியில் நேற்றிரவு இருதரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் நாவந்துறை, ஐந்து சந்தியில் நேற்றுமுன்தினம் முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும், இரு தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம்- ஐந்து சந்தியில் நேற்றிரவு இருதரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் நாவந்துறை, ஐந்து சந்தியில் நேற்றுமுன்தினம் முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும், இரு தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து கைகலப்ப…

  11. KPயின் கைதின் பின்பே மகிந்த சகோதர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது? குளோபல் தமிழ்ச் செய்திகளின் - விசேட செய்தியாளர்:- தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவட்டிராவை கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு அழைத்து வருவதற்காக அனுப்பப்ட்ட விமானமே, கடந்த வாரம் ஹோகந்தர பகுதியில வீழ்ந்துநொருங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, அவர் இலங்கை;கு விசேட பணிக்காக அன்று காலை சென்றதாகவும்,கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வந்துசேர்ந்த அவரை முதலில் ஹெலிகொப்டர் மூலமாக திருகோணமலைக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு இருந்ததாகவும், எனினும் மோசமான பனிமூட்டம் காரணமாக அது சாத்தியமாகததால், அவர்களை ஏற்றி வருவதற்காக சென்ற விமானப்படை விமானமே விபத்துக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பனிமூட்டம் …

  12. "8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும்" மக்கள் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் எமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. மக்கள் பணத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை இந்தியா போன்ற நாடுகள் காப்பாற்றுவதற்கு சந்தர்பம் வழங்கப்பட மாட்டாது. இலங்கைத் தீவில் மக்கள் முன்பாக இதற்கு பதில் சொல்லும் பொறுப்பு முன்னைய ராஜபக்ச ரெஜிமண்டுக்கு உள்ளது. தோல்வியின் நிலை அறிந்து தற்போது என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் தனது அரசியல் சலூனுக்கு ஒப்பானது என்று தரம் குறைத்து வர…

  13. தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரியின் கணவர் மரணம் தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரி விநோதினி அவர்களின் கணவர் திரு.ராஜேந்திரம் அவர்கள் இன்று கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்தார். வல்வை மக்களின் உணர்வு அஞ்சலி அமரர் திரு. இராசேந்திரம் தமிழீழ மாதா பெற்றெடுத்த ஈடு இணையில்லாத் தவப்புதல்வன் தன்மானமொன்றே தகுதியெனக் கொண்டு தலை நிமிர்ந்தோன்.. எத்தனை சோகம் வாழ்வில் வந்தாலும் தளராத தமிழன்.. தலைவர் வழியில் நடந்த தமிழர்கண்டு தன் மனம் மகிழ்ந்தவன் தலைவரைப் போல தன்னரும் மாமனாம் மாத்தந்தை வேலுப்பிள்ளை போல நேர்வழி சென்ற புனித வாழ்க்கை.. பட்டம் பதவி, பகட்டு என எத்தனையோ அருகில் கிடந்தும் எதையும் தொடாது எளிமை வாழ்வு வாழ்ந்த ஏற்றம்.. கற்பொழுக்கத்…

  14. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவின் வெற்றிக்காக செயற்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். தன்னை யாரும் வற்புறுத்தவில்லையெனவும் தனது சுய விருப்பின் அடிப்படையிலேயே பொது வேட்பாளரை ஆதரிக்கும் நோக்கில் எதிரணியில் இணைந்து கொண்டுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். http://lankamotion.com/

  15. என்னை 25 கோடி ரூபாய்களுக்கு விலை பேசினார்கள். அத்துடன் தனது தந்தைக்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் நான் விரும்புவது எல்லாவற்றையும் தருவதாக நாமல் ராஜபக்ஷ என்னிடம் கூறினார். என்று எம்.கே.டி.எஸ். குணவர்தன கூறினார். திருகோணமலை 4 ஆம் கட்டை பகுதியில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பேசுகையில், நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் என்னுடன் இரண்டுமுறை தொடர்பு கொண்டு பேசினார். 25 கோடி ரூபாய் தருவதாகவும் எனது முடிவை மாற்றிக் கொள்ளுமாறும் கேட்டார். நாமல் ராஜபக்ஷ என்னுடன் கதைத்தார். உங்கள் முடிவை மாற்…

  16. மத்தியதரவர்க்கம் மைத்திரியின் பக்கம் ஆயினும் கிரமப்புறங்களை வெல்வதில் எதிரணியினர் பலவீனமாக உள்ளனரா? எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரம் எவ்வாறாக அமைந்துள்ளது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வீட்டில் நாளாந்தம் ஆய்வுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன, குறிப்பிட்ட கூட்டங்களுடன் புள்ளிவிபரங்களுடன் தற்போதைய நிலை குறித்து ஆராயப்படுவதாகவும், கடந்த தேர்தலுடன் ஒப்பீடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் எதிர்கட்சி தலைவர் உட்பட முக்கிய தலைவர்கள் மைத்திரிக்கு இம்முறை வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர். 2010 இல் சரத்பொன்சேகாவிற்கு காணப்பட்டதை விட சிறிசேனவிற்கு அதிகளவு ஆதரவுள்ளதாக அவர்கள் கருதுகின்றன…

  17. -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில், பொலித்தீன் பைகளில் அடைத்து மிளகாய் செய்கை செய்யும் நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அ.செல்வராஜா திங்கட்கிழமை (15) தெரிவித்தார். வரட்சியான காலங்களில் வளரக்கூடிய வகையில் பயிர்ச்செய்கைகளை செய்கை செய்வதில் விவசாய பணிமனை அக்கறைகொண்டு செயற்பட்டு வருகின்றது. அந்தவகையில், பொலித்தீன் பைகளில் மிளகாய் செடிகளை அடைத்து, குறைந்தளவு நீரின் மூலம் மிளகாய் செய்கை செய்யும் நடவடிக்கைகள் கோணாவில், புன்னைநீராவி, கிளிநொச்சி மேற்கு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன. 180 பயனாளிகளுக்கு விதை மிளகாய்கள் வழங்கப்பட்டு இந்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு, அது தற்போது வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். …

  18. யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். புறநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த இளைஞர் வேலை வாய்ப்பு கிடைக்காத காரணத்தாலேயே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2½ பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டமை மற்றும் அண்மையில் பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற பஸ்ஸில் கல்வியங்காட்டு பகுதியில் வைத்து 2 பவுண் தங்கச்சங்கிலி அறுத்தமை ஆகிய சம்பவங்களில் சந்தேகநபருக்கு தொடர்பு உள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் விஞ்ஞானமாணி பட்டதா…

  19. ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அரசியல் குழுவின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முன்வைக்கப்படும். அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள விருத்தினர் விடுதியில் நேற்று முற்பகல் 10 மணி முதல் மாலை 5.30 வரை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், தமிழரசுக்கட்சியின் செயற்குழு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இன்றைய அரசியல் நிலை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் ஏனைய விடங்கள் குறித்தும் கல்து…

  20. இலங்கையில் கூகுள் வீதி தோற்றம் (Google Street View) அறிமுகம்; முதற்கட்டமாக யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் அருகம்பேவில் கூகுள் கார்கள் பயணிக்கும் கூகுள் வீதி வரை­ப­டங்கள் இணை­யத்தில் மிகவும் பிர­ப­ல­மா­னவை. வீதி­களை உள்­ள­ப­டியே பட­மாக்கி வரை­படம் தயா­ரிப்­ப­தற்­காக விசேட கெமரா பொருத்­தப்­பட்ட கூகுள் கார்கள் உலகில் பல நாடு­களில் பயணம் செய்­கின்­றன. இப்­போது இலங்கை அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் இலங்­கையின் வீதி தோற்ற விப­ரங்­களை சேக­ரிக்கும் நட­வ­டிக்­கையை கூகுள் ஆரம்­பித்­துள்­ளது. இந்த புத்­த­மை­வான செயற்­பாட்டின் மூல­மாக இலங்­கை­யர்­க­ளுக்கும் உலகின் எப்­ப­கு­தியை சேர்ந்­த­வர்­க­ளுக்கும் இலங்­கையின் தோற்­றத்­தையும் பகு­தி­க­ளையும் பார்­வை­யி­டக்­கூ­டிய வாய்ப்பு ஏற்­ப­டுத…

  21. இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு நிபந்தனைகளின்றி நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக வடமாகாண விவசாயத்துறை அமைச்சு அறிவித்திருக்கின்றது. இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசன குளமாகிய இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு நிபந்தனைகளின்றி நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக வடமாகாண விவசாயத்துறை அமைச்சு அறிவித்திருக்கின்றது. இந்தக் குளத்தைப் புனரமைத்து, அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியினால் முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் யாழ்ப்பாணத்திற்கு இங்கிருந்து குடிநீர் கொண்டு செல்வது சாத்தியமில்லை என்று எதிர்…

  22. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தற்போது சோளம் அறுவடை இடம்பெற்றுவருகின்றது. இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, கல்லாறு, மண்டூர், 38ஆம் கொலணி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீதியோரங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் நற்பட்டிமுனை, கிட்டங்கி, பாண்டிருப்பு, பெரியநீலாவணை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீதியோரங்களிலும் அறுவடை செய்யப்பட்ட சோளம் பொத்திகள் அவித்து விற்பனை செய்யப்படுகின்றன. கிட்டங்கி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட சோளம் பொத்திகள் அவித்து விற்பனை செய்யப்படுவதை படங்களில் காணலாம். ஜுலை, ஒக்டோபர் மாதங்களில் சோளம் விதைகள் விதைக்கப்படுகின்றன. சோளம் இனங்களை பொறுத்து 2 மாத அறுவடை, 3 மாத அறுவடை, 4 மாத அறுவடை, 6 மாத அறுவடை என்று வேறுபடுகின்றன. மழை வெள்ளம் க…

  23. -பொ.சோபிகா யாழ். தெல்லிப்பழை கிழக்கு சிற்றியம்புளியடி கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார், சனிக்கிழமை (13) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக அப் பகுதி கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர். அதனை அடுத்து சனிக்கிழமை (13) சுகாதார பரிசோதகர், சுகாதார தொண்டர்களுடன் சென்று கிணறுகளை பார்வையிட்டுள்ளோம். இப்பகுதியில் குடிநீர் வழங்குவதற்காக வலி. வடக்கு பிரதேச சபைக்கு அறிவித்துள்ளோம். அத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http:/…

  24. சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளை அனர்த்தப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட மக்களின் கையொப்பங்களுடன் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் இன்று திங்கள் கிழமை முற்பகல் வலி. வடக்கு, தெல்லிப்பழை மற்றும் வலி. தெற்கு, உடுவில் பிரதேச செயலாளர்களிடம் கையளித்தார். இதன்போது சூழல் பாதுகாப்பு அமையத்தின் பொருளாளர் சட்டதரணி ஜெ.ஜெயரூபனும் கலந்துகொண்டார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- யாழ்ப்பாணக் குடாநாடானது குடிதண்ணீருக்கு நிலத்தடி நீரையே முழுமையாக நம்பியுள்ளது…

  25. -யொஹான் பெரேரா ஜனவரியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வைக்கும் நோக்கில், தமிழ் மக்களின் சிந்தனையை மாற்றுவதற்கான சதி வேலையில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த தேர்தல் தமிழர்களுடன் சம்பந்தப்பட்டதல்ல எனவும் இதனால், தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதி;ல்லை எனக் கூறுவது தவறானதாகும். இந்த தேர்தலில் வாக்களிப்பதனூடாக அரசியல் மற்றும் சமுக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜாதிக ஹெல உறுமயவுடனும் ஏனைய கட்சிகளுடனும் கைச்சாத்திட்டுள்ள புரிந்துணர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.