ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143553 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொடர்பு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அண்மையில் எதிர்க்கட்சித்தலைவர் லண்டனுக்கு விஜயம் செய்திருந்ததாகவும் இதன் போது தடை நீக்குவது குறித்து ஏதேனும் இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் சுதந்திரமாக செயற்பட முடியும் என்ற ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் அறிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் வியாக்கியம் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஐ…
-
- 2 replies
- 538 views
-
-
2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமையைப் போன்று மீண்டும் வடக்கில் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதற்காகவே வெளிநாட்டவர்கள் வடக்கு பிரதேசத்திற்குச் செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் வடக்கு மக்களின் வாக்குகளைக் கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் தற்போதிருந்தே தயாராகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சில் அனுமதிபெற வேண்டும் என்று அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டிற்கு அமைய, எதிர்வரும் தேசியத் தேர்தலின் போது அரசாங்கத்திற்கு சார்பாக செயல்படும் வெளிநாட்டவர்களை மாத்திர…
-
- 0 replies
- 282 views
-
-
"டக்ளஸ் தேவானந்தா கெட்டிக்காரர் என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன்" சி.வி. விக்கினேஸ்வரன்:- "தென்னிந்தியாவில் விடுக்கப்பட்ட பகிரங்க பிடிவிராந்தில் இருந்து இது வரையில் அவர் தப்பி வந்துள்ளார்" அமைச்சர் ஒருவர் கருடா சௌக்கியமா என்று கேட்கத் தலைப்பட்டுள்ளார். தான் யார்? எங்கு இருக்க வேண்டியவர் என்பதை மறந்து பேசியுள்ளார். மு.விக்னேஸ்வரனை ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று நான் கூறவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றே கூற வந்தேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா கிளிநொச்சியில் கிண்டல் அடித்துள்ளார். நண்பர் டக்ளஸ் அவர்கள் கெட்டிக்காரர் என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். தென் இந்தியாவி…
-
- 0 replies
- 487 views
-
-
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளினால் அதிருப்தியடைந்துள்ளதால்,அரசாங்கத்தில் உள்ள ஏராளமான அமைச்சர்களும், எம்.பி.க்களும், கட்சி தாவத் தயாராக உள்ளதாக ஆளும் கட்சித் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 30 பேர் வரை ஐ.தே.க. வுடன் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கட்சி தாவத் தயாராக இருப்பவர்களில் இரண்டு பேர் மட்டுமே ஐ.தே.க. விலிருந்து வந்தவர்களாகும், ஏனையவர்கள் பரம்பரை பரம்பரையாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மாகாண சபை உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் தென் மாகாண சபையில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் ஐ.தே.க. வுடன் இணைந்…
-
- 0 replies
- 480 views
-
-
இலங்கைத் தமிழர்கள் மூன்று பேர் ஆயுதங்களுடன் தமிழகம் இராமநாதம்புரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியூ பிரிவு காவற்துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் கேரளாவில் உதவி திரைப்பட இயக்குனராக பணியாற்றும் எஸ்.விஜயகுமார் என்பவரும் மேலும் ஒரு இந்தியரும் கைதானதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இயக்குனருக்கு எதிராக காசோலை மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் ஆட்கடத்தல், வீடுடைப்பு கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக கியூப். பிரிவு காவற்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். - See more at: http://onlineuthayan.co…
-
- 1 reply
- 435 views
-
-
வட பகுதிக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கை வரலாற்றிலேயே அதிகூடுதலான முதலீடான 300 முதல் 350 பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டம் இதுவாகும். வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்டம் 4 வருடங்களில் நிறைவு செய்யப்பட இருப்பதாகவும் இதனூடாக கண்டிக்கும், தம்புள்ளைக்கும் ஒரு மணித்தியாலம் 15 நிமிடத்தில் பயணிக்க முடியும் என பெருந்தெருக்கள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார். வடக்கு அதிவேகப்பாதை திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு பெருந்தெருக்கள் அமைச்சில் நடைபெற்றது. இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், பல வருட த…
-
- 0 replies
- 589 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியமை, ஈழ மக்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சட்ட ஆலோசகர் லதன் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இன்று தமிழர் வரலாற்றில் முக்கியமானதொரு நாள். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கு பெரியதொரு அங்கீகாரத்தினை இந்த தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பினை அடுத்து, தற்போது ஜனநாயக ரீதியாக உருவாகியுள்ள அமைப்புக்களினூடாக அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை மிகத் தெளிவாக முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=118821&…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் மௌனம் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு வழி வகுக்கும் என்று ஒன் இந்தியா என்ற இந்திய இணையத்தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தொடர் மௌனம் நீடித்து வந்தால் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக மீண்டும் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கை அரசுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியது. இதனால் உலகத் தமிழர்கள் காங்கிரஸ் கட்சியை வெறுப்புடன்தான் பார்த்து வருகின்றனர். அதே காலகட்டத்தில் கூட பாஜக மத்தியில் ஆ…
-
- 3 replies
- 641 views
-
-
யாழ் இந்து முக புத்தகதில் இருந்து சில படங்கள் .
-
- 19 replies
- 1.7k views
-
-
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு தமிழ் கட்சி ஆதரவு கொழும்பு, அக். 16- இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு தமிழ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்று காலை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார். அப்போது ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்ததாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடனும் இதற்கு முன் கூட்டணியில் இருந்துள்ளது. இந்த கட்சி இப்போது ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி …
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா படைகளின் எறிகணை வீச்சில் காயமடைந்த சிறுமியின் கருத்து https://www.facebook.com/video/video.php?v=720438168026762 https://www.facebook.com/video.php?v=720438168026762
-
- 0 replies
- 404 views
-
-
ஈழத் தமிழர்களின் கலை வடிவங்கள் காப்பாற்றப்பட வேண்டும்- குருகுலராஜா ஈழத்து தமிழர்களின் கலை வடிவங்கள் கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கோரிக்கை விடுத்தார். வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். யுத்ததின் காரணமாக ஈழத்தமிழர்களுடைய கலை,பண்பாட்டு அம்சங்கள் அழிவடைந்து வருகிறது .இதனை கட்டிக் காப்பாற்ற எமது இளம் சமுதாயம் தயாராக இல்லை. எனவே எங்களுடைய கலை பண்பாட்டு அம்சங்கள் எமது எதிர்காலத்திற்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் இல்லை என்றால் எங்களுடைய கலை,பண்பாட்டு அம்சங்கள் விரைவாக அழிந்து விடும். இதனை கட்டிக்…
-
- 0 replies
- 455 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளதுடன் அந்த தீர்ப்பு தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஆழமாக ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்குறைஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கி…
-
- 2 replies
- 1.1k views
-
-
கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து பிழையானது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் வெளியிட்ட கருத்தை நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டதாக தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து அப்பிரதேச மக்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய பின்னணியை உருவாக்கிக் கொடுப்பதாக வாக்குறுதியளித்து தாம் உடன்படிக்கையில் கையொப்பமிட்டதாகவும், அந்த ஆவணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்…
-
- 1 reply
- 552 views
-
-
யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் படையினர் தங்கள் மலக்கழிவுகளை நீர்வேலித் தரவை வெளியில் கொட்டிவருவதால் சுற்றச்சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று புதன்கிழமை தொண்டைமானாறில் வடமாகாண நீரியல் ஆய்வு மையத்தின் திறப்புவிழாவில் உரையாற்றும்போதே இவ்வாறு குற்றம் சாடியுள்ளார். அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது- யாழ்.குடாநாட்டில் நிலத்தடி நீரின் தரம் விவசாய இரசாயனங்களாலும், மலக்கிருமிகளாலும் மாசடைந்துவருகின்றமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அண்மையில் நீர்வழங்கல் வடிகால் சபையினரும் யாழ் மாநகரசபைக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் குடிநீரில் மலக்கிரு…
-
- 1 reply
- 472 views
-
-
இந்தியாவும் விடுதலைப் புலிகள் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, இன்று லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயோர்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, “பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்” என்ற பெயரில், பல அமைப்புகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்டது. இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட, இலங்கை – இந்தியா போ…
-
- 2 replies
- 371 views
-
-
எனக்கு வாழ்வாதார உதவிகள் தந்துவிட்டால் மட்டும் எனது கஷ்ரங்கள் தீர்ந்து போகாது எனது கணவர் இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். நீங்கள் எனது அப்பா ஸ்தானத்தில் இருப்பதால் எனது கணவரை மீட்டுத்தாருங்கள் என கணவனை காணாது மிகவும் சிரமத்தில் வாழும் பெண் ஒருவர் முதலமைச்சரிடம் கண்ணீர் விட்டு கதறியழுத சம்பவம் நேற்று தொண்டமனாற்றில் இடம்பெற்றது. பெண் தலைமைத்துவ குடும்பங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 100 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உதவித் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் மேற்கண்டவாறு கண்ணீர் மல்க …
-
- 0 replies
- 216 views
-
-
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரலாற்றில் அதிகூடிய முதலீடான 300 முதல் 350 பில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்டம் 4 வருடங்களில் நிறைவு செய்யப்பட இருப்பதாக நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார். இதனூடாக கண்டிக்கும், தம்புள்ளைக்கும் 1 1/4 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் அடுத்து யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் நெடுஞ்சாலையை விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும். பல வருட திட்டத்தின் பின்னர் வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பணி ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் கொழும்பு - கண…
-
- 0 replies
- 276 views
-
-
ஜனாதிபதி சித்த சுயாதீனமில்லாமல் போனாலும் பதவியிலிருந்து நீக்க முடியாது என சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சித்த சுயாதீனமற்றுப்போனாலும் அவரை பதவியிலிருந்து நீக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசியல் சாசனத்தைப் போன்று உலகில் வேறு எங்கும் தாம் பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் சாசனத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு அதீதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாகத் வாக்குறுதி அளித்த போதிலும் அதனை அவர் நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார். நிறைவேற்று …
-
- 0 replies
- 185 views
-
-
ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேக்காவிற்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிற்கு அறிவித்துள்ளார். இந்த அறிவித்தலை தேர்தல் ஆணையாளர், ஜனநாயகக் கட்சியின் செயலாளர் சுனில் மானவடுவிற்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரத் பொன்சேக்காவிற்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக்கொடி வழக்கு மற்றும் இராணுவ நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றினால் தேர்தலில் போட்டியிட முடியாத சட்டசிக்கல் ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சரத் பொன்சேக்கா நாளை (17) விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளார். வெள்ளைக்கொடி வழக்கு தீர்ப்பில் மூன்று வருட சிறைத் தண்டனையும்…
-
- 0 replies
- 236 views
-
-
தற்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் செனுகா செனவிரட்ன ஜெனீவாவின் நிரந்தர பிரதிநிதியாக கடமையாற்றிய காலத்தில், புலிகளுக்குச் சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்பு பேணப்பட்டமை குறித்து முன்னாள் இராஜதந்திரியான தமரா குணநாயகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சியொன்றின் நேர்காணலிலேயே அவர் இந்தத் தகவல்க வெளியிட்டுள்ளார். ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் புலிகளுக்கு சொந்தமான நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்பட்டது என்றும் இது தொடர்பிலான ஆவணங்கள் உண்டு எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நேர்காணலில் கருத்துரைத்த தமரா குணநாயகம், ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கான நிர்மாணப் ப…
-
- 1 reply
- 436 views
-
-
ஜனாதிபதி தன் வசம் அதிகாரம் அனைத்தும் இருக்கின்றது என்ற மமதையில் வாயில் வந்ததை எல்லாம் பேசக்கூடாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினர். வடமாகாண நீரியல் ஆய்வு மையத் திறப்பு விழா, தொண்டமனாறு நீர்ப்பாசன திணக்கள வளாகத்தில் புதன்கிழமை (15) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், சில தினங்களுக்கு முன்னர் வட மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிளிநொச்சியில் வைத்து, வைக்கோல் பட்டறை நாய் போல வட மாகாணசபை செயற்படுகின்றது என்று கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'எம்மை பல விதங்களில் அரசாங்கம் குறை கூறி வருகின்றது. தாம் செய்ய…
-
- 2 replies
- 635 views
-
-
ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஒரு தொகுதியினரும் தமிழீழ கோரிக்கையை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். 'ஈழக் கோரிக்கையை குறித்த தரப்பினர் கைவிட்டால் நானும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தத் தயார்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தனி நாடு ஒன்றை அமைப…
-
- 13 replies
- 1.5k views
-
-
பொது மக்களின் பொக்கிஷங்களை அரச தலைவர் சூறையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தங்கங்களை கொள்ளையடித்த, சொந்த நோக்கில் செலவு செய்த குற்றச் சாட்டினை ஜனாதிபதிக்கு முன் வைக்கின்றோம் என தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் அமைப்பில் தனக்கிருக்கும் அதிகாரத்தினை தவிர்த்து விட்டு இந்த குற்றச்சாட்டிற்கு ஜனாதிபதி முகம் கொடுக்க வேண்டும் எனவும் சவால் விடுத்துள்ளது. அதிகாரத்தினை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனே இக்குற்றச்சாட்டினை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும்…
-
- 0 replies
- 550 views
-
-
மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பறங்கியாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு உடனடியாக தனக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் என மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தயனந்தன் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிப்பதற்கு கடந்த திங்கட்கிழமை வடமாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினையும் தலைமை தாங்கி நடத்தினார். இதன்போது வடமாகாணத்தில் உள்ள யாழ்., கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் மு…
-
- 0 replies
- 313 views
-