Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிளுக்கு எதிரான தடை குறித்த வழக்கு விசாரணை இன்று இந்திய நீதிமன்றில்... 27 அக்டோபர் 2014 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் இந்திய நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. நீதவான் ஜீ.பீ. மித்தால் தலைமையிலான நீதவான் குழு தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் நீதிமன்றில் இந்த வழக்கினை விசாரணை செய்ய உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 26, 27ம் திகதிகளில் சென்னையில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, புலிகளின் சார்பில் ஆஜராகவுள்ளார். காங்கிரஸ் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான…

  2. கட்டுநாயக்காவில் விமானமொன்று விபத்து திங்கட்கிழமை, 27 ஒக்டோபர் 2014 17:53 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமொன்றின் பின்புறத்திலுள்ள இடதுபக்க டயர் வெடிப்புக்குள்ளான சம்பவமொன்று இன்று மாலை 4.20 மணியளவில் இடம்பெற்றது. இவ்வாறு விபத்துக்குள்ளான விமானம் சிறியரக விமானம் ஒன்று எனவும் இதில் மூவர் மாத்திரமே பயணிகளாக இருந்துள்ளனர் என்றும் இந்த விபத்தால் எவருக்கும் எவ்வித சேதமும் இல்லை எனவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. டயர் விபத்துக்குள்ளானதை அடுத்து, புதிய டயரொன்று பொருத்தப்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் மேலும் தெரிவித்தன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/13105…

  3. LLRC பரிந்துரைகளை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கத் தயார் – கமலேஸ் சர்மா:- உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிற்கும் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பிற்கும் இடையிலான உறவுகள் மூலம் சிறந்த நன்மைகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். கமலேஸ் சர்மா ஜனாதிபதியை சந்தித்த போது, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார…

  4. -யோ.வித்தியா யாழ் மாவட்டத்தில் மரக்கறி விதைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக யாழ்மாவட்ட விதை உற்பத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் ரி.ரவிமயூரன் திங்கட்கிழமை (27) தெரிவித்தார். கத்தரி, தக்காளி, பயிற்றை, புடோல், பாகல் மற்றும் பூசணி போன்ற மரக்கறி வகைகளின் விதைகளுக்கே தட்டுப்பாடு நிலவுகின்றது. இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் யாழ்மாவட்ட விதை உற்பத்தி கூட்டுறவு சங்கத்தால் விதை உற்பத்திக்கான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விதைகள் கமநல சேவைகள் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு விவசாய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. யாழ் மாவட்டத்திலுள்ள 15 கமநலசேவை நிலையங்களில் 12 கமநல சேவை நிலயங்கள் ஊடாக இந்த …

  5. வட மாகாண சபையில் ஆட்சி செய்கின்றவர்கள் புலம்பெயர் மக்களின் தேவைக்கு ஏற்பவே செயற்பட்டுவருகின்றனர். அவர்கள் வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதைவிடுத்து புலம் பெயர் மக்களின் தேவையை நிறைவேற்றிவருகின்றனர். வட மாகாண சபையின் செயற்திறனின்மை தொடர்பில் அரசாங்கம் அதிருப்தியுடனேயே உள்ளது என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். வட மாகாண சபைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பங்கு இதுவரை செலவிடப்படாமல் உள்ளது. வட மாகாண சபையை நிர்வகிக்கின்றவர்களுக்கு மக்களுக்கு சேவையாற்றத் தெரியவில்லை. அல்லது சேவையாற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. வட மாகாண சபையின் ஊடாக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதிலாக அவர்கள் வேறு எதனையோ செய்துகொண்டிருக்கின…

  6. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் உரிமைகளைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்கு ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் அஹிம்சைப் போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனதிராஜா. அதேநேரம் வடக்கு மாகாண சபைக்கு அரசு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களையும் செந்த இடங்களில் மீள்குடியேற்ற உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணிகளின் 44ஆவது வருடாந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெக்டர் கொப்பேக்கடுவ கமநல ஆராய்ச்சி நிலைய கேட…

  7. ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவை (வயது - 57) உடன் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவ்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸில் தலையீடு செய்து சாட்சிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சி, சிவபுரம், இராஞ்சி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கிருஷ்ணராஜா ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். குறித்த கைது தொடர்பில் தம…

  8. -செல்வநாயகம் கபிலன் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடத்தனை - பொற்பதி வீதியை புனரமைப்பதற்கு 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனரமைப்பு பணிகள் 2015 ஜனவரி மாதம் தொடக்கம் ஆரம்பமாகும் எனவும் பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூபாலசிங்கம் சஞ்ஜீவன் திங்கட்கிழமை (27) தெரிவித்தார். 3.7 கிலோமீற்றர் நீளமான மேற்படி வீதியானது பாரியளவில் சேதமடைந்து போக்குவரத்தில் ஈடுபடமுடியாத அளவிற்கு உள்ளது. 3 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 500இற்கும் மேற்பட்ட மக்களின் பிரதான வீதியாக இவ்வீதி காணப்படுகின்றது. வீதி சேதமடைந்திருப்பதால் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் உள்ளிடட பலர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளமையால் மேற்படி வீதி மேலும…

  9. -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், நீர்வேலி, சிறுப்பிட்டி பகுதிகளிலுள்ள வாழைத்தோட்டங்களில் வாழைக்குலை திருட்டுக்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுகுற்ற தடுப்பு பொறுப்பதிகாரி அநுர பாலித திங்கட்கிழமை (27) தெரிவித்தார். கடந்த வாரத்தில் மட்டும் 4 வாழைத்தோட்ட உரிமையாளர்கள் வாழைக்குலைகள் திருட்டுப்போயுள்ளதாக முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர். 25 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இரவு வேளைகளில் வாகனங்களில் வருபவர்கள் தோட்டங்களிற்குள் புகுந்து பெரிய அளவிலுள்ள வாழைக்குலைகளை வெட்டி செல்வதாகவும், குறிப்பாக மழை பெய்யும் தருணங்களிலே இவ்வாறான வாழைக்குலைகள் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ள…

  10. சர்வதேச மன்னிப்பு சபை போன்ற பொறுப்புவாய்ந்த மனித உரிமை அமைப்புக்கள் ஒரு நாடு பற்றி தெளிவாக அறிந்த பின்னரே கருத்துக்கூற முற்படவேண்டும். இல்லாதுவிடில் அவர்கள் மீதான நம்பிக்கையே அற்றுப்போகும். இவ்வாறு தெரிவித்துள்ளார் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க. நாடாளுமன்றுக்கு அருகில் வீதியை மறித்து பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கலகமடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு மாணவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. குறிப்பாக, "அரசுக்கு எதிராகத் தமது அதிருப்தியை வெளியிடுபவர்கள் மீது இலங்கையில் அடக்குமுறை தொடர்கிறது. கடந்த வாரம் ந…

  11. தினமும் 6 இலட்சம் ரூபா வருமானத்தைக் கொடுக்கிறது யாழ்ப்பாணத்துக்கான ரயில்சேவை! [Monday 2014-10-27 07:00] யாழ். ரயில் நிலையத்தைப் பார்வையிட வரும் பொதுமக்கள் தமது பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என ரயில் நிலைய அதிபர் நாராயணசாமி தபேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை கடந்த 13ம் திகதி மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தினை பார்வையிட பெருமளவான மக்கள் தினமும் வருகை தருவதாக ரயில் நிலைய அதிபர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தினைப் பார்வையிட வருகின்ற பொதுமக்கள் நிறுத்தப்பட்ட ரயில்களில் ஏறி இறங்குவதனால் அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக தெரிவித்த நா. தபேந்திரன், மக்கள் தமது பாதுகாப்பில் அக்கறை செல…

  12. -எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையில் இருந்து மேலும் புதிய மூன்று பஸ் சேவைகள் திங்கட்கிழமை முதல்(27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை நேரக்கணிப்பு பொறுப்பதிகாரி எஸ்.எம்.சரூன் ஞாயிற்றுக்கிழமை(26) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 'மன்னாரில் இருந்து அக்கரைப்பற்றுக்கான சேவை நாளை இரவு 8.15 மணிக்கு மன்னார் சாலையில் இருந்து ஆரம்பமாகும். குறித்த பஸ் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு அக்கரைப்பற்றை சென்றடையும். இரண்டாவது சேவையாக மன்னாரில் இருந்து முல்லைத்தீவுக்கான சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது. காலை 5.15 மணிக்கு மன்னார் சாலையில் இருந்து செல்லும் பயணிகள் பஸ் வவுனியா சென்று அங்கிருந்து கிளிநொச்சி, ப…

  13. கமலேஷ் சர்மாவுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் சந்திப்பு:- யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையிலான சந்திப்பு, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26.10.14) இடம்பெற்றது. இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை (25.10.14) விஜயம் செய்த கமலேஷ் சர்மா, இன்று ஞாயிற்றுக்கிழமை (26) வடக்குக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் முதற் சந்திப்பாக வடமாகாண ஆளுநரை சந்தித்த கமலேஷ் சர்மா, இன்று நண்பகல் யாழ். சிவில் சமூக பிரதிநிதிகளை கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியிலும் சந்திக்க உள்ளார். அத்துடன் கொடிகாமம் அல்லாரை பகுத…

  14. மிரட்டியதால் மட்டுமே உங்களை வரவேற்க வந்தோம்! தென் இலங்கை மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சிறீலங்கா ஜனாதிபதி அவர்களே, கடந்த வாரம் நீங்கள் வடமாகணத்திற்கு வருகைந்தந்தீர்கள் அபிவிருத்தி என்ற பெயரிலே பல மாயஜால வித்தைகளைக்காட்டி ஆராவரம் செய்து சென்றீர்கள். ஆனால் உண்மை எதுவோ வடகிழக்கு மக்களின் உண்மைநிலை எது அவர்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதையெல்லாம் அபிவிருத்தி என்ற ஒரேவார்த்தைக்குள் உள்ளடக்கி மறுபுறத்தில் இன அழிப்பின் அடுத்த அத்தியாயத்திற்கான வேலைகளை முன் எடுத்துக்கொண்டிருப்பதை ஒட்டுமொத்த தமிழினமும் அறியும். கிணற்றுத்தவளைகளாக இருக்கும் அடிமட்டசிங்கள மக்களிற்கு புலிகள் என்ற பூச்சாண்டியையும் பயங்கரவாதம் என்ற மந்திரத்தையும் ஓதி ஓதி இத்தனைகாலம் ஆட்சிபீடத்தில் அமர்ந…

  15. வெளிநாட்டில் பிறந்தவர்களே வடக்கே செல்வதற்கு அனுமதியை பெற வேண்டும்! – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு. [sunday 2014-10-26 09:00] வட மாகாணத்துக்குச் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு குறித்து பாதுகாப்பு அமைச்சு புதிய தளர்வு ஒன்றை அறிவித்துள்ளது. இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு உரிமையாளர்களுக்கு இந்த விதிமுறை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பிறந்த- வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொண்டிருப்போர் தமது உறவுகளை பார்வையிட வடக்கிற்குச் செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னனுமதி தேவையில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் வடக்குக்கு …

  16. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நிதியமைச்சர் என்ற முறையில் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வரவு - செலவு திட்ட யோசனையை முன்வைத்தார். இதன் பின்னர் நாடளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களைச் சந்தித்து அளவளாவினார். http://malarum.com/article/tam/2014/10/24/6454/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0…

  17. ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப் போகும் முடிவினால் இலங்கைத் தீவில் மாற்றங்கள் ஏற்படுமா? நிலாந்தன்:- ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதித்திருந்த தடை தொடர்பில் ஐரோப்பிய பொது நீதிமன்றம் திருப்பகரமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக மற்றும் தகவல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இத்தீர்ப்பானது சட்ட ரீதியிலானது மட்டுமே என்றும் அரசியல் ரீதியிலானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கை முன்னெடுத்த தமிழ்ச் சட்டச் செயற்பாட்டாளர் ஒருவர் இதே தொனிப்பட கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதாவது இத்தீர்ப்பானது சட்ட ரீதியிலானது என்றும் இதில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அவர் கூறியிருந்…

  18. 2000 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிரிட்டனில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது:- UK குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிரிட்டனில் அநத அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றிய ஏற்பாடுகளிலிருந்து வித்தியாசமானது. அதேவேளை இந்த தீர்ப்பு உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியிலான ஒன்றல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனினும் நடைமுறை விதிகளின் அடிப்படையில் சட்ட ரீதியாக புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் பற்றிய தீர்ப்பு இது என…

  19. அதுரலிய ரத்ன தேரரின் 19 வது அரசியலமைப்புத் திருத்த யோசனையை ஆதரிக்கத் தயார்! – ரணில் அறிவிப்பு. [sunday 2014-10-26 08:00] ஜனாதிபதி முறைமையை நீக்கி, பிரதமருக்கு அதிகாரங்களை அளிக்கவும், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வலியுறுத்தும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரினால் முன்வைக்கப்பட்டுள்ள 19 வது அரசியலயமைப்புத் திருத்த யோசனையை தாம் ஆதரிப்பதாக, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், அரசியல் கட்சிகள் இணங்கினால் நாடாளுமன்றில் விவாதம் நடத்தாமலேயே இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=119431&category=TamilNe…

  20. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை மீண்டும் புத்துயிர் பெறவைக்கும் நல்ல நோக்கத்துடன் 80 இலட்சம் நிதியில் தருமபுரம் கிழக்கு மேற்கு விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் நிகழ்வு இன்ற தருமபுரத்தில் நடந்துள்ள நிலையில் அதில் ஈ.பி.டி.பி தலையிட்டு மோசடி இடம்பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. மனிதாபிமான அமைப்பாகவும் நடுநிலையாகவும் அரசியல் பேதமற்று இயங்குகின்ற கொள்கையுடைய அமைப்பாக அறியப்படுகின்ற சர்வதேச செஞ்சிலுவை சங்க அமைப்பை பயன்படுத்தி விதை நெல் வழங்கும் பயனாளிகள் தெரிவில் ஈ.பி.டி.பியோடு தருமபுரத்தில் இருந்து மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் செல்வம் என்பவர் தலைநுழைத்து அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளார். ஜ.சி.ஆர்.சியின் நன்மதிப்பை கெடுக்கும் வகையி…

  21. எமது இனத்தின் வரலாற்றையும் தனித்தன்மையையும் உரிய முறையில் ஆவணப்படுத்துவதன் மூலமே எமது இனத்தின் இருப்பை தக்கவைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணியளவில் அதிபர் திருமதி.கமலராணி கிருஸ்ணபிள்ளை தலைமையில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு இனத்தின் இருப்பை, அதன் பண்பாடுகளை , கலாசார விழுமியத்தை அழிக்க வேண்டுமெனில் முதலில் அவ்வினத்தின் அறிவுக்களஞ்சியங்களை அழிக்க வேண்டும். இவ்வாறான கபட நோக்கத்துடனேயே 1981 ஆம் ஆண்டு தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான , தெற்காசியா…

  22. புதிய திசைகள் ஒழுங்கு செய்யும் பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும் வரும் ஞாயிறு 26/10/14 அன்று பிற்பகல் 3 - 9 மணி வரை நடைபெறுகிறது. இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்பேசும் பிரிவினரை ஒரு களத்தில் நிறுத்துவதும் ஒரு உரையாடலினூடாக பிரச்சனைகளை நோக்கியும் தீர்வு திட்டங்களை நோக்கியும் சொந்த முடிவுகளையும் தீர்வுதிட்டங்களையும் உருவாக்குவதை நோக்கமாக்கொண்டு இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்படுகிறது. "தமிழ் தலைமைகள் இன்று செய்ய வேண்டியது என்ன?" என்னும் தலைப்பில் அரசியல் அமைப்புகளை சேர்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் உரையாற்றுகிறார்கள். உரையாற்றுவோர்: காதர் - சமூக ஆர்வலர் அரவிந்தன் - தமிழர் விடுதலை கூட்டணி(பிரித்தானியா) நசீர் - சிறி லங்கா முஸ்லீம் புலம்பெயர்ந்தோர் முன்னெடுப்பு போஸ் - தமிழ்…

  23. டொலர்களைக் கொட்டி நன்மதிப்பைப் பெற முனைகிறது இலங்கை! – பிரித்தானிய நாளிதழ் விமர்சனம். [sunday 2014-10-26 08:00] இலங்கை அரசாங்கம் நாட்டின் நன்மதிப்பை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபென்டன்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணை குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் சர்வதேச அரங்கில் நாட்டின் நன்மதிப்பை மேம்படுத்தி தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் பெருமளவு பணத்தை செலவிட்டு வருகிறது. பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து நாடு தொடர்பில் நன்மதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது. அம…

  24. ஐ.நா விசாரணை படிவம் விநியோகித்தவர் கைது ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்டோபர் 2014 09:09 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு அனுப்புவதற்கான படிவத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிராஞ்சியை சேர்ந்த 58 வயதுடைய சின்னத்தம்பி கிருஸ்ணன் என்பவர் இராணுவ புலனாய்வாளர்களால் சனிக்கிழமை (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் கிளிநொச்சி இரணைமாதா நகரில், ஐ.நா. விசாரணை படிவங்களை விநியோகம் செய்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி இராணுவ புலனாய்வாளர்கள் அலுவலகத்தில் வைத்து மேற்படி நபரை விசாரணை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.