Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெலிஓயாவுக்கு எந்த ஒதுக்கீடுகளையும் வழக்கக் கூடாது! - வடக்கு மாகாணசபையில் நிறைவேறியது தீர்மானம். [Friday 2014-09-26 07:00] முல்லைத்தீவு மாவட்டத்துடன் சட்டத்துக்கு முரணாக இணைக்கப்பட்டிருக்கும் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவிற்கு வடமாகாண சபையிலிருந்து நிதி உள்ளிட்ட எந்தவொரு ஒதுக்கீடுகளையும் வழங்கக் கூடாதென வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் முன்மொழிந்த பிரேரணை தொடர்பாக சபையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குறித்த பிரேரணையை முன்மொழிந்து பிரதி அவைத்தலைவர் உரையாற்றுகையில் கூறியதாவது. மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலர் பிரிவுகளுக்கு மேலதிகமாக 6 ஆவது பிரதேச செயலர் பிரிவாக முல்லைத்தீவ…

  2. 13வது திருத்தம், அரசியல்தீர்வு, விசாரணையில் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தியது இந்தியா! [Friday 2014-09-26 07:00] இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்த தகவல்களை பகிரங்கப்படுத்துமாறு இந்தியா கோரியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று இலங்கை தொடர்பான அறிக்கை மீது உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி, குறித்த நாடு ஒத்துழைக்க மறுத்துள்ள நிலையில் இந்த விசாரணையை எப்படி மேலெடுத்துச் செல்வது என்பது குறித்து மனித உரிமை ஆணையர் ஏதும் சொல்லவில்லை என்பதை நாங்கள் கரிசனையுடன் குறித்துக் கொள்கிறோம். யார் இந்த விசாரணைக் குழுவில் இருப்பார்கள், இது எப்படி வேலை செய்யும், இதற்கான நிதி ஆதாரங்களை எப்படி வரப்போகிறது என்பது போன்ற தகவல்களும் மனித உரிமை கவுன்சில் உறுப்ப…

  3. ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு ஆதரவு! ஐரோ. ஒன்றியம் அறிவிப்பு! [Thursday 2014-09-25 23:00] இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு பெரும்பான்மையான நாடுகள் ஆதரவளித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளுக்கு பெரும்பகுதியான நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன. இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பூரணமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித…

  4. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கையை நிராகரித்து இலங்கை! [Thursday 2014-09-25 23:00] இலங்கை மனித உரிமைகள் நிலை குறித்து ஐ நா மனித உரிமை ஆணையரால் அளிக்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இலங்கை நிலவரம் தொடர்பிலான வாய்மொழி அறிக்கை ஒன்றை ஐ நா மனித உரிமைகள் ஆணையர், இளவரசர் செயித் ரா’அத் செயித் அல் ஹூசேன் சமர்பித்த அறிக்கை குறித்த விவாதம் இன்று ஜெனிவாவில் நடைபெற்றது. இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் மீது அரசாங்க அமைப்புக்களாலும், அரசு சாரா அமைப்புக்களாலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் கண்டு தாம் அதிர்ச்சியடைந்துள்ள…

  5. விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கவலை! [Thursday 2014-09-25 23:00] ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பாக நடத்தும் விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்காதமை குறித்து பேரவை சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இலங்கை விசாரணை தொடர்பாக கவுன்ஸிலின் இன்றைய அமர்வில் ஆணையாளர் சார்பில், பிரதி ஆணையாளர் பிலேவியா பன்சியர் சமர்ப்பிக்கப்பட்ட வாய்மூல அறிக்கையிலேயே இந்தக் கவலை வெளியிடப்பட்டது. ஐ.நா.வின் புதிய மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்தித்தார் எனவும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் ஐ.நா. அலுவலகத்துக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார் எ…

  6. இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! – ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பிளவு. [Thursday 2014-09-25 18:00] இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஐ.நா விசாரணைகளை, ஐ.நா மனித உரிமை பேரவையில் சில நாடுகள் ஆதரித்துடன் சில நாடுகள் எதிர்த்துள்ளன. இதனால், ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளுக்கு தமது ஆதரவை நீடிப்பதாகவும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. இலங்கைக்கு எதிராக ஐ.நா விசாரணைகளை பிரித்தானியா, மொண்டிநீக்ரோ உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம், நீடித்த மோதல்களினால்…

  7. பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை பதிவு செய்யாதவிடத்து , அவ்விசாரணை முழுமையானதாகவோ தீர்க்கமானதாகவோ அமையாது : ஐ.நா கூட்டத்தொடரில் கஜேந்திரகுமார் [Thursday 2014-09-25 22:00] ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியொர் கலந்து கொண்டிருந்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம் கீழ்வருமாறு.. மனித உரிமைகள் பேரவை 27வது அமர்வு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பாக:- மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் சிறிலங்கா தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை எமது அ…

  8. காணியை தருவதாக மாவை சேனாதிராஜா சொன்னதாக சொல்லும் கருத்தானது பொய்யான தொன்றாகும்: பிரதேச சபை உறுப்பினர் மறுப்பு [Thursday 2014-09-25 18:00] காரைதீவு பிரதேச சபைக்கு சொந்தமான விபுலாநந்த சதுக்கத்திற்கு அருகாமையில் உள்ள காணியை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா முன்னைய கூட்டத்தில் தங்களுக்கு தருவதாக கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.கரிஸ் கூறியது முற்றிலும் பொய்யான தொன்றாகும் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் சு.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர்விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்..! காரைதீவு பிரதேச சபைக்கு சொந்தமான காணி (விபுலாநந்த சதுக்கத்திற்கு அருகாமையில் உள்ள) தொடர்பாக கல்முனை மாநகர சபையில் நடைபெற்ற கூ…

  9. ஆளும்கட்சியில் பசிலின் அதிகாரங்கள் பறிப்பு! சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக, அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு இதுவரை இருந்த தனிஅதிகாரம் பறிக்கப்பட்டு, அதற்கென குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச நாட்டில் இல்லாத சமயம் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஆளுங்கட்சியின் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வியூகங்கள் என்பன அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொறுப்பிலேயே இருந்து வந்தது. வேட்பாளர்களை தெரிவு செய்யும் விடயத்திலும் அவர்தான் அதிகாரம் செலுத்தினார். இடைக்கிடையில் இந்த விவகாரங்களில் நாமல் ராஜபக்ஷவின் தலையீடு இருந்த போதிலும், ஏனைய அமைச்சர்க…

  10. ஐநாவின் பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அங்கு ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உள்ள சிலரது தீய நோக்கத்துடனான திட்டங்களால் துரதிர்ஸ்ட வசமாக பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இலங்கை இருக்கிறது என்று அவர் அங்கு கூறியுள்ளார். ஒரு 5 வருடகாலத்துக்குள்ளேயேபுனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம்ஆகியவற்றில்இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அத்தகையவர்கள் கவனத்தில் கொள்ளாது தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் என்றும் தனது நாடு இன்று இலக்கு வைக்கப்படும் முறையில் ஒரு நடுநிலை இல்லாமையும் பாரபட்சமும் காணப்படுகின்றது என்றும் அவர் அங்கு தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஏனைய இடங்களில் மனித நே…

    • 2 replies
    • 750 views
  11. -யோ.வித்தியா, பொ.சோபிகா புலி பதுங்குவது பாய்வதற்காகவே. தற்பொழுது வடமாகாண சபை பதுங்கிய நிலையில் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் வியாழக்கிழமை (25) இடம்பெற்று வருகின்றது. இதன்போது, முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் தொடர்பில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அது தொடர்பில் இனி சபை அமர்வுகளில் கதைப்பதில்லையென கூறினார். இதன்போது குறுக்கிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், அனைத்து விடயங்களுக்கும் ஆளுநருக்கு பயந்து விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறினார். சிவாஜிலிங்கத்தின் கருத்திற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்…

  12. நியூயோர்க்கில் மகிந்தவின் உரைக்கு எதிராகத் திரண்ட வடஅமெரிக்கத் தமிழர்கள்! [Thursday 2014-09-25 08:00] ஐ.நா பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச உரையாற்றுவதற்கு சிலமணி நேரம் முன்னதாக, வட அமெரிக்கத் தமிழர்கள் ஐ.நா முன் அணிதிரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். மகிந்த ராஜபக்சவின் ஐ.நா உரைக்கு எதிர்ப்பும் தெரிவித்தும், தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரியும் இந்தப் பொங்குதமிழ் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. கனடாவில் இருந்து பேருந்துகள் மூலமும், அமெரிக்காவின் பிற மாநிலங்களிலும் இருந்தும் திரண்டு வந்த பெருமளவானோர் இதில் பங்கேற்றனர். …

  13. புதிதாக நியமிக்கப்பட்ட வெளிவாரி பேரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் EPDPயின் செயற்பாட்டாளர்களும் ஆதரவாளர்களும்:- யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கவுன்ஸிலுக்கு அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க மாணவ சமூகம் உள்ளிட்ட பல தரப்புக்களும் கோரி வருகின்ற போதும் இம்முறையும் ஈபிடிபியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் அப்பட்டியல் நிரம்பியுள்ளது. புதிதாக நியமனம் பெறும் 14 பேரின் பெயர் விவரங்கள் வெளியாகியுள்ளன. புதிதாக நியமிக்கப்படுவோர் தேவராஜன் றங்கன், பொன்னையா தியாகராஜா, மார்க்கண்டு இராமதாஸன், முருகுப்பிள்ளை சிறீபதி, இளையதம்பி அன்னலிங்கம், தர்மலிங்கம் இராஜரத்தினம், காசிப்பிள்ளை தெய்வேந்திரன், சுசீலாதேவி சாரங்கபாணி, பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை முத்துக்குமாரு பாலசுப்பி…

  14. அவுஸ்திரேலிய அரசாங்கம் கம்போடியாவுடன் மேற்கொள்ள உள்ள உடன்படிக்கையானது வெட்கப்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவில் தங்க வைப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் புதிய உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட உள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கம்போடியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். கம்போடியாவில் புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களை அமைத்து, அதில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக கம்போடியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகள் …

  15. முல்லைத்தீவு மாவட்டத்துடன் சட்டத்திற்கு மாறாக இணைக்கப்பட்டிருக்கும் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவிற்கு வடமாகாண சபையிலிருந்து நிதி உள்ளிட்ட எந்தவொரு ஒதுக்கீடுகளையும் வழங்ககூடாதென வலியுறுத்தும் வகையில் மாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் முன்மொழிந்த பிரேரணை சபையில் கடுமையான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணையை முன்மொழிந்து பிரதி அவைத்தலைவர் இன்று உரையாற்றுகையில் கூறியவை வருமாறு:- மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலர் பிரிவுகளுக்கு மேலதிகமாக 6 ஆவது பிரதேச செயலர் பிரிவாக முல்லைத்தீவு மாவட்டத்துடன் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு சட்டத்திற்கு மாறாக இணைக்கப்பட்டுள்ளது. அதாவது எல்லை நிர்ணயம் செய்யப்படாமல், வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படாமல், …

  16. மனித உரிமை ஆணையர் வாய்மொழி அறிக்கையை இலங்கை நிராகரித்தது ( ஆவணப்படத்தில் ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசிங்க) இலங்கை மனித உரிமைகள் நிலை குறித்து ஐ நா மனித உரிமை ஆணையரால் அளிக்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. பிரான்ஸ் உள்ளிட்ட ஒரு சில நாடுகளே மனித உரிமை ஆணையரின் அறிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன. சீனாவும், ரஷ்யாவும் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளன. அரசியல் தீர்வு குறித்து இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை நிலவரம் தொடர்பிலான வாய்மொழி அறிக்கை ஒன்றை ஐ நா மனித உரிமைகள் ஆணையர், இளவரசர் செயித் ரா’அத் செயித் அல் ஹூசேன் சமர்பித்த அறிக்கை குறித்த விவாதம் இன்று ஜெனிவாவில் நடைபெற்றது. இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்…

  17. வட இலங்கையில் தென்னை உற்பத்தியை ஊக்குவித்து, தென்னை பொருள் தொடர்புடைய தொழில்துறையை வளர்ச்சியடையச் செய்வதற்கென சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளதாக தென்னை அபிவிருத்தி அமைச்சு அறிவித்திருக்கின்றது. வடமாகாணத்தில் 2020 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைத் தென்னை உற்பத்தித் தொழில் துறையின் மூலம் பெறத்தக்க வகையில் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அந்த அமைச்சு கூறியிருக்கின்றது. இது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட தென்னை அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார அவர்கள், கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் தென்னை உற்பத்தி சபைக்குச் சொந்தமாக உள்ள 600 ஏக்கர் காணியில் இந்த விசேட திட்டத…

  18. சிறிலங்காவில் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய இந்தியாவின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ம் திருத்தச்சட்ட முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. இதில் மாற்றம் இல்லை. இதேநேரம் ஈழத் தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய நிரந்த அரசியல் தீர்வு ஒன்றும்வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/34109/57/13/d,article_full.aspx

    • 2 replies
    • 520 views
  19. ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியொர் கலந்து கொண்டிருந்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை வருமாறு: மனித உரிமைகள் பேரவை 27வது அமர்வு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பாக:- மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் சிறிலங்கா தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை எமது அமைப்பு வரவேற்கிறது. மனித உரிமை ஆணையகத்தின் 25/1 (A/HRC/25/1) தீர்மானம் சம்பந்தமான் விரிவான பொருட்கோடலை /விளக்கத்தைக் கொடுத்தமையையும் நாம் வரவேற்கிறோம். குறிப்பாக ,மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவானது பாதிக்கப்பட்டவர்கள…

  20. முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா. ரமேஷ் கண்ணா தெரிவித்தார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வலை வீசிய போது, மிகவும் அரிதான வகையிலான ஆனைத்திருக்கை அகப்பட்டுள்ளது. மீனவர்கள் தமது படகை பருத்தித்துறை இறங்குதுறையில் நிறுத்தி ஆனைத்திருக்கையை துண்டுகளாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அரிதான வகை திருக்கை மீனான ஆனைத் திருக்கை கடலின் ஆழப்பகுதியில் இருப்பதாகவும், முதன்முதலாக இவ்வாறு மீனவரின் வலையில் அகப்பட்டுள்ளதென்றும் அம்மீனை சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்கமுடியுமென்றும் யாழ். மா…

  21. கொழும்பு-03, கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டு பெண்கள் அறுவரையும் நாடுகடத்துமாறு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியில் வைத்தே தாய்லாந்து பெண்கள் அறுவரும் இலங்கைப்பெண்கள் இருவரும் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இந்த எட்டுபெண்களையும் தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட கோட்டை பிரதான நீதவான் திலின கமகே, விஸா இல்லாமல் நாட்டில் தங்கியிருக்கும் தாய்லாந்து பெண்கள் அறுவரையும் நாடு கடத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, ஹோட்டலை நடத்திச்சென்றதாக கூறப்படும் ருகுண என்பவரை கைது செய்…

  22. பிரான்ஸில் இருந்து வரும் ஈழமுரசு நிறுத்தப்படுகின்றது மிரட்டல் காரணமாக தாம் வெளியிடும் ஈழமுரசு என்னும் பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகையை நிறுத்தப்போவதாக அதனை வெளியிடும், ஊடக இல்லம் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கரங்கள் என்று தாம் சந்தேகிக்கும் வகையில் நேரடியான கொலை மிரட்டலும், மின்னஞ்சல் மூலமான மிரட்டலும் விடுக்கப்பட்டதாக அந்த ஊடக இல்லத்தின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கோபிராஜ் என்பவர் தொலைபேசி மூலம் பிபிசியிடம் தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் கருத்தினை பெற மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாகப் பலனளிக்கவில்லை. பிரான்ஸில் காணப்படுகின்ற சில குழுக்களுக்கிடையிலான முரண்பாடு காரணமான மிரட்டலே இந்த பத்திரிகை மூட…

  23. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணை டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜி.பி. மிட்டல் தலைமையில் அமைந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயத்தின் விசாரணை நாளை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 27-ஆம் தேதி சனிக்கிழமை ஆகிய நாட்களில் காலை 10.30 மணி சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி. நகர், தாண்டவராயன் தெரு, எண். 3-இல் உள்ள ‘இமேஜ்’ அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த விசாரணையில் மதிமுக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொள்கிறார். தாயகம் தலைமைக் கழகம் சென்னை - 8 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். 25.09.2014 http://www.pathivu.com/news/34110/57/26-27/d,article_full.aspx

  24. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை ஜெனீவா பயணமாகினர். ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கலந்து கொள்ளும் சர்வதேச நாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக எடுத்து கூறும் நோக்கிலேயே இவர்கள் ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது. http://malarum.com/article/tam/2014/09/21/5611/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E…

    • 12 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.