Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 14 ஆண்டுகளால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணி இருந்தபோது, அதற்குரிய கட்டணம் எதனையும் கோராத தேசிய வீடமைப்பு அதிகாரசபை, தற்போது அங்கு மக்கள் குடியமர முற்படும் போது மட்டும் கட்டணங்களைக் கோருகின்றது என்று விசனம் தெரிவிக்கிக்கப்படுகின்றது. வரணி இடைக்குறிச்சியில் 10 வீட்டுத்திட்டத்துக்குரிய, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் பொது மக்கள் வாழ்ந்து வந்தனர். 2000ஆம் ஆண்டு இடம் பெற்ற போர் நடவடிக்கையின் போது மேற்படி 10 வீட்டுத்திட்டத்துக்குரிய காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்தனர். அதன்பின்னர் அந்தக் காணியில் நிரந்தரமாகத் தங்கியிருந்த இராணுவத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே குறித்த காணியை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது அந்தக் காணியின் உரிமையாளர்கள…

  2. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது பக்கச்சார்பின்றி நேர்மையாக நீதியாகச் செயற்பட்டு வருகின்றார். அதனால் ஆத்திரம் கொண்டுள்ள இலங்கை அரசு அவர் மீது குற்ச்சாட்டுக்களை அடுக்கி விமர்சித்து வருகின்றது இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அரசு இவ்வாறு ஏனையோர் மீது குற்றஞ்சாட்டுவதை விட்டு விட்டு, தாம் விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்வதுடன் தன்னால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு…

  3. கிளிநொச்சியில் பதற்றம்: இராணுவத்தினர் திடீர் நடவடிக்கை 15 ஆகஸ்ட் 2014 கிளிநொச்சியில் இராணுவத்தினர் திடீர் நடவடிக்கையை இன்று மேற்கொண்டமையால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார். கிளிநொச்சி நகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஏ-9 வீதியிலும் புகையிர வீதியிலும் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் செறிவாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை கிளிநொச்சி நகரப் பகுதிகளில் சைக்கிள்களில் இராணுவத்தினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கிளிநொச்சியின் புறநகர் கிராமங்களில் சந்திக்குச் சந்தி இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை கிளிநொச்சியில் உள்ள சில கிராமங்களில் வீடு வீடாகச் சென…

    • 8 replies
    • 652 views
  4. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்! http://www.pathivu.com/news/33191/57//d,article_full.aspx

    • 0 replies
    • 293 views
  5. பாலசந்திரனின் வாழ்க்கையை மையபடுத்தி எடுத்ததாக கூறப்படும் புலிப்பார்வை திரைப்படம் படம் முழுக்க பாலச்சந்திரனோடு,பல குழந்தைகள் சிறார் போராளிகளாகவே காட்டப்பட்டுள்ளனர். என்று அய்யா.நெடுமாறன் உட்பட பல அமைப்புகள் மாணவர்கள் எதிரிப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் புலிப்பார்வை இசை வெளியீடு சென்னை சத்தியம் திரையரங்கில் நடை பெறுகிறது . இதனை அறிந்த மாணவர்கள் அங்கு சென்று அதனை எதிர்த்து முற்றுகையிட தயார் நிலையில் உள்ளனர். புலிப்பார்வை இசை வெளியீடு விழாவில் கலந்துகொள்ள நெடுமாறன் அய்யா மற்றும் வைகோ மறுப்பு தெரிவித்த வேளையில் மேடையில் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். http://www.pathivu.com/news/33187/57//d,article_full.aspx

    • 2 replies
    • 610 views
  6. சனி, ஆகஸ்ட் 16, 2014 - 05:29 மணி தமிழீழம் | அகக்கீரன், ஐரோப்பா சாட்சியங்கள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விகள் உள்ளடக்கிய கேள்விக்கொத்துப் படிவங்கள் உள்ளே! இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர் குழுவின் விசாரணைகளை ஆரம்பித்து விட்டனர். தற்போது சாட்சியங்கள் திரட்டுவதற்கான கேள்விக்கொத்து. அக்கேள்விக் கொத்துகளை உள்ளடக்கிய மாதிரிப் படிவம் கீழே தரப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களை ஐ.நா மனித உரிமை ஆணையகம் 12 வகையாக வகைப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழரும் தங்களுக்கு எந்த வகை பொருந்துகின்றதோ அப்படிவத்தைப் பூர்த்தி செய்து ஐக்கிய நாடுகள் சபையின் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அஞ்சல் முக…

  7. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட மாட்டாது – சுதந்திரக் கட்சி:- 16 ஆகஸ்ட் 2014 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யாது கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிக…

  8. பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அமைப்பு உருவாக்கம்:- 16 ஆகஸ்ட் 2014 பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அரசியல்வாதிகள், பௌத்த மத தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மற்றம் புத்திஜீவிகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்க உள்ளனர். பௌத்த மதத்தைச் சேர்ந்த ஆளும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்க உள்ளனர். அண்மையில் கண்டி மல்வத்து மாநாயக்கத் தேரரை ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சந்தித்த போது இந்த புதிய அமைப்பு உருவாக்கம் தொடர்பிலான ஆலோசனைப் பெற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பை உருவாக்குவது தொடர்பில் விரிவான முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக அரசியல்வாதிகள் அறிவித்துள…

  9. பாகிஸ்தான் அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை! இலங்கையில் அரசியல் தஞ்சம்கோரி தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரிவந்திருந்த பெண்ணொருவர் தன் சார்விலும் பூசா தடுப்பு முகாமில் உள்ள அவரது குடும்பத்தவர்கள் மூவர் சார்பிலும் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தாம் பாகிஸ்தானுக்குத் திருப்பியனுப்பப்பட்டால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அடிப்படையில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்ததாக அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லக்ஷான் …

    • 0 replies
    • 222 views
  10. பேரழிவுக்கு எங்களது இனம் உட்பட்டதாலோ என்னவோ எந்த நாட்டிலும் பேரழிவுக்கு உட்பட்ட இனம் எவ்வாறு மீண்டு எழுந்திருக்கின்றது என்பதை அவதானிப்பதில் எனக்கு விசேடமான ஆவல். இவ்வாறுதான் கம்போடியாவிற்குச் சென்றிருந்தபோதும் அதன் போராட்ட வரலாறுகளைப் பற்றியும் இப்போது அதன் நிலை பற்றியும் கற்றுக்கொள்ள ஆவலாக இருந்தேன். சோழர்களுடைய காலத்தில் தமிழ் நூல்களில் காம்போஜம் எனக் குறிப்பிடப்பட்ட நாடு இது. தென்கிழக்காசியாவிலேயே நவீன அரசியல் கட்டமைப்புக்களுடன் உருவான முதல் இராச்சியம். தமிழக அரசர்களினதும் சோழர்களுடையதும் செல்வாக்கு இடைக்காலங்களில் இங்கு மேலோங்கியிருந்தது. தமிழர்களுடன் உண்டான நெருங்கிய உறவினால் சைவர்களாக இவர்கள் வாழ்ந்த காலம் உண்டு. 10, 12ம் நூற்றாண்டுகளின் கலைப்பொருட்களில் ஏராளமான சி…

  11. நோர்வேயிலிருந்து திருமணத்துக்காக யாழ்.சென்ற குடும்பத்துக்கு கொழும்பில் நேர்ந்த பரிதாபம்!? திரு­ம­ணத்­திற்­காக நோர்­வே­யி­லி­ருந்து வருகை தந்த குடும்பம் தங்­கி­யி­ருந்த வெ ள்ள­வத்­தையில் உள்ள வீடொன்றில் 60 இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய பணம் மற்றும் நகைகள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. இந்தச் சம்­பவம் வெள்ள­வத்தை பீற்­றர்சன் ஒழுங்­கையில் உள்ள தொடர்­மா­டி வீடொன்றில் நேற்று முன்­தினம் நள்­ளி­ர­வுக்குப் பின்னர் இடம்­பெற்­றுள்­ள­து. எதிர்­வரும் 20 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்தில் திரு­மணம் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் நோர்­­வேயில் உள்ள மாப்­பிள்­ளையும் குடும்­ப­த்­தி­ன­ரு­மாக 13 பேர் கடந்த வாரம் இலங்கை வந்­துள்­ளனர். இவர்­களில் ஒரு பகு­தி­யினர் யாழ்ப் பாணம் சென்ற நி…

    • 26 replies
    • 2.1k views
  12. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார், மடு திருத்தலத்தின் ஆவனி மாத திருவிழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, பக்தர்கள் கூடி நின்ற ஆலயத்தின் முன் பகுதி மேல் வானில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்தது. குறித்த சிறிய ரக விமானத்தின் மேல் பகுதியில் நான்கு விசிறிகள் சுற்றிக்கொண்டிருந்த நிலையில் குறித்த விமானம் குறிப்பிட்ட ஒரு பகுதியை மையப்படுத்தியே சுற்றிக்கொண்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இரைச்சலுடன் சுற்றிக்கொண்டிருந்த குறித்த விமானம் மடுத்திருவிழா திருப்பலி நிறைவடைந்த பின் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றதை காணக்கூடியதாக இருந்தது. குறித்த சிறிய ரக விமானம் எதற்காக ? யாரால் பறக்கவிடப்பட்டது? என்ற விடயம் இதுவரை தெரியவில்லை. http://ta…

  13. -எம்.றொசாந்த் கைலாசப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான சைக்கிள் பவனியில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சைக்கிள் ஓடுவதற்கு வரும்படி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா அழைத்தார். எனினும் அதற்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவித்தார். வடமாகாணத்தில் இருதய சத்திரசிகிச்சைக்கான துறையொன்றை ஸ்தாபிப்பதற்கு நிதி திரட்டும் பொருட்டு, யாழ் கைலாசப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து சைக்கிள் பவனியொன்று வெள்ளிக்கிழமை (15) காலை ஆரம்பமாகியது. இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சி.வி.க்கு சைக்கிளோட அழைப்பு விடுத்த அமைச்சர் டக்ளஸ், 'உங்களுக்கு சைக்கிள் ஓட்ட விருப்பம் இல்லாவிட்டால், வாருங்கள் நான…

  14. இன்று (15.08.14) காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் தலைமையில், இலங்கை கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருபபலியாக ஒப்புக்கொடுத்தனர். மடு அன்னையின் ஆவனித்திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஆதனைத் தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(15) திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன்போது இத்தாலி ஆயர் மன்ற பிரதிநிதிகள், கத்தோழிக்க குருக்கள், அருட்சகோதரிகள் என…

  15. யாழ்ப்பாண மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர். காரணம் திருமணம் செய்கின்றோம் என்று கனடா மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் மாப்பிள்ளைமார்கள் உண்மையாகவே திருமணம் செய்ய செல்லவில்லை. தங்கள் உல்லாச களியாட்ட தேவைகளிற்கு அப்பாவி பெண்களை பலியாக்கும் நோக்குடன் திருமணம் என்ற பந்தத்தை கொச்சைப்படுத்தி தங்கள் பசிகளை தீர்த்துக்கொள்ள சில தமிழ் இளைஞரகள் புறப்பட்டுள்ளனர். கடந்த 6-மாதங்களில் மட்டும் சுமார் 8 இவ்வாறான போலி பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றமை பலர் அறிந்த விடயம். வெளி உலகிற்கு தெரியாமல் மேலும் பல நடந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. கனடா மற்றும் லண்டன் போன்ற இடங்களில் இருந்து வெளியாகும் பல இலவச பத்திரிகைகளில் மணமகள் மணமகன் தேவை என்ற விளம்பர பக்கம் உள்ளது. இ…

  16. இரணைமடு குளத்தின் இன்றைய நிலை Written by editor | August 15, 2014 | Comments Off இரணைமடு குளத்தின் இன்றைய நிலை http://www.e-jaffna.com/archives/29839

  17. வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு காணி விற்பனை செய்வதனை தடை செய்யும் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வதனை தடை செய்யும் வகையில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த சட்டம் குறித்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அல்லது தனியார் காணிகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் வகையிலேயே சட்ட நிபுணர்களினால் உருவாக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு சட்ட மா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கான காணி தேவைப்பாடு அதிகரித்துள்ளதாகவும் எவ்வாறெனினும், ராஜதந்திர அலுவலகங்களுக்கு இந்த தடை பொருந்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந…

  18. -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக தென்னை, பலா, தோடை, எலுமிச்சை போன்ற வான் பயிர்களும் அழிவடைந்து வருவதால் அதனை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரட்சியால் கிளிநொச்சி மாவட்டத்தின் தோட்டப் பயிர்கள் மற்றும் விவசாயப் பயிர்கள் என்பன அழிவடைந்துள்ளன. இந்நிலையில், வறட்சியை ஓரளவேனும் தாக்குப் பிடிக்கக்கூடிய வான் பயிர்கள் தப்பியிருந்தன. ஆனால், வரட்சி தொடர்ந்தும் நிலவுவதனால் வான் பயிர்களும் தற்போது அழிவடைந்து வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின், சாந்தபுரம், அம்பாள்நகர், திருவையாறு, வட்டக்கச்சி, கல்மடுநகர், ஸ்கந்;தபுரம், மணியங்குளம், ஐயனார்புரம், வன்;னேரிக்குளம், ஆனைவிழுந்தான், கண்ணகிபுரம், சுப…

  19. நடுவானில் மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளது வங்கிக் கணக்கில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்- 370 விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு செல்லும் வழியில் நடுவானில் மாயமானது. 5 மாதங்கள் ஆகியூம் இதுவரை விமானம் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்த விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று மலேசியா அறிவித்தது. இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம் மூலம் 34இ890 அமெரிக்க டொலர்கள் எடுக்கபட்டு உள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக மலேசிய குற்ற பிரிவூ அதிகாரி அஷானி அப்துல் தெரிவித்துள்ளார். சி.சி.டிவியில் பத…

    • 0 replies
    • 658 views
  20. சிறீலங்காவுக்குப் பொருளாதார ரீதியாக உதவுகின்ற லைக்கா மொபைல் நிறுவனம் தயாரிக்கும் கத்தி மற்றும் இன விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்ற புலிப்பார்வை ஆகிய திரைப்படங்களைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறனர். இந்த நிலையில் மாணவர்கள் இவ் இரு படங்களை தமிழகத்தில் தடை செய்ய கோரி பல அமைப்புகளை சந்தித்து இரு படங்கள் பற்றிய சர்ச்சை குறித்தும் பேசி வருகினனர். அவ்வாறு இரு தினங்களாக மாணவர்கள் பல்வேறு பட்ட அமைப்புகளை சந்தித்து ஆதரவை பெற்றுள்ளனர். அந்தவைகையில்: 1.தந்தை பெரியார் திராவிடர் கழகம், 2.திராவிடர் விடுதலை கழகம், 3. மதிமுக, 4. மே17 இயக்கம், 5. இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், 6. உலகத் தமிழர் பாதுகாப்பு இ…

  21. மனித உரிமைகள் பற்றி பெரிதாகக் கதைத்துக்கொண்டிருக்கும் பிரித்தானியா, தான் செய்த மனித உரிமை மீறல்களை மறந்துவிட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) சுட்டிக்காட்டினார். வலப்பனை, கல்இந்திபெத்தே பகுதியில் அமைந்துள்ள கற்குகையொன்றுக்குள் சிங்களவர்கள் 16பேரை உயிருடன் அடைத்து கற்பாறைகளாலான கதவுகளால் மூடிய பிரித்தானியாவின் நடவடிக்கையை ஜனாதிபதி இதன்போது ஞாபகப்படுத்தினார். வலப்பனை சத்தானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிரிகளை உயிருடன் கொல்லும் மனித உரிமை நியாயத்தை பிரித்தானியாவே பிரபாகரனுக்கு கற்பித்தது. அன்று பிரித்தானியா செய்த மனிதப் படுகொலைகளை இன்று மறந்துவிட்டு பேசுகிறது என்று ஜனாதிப…

  22. இலங்கையின் இரகியங்கள் இராஜபக்ச அரசாங்கம் எப்படி படுகொலைகளை புரிந்த பின் தப்பியது என்ற நூல் நேற்று அவுஸ்ரேலியா Monash-University-Publishing மூலம் வெளியிடப்பட்டது. இவ் நூல் பற்றி எழுத்தாளர் கூறியது: " தேசமொன்றின் மக்களையும் கலாச்சாரத்தையும் தங்களது நடவடிக்கை மூலமாக அழிக்க வேண்டிய தேவை அவர்களுக்கிருந்த அதேவேளை தங்களை நியாயப்படுத்த வேண்டிய தாங்கள் செய்ததை மறுக்க வேண்டிய, மறைக்க வேண்டிய தேவையுமிருந்தது. குற்றச்செயல்களில் ஈடுபடும் போதும் அதன் பின்னரும் இதனை செய்ய வேண்டியிருந்தது. வரலாற்றை அழிக்க வேண்டிய கட்டாய தேவையும் அவர்களுக்கிருந்தது. இந்தக் குற்றங்கள் காரணமாக துயரப்படுவோரிற்கும், ஒரு நாள் நீதியை நிலை நாட்ட முயல்வோருக்கும் உள்ள மிகக் கடினமான சவால் என்னவென்றால் இந்த…

  23. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான விசாரணை தொடர்பாக தமிழ் விளக்கம் PDF கோவையில் தெளிவாகப் பார்வையிட இவ் இணைப்பை அழுத்தவும் http://www.pathivu.com/news/33172/57//d,article_full.aspx

    • 0 replies
    • 499 views
  24. நாட்டுக்காக தங்கப்பதக்கம் வென்ற தமிழரான கராத்தே வீரர் சௌந்தராஜன் பாலுராஜை இலங்கை அரசாங்கம் பாராட்டத் தவறினாலும் தமிழ் - முஸ்லிம் மக்கள் இணைந்து பாராட்டுகின்றனர் என கல்முனை மக்கள் தெரிவித்தனர். தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான கராத்தே போட்டி இந்தியாவின் புதுடில்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்புக் கிராமத்தை சேர்ந்த தமிழரான சௌந்தராஜன் பாலுராஜ் 'காட்டா' பிரிவில் தங்கப் பதக்கத்தையும் 'குமிட்ரே' பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்தார். இவரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சேனைக்குடியிருப்பு கிராம மக்கள் ஒன்று கூடி ஏற்பாடு செய்த இந்தப் பாராட்டு வி…

  25. ஐ.நா விசாரணைக் குழு முன்பாக, எவரும் சாட்சியமளிக்கலாம் என்றும், அதற்கு உரிமை உள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, விசாரணைக்குழு முன் எவரும் சாட்சியம் வழங்கலாம். அதற்கு உரிமை உள்ளது. ஆனால், அவர்கள் வழங்கும் சாட்சியத்தை ஆராய வேண்டும். வழங்கப்படும் சாட்சியத்தின் அடிப்படையிலேயே அவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய முடியும். அதன் பின்னரே அந்த சாட்சியம் அரசியலமைப்புக்கு முரணானதா, இல்லையா என்று முடிவு செய்ய முடியும். இப்போதைக்கு இது தொடர்பில் எதுவும் கூற முடியாது என்று மேலும் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஐ.நா விசாரணைக் குழுவை நிராகரித்த சிறிலங்கா அரச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.