Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊவா மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கோ, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கட்சிக்கோ வாக்களிப்பதென்பது அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு சமனாகும் என்றும், அவ்வாறு செய்தால் அது மற்றுமொரு பள்ளிவாசலைத் தாக்குவதற்கு ஆதரவளிப்பதற்கு சமனானது என்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ குடும்ப ஆட்சி மாற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த முடிவை ஊவா மாகாண சபை மக்கள் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன். தம்புள்ளை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவரின் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாகவும் அவை காவல்துறை மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இந்தச…

    • 0 replies
    • 306 views
  2. இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழி பயன்பாட்டை இந்தியாவில் பரப்பும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி கடைபிடிக்கப்படும் ஹிந்தி திவாஸ் என்கிற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/news/33868/57//d,article_full.aspx

  3. மணலாறில் தமிழர்களின் காணிகளைப் பிடுங்கி சிங்களவர்களுக்கு கொடுக்கும் அரசாங்கம்! - ரவிகரன் குற்றச்சாட்டு. [Tuesday 2014-09-16 17:00] மணலாறு பகுதியில், தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்படுவதாக வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மணலாறு பகுதியில் ஏற்கனவே குளங்களோடு உள்ள தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் வர்த்தக நோக்கத்துடன் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்னை, மாமர செய்கைக்கென 33 சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் மொத்தமாக 325 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு வேலிகள் இடப்பட்டுள்ளன. இதற…

  4. மிதிவெடி பூமி: பளையில் எஜமானைக் காப்பாற்றிய நாய் 11 செப்டம்பர் 2014 மிதிவெடியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தனது எஜமானின் உயிரை சமயோசிதமாகச் செயற்பட்டுக் காப்பாற்றியுள்ளது ஒரு நாய். உடனே எங்கோ வெளிநாட்டில் நடந்த சம்பவம் என்று எண்ணிவிடாதீகள். இந்தச் சம்பவம் பளை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மிதிவெடியில் இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய சு.செல்வராஜா தனது வளர்ப்பு நாயுடன் கடந்த திங்கட்கிழமை மதியம் முயல் வேட்டைக்குக் கிளம்பியுள்ளார். முன்னால் சென்ற அவரது நாய் முயல் ஒன்றைக் கண்டுவிட்டு, அதனைத் துரத்தத் தொடங்கியது. செல்வராஜாவும் நாயின் பின்னால் ஓடியுள்ளார். முயலைத் துரத்திக் கொண்டு செல்வராஜாவும் அவரது நாயும் வள்ளிமனை தோட்டப் பகுதிக்கு …

  5. வடமாகாண காணி அபிவிருத்தி அமைச்சினால் வடமாகாணத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 13 காணி அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண பிரதம செயலாளர் விஐயலட்சுமி ரமேஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் மேஐர் nஐன்ரல் ஐP.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு 13 காணி அபிவிருத்தி வெளிகள உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தார். வடமாகாணத்தில் போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட்டு சித்தி பெற்ற 13 பேர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் செ.திருவாகரன் மற்றும் ஆ…

  6. நேற்று உலக ஜனநாயக தினம்.. இலங்கையில அந்த தினத்தக் கூட கொண்டாட ஜனநாயகம் இல்லை எண்டுறதயும் இலங்கைத் தீவில ஜனநாயகத்த திண்ணுறது ஆர் எண்டுறதயும் சம்பந்தப்பட்ட ஆக்கள் காட்டிச்சினம். பேய் ஆண்டால் சாஸ்திரங்கள் பிணம் தின்னும் எண்டுற நாட்டில ஜனநாயகம் மருந்துக்கும் இல்லைக் கண்டியளோ? நேற்று செப்டம்பர் 15... உந்த ஜனநாயக தினம் ஒன்றிலதான் பாருங்கோ திலீபன் உண்ணா விரதம் இருந்தவர். விடுதலைப் புலிகளில விமர்சனம் இருக்கிறவையள்கூட புலிகளின்ட தியாகத்த மதிக்கிறினம்... ஓ.. திலீபன்ட உண்ணாவிரதப் போராட்டம் ஒரு அகிம்சைப் போராட்ட வடிவம். அது ஒரு ஜனநாயக முறை. அதுக்கு சிங்கள அரசும் இந்திய அரசும் என்ன செய்ததது? எங்கட வராற்றில ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லை எண்டுறதுக்கு உத மாதிரி ஆயிரம…

  7. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் முள்வேலிகள் அமைக்கப்பட்டு நில அபகரிப்பு! முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து கோட்டைக் கேணியூடாக மணலாறு மண்கிண்டி மலைக்குச் செல்லும் பாதைக்கு குறுக்காக முள்வேலிகள் அமைக்கப்பட்டு நில அபகரிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த நில அபகரிப்பானது, மத்திய அமைச்சர் ஒருவரின் உறவினர்களுக்கானது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று உறுதிப்படுத்தினார். இது பற்றி அவர் தெரிவிக்கையில், மணலாறு பகுதியில், ஏற்கனவே குளங்களோடு உள்ள தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மகாவலி வலயம் என்கிற போர்வையில் வர்த்தக நோக்கத்த…

  8. வடமாகாண மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று இந்திய துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி கூறிய கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி அங்குள்ள தமிழ் மக்களிடம், இந்தியாவில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள், ஹிந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக்கொண்டுள்ளனர். நீங்களும், சிங்கள மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, 'மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்சினை. அதில் தூதரக அதிகாரிகளின் தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும…

  9. சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய உளவாளி ஒர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என கொழும்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அண்மையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவின் சார்பில் உளவுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்திய தேசிய விசாரணை முகவர் நிறுவன அதிகாரிகள் குறித்த இலங்கையரை கைது செய்திருந்தனர். அருண் செல்வராஜன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். இவர் குறித்த விசாரணைகளை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனங்கள் தீவிரமாக முன்னெடுத்துள்ளன. எனினும் இது வரை அருண் செல்வராஜனின் பூர்வீகம் குறித்தோ அல்லது அவரது முழுமையான பின்னணி குறித்தோ இந்திய தமிழக அரசாங்கங்கள் மற்றும் புலனாய்வு மையங்க…

  10. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் மனித வாழ்வியலை பல்வேறு வழிகளிலும் மாற்றங்களுக்கு உட்படுத்தியுள்ளது என்பது ஜதார்த்தமே. இவ்வாறான நிலைகள் மக்கள் தங்களது கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த பல பிரதேசங்களிலும் வாழ நிர்ப்பந்தித்திருந்தது. இவற்றினால் இன்று பல கிராமங்களும் மக்கள் நடமாட்டமின்றி அழிவடைந்து செல்லும் கிராமங்களாக மாறி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகவேயுள்ளது. வவுனியா அல்நாட்டியகுளம் கிராமமும் இதற்கு விதிவிலக்கல்ல. வட மாகாணத்தின் தமிழ் மக்கள் வாழ்ந்த எல்லைக்கிராமமாகவும் வவுனியா மாவட்டத்தின் எல்லைக்கிராமமாகவும் உள்ள கல்நாட்டியகுளம் கிராமத்தில் 1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் 75 குடும்பங்கள் செல்வ செழிப்போடு வறுமையும் இடப்பெயர்வும் எதுவென்று தெரியாத வகையில் வாழ…

  11. இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகவே உள்ளது. காரணம் அங்கு புதிதாக அனுமதி பெறும் மாணவர்களை சிரேஷ்ட வகுப்பு மாணவர்கள் பகிடிவதை எனும் பெயரில் மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக அனுமதி பெற்ற சில மாணவர்கள் மனவேதனையுடன் தெரிவிக்கின்றார்கள். அந்தவகையில் இன்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் நிலைபற்றி பெற்றோர் மிகவும் கவலையடைந்துள்ளனர். இப்பகிடிவதையால் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இதனால் பெற்றோர்களிடையே தமது பிள்ளைகளின் கல்வியை விட உயிர்தான் மேல் என்ற நிலையில் உயர்கல்வியை வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அந்தவகையில் த…

  12. வேத மந்திரங்களின்றி, திருக்குறள் ஒலிக்க கிளிநொச்சியில் நடந்த புதுமைத் திருமணம்! [Monday 2014-09-15 18:00] வேத மந்திரங்கள் எதுவும் ஓதப்படாமல், அதற்குப் பதிலாக திருக்குறள் ஒலிக்க கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் இன்று திருமணம் ஒன்று இடம்பெற்றது. இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் வேதியர் இல்லை. சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் ஓதப்படவில்லை. இருப்பினும், திருக்குறள்கள் சொல்லப்பட்டன. சுப முகூர்த்தத்தில் மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டி திருமணம் முழுமை பெற்றது. கிளிநொச்சியில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் கனகேஸ்வரன் உதயபாபு என்ற மணமகனுக்கு ஆசிரியையான இறைபிள்ளை அபிராமி என்பவருக்குமே இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தை கிளிநொச்சி தமிழ் சங்க தலைவரும் மண…

  13. சீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்து 3 பில்லியன் டொலர் முதலீடுகளுடன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று வருகை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று (16) இலங்கை வருகிறார். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார். மூன்று பில்லியன் ரூபா முதலீடுகளுடன் இன்று இலங்கை வரும் சீனா ஜனாதிபதிக்கு இன்று கொழும்பில் கோலாகல வரவேற்பளிக்கப்படவுள்ளன. இதனையொட்டி கொழும்பு மா நகர் சீன, இலங்கை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் இரு நாட்டு ஜனாதிபதிகளின் பதாதைகள் தொங்…

  14. 13வது திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயம்! - இந்தியா வலியுறுத்தல். [Tuesday 2014-09-16 07:00] 13வது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்ற இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு பேச்சாளர் செய்ட் அக்பருதீன் புதுடில்லியில் நேற்று கருத்து வெளியிடுகையில், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை ஏற்கனவே உறுதியளித்தது. அது தொடர்பில் மீண்டும் உறுதிமொழியை வழங்கியுள்ளது. எனவே இலங்கை எந்த தீர்மானத்தை எடுத்தாலும் 13வது திருத்தம் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ் 13வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. …

  15. நோர்வே தூதுக்குழு யாழ். வருகை news இலங்கைக்கான நோர்வே தூதுவர் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். கிளிநொச்சிக்கு நேற்று திங்கட்கிழமை விஐயம் செய்த நோர்வே தூதுவர் யு.என்.டி.பி. நிறுவனத்தினால் நோர்வே அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டதுடன் அதன் முன்னேற்றங்கள் பற்றியும் கலந்துரையாடினார். பின்னர் முழங்காவில் பிரதேசத்தில் நோர்வே அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் பால் சேகரிப்பு நிலையம், கண்டாவளை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வெல்ல உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றையும் பார்வையிட்டதுடன் இன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனை சந்தித்துப் பேசிய பின்…

  16. இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்துமாறு கோரிய முதல் நாடு இஸ்ரேலாகும் - 16 செப்டம்பர் 2014 இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை நடத்துமாறு கொரிய முதல் நாடு இஸ்ரேலாகும் என தேசிய சூரா பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர் உதவிகளை வழங்கியமை பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடன் பேணப்பட்டு வரும் சகல ராஜதந்திர உறவுகளையும் துண்டிக்குமாறு தேசிய சூரா பேரவை வலியுறுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேசிய சூரா பேரவையின் பொதுச் சபைக் கூட்டத்தில், பலஸ்தீனத்திற்கு நிதி உதவி வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி பாராட்டுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேலிய…

  17. ஜனாதிபதி தனது சிம்மாசனத்தை விட்டு கீழ் இறங்க வேண்டிய காலம் வந்து விட்டது ஜனாதிபதி தனது சிம்மாசனத்தை விட்டு கீழ் இறங்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஜனாதிபதி தேர்தலை நடத்த முன்னரே தனது தோல்வியினை உணர்த்தும் தேர்தலாக ஊவா தேர்தல் அமையும் என எச்சரிக்கும் ஜே.வி.பி. இராணுவ மயப்படுத்தப்பட்ட தேர்தலில் மக்களின் பலத்தினை காட்ட வேண்டுமெனவும் தெரிவித்தது. மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று பத்திரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ஊவா மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலையினை கட்டுப்படுத்த முடியாத …

  18. ஈழத்தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தாலும் தமது உணர்வுகள் அனைத்தும் தாயகத்தை நோக்கியே துடிக்கின்றது என்பதற்கமைவாக 15.09.2014 திங்கட்கிழமை அன்று சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் ஐ.நா சபை முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வானது தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் நடாத்தப்பட்டது. ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியானது உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட உரிமைக்குரல்கள் மற்றும் அவர்கள் தாங்கிய பதாதைகள் மூலம் வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நகர்ந்து ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது. இவ் கவனயீர்ப்புப் பேரணியில் ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்து வருகை தந்த திரளான மக்…

  19. தமிழ் மக்களிற்கு சொந்தமான பூர்வீக நிலங்களான முல்லைத்தீவு கொக்கிளாயில் சிங்கள ஆக்கிரமிப்பின் அடையாளமாக சிறீ சம்போதி மகா விகாரை எனும் பௌத்த விகாரையினை அமைக்கும் பணி முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் படையினர் பாதுகாப்பு வழங்க அமைக்கப்பட்டு வரும் விகாரையில் முதற்கட்டமாக நேற்று மேலுமொரு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஏற்கனவே புத்தர் சிலை ஒன்று அண்மையினில் நிறுவப்பட்டிருந்தது. தற்போது அதற்கருகாமையில் மேலுமொரு புத்தர் சிலை அமைக்கப்பட்டு, சிறீ சம்போதி மகா விகாரை என்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக கொக்கிளாய் ஆரம்ப வைத்தியசாலைக்கு சொந்தமான நிலப்பகுதி அபகரிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே அமைக்…

  20. புலம்பெயர்ந்த தமிழர்களை தடை செய்யும் இலங்கையின் 2வது பட்டியல் தயார்? Peter September 15, 2014 Canada இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வில் மூன்றாம் தரப்புடன் ஈடுபடும் போது புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பேச்சுவார்த்தை தொடர்பான விவகாரங்களில் பங்குபற்றாமல் தடுக்கவே 15 புலம்பெயர் அமைப்புக்களின் மீதான தடையை அரசாங்கம் அமுல்படுத்தியது. அந்த அமைப்புக்களோடு, இலங்கை படைகளால் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டில் வதியும் தமிழர்களின் பட்டியலில் ஒரு பகுதியினரையும் அது இணைத்துள்ளதால் அவர்களும் பேச்சுவார்த்தை முயற்சிகளில் பங்கேற்க முடியாது என லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவைத் சேர்ந்த ஆய்வாளர் சுதர்மா குறிப்பிட்டார். இலங்கை அரசாங்…

  21. இலங்கையில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலையே! - பிரித்தானிய முன்னாள் உள்துறை அமைச்சர். [Monday 2014-09-15 07:00] இலங்கையில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலையே என பிரித்தானியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் டேவிட் பிளங்கட் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் மீது ஓர் சர்வதேச விசாரணைக்கான மேலதிக அழுத்தத்தை பிரித்தானியா ஏற்படுத்த வேண்டுமெனவும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடைசெய்வதன் மூலம் தமிழர்களின் மீது தீவிரவாதப் பட்டத்தை கட்டும் இலங்கை அரசின் நடவடிக்கையை எதிர்க்குமாறு கோரவும் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் பிரிந்தானிய பாராளுமன்ற உறுப்பினர்க…

  22. பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று ஏ-9 வீதி முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேரூந்திலேயே இன்று முற்பகல் 11.45 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இளைஞன் வவுனியா கோவில் புளியங்குளம் பகுதியச் சேர்ந்த சி.தர்சன்(வயது – 19) என்ற இளைஞரே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=355813432015381138#sthash.LCYA3nnV.dpuf

  23. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சியின் தலைவா இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவா மாவை சேனாதிராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை கேலி செய்து, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் ஒட்டுக்குழுக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சார்வதேச ஜனநாயக தினம் இன்று திங்கட்கிழமை இன்று கொண்டாடப்படும் நிலையில், அன்றைய ஜனநாயகம் - இன்றைய ஜனநாயகம் என பிரசுரிக்கப்பட்டு இரண்டு விதமான கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அதன் கீழ் மேற்படி மூன்று அரசியல்வாதிகளும் செல்வ செழிப்புடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டு அவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.http://www.pathivu.com/news/33873/57//d,article_full.aspx

  24. கிழக்கு மாகாணம் நோக்கித் திரும்புகிறது இந்திய புலனாய்வு அமைப்புகளின் கவனம்! [Monday 2014-09-15 10:00] News Service இந்திய புலனாய்வு அமைப்புகளின் கவனம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை நோக்கி திரும்பியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 10 மாத கால பகுதியில் பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தீவிரவாத மயப்படுத்தப்படுவது குறித்தும், பாகிஸ்தான் அவர்களை பயன்படுத்த முனைவது குறித்தும் புலனாய்வு அமைப்புகளின் கவனம் திரும்பியுள்ளது. இந்திய அதிகாரிகளால் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர் ஒரு இலங்கை தமிழர் என்கின்ற போதிலும் ஏனைய இ…

  25. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மக்கள் பலர் பார்த்திருக்க இருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இன்று காலை 5.30 மணியளவில் தெல்லிப்பழையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலரும் பார்த்திருக்கக் கூடியதாக வீதியில் நின்ற இருவரை துரத்தி துரத்தி வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர் எனக் கூறப்படுகின்றது. இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றுபவர் எனத் தெரிய வந்துள்ளது. மற்றையவர் குறித்த தகவல்கள் தெரியவில்லை - http://malarum.com/article/t…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.