Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்க்கட்சித் தலைவர் ஐ.ம.சு.மு.வில் இணைவு பண்டாரவளை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் சச்சிதானந்தன் சுரேன் கண்ணா ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியுடன் இணைந்து கொண்டார். ஐ.தே.க. வைச் சேர்ந்த சச்சிதானந்தன் சுரேன் கண்ணா அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியுடன் இணைய இணக்கப்பாட்டினை தெரிவித்தார். இவர் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற பண்டாரவளை பிரதேச சபை தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். அத்துடன் ஐ.தே.க கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க இளைஞர் அமைப்பில் முக்கிய பதவியையும் இவர் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சச்சிதானந்தன் சுரேன் கண்ணா ஐக்க…

  2. பரிசுத்த பாப்பரசரின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை (4) காலை மன்னார் மடு திருத்தலத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்தனர். குறித்த குழுவில் பாப்பரசரின் வழிபாடுகளுக்கான அருட்தந்தையர்கள் மற்றும் பாப்பரசரின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே வருகை தந்திருந்தனர். எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு வரும் பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் திகதி மாலை மடு திருத்தலத்திற்கு வருகை தந்து விசேட திருப்பலி ஆராதனையை நிறைவேற்றவுள்ளார். மடுத்திருத்தலத்தில் மடு மாதா திருச்சொரூப ஆசீர்வாதத்தை மேற்கொள்ளும் பரிசுத்த பாப்பரசர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் விசேட ஆசிர் வழங்கவுள்ளார். இந்த நிலையில் பரிசுத்த பாப்பரசரின் மன்ன…

  3. போர் நிறுத்தக் காலப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாக அரசாங்கத்தால் கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஜயரத்னம் மற்றும் இராணுவ கெப்டன் லக்கீ ஆகியோர் உள்ளடங்கலான 80பேர் தொடர்பான தடயவியல் ஆய்வு நேற்று செவ்வாய்க்கிழமை (02.11.14) ஆரம்பிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான், இந்திமடு, சமளன்குளம் ஆகிய பகுதிகளில், கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாக அரசாங்கத்தால் நம்பப்படுகிறது. தற்போது தடுப்பிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே எரியூட்டப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அ…

  4. வடமாகாணசபைக்கென ஒதுக்கப்பட்ட நிதி உரியவகையில் செலவு செய்யப்படாது திரும்பி செல்வதாக பிரச்சாரம் செய்ய மேற்கொள்ளப்படும் சதி முயற்சிக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளைப் பந்தாடப்போவதாக ஆளுநர் மிரட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அவ்வாறு ஒத்துழைக்காத அதிகாரிகள் குறிப்பாக அமைச்சு செயலாளர்கள் பதவி இறக்கப்படவுள்ளதாகவும் மிரட்டப்பட்டுள்ளனர். வடமாகாணசபைக்கு இலங்கை அரசாங்கத்தின் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வரவு செலவுத்திட்டத்திலே இருபத்தோராயிரத்து எண்ணூறு மில்லியன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்நிதி நேரடியான செயற்திட்டங்களுக்கும் மற்றும் ஏனையதிட்டங்களின் ஊடான செயற்திட்டங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நேரடியாக மாகாணசபையின் முன்மொழிவுகளுக்கூடாக நடைமுறைப்படுத்தும் செ…

  5. நாட்டின் தேசிய இனமான தமிழ் மக்களுக்காக உண்மையான உணர்வுகளோடு போராடி மரணித்த மாவீரர்களையோ, தியாகத்திற்கு உரித்தான போராளிகளையோ தேர்தல் பிரசாரங்களின்போது கொச்சைப்படுத்தவோ, அதை ஒரு கருப்பொருளாகக் கொள்ளவோ வேண்டாம் என மேல் மாகாண சபையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் சண்.குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மொறட்டுவ பல்கலைக்கழக பழைய மாணவர்களுடனான சந்திப்பில் ‘இன்றைய சூழலில் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளும்’ என்றதொனிப்பொருளில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்தது என்று மட்டும்தான் அரசு கூறுகிறதே தவிர அதில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கோ இன்றும் அகதிகளாக வாழுகின்ற எமது உட…

  6. ஆட்சி மாற்றத்திற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், கூட்டமைப்பானது பொது வேட்பாளருக்கான ஆதரவினை பகிரங்கமாக வழங்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சந்திரிக்காவின் இந்தக் கோரிக்கையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த பத்திரிகை செய்தியில் இரகசியமான முறையில் ஆதரவளிக்குமாறு பொது வேட்பாளர் தரப்பில்கோரப்பட்டதாகவும் அதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆதரவு வழங்குவது பகிரங்கமாக ஆதரவளிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் இரகசியமாக ஆதரவளிக்க வேண்டுமென மற்றுமொரு தரப்பினரும் தமிழ்த் தேச…

  7. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் 27 பேரின் தொலைபேசி அழைப்புகள் இடைமறித்து ஒட்டுக்கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மகிந்த பாலசூர்ய இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரிவு இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த பிரிவில் பணியாற்றுபவர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசிகளை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக- ஒரு பிரிவிற்கு எட்டு மணித்தியாலங்கள் என்ற அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் தொலைபேசி உரையாடல்களை கேட்டு பதிவுசெய்கின்றனர். கடந்த சில மாதங்களாக முக்கிய பிரமுகர்கள் பலரின் தொலைபேசி உர…

  8. தனக்காக 20 மில்லியன் ரூபா செலவு செய்து அச்சிட்ட சுவரொட்டிகள் அனைத்தும் வீணாகப் போய் விட்டதாகவும், இப்போது மைத்திரி புலி என்று கூறி புதிய போஸ்டர்கள் அடிக்க வேண்டிய நிலை மஹிந்த அரசுக்கு ஏற்பட்டுள்ளதாகவும்,கிண்டல் அடித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஏகாதிபத்திய ஆட்சிக்கான கதவு மூடப்பட்டு, தோல்விக்கான கதவு திறந்துள்ளது. இதுதான் அவர் முகம்கொடுத்துள்ள பெரும் பிரச்சினையாகும். அமைச்சர் பஸில்தான் சிறந்த புத்திசாலி என்று அரசின் தேர்தல் பிரசாரப் பணிகளுக்கான பொறுப்பு அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராக 20 மில்லியன் ரூபா பணம் செலவளித்து சுவரொட்டிகள் அடித்தனர். ஆனால், இன்று அனைத்தும் வீணாய் போயுள்ளன. எனக்கு எதி…

  9. கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் கைவிடப்பட்ட நிலையில் கடவுளுக்கு கருணை இருந்தால் சேர்ந்து வாழ்வோம் இல்லையேல் எல்லோரும் செத்துமடிவோம் என்று கூறி மண்சரிவு அபாய எச்சரிக்கை பிரதேசமான தமது லயன் குடியிருப்புக்களுக்கு மீண்டும் சென்று விட்டனர். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாத மேற்படி மக்களில் நேற்று புதன்கிழமை சுமார் 200 பேர் வரையிலானோர் மண்சரிவு இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள 14, 15ஆம் இலக்கங்களைக் கொண்ட லயன் குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளனர். பூனாகலை தமிழ் மகா வித்தி…

  10. எதிர்வரும் 8ம் திகதியின் பின்னரும் நானே ஜனாதிபதி. அதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. நாட்டில் நிலவிய அரிசி தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்து அதனை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்குகின்றோம். நான் யாருடனும், எதற்காகவும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டியதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடன்படிக்கை கைச்சாத்திடுகின்றது. அதேபோல ஹெல உறுமய மற்றுமொரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுகின்றது. மற்றுமொரு தரப்பு இன்னுமொரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுகின்றது. எனினும், என்னுடன் இருக்கும் சகோதரர்கள்…

  11. தாம் ஆட்சிக்கு வந்ததும். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அனைத்து வரப்பிரசாதங்களும் மீண்டும் வழங்கப்படும் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் சரத் பொன்சேகாவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வேதனையுடன் வேடிக்கை பார்க்க நேரிட்டது. சரத் பொன்சேகா மீதான சித்திரவதைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அநீதிகளுக்கு எதிராக போராடக் கூடிய சக்தி இருக்கவில்லை. எதிர்காலத்தில் சரத் பொன்சேகாவை விடவும் மோசமான பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்…

  12. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டட வேலைகள் இன்னமும் பூர்த்தியடையவில்லை இதனால் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆய்வுகூடக் கருவிகள் மீளப்பெறப்பட்டு வேறு பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்டட வேலைகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு மாதங்களில் பூர்த்திசெய்யவேண்டுமெனக் குறிப்பிடப்பட்டு ஏப்ரல் மாதத்தில் ஆய்வுகூடக் கருவிகளும் வழங்கப்பட்டிருந்தன. இதுவரை வேலைகள் பூர்த்தியாகாததால் இந்தப் பாடசாலைக்கு வழங்கப்பட்டிருந்த கருவிகள் மீளப்பெறப்பட்டு வேறு பாடசாலை ஆய்வுகூடத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டது. - http://malarum.com/article/tam/2014/12/04/7230/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%…

  13. ஜனாதிபதி தேர்தலில் 78 முதல் 82 வீதமான தமிழர்கள் மைத்திரிபால சறிசேனவுக்கே வாகக்ளிப்பார்கள் என ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி அமைப்பாளர் ரோகணகமகே தெரிவித்தார். வவுனியா கோவில்குளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் நேற்று (3.12) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் கற்ற பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும் மாணவர்களுமாக இணைந்து அண்மையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது 90 முதல் 92 வீதமான வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள் இம் முறை வாக்களிப்பார்கள் அதில் 78 முதல் 82 வீதமானவாகள் மைத்திரிக்கு வாக்களிப்பார்கள் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவும் தற்போதைய…

  14. அப்போ மகிந்த & கம்பனி ஆதரிக்குமா? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனி மாவட்டக் கோரிக்கையை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நிராகரித்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு என தனியானர் ஒர் நிர்வாக மாவட்ட அலகினை உருவாக்கித் தந்தால், பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயார் என முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்திருந்தது. எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்மசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கவும், முஸ்லிம் காங்கிரஸூடன் ஏற்கனவே பேச்சுவார…

  15. இலஞ்ச பட்டியலில் இலங்கைக்கு 85ஆவது இடம் வியாழக்கிழமை, 04 டிசெம்பர் 2014 05:20 டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படும் அதிக இலஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலின் 2014ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் இலங்கை 85ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 175 நாடுகளை மையப்படுத்தியே 2014ஆம் ஆண்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 85ஆவது இடத்தில் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிரண்டும் இடம்பிடித்துள்ளன. உலக வங்கி மற்றும் உலக பொருளாதார புள்ளிவிபரங்களை அடிப்படையாககொண்டே இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டில் 177 நாடுகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. …

    • 2 replies
    • 447 views
  16. அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பொதுவான ஒரே நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை அழைத்து, தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டிருந்தார். அதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. எனினும், அரசதரப்பில் இருந்து அதற்குச் சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபடி, சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினருக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையி…

    • 1 reply
    • 378 views
  17. ஹக்கீமின் தனி நிர்வாக அலகு கோரிக்கை நிராகரிப்பு மகிந்தவும், மைத்திரி-ரணில் கூட்டு என இரு தரப்பும் கல்முனையை நகராக கொண்டு முஸ்லீம்களுக்கு தனி நிர்வாக அலகு அமைக்கும் ஹக்கீமின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாய் கொழும்பு செய்திதளம் ஒன்று சொல்கிறது. http://www.asianmirror.lk/top-news/item/5430-maithri-ranil-reject-hakeem-s-proposal-for-a-separate-district-for-muslims

    • 4 replies
    • 815 views
  18. வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உடைந்தது!? அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கு மாகாண சபையிலும் தனித்து இயங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நேற்றைய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் 3 மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் 8 உறுப்பினர்கள் கொண்ட எதிர்க்கட்சி இனி 5 உறுப்பினர்களுடனே இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேசமயம் அண்மையில் கிழக்கு மாகாண சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து இயங்குவதற்கு முடிவு எடுத்திருந்தமை தெரிந்ததே. http://tamilleader.com/?p=44791

  19. மாவீரர்கள் தொடர்பில் குகவரதன் கோரிக்கை; செவிமடுக்குமா கூட்டமைப்பு?! நாட்டின் தேசிய இனமான தமிழ் மக்களுக்காக உண்மையான உணர்வுகளோடு போராடி மரணித்த மாவீரர்களையோ, தியாகத்திற்கு உரித்தான போராளிகளையோ தேர்தல் பிரசாரங்களின்போது கொச்சைப்படுத்தவோ, அதை ஒரு கருப்பொருளாகக் கொள்ளவோ வேண்டாம் என மேல் மாகாண சபையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் சண்.குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மொறட்டுவ பல்கலைக்கழக பழைய மாணவர்களுடனான சந்திப்பில் ‘இன்றைய சூழலில் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளும்’ என்றதொனிப்பொருளில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்தது என்று மட்டும்தான் அரசு கூறுகிறதே தவிர …

  20. சர்வதேச Edexcel உயர்தர பரீட்சைகளில் அதிக இலங்கை மாணவர்கள் சித்தியடைகின்றனர் சர்வதேச Edexcel உயர்தர பரீட்சைகளின் சராசரி எண்ணிக்கையை விட இலங்கை மாணவர்கள் அதிகமாக சித்தியடைவதாக பிரித்தானியாவின் Pearson Qualifications International இன் சர்வதேச பங்காண்மைகள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்கான பணிப்பாளர் David Growther அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது தெரிவித்திருந்தார். அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றிருந்த Pearson Edexcel கல்வி செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார். மாணவர்களின் திறமைகளை நான் பாராட்ட விரும்புகிறேன். இது சர்வதேச சராசரி எண்ணிக்கையை விட அதிகமாக காணப்படுகிறது. இலங்கை மாணவ…

  21. வரவு - செலவுத் திட்டமா ? வகுக்கப்பட்ட திட்டமா? வரவு செலவுத் திட்டம் என்றாலே இயல்பாகவே மக்களுக்குள் இனம்புரியாதவோர் எதிர்பார்ப்பினை தூண்டி விட்டு விடுகிறது. இது இலங்கையின் ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்தின் போதும் இடம்பெறுகின்ற ஒன்றுதான். என்றாலும் அண்மைக்கால தளம்பல் நிலை பொருளாதார சூழல்களுக்கு மத்தியில் வரவு செலவுத் திட்டங்களைப் பற்றி மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையும் பற்றிக்கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும். நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைக் கொண்டு அதனை எவ்வாறு நிர்வகிப்பது இதனூடாக எத்தகைய நிவாரணங்களையும் சலுகைகளையும் வழங்குவது என்பவை குறித்து வருமானத்திற்கான வழி வகைகள் குறித்தும் ஆராய்ந்து இறுதி செய்யப்படுகின்ற வரவு -செலவுத் திட்டம் எத்தகைய செயல் வடிவத்தினை…

  22. முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடத்துகின்றோம். நம்பிக்கையுடனேயே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேசுகின்றோம். எனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்துடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார். நல்லாட்சி குறித்து பேசும் நவீன் திசாநாயகக தனக்கு 100 மிலலியன் ரூபா கொடுப்பதற்கு முன்வந்தது யார் என்பதனை கூறவேண்டும். பொலிஸ் முறைப்பாட்டையாவது மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்ட…

  23. கொழும்பு மாநகரசபைக்குள் காணப்படும் ஜனாதிபதியின் பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை 04 டிசம்பர் 2014 கொழும்பு மாநகரசபைக்குள் காணப்படும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு கோரும் கடிதமொன்றை மாநகர முதல்வர் ஏஜேஎம் முசாமிலுக்கு அனுப்பிவைத்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,இந்த வேண்டுகோளை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு மற்றும்,ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஜனவரி 8 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நீதியானதாகவும், சுதந்திரமானதாகவும் நடைபெறுவதை உறுதிசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலுக்கு…

  24. போரின் போது வடக்கு தமிழ் மக்களால் கைவிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு தொகுதி மகிந்த ராஜபக்சவால் இன்று கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவற்றைப் பெறுவதற்குக் கிளிநொச்சியில் இருந்து அழைக்கப்பட்டவர்கள் ஆண்கள் பெண்கள் என வேறாக்கப்பட்டு இராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர் என அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் தமக்கு நகைகள் வேண்டாம் வீட்டுக்குச் செல்லவிடுங்கள் என்று கேட்டபோதும் அதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர் என்றும் உறவினர்கள் கூறினர். http://www.pathivu.com/news/35819/57//d,article_full.aspx

  25. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மேற்குலக சக்திகள் சதி செய்வதாக சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, “சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேற்கு நாடுகள் இரகசியமாக எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்புலத்தில் இருந்து செயற்படுகின்றன. அவர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டது மேற்கு நாடுகளின் சூழ்ச்சியாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/35816/57//d,article_full.aspx

    • 0 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.